வெள்ளி, 11 டிசம்பர், 2009

பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து

பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து பதிவு நெறைய வலைபூக்களில் வந்து கொண்டு இருக்கு. இப்போ இந்த வம்பிலே என்னையும் இழுத்து விட்டு வேடிக்கை பாக்கிறார் நம்ப மோகன். சரி என்னதான் இது, ஒரு கை பாத்துடுவோம்னு நானும் இறங்கிட்டேன்.


இந்தப் பதிவோட விதிகள்-னு சிலத கொடுத்து இருக்காங்க - ரூல்னாலே அததான் நாம மதிக்கிறதே இல்லையே!:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நானே தமிழ்நாட்டுலே இல்லையே! என்ன பண்ணலாம்?)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் [சரி சரி!]

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். [புதுசா யாரையும் பிரபலம் ஆக்கவுட மாட்டீங்களோ!]

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். [எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்]

5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும் [அச்சச்சோ!]


1.அரசியல்வாதி

பிடித்தவர்: ரொம்ப யோசிச்சா கூட ஒருத்தரும் தெரியலையே? என்ன பண்றது. choice-ல விட்டுடட்டா?

பிடிக்காதவர்: ஒருத்தருமே பிடிக்காதே அதனால இதுக்கு வேற தனியா பதில் எதுக்கு!.

2. நடிகர்

பிடித்தவர்:

சிவக்குமார்
கமல்ஹாசன் [For his multi-facetted திறமை]


பிடிக்காதவர்: சிம்பு, சிபிராஜ்.

3. நடிகை

பிடித்தவர்: ரேவதி, சுஹாசினி

பிடிக்காதவர்: நமிதா, நயன்தாரா [இதிலென்ன சந்தேக பார்வை?]

4. இயக்குனர்:

பிடித்தவர் :

பாலச்சந்தர்,ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார்

பிடிக்காதவர்: எஸ். ஜே. சூர்யா

5. தொழிலதிபர்

பிடித்தவர்: நாராயண மூர்த்தி, லக்ஷ்மி நாராயண் மிட்டல், விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா.

பிடிக்காதவர்: அனில் அம்பானி

6. எழுத்தாளர்

பிடித்தவர்: பாலகுமாரன், ஜெயகாந்தன் - உயிரோடு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லா விட்டால் கல்கி, சுஜாதா.

பிடிக்காதவர்: யாரும் இல்லை.

7. இசையமைப்பாளர்

பிடித்தவர்: விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான்.

பிடிக்காதவர்: சிற்பி.

8. காமெடியன்:

பிடித்தவர் : விவேக், வடிவேலு . உயிரோடு இல்லாதவர்களில் : நாகேஷ்

பிடிக்காதவர் : எஸ். எஸ். சந்திரன்.

9. பதிவர்

பிடித்தவர் :

ரேகா ராகவன், ரவிப்ரகாஷ், விக்னேஸ்வரி, மற்றும் பலர்.

பிடிக்காதவர் : யாரும் இல்லை.

10. பழமொழி (saying)

பிடித்தது: Never Say Die!.

பிடிக்காதது: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

நான் கூப்பிடும் பதிவர்கள்:

நிலாமதி
கிருபா நந்தினி

2 கருத்துகள்:

  1. அழைப்பை ஏற்று பதிவு செய்தமைக்கு நன்றி. நம்ம ரெண்டு பேருக்கும் சில மேட்டர்ஸ் ஒத்து போகுது.

    ரேகா ராகவன் சார் கல்யாண வேலையில் ரொம்ப பிஸி-ஆ

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....