வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

1-1-11 என்று இலக்கம் ஒன்றிலே துவங்கும் இந்த புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் நல்லதாகவே நடக்கட்டும்.  



நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

புதன், 29 டிசம்பர், 2010

நடையா இது நடையா?,

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை, சின்ன இடை எல்லாம் மறந்தாரா

என்று ஒரு பாடல்பணக்காரக் குடும்பம்படத்தில் சரோஜா தேவி பாடுவது போல வரும்.  இந்த மாதிரி பல படங்களில் ஒரு பெண்ணின் நடையை அன்னத்தின் நடையோடும், வீரமான ஒரு ஆண்மகனின் நடையை, “சிங்கம்போல நடந்து வரான் பாருஎன சிங்கத்தின் நடையோடும் ஒப்பிட்டு பல கவிஞர்கள் பாடல்கள் எழுதி உள்ளனர்

ஆனா இந்த ஃபேஷன் உலகம் என்னடான்னா நவநாகரிக யுவதிகளையும், இளைஞர்களையும் பின்னணியில் இசை ஒலிக்க, வெட்டி வெட்டி ஒரு நடையை நடப்பதற்குபூனை நடைன்னு பேர் வச்சிருக்காங்க.  அது ஏன்னு தெரியலைதெரிஞ்சவங்க சொல்லுங்க

இந்த பூனை நடை மோகம், இப்போது பள்ளிக்கூடங்களையும்  விட்டு வைக்கவில்லைஇந்த வருடம் என் மகள் படிக்கும் பள்ளியில் டிசம்பர் 12, ஞாயிறு அன்றுவைப்ரேஷன்ஸ் 2010” என்ற நிகழ்ச்சி நடத்தினார்கள்.  அதில்  இந்த பூனை நடையும் இருந்தது.  எல்.கே.ஜி முதல் பன்னிராண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிக் குழந்தைகள் மேடையில் பூனை நடை நடக்கிறார்கள்.  பங்கு பெற விரும்பும் குழந்தைகளிடமிருந்து கட்டணமாய் ரூபாய் 50 பள்ளியிலிருந்து வசூலிக்கிறார்கள். இதைத் தவிர, உடை வாடகை மற்றும் அலங்காரச் செலவும் குழந்தைகளுடையது

பூனை நடை நடக்க வைப்பதாய்ச் சொல்லி பள்ளி நிர்வாகம் காசு சம்பாதிக்கும் வசூல் ராஜாக்களாக இருக்கிறது. தில்லியில் உள்ள பெரும்பாலான பள்ளி நிர்வாகிகள், வருடத்திற்கு இது போல இரண்டு மூன்று விழாவினை ஏற்பாடு செய்து, அதற்கான ரசீது புத்தகத்தினை ஒவ்வொரு குழந்தையிடமும் கொடுத்து விடுகிறார்கள். ஒரு புத்தகத்தில் உள்ள மொத்த ரசீதுகளின் மதிப்பு ரூபாய் 100.  படிக்கும் அத்தனை குழந்தைகளிடமும் கொடுத்து வசூலிக்கச் சொல்கிறார்கள்.  நம் குழந்தையை  எங்கே இதைக் கொண்டு போய் வசூலிக்க வைக்கிறது? அதனால், நாமே 100 ரூபாய் கொடுத்து அனுப்பிட  வேண்டியது தான்.  இது போன்ற விழாக்கள் மூலம் பள்ளி நிர்வாகம் சம்பாதிக்கும் பணம் கணக்கிலே வரப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை


தேசப்பிதா மகாத்மா காந்தி நிறைய பேருக்கு ரோல் மாடல்.  ஆனால் அவரைக்கூட ஒரு கற்பனாவாதி விட்டு வைக்கவில்லை, “FALL WINTER COLLECTION” மற்றும் “FALL SUMMER COLLECTION’-க்கு மாடலாக்கி விட்டார். கீழே பாருங்க அவரை.




வெள்ளி, 24 டிசம்பர், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 15

பார்க்க வேண்டிய இடம்வர்த்தகக் கண்காட்சி எல்லா வருடமும் நவம்பர் மாதம் 14 முதல் 27 தேதி வரை தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியைப் பார்க்கும்  வாய்ப்பு கிடைக்கும்.  தில்லியில் உச்ச நீதி மன்றத்திற்கு அருகில் உள்ள பெரிய வளாகத்தில் நடக்கும் இந்தக்  கண்காட்சி முதல் நான்கு நாட்களுக்கு வர்த்தக, வியாபார மக்களுக்காகவும், அதன் பிறகு 10 நாட்கள் பொது மக்களுக்காகவும் திறந்திருக்கும்.  இந்தக்  கண்காட்சியில், இந்தியாவின் எல்லா மாநிலங்களும், வெளிநாடுகளும் பங்கு பெறுகின்றன.  இந்த வளாகத்தில் எல்லா மாநிலங்களுக்கான நிரந்தர கட்டிடங்களும் இருக்கின்றன.  ஒவ்வொரு வருடமும் ஒரு முக்கிய கருத்தினை மையமாக வைத்து ஒவ்வொரு மாநிலத்தவரும் தத்தமது கண்காட்சியை அமைக்கின்றனர்.  இந்த நாட்களில் இங்கு சென்றால் ஒவ்வொரு மாநிலத்தில் கிடைக்கும் உணவு வகைகளும் இங்கே பிரத்யேகமாய் அமைக்கப்பட்டிருக்கும் உணவகங்களில் கிடைக்கும்

இந்த வருடம் தமிழகத்தின் அரங்கம் எதிர்பார்த்த அளவுக்கு அமைக்கப்படவில்லை என்பதில் வருத்தம் தான்.  உள்ளே கடைகளில் கூட ஒரு சிலரே தமிழகத்திலிருந்து வந்திருந்தனர்.  பலர் தில்லியின் கடைக்காரர்களே. விருது நகரிலிருந்து வந்திருந்த ஒரு மூதாட்டி, தில்லி வாழ் தமிழர்களைப் பற்றிமுகத்தைப் பார்க்கும் போதே தமிழ்னு தெரியுது, ஆனாலும் ஹிந்தியில் தான் விலை கேட்கிறாங்க, நாங்க தட்டுத்தடுமாறி பதில் சொல்லி புரிய வைக்கக் கஷ்டப்பட்ட பிறகே எங்களுடன் தமிழில் பேசுகின்றனர்என்று  அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்

எல்லா வருடம் போலவே இந்த வருடமும் கேரள அரசாங்கத்தின் கண்காட்சி அரங்கம் மிக அருமையாய் அமைக்கப்பட்டிருந்தது.  ஒரு நீர்நிலையின் மேல் படகு அசைந்து செல்வது போல செய்திருந்தது அருமை

நவம்பர் மாதத்தில் தில்லி வந்தால் 14-27 தேதிகளில் நடக்கும் இந்த வர்த்தகக் கண்காட்சியை நீங்கள் கண்டுகளிக்கலாம்.  இதற்கு நுழைவுக் கட்டணம்பெரியவர்களுக்கு ரூபாய் 40 மற்றும் 5 முதல் 12 வயது வரையான சிறுவர்களுக்கு ரூபாய் 20.  நுழைவுச் சீட்டுகள் எல்லா தில்லி மெட்ரோ நிலையத்திலும் கிடைக்கும்.  அரங்கத்தின் வெளியே நுழைவுச் சீட்டு விற்பனை இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்இந்த ஆண்டின் வர்த்தகக் கண்காட்சியில் எடுத்த சில புகைப்படங்களைக்  காண இங்கே செல்லவும்



சாப்பிட வாங்க: குளிர் காலம் வந்தவுடன் தில்லியில் நிறைய காய்கறிகள் கிடைக்கும்.  காஜர் [Gajar] என்று ஹிந்தியில் அழைக்கப்படும் கேரட் மிகவும் மலிவாகக் கிடைக்கும் இந்த நாட்களில் எல்லா இனிப்பு கடைகளிலும் காஜர் ஹல்வா கிடைக்கும்.  முந்திரிப்பருப்பு, திராட்சை தாராளமாய்ப் போட்டு, சுடச்சுட ஒரு தொன்னை காஜர் ஹல்வா சாப்பிடலாமா.  அதிக விலை ஒன்றும் இல்லை கிலோ ரூபாய் 200 தான்.   கீழே உங்களுக்காகவே ஒரு கப்பில் காஜர் ஹல்வா வைத்திருக்கிறேன் எடுத்துக்கோங்க, இது எடுக்க எடுக்கக் குறையாமல் வரும் அட்சயப்பாத்திரம்இதைப்  படிக்கும் எல்லோரும் எடுத்தாலும் கூடக்  குறையாதுன்னா பார்த்துக்கோங்க


ஹிந்தி பாடம்:  சென்ற சில பகுதிகளில் சில காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் ஹிந்தி வார்த்தைகளைப் பார்த்தோம்.  வரும் பகுதிகளில் தினசரி சமையலில் பயன்படும் பொருட்களின் பெயர்களைப் பார்க்கலாம்இந்த பகுதியில் பருப்புகளின் பெயர்கள்துவரம் பருப்புஅரர்/துவர் தால் [Arhar/Thuvar Dhal]; கடலைப்பருப்புசன்னா தால் [Channa Dhal]; உளுத்தம் பருப்புஉரத் தால் [Urad Dhal]; பயத்தம் பருப்புமூங்க் துலி [Moong Dhuli]; காராமணிலோபியா [Lobiya]; பச்சைப் பயிறுமூங்க் தால் [Moong Dhal]; வெள்ளை/கருப்பு கொண்டைக் கடலைசஃபேத்/காலா சன்னா [Safed/kaala Channa].    

இன்னும் வரும்