ஞாயிறு, 16 அக்டோபர், 2011

என்றும் இருபத்தி எட்டு




தில்லி வந்த முதல் நாள் என்னை அலுவலகத்திலிருந்து கரோல் பாக் அழைத்துச் சென்றவர் பத்மா. பத்தொன்பது வருடங்கள் கழிந்திருந்தாலும், அன்று எப்படி இருந்தாரோ அப்படியே இன்றளவும் இருக்கிறார். என் மேல் அபரிமிதமான அன்பை பொழிந்து பாசத்தைக் கொட்டும் ஒரு நல்ல உள்ளம்.

பக்த  பிரகலாதனுக்கு மார்க்கண்டேயனுக்கு  வயது எப்படி என்றும் பதினாறோ, அது போலவே பத்மாவிற்கு இடுப்பளவு என்றும் இருபத்தி எட்டு. அவரது உடலில் எந்த மாற்றமும் இல்லை. அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் அலுவலகத்தில் அவரைப் பார்த்தால் பொறாமைப் படாதவர்களே கிடையாது!.

நான் அவரை விட சிறியவனாக இருந்தும், அன்று பென்சில் போல இருந்தவன், இன்று தொப்பையும் தொந்தியுமாக காணப்படுகிறேன். அவரோ "அன்று பார்த்த கண்ணுக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறார்". இத்தனைக்கும் இந்த கால கட்டத்தில் பத்மாவிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்து, அக்குழந்தையே இன்று எட்டாம் வகுப்பில் படிக்கிறது! . பொதுவாக கல்யாணம் ஆனவர்கள் சந்தோஷத்தில் குண்டாகி விடுவார்கள் என்று சொல்வது போல் இல்லாமல், இப்போதும் அப்படியே இருக்கிறார்.

மற்றவர்கள் பொறாமைப்படும்படியாக இருப்பவர் "உடம்பெல்லாம் அப்படியே இருந்து என்ன பண்றது? தலயிலே இருந்த முடியெல்லாம் கொட்டி 'சொட்டையாகி' விட்டதே!" என்று ஒரேயடியாக கவலைப்படும் பத்மா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் பத்மநாபன் [என்னுடைய பகிர்வுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துகள் இடுபவரும் இவரே!] அண்ணாச்சியை என்னத்தைச் சொல்லி தேற்றுவது?

அதனால் தான் என்னுடைய முந்தைய பதிவான மஞ்சள் மகிமை-க்கு அவர் இப்படி பின்னூட்டம் போட்டுள்ளார்!


"அண்ணாச்சி! இந்த Fevicol - தலையில் தேய்க்க முடியுமான்னு ஒண்ணு கேட்டு சொல்லுதேளா! நமக்கும் தலையில முடி முளைச்ச மாதிரி ஆச்சுல்லா!"
மீண்டும் சந்திப்போம்

வெங்கட்
புது தில்லி.


பின் குறிப்பு:  இன்று ஞாயிறு மாலை.  தமிழ்மணம் இந்த வார நட்சத்திரம் என்று என்னைத் தெரிந்தெடுத்து கடந்த 10.10.2011 திங்கள் முதல் இன்று வரை இந்த ஏழு நாட்களில், காலையில் ஒரு புதிய பகிர்வும், மாலையில் ஒரு மீள்பதிவும் ஆக 14 இடுகைகள் போட்டு இருக்கிறேன்.  இந்த வாரம் முழுவதும் என் பக்கத்திற்கு வந்து பதிவுகளைப் படித்த, கருத்தளித்த, வாக்குகள் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இனி வழக்கம்போல் வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பகிர்வுகள் தொடரும். 

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்


49 கருத்துகள்:

  1. வெற்றிகரமாக நட்சரவாரத்தில் மின்னியதற்கு வாழ்த்துக்கள்>

    பதிலளிநீக்கு
  2. பத்மா ரொம்..ப.. சஸ்பென்ஸ்.

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. படத்தைப் பார்த்ததும், படிக்க ஆரம்பித்ததும் அந்த பத்மா மேல் நானும் பொறாமை கொண்டேன்.

    கடைசியில் பத்மனாபன் என்றதும் அதுவும் தலையில் சுத்தம் என்றதும் ஆறுதல் அடைந்தேன்.

    நல்ல நகைச்சுவையான பதிவு.

    மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன் vgk

    தமிழ்மணம் 4

    பதிலளிநீக்கு
  4. கொஞ்சம் லேட்தான்! வாழ்த்துக்கள்...நிறைய பதிவுகள்.... ...படித்துவிட்டு வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. //பக்த பிரகலாதனுக்கு வயது எப்படி என்றும் பதினாறோ, அது போலவே பத்மாவிற்கு இடுப்பளவு என்றும் இருபத்தி எட்டு.//

    வெங்கட்ஜீ! அது பக்த பிரகலாதன் அல்லவே: பக்த மார்க்கண்டேயன் ஆயிற்றே! ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இது தானோ?

    சத்தியமாக இந்தப் பழமொழியில் எந்த உள்குத்தும் இல்லை! நீங்கள் "நான் அவரை விட சிறியவனாக இருந்தும், அன்று பென்சில் போல இருந்தவன், இன்று தொப்பையும் தொந்தியுமாக காணப்படுகிறேன்" என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டவில்லை என்று உறுதிபடக்கூறுகிறேன். :-)))))

    //அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!//

    அடியேனுக்கும் அவ்வண்ணமே! :-)))))))

    பதிலளிநீக்கு
  6. கடைசியில எங்க ஊர் அம்மணி கிட்ட மாத்து வாங்குவிங்கன்னு நினைச்சா .. கதையவே மாத்திட்டிங்களே... சூப்பர் தல...

    பதிலளிநீக்கு
  7. தமிழ்மண நட்சத்திரத்தில் சரம் சரமாக பதிவிட்டு அமர்க்களப்படுத்திவிட்டீர்கள்.. மீள் பதிவுகளும் புதிதாக படிக்கும்படியாகவே அமைந்தது சிறப்பு... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  8. தமிழ்மண நட்சத்திர வாரத்தில் சிறப்பாக பதிவுகளை அளித்து விட்டீர்கள் வெங்கட். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வானவில்லாய் பகிர்ந்தளித்த அத்தனை நட்சத்திரப் படைப்புகளும்
    அருமை. செவ்வனே பணி செய்து முடித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அருமையாக வாரத்தைக் கடந்து வந்துவிட்டீர்கள். எழுத்து லாவகம் எல்லோருக்கும் அமைவதில்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    பத்மாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது:)

    பதிலளிநீக்கு
  11. நிறைவான வாரமாக இருந்தது. எங்களுக்கு மகிழ்ச்சியே!

    பதிலளிநீக்கு
  12. ஒரு வாரம் அசத்தலான பதிவாகக் கொடுத்து
    ஜமாய்த்தமைக்கு நன்றி
    சிலர் என்ன சாப்பிட்டலும் மார்க்கண்டேயன்களாகவும்
    சிலர் என்னதான் பஸ்து கிடந்து பஸ்கி செய்தாலும்
    எம தர்ம ராஜா ரங்காராவ் போலவும்தான் இருக்க நேருகிறது
    என்ன செய்வது எல்லாம் வாங்கிவந்த வரம்
    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
    த.ம 8

    பதிலளிநீக்கு
  13. நட்சத்திர வாரத்திற்கான பதிவுகள் அனைத்தும் மிக அருமை,வெங்கட்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    வாழ்த்திய நல்லுள்ளத்திற்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  15. @ வை. கோபாலகிருஷ்ணன்: அட உங்களுக்கும் பத்மா மேல பொறாமையா? ம்ம்ம்ம்...

    தங்களது வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @ அன்புடன் அருணா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. @ சேட்டைக்காரன்: சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றி விட்டேன்...

    ஆனைக்கும் அடி சறுக்கும்! ஆனை அளவுக்கு இல்லை! :)))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. தங்களது நகைச்சுவையான பின்னூட்டத்தினை ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  18. @ பத்மநாபன்: //கடைசியில எங்க ஊர் அம்மணி கிட்ட மாத்து வாங்குவிங்கன்னு நினைச்சா .. // அட இந்த ஆசை வேற இருக்கா ஒங்களுக்கு..... :)))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  20. @ ராஜி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  21. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @ வல்லி சிம்ஹன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. @ துளசி கோபால்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

    பதிலளிநீக்கு
  24. @ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. @ தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. @ சூர்யஜீவா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. எதையோ சொல்ல வந்து...கதை எங்கோ சென்று விட்டது...நிஜ கதை என்ன ?

    பதிலளிநீக்கு
  28. நிறைவான வாரமா இருந்தது.. வீட்ல அர்ச்சனைலேர்ந்து தப்பிச்சிட்டீங்க :-))

    பதிலளிநீக்கு
  29. நல்ல பத்மாயணம் முடிவில்
    பத்மநாபாயணம் ஆனது
    சுவையோ சுவை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  30. அட்றா சக்கை! அட்றா சக்கை!

    (ஓஹோ! மொட்டைத் தலைக்கும் (முழங்காலுக்கும்) மொழ மொழ இடுப்புக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதானா!)

    பதிலளிநீக்கு
  31. ஹி ஹி பத்மாவின் இடுப்பளவை பார்த்து நானும் கொஞ்சம் ஏமாந்துட்டேன்.

    பதிலளிநீக்கு
  32. அடப்பாவி. போலிஸ்காரனுக்கு நண்பனாக இருக்கக்கூடாது; கேஸ் கிடைக்கவில்லையெனில் நாம் மாட்டிவிடுவோம். அதுபோல் இப்போதெல்லாம் பதிவர்களுக்கு நண்பனாக இருக்கக்கூடாது போல் இருக்கிறதே. பத்து -வை பற்றி பதிவா? அவரை இன்னும் காணுமே?

    பதிலளிநீக்கு
  33. @ அப்பாஜி: நிஜக்கதை இது தான்... கற்பனைகளை ஓட விடாதீர்கள் நண்பரே... :)))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. @ அமைதிச்சாரல்: //வீட்ல அர்ச்சனைலேர்ந்து தப்பிச்சிட்டீங்க :-))// அப்பா என்ன ஒரு சந்தோஷம்... :))))

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. @ புலவர் சா. இராமாநுசம்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.

    பதிலளிநீக்கு
  36. @ ஈஸ்வரன்: //அட்றா சக்கை அட்றா சக்கை// ரசித்துப் படித்தமைக்கு மிக்க நன்றி அண்ணாச்சி...

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மா :))))

    பதிலளிநீக்கு
  37. @ சிவகுமாரன்: அட ஏமாந்துட்டீங்களா? :))

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //அடப்பாவி. போலிஸ்காரனுக்கு நண்பனாக இருக்கக்கூடாது; கேஸ் கிடைக்கவில்லையெனில் நாம் மாட்டிவிடுவோம். அதுபோல் இப்போதெல்லாம் பதிவர்களுக்கு நண்பனாக இருக்கக்கூடாது போல் இருக்கிறதே. பத்து -வை பற்றி பதிவா? அவரை இன்னும் காணுமே?//

    :))) பத்மா வந்து ரசித்து “அட்றா சக்கை”ன்னு ரெண்டு தடவை சொல்லிட்டாரே சீனு....

    உனது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

    பதிலளிநீக்கு
  39. @ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  40. //கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது/

    // எங்கள் அலுவலகத்தில் அவரைப் பார்த்தால் பொறாமைப் படாதவர்களே கிடையாது!//

    பார்த்தாலா... கேள்விப்பட்டாலே பொறாமையாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  41. நட்சத்திர வாரம் கலக்கல். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன் நன்றி

    பதிலளிநீக்கு
  43. @ ஸ்வர்ணரேக்கா: //பார்த்தாலா... கேள்விப்பட்டாலே பொறாமையாக இருக்கிறது..// ஓ.... பொறாமை என்பது உங்களுக்கும் இருக்கிறது போல... :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. @ மாதேவி: தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி....

    பதிலளிநீக்கு
  45. @ K.s.s.Rajh: தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  46. நிலாமகள்: [மின்னஞ்சல் மூலம்]

    பார்த்ததும், படிக்க ஆரம்பித்ததும் அந்த பத்மா மேல் நானும் பொறாமை கொண்டேன்.
    கடைசியில் பத்மனாபன் என்றதும் அதுவும் தலையில் சுத்தம் என்றதும் ஆறுதல் அடைந்தேன்.//

    ha ha ha...
    ச‌கோ...!க‌ல‌க்குங்க‌ க‌ல‌க்குங்க‌.

    உங்களது கருத்திற்கு மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....