புதன், 9 அக்டோபர், 2013

தடங்கலுக்கு வருந்துகிறேன்.


தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முன்பெல்லாம் அடிக்கடி இப்படி ஒரு தடங்கலுக்கு வருந்துகிறோம் என அறிவிப்பு ஒன்று போட்டு எந்த வித ஒலியோ/ஓசையோ இல்லாது இருக்கும். அது போல எனது வலைப்பூவிலும் சில நாட்களுக்கு இந்த அறிவிப்பு தான் இருக்கப் போகிறது.



அலுவலகத்தில் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் போதாதென்பது போல, எனது மடிக் கணினிக்கும் என் மேல் தீராத  கோபம். "நான் என்ன உன் காதலியா? எப்ப பார்த்தாலும் என்னையே கட்டிட்டு, என்னை மடி மேல வைத்துக் கொண்டு இருக்கிறாயே, கொஞ்சம் எனக்கும்  ஓய்வு கொடேன்" எனக் கேட்டுக் கொண்டு இருந்தது. 



நான் காதில் விழாத மாதிரியே இருக்க, இப்போது மொத்தமாக படுத்து விட்டது - அட என் மடி மீது இல்லைங்கோ! ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்து விட்டது. எதோ கொஞ்சம் டிங்கரிங் பண்ணி, பட்டி பார்த்து கொடுத்து இருக்கார் கணினி மருத்துவர். இன்னும் நிறைய விஷயங்கள் சரியாக  வில்லை. எதை செயல் படுத்தினாலும், "டிங். டிங். என சத்தம் செய்து, "என்னைத் தொடாதே, என்னைக் கிள்ளாதே, மீறினால் மேலிடத்தில் புகார் அனுப்புவேன்" என மிரட்டுகிறது.



ஆகையால் நண்பர்களே, இன்னும் சில நாட்களுக்கு இங்கே 'தடங்கலுக்கு வருந்துகிறேன்' என்ற அறிவிப்பு தான். "புதிய பதிவுகள் வெளி வராது. நான் தொடரும் பதிவர்களின் பதிவுகளையும் படிக்க முடியாது" என்பதை வருத்தத்துடன் [ஆஹா ஜாலி, என பலரும் சந்தோஷத்தில் வெடி வெடிப்பது இங்கே வரை கேட்கிறது!.....] தெரிவித்துக்  கொள்கிறேன்.



மீண்டும் கணினி சரியான பிறகு, அலுவலகத்தில் ஆணி கொஞ்சம் குறைந்த பிறகு உங்களைச சந்திக்கிறேன். அதுவரை....

எஞ்சமாய்........

வெங்கட்
புது தில்லி 
 

60 கருத்துகள்:

  1. //[ஆஹா ஜாலி, என பலரும் சந்தோஷத்தில் வெடி வெடிப்பது இங்கே வரை கேட்கிறது!.....] //

    ;))))) மீண்டும் மீண்டு வர முயற்சி செய்யுங்கள்.

    என் தொடரின் பகுதி-60 க்கு மட்டும் எப்படியாவது வந்து ஓர் சின்ன கமெண்ட் கொடுங்கோ என என் கணக்குப்பிள்ளை கிளியார் கேட்டுக்கொள்கிறார், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

      64-ஆவது வரை படித்து கருத்தும் எழுதி விட்டேன்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. பிறகு வெளியிட்ட பகுதிகளையும் படிக்க வேண்டும்.

      நீக்கு
  2. இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/10/60.html

    - VGK's கிளி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. கிளிக்கும் தான். :)

      நீக்கு
    2. பகுதி-59 வரை வந்தவரை பகுதி-60ல் திடீரெனக் காணோமே என கிளி கொஞ்சம் கீச்சிட்டது, பதறியது, கவலைப்பட்டது. உண்மைதான்.

      அதன்பின் வெள்ளைக்கார துரைபோல நீங்க வந்து கருத்தளித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தது அந்தக்கிளி.

      அன்புடன் VGK

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  3. சீக்கிரம் மடிக் கணணி சரியாகி மீண்டும் வலையில் உலா வரவேண்டும். அதுவரை காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுதும் சரியாகவில்லை. எதோ தட்டுத தடுமாறி வேலை செய்கிறது. மொத்தமாய் ஒய்வு கொடுக்க வேண்டியது தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. அது தலையில ரெண்டு தட்டுத் தட்டிவிட்டு
    தொடர்ந்து எழுதுங்கள். நான் அப்படித்தான் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க கணவரை தட்டுவது போல அவர் மனைவியை தலையில் தட்டமுடியாது...

      நீக்கு

    2. தட்டிக் கொடுத்து தான் தாஜா செய்து கொண்டிருக்கிறேன். மொத்தமாய் என்னை அனுப்பி விடு என்கிறது.பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
    3. நான் இந்த விளையாட்டுக்கு வரலை மதுரை தமிழன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. கணினிக்கு "Get Well Soon" சொன்னீங்களா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  7. தடங்கல்கள் ...
    நிறை பதிவுகளுக்கான
    இடைவேளை தானே..
    வாருங்கள்.. நண்பரே.. காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  8. எங்களுக்கு இந்தத் தடங்கல்
    நிச்சயம் இழப்புதான்
    விரையில் வேலைப் பளு குறையவும்
    கணினி சீரடையவும் வேண்டிக் கொள்கிறோம்...
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி...

      நீக்கு
  9. தடங்கல் சீக்கிரம் சரியாக வாழ்த்துகள். விரைவில் வருக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. விரைவில் தடங்கல் நிவர்த்தியாகி தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  11. தடங்கலுக்கு நாங்களும் வருந்துகிறோம்.கணினி விரைவில் நலம்பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  12. எழுத வேண்டிய பதிவை எல்லாம் பேப்பரில் எழுதி வைத்து கொள்ளுங்கள். லேப்டாப் சரியான பின் ஒரு நாளைக்கு குறைந்தது 3 பதிவுகள் இட்டு விடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் - அது என்ன பேப்பரில் எழுதுவது? மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது மதுரைத் தமிழன். கையெழுத்து போடுவது மட்டும் தான் பேனாவால். :(((

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. சீக்கரமா சிகிச்சை கொடுத்து மீண்டும் மடிமீது வையுங்க நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  14. ஆபீஸில் ஆணி பிடுங்குவது போரடித்து ,சீக்கிரம் வலைப்பூ பக்கம் வந்து விடுவீர்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போரடித்தாலும் ஆணியை பிடுங்கித்தானே ஆக வேண்டியிருக்கிறது.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  15. Dear kittu,

    Meendum viraivil pudhupudhu padhivugaludan yedhirparkirom.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  16. Dear kittu,

    Kanini viraivil gunamagi meendum padhivugal vara vendikkolgiren.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  17. அடடா நானே அபூர்வம ஔங்க வலைப்பூ பக்கம் வரேனே இப்படின்னு வந்தா என்ன இப்படி மேலும் வருந்தவைக்கிறீங்க? வருக விரைவில்
































































    வருக விரைவில்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.

      நீக்கு
  18. விரைவில் கணனி கைகொடுக்கட்டும் வலையில் உறவுகளைச் சந்திக்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  20. தடைகள் நீங்கி மீண்டும் வருக!
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  21. சீக்கிரம் நலம் பெறட்டும் கணினி:)! வேலைகளை முடித்துக் கொண்டு விரைவில் வருக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  22. தடைகள் வருவது சகஜம்தான். இருந்தாலும் எழுதுவதை நிறுத்த வேண்டாம். ஆதி மூலம் பப்ளிஷ் செய்ய முடியாதா.. ஓஹோ அதற்கும் கணின் வேண்டுமோ.
    பரவாயில்லை. கணினி சீக்கிரம் நலம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      எழுதுவதற்கும் கணினி வேண்டுமே.... :(

      நீக்கு
  23. ஓடிக் களைத்த கணினிக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.எல்லாம் சரியான பின்பு மீண்டும் வருக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  24. விரைவில் வாங்க அண்ணா...
    காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  25. கணினிக்கும் தேவை ஓய்வு.
    ஆனாலும் அதிக நாள் விடுமுறை எடுக்க வேண்டாமே?
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் ஓய்விலிருந்து திரும்புகிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  26. கொஞ்சம் ஓய்வும் தேவை தான். :))) ஓய்வும் எடுத்துக்குங்க. அதே சமயம் விரைவில் கணினியும் சரியாகட்டும். விஜயதசமி வாழ்த்துகள். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....