ஞாயிறு, 31 ஜூலை, 2016

வாங்க பழகலாம்! - நாளைய பாரதம் – 9


நாளைய பாரதம் தலைப்பில் புகைப்படங்கள் வெளியிட்டு மூன்று மாத காலம் ஆகிவிட்டது. கடைசியாக வெளியிட்டது மார்ச் 6-ஆம் தேதி. அதன் பிறகு நிறைய ஊர்களுக்குப் பயணித்துவிட்டேன். நிறைய புகைப்படங்களும் எடுத்திருந்தேன் – ஆனாலும் ஏனோ வெளியிட முடியவில்லை. சோம்பல் தான் காரணம்....  புகைப்படங்களை தேடி எடுத்து ஒன்று சேர்த்து வெளியிட வேண்டும் – ஆனாலும் ஒரு தொகுப்பாய் வெளியிட்டு நாளைய பாரததின் வேர்களைக் காணும்போது மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது என்னவோ உண்மை......

இதோ இந்த ஞாயிறில் நாளைய பாரதம் தொகுப்பின் ஒன்பதாம் பகுதி. சமீப மாதங்களில் சென்ற பயணங்களின் போது எடுத்த படங்கள் ஒரு தொகுப்பாய் இங்கே – வடக்கே ஹிமாச்சலப் பிரதேசத்தில் எடுத்த சில படங்களும் தெற்கே விசாகப்பட்டினத்தில் எடுத்த சில படங்களும் இந்தத் தொகுப்பில் உங்கள் பார்வைக்கு.... கூடவே நான் ரசித்த சில பொன்மொழிகள் – ஆங்கிலத்தில் – மொழி பெயர்ப்பதில் விருப்பம் இல்லாததால்! இதோ உங்கள் ரசனைக்கு.....  படங்களைப் பற்றியும் பதிவு பற்றியும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்


படம்-1: மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன? [எடுத்த இடம்: குல்லூ அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றபோது அங்கே வேலை செய்பவரின் குழந்தை]

Children are one third of our population and all of our future. ~Select Panel for the Promotion of Child Health, 1981



படம்-2: இப்பதான் மம்மு சாப்பிட்டு முடிச்சேன்.....  [[எடுத்த இடம்: குல்லூ அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றபோது அங்கே வேலை செய்பவரின் இன்னுமொரு குழந்தை]

Even when freshly washed and relieved of all obvious confections, children tend to be sticky. ~Fran Lebowitz



படம்-3: என் ஸ்டைல் எப்படி இருக்கு? உங்களுக்குப் பிடிச்சுருக்கா? [எடுத்த இடம்: மணாலி-Solang Valley செல்ல கேபிள் காருக்கு காத்திருந்தபோது]

Every child comes with the message that God is not yet discouraged of man. ~Rabindranath Tagore



படம்-4: நான் நல்லா இருக்கேனா, என் தொப்பியும் நல்லா இருக்கா?[எடுத்த இடம்: மணாலி-Solang Valley செல்ல கேபிள் காருக்கு காத்திருந்தபோது]

Anyone who thinks the art of conversation is dead ought to tell a child to go to bed. ~Robert Gallagher


படம்-5: சின்னதா ஒரு நடனம்.....  பிடிச்சுருக்கா? [எடுத்த இடம்: ஹிமாச்சல் அருகே உள்ள மணிக்கரன் குருத்வாரா சென்றபோது]

Kids: they dance before they learn there is anything that isn't music. ~William Stafford



படம்-6: அட இந்த மனுஷன் என்னப்பா, ஃபோட்டோ எடுத்துக்கிட்டே இருக்காரே? [எடுத்த இடம்: ஹிமாச்சல் பிரதேசத்தின் கஜியார் எனும் இடத்தில்!]

Children seldom misquote. In fact, they usually repeat word for word what you shouldn't have said. ~Author Unknown



படம்-7: முதல் மொட்டையடிச்சு நாமமும் போட்டாச்சு...... [எடுத்த இடம்: விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்ஹாச்சலம் கோவில் அருகே]

A three year old child is a being who gets almost as much fun out of a fifty-six dollar set of swings as it does out of finding a small green worm. ~Bill Vaughan



படம்-8: இந்தச் சிரிப்பும் மகிழ்ச்சியும் எவ்வளவு கொடுத்தாலும் கிடைக்குமா? [எடுத்த இடம்: விசாகப்பட்டினத்திலிருந்து அராக்கு Valley சென்றபோது – பாசஞ்சர் ரயிலில்!]

You are worried about seeing him spend his early years in doing nothing. What! Is it nothing to be happy? Nothing to skip, play, and run around all day long? Never in his life will he be so busy again. ~Jean-Jacques Rousseau, Emile, 1762



படம்-9: எனக்கு பெரிசா ஆசையெல்லாம் இல்லை என சட்டையின் வாசகத்தில் எழுதி வைத்திருக்கும் இச்சிறுவனுக்கு ஒரே ஆசை – இந்த ஃபோட்டோ எடுக்கற மாமா வைச்சிருக்காரே காமெரா அதைக் கொடுக்க வேண்டும் என்பதே! [எடுத்த இடம்: விசாகப்பட்டினம்]

We worry about what a child will become tomorrow, yet we forget that he is someone today. ~Stacia Tauscher



படம்-10: அச்சச்சோ.... இந்த மாமா நம்மள படம் பிடிக்கிறாரே... எனக்கு ஒரே வெக்கமா இருக்கு! [எடுத்த இடம்: விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமம்].

While we try to teach our children all about life, our children teach us what life is all about. ~Angela Schwindt



படம்-11: நான் போட்டிருக்கும் காதணி நல்லா இருக்கா? பிடிச்சு இருக்கா உங்களுக்கு? [எடுத்த இடம்:  கைலாச கிரி, விசாகப்பட்டினம்]

Children make you want to start life over. ~Muhammad Ali



படம்-12: சாப்பிட விடாம என்ன ஃபோட்டோ எடுக்க வேண்டியிருக்கு? [விசாகப்பட்டினம் தசபெல்லா உணவகத்தில் சாப்பிட வந்த ஒரு குழந்தை]

A child can ask questions that a wise man cannot answer. ~Author Unknown

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களையும், கொடுத்துள்ள வாசகங்களையும் ரசித்தீர்களா? உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்களேன்....

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

டிஸ்கி: இந்தப் படங்களில் ஏதாவது ஒரு படத்திற்கு, கவிதை எழுத விரும்புவர்கள் கவிதை எழுதி எனது மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைக்கலாம்.....  எனது பக்கத்திலும் பகிர்ந்து கொள்வேன் - படமும் கவிதையும் பகுதியாக!

16 கருத்துகள்:

  1. ஒன்றையொன்று விஞ்சி எல்லாமே அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஒளிமயமான பாரதம் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  3. படங்களும், கருத்தும், பொன்மொழிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.....

      நீக்கு
  4. புகைப்படங்கள் என்றால் நினைவுக்கு வருபவர் வெங்கட நாகராஜ் அதுவும் குழந்தைகள் படம் ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  5. குழந்தைகள் ஒவ்வொன்றும் அழகு எடுத்த விதம் அதனினும் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. அருமையான படங்கள்...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  7. அனைத்துக் குழந்தைகளும் அருமை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. portrait photography பற்றி விவரமாகப் படித்தீர்களோ? எப்படி இந்த மாதிரி குழந்தைகளை closeup shot முடிந்தது. மொத்தத்தில் shot at the right moment.

    Please share some lessons on Photography also.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் பெரும்பாலும் 55-250 லென்ஸ் கொண்டு zoom செய்து எடுக்கப்பட்டவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....