ஞாயிறு, 6 மே, 2018

அய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்பட உலா…



இன்றைக்கு எங்கள் குலதெய்வம் கோவில் இருக்கும் இடமான அய்யூர் அகரம் எனும் கிராமத்தில் இருக்கிறேன். இன்றைக்கும் படங்கள் எடுத்திருக்கிறேன் என்றாலும் உடனே இங்கே பகிர்ந்து கொள்ள முடியாது என்பதால், இதே ஊரிலும், பக்கத்து ஊர்களிலும் சில வருடங்கள் முன்னர் எடுத்த படங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒன்றிரண்டு படங்கள் முன்னரே பகிர்ந்திருக்கலாம்!


மரத்தடியில் விநாயகர்....

திருவாமாத்தூர்....






அழகிய சிற்பம் ஒன்று...

திருவாமாத்தூர்....




இரட்டை கோபுரங்கள்....
திருவாமாத்தூர்....





குலதெய்வம் கோவில் கோபுரம் ஒன்றில்....



அய்யூர் அகரம்




குலதெய்வம் கோவில் கோபுரம் ஒன்றில்....


அய்யூர் அகரம்




நான் ஸ்கூலுக்குப் போறேன்......


ஒரையூர்




பச்சையம்மன் கோவில் அருகே....


ஒரையூர்



பச்சையம்மன் கோவில் அருகே ஏழு முனிகள்....

ஒரையூர்



பச்சையம்மன் கோவிலில் ஒரு ஓவியம்....

ஒரையூர்





பச்சைவாழியம்மன் எனும் பச்சையம்மன்....
ஒரையூர்

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். இதே ஊரில் நடக்கும் குடிசைத் தொழிலான திருஷ்டி பொம்மைகள் செய்வது பற்றியும் ஒரு பதிவு முன்னர் எழுதியிருக்கிறேன். அந்தப் பதிவுக்கான சுட்டி கீழே. விருப்பமிருப்பவர்கள் படிக்கலாமே….




மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்

32 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    ஓ அல்ரெடி லேண்டட்!!!! நேற்றே உங்கள் பதிவில் அறிய முடிந்தது...

    பிள்ளையார் அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சனிக்கிழமை காலை புறப்பட்டு பத்தரை மணிக்கு சென்னை. நண்பர் வீட்டில் மதிய உணவு. மாலை ஏழு மணிக்கு அய்யூர் அகரம்.

      நன்றி கீதா ஜி.

      நீக்கு
  2. படங்கள் எல்லாம் அழகு

    ஜோடியாகப் பிள்ளையார் இப்போதுதான் பார்க்கிறேன்.

    பச்சையம்மன் கோயில் அருகில் ஊர்க்காவல் தெய்வங்கள் போலும்!!! எல்லா ஊரிலும் இப்படியான காவல் தெய்வங்கள் இருப்பார்கள் போலும்! பெரியதாகவே இருக்கும் சிலைகள். என்ன அழகு!..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோடியாக பிள்ளையார் ?

      முனி சிலைகள் கொஞ்சம் பார்க்க பயம் தான் கீதா ஜி.

      நீக்கு
  3. ஓ,,, தமிழகம் வந்தாச்சா? குட் மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சனிக்கிழமை காலை சென்னை பிறகு விழுப்புரம். தற்போது திருவரங்கத்தில் ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஏழு முனிவர்கள் படத்தில் முதலாமவர் மிரட்டுகிறார். படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலாமவர் மிகப் பெரியவர்! மிரட்டல் தான் ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பச்சையம்மன் கோயில் அருகே உள்ள அச்சிலைகள் வெகு அழகு பச்சை இயற்கை அழகுடன்...மனதை மிகவும் கவர்ந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரே அழகு தான் கீதா ஜி. கிராமத்துச் சூழல் எனக்கும் பிடிக்கும்.

      நீக்கு
  6. தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு என்பதை ஆதியின் முகநூல் பதிவில் இருந்து தெரிந்தது. இந்த ஊர் எல்லாம் கேட்டதே இல்லை. குலதெய்வப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சனிக்கிழமை தான் வந்தேன். குலதெய்வம் பிரார்த்தனை சிறப்பாக முடிந்தது கீதாம்மா.

      நீக்கு
  7. புகைப்படங்கள் அழகு. உங்கள் குலதெய்வம் கோவில் இருப்பது எந்த மாவட்டம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழுப்புரம் மாவட்டம் தான் பானுமதி வெங்கடேஸ்வரன் ஜீ.

      நீக்கு
  8. குலதெய்வ வழிபாடே நம் பண்பாடு...அதுவும் படத்தொடு பதிவிட்டால் மிக்க அழகு...தாய்மண் இன்னொரு அன்னை மடி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய்மண் இன்னொரு அன்னை மடி. உணமைதான் செல்வக்குமார்.

      நீக்கு
  9. அழகான படங்கள்.. கண்களுக்கு விருந்து..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. காலையில் அழகிய காட்சிகளின் தரிசனம் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  11. அருமையான படங்கள். தமிழகம் வந்தும் பயணங்கள் தொடர்கிறதா? என்ன... சுற்றத்துடன் சுற்றுவீர்கள். அது ஒன்றுதான் வித்தியாசம். அருமையான நினைவுகள் அமைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். குடும்பத்துடன் சுற்றி வருவது மகிழ்ச்சி தான் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. அழகான படங்கள். பயணம் இனிமைதான் சுற்றத்துடன் .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அழகிய படங்கள். அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....