வியாழன், 30 ஏப்ரல், 2020

கதம்பம் – யானையின் ஓட்டம் – பலாப்பழ அப்பம் – பலாக்கொட்டை கட்லட் – உப்பு உருண்டை - காய்கறி


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உடல் சுகாதாரம் ஒருவன் உடல் செம்மையாக செயல்பட உதவுகிறது. மனச் சுகாதாரமே அவன் வாழ்க்கை செம்மையாக நடைபெற உதவுகிறது. 

புதன், 29 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – இயற்கை செதுக்கிய பாலம் – வித்தியாச உயிரினங்கள்…


இயற்கை வடித்த பாலம்...

அந்தமானின் அழகு – பகுதி 25


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

விட்டுக் கொடுப்பதும் மன்னிப்பதும் தான் வாழ்க்கை. ஆனால் வாழ்க்கையின் போராட்டமே, யார் விட்டுக்கொடுப்பது, யார் மன்னிப்பது என்பது தான்…

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

பார்த்ததும் கேட்டதும் – தில்லி நண்பர்களின் கவனிப்பு…


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஓஷோ அவர்களின் ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கூர்ந்து கவனிக்கும் ஒரு சாதாரணக் கலையை தெரிந்து கொண்ட மனிதனிடம் ஒரு பொன் சாவி உள்ளது. பிறகு அது கோபமோ, ஆசையோ, நளின உணர்வோ அல்லது காதலோ, அல்லது காம உணர்வோ, எதுவானாலும் பரவாயில்லை. அது எந்த வகை வியாதியாய் இருந்தாலும் இருக்கலாம். அது பரவாயில்லை. ஒரே மருந்து வேலை செய்யும். நன்கு கவனி! அதிலிருந்து நீ விடுதலை பெறுவாய்!

திங்கள், 27 ஏப்ரல், 2020

கொண்டையான்குளம் நினைவலைகள் - பத்மநாபன்



அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, வினோத் என்பவர் எழுதிய ஒரு இனிமையான கவிதையுடன் ஆரம்பிக்கலாம்.

கருவுடையணிந்த மேகமது
கரங்கோர்த்து நிற்க
காற்று அத்தருணத்தில்
காதினில் ஓதியதும்
காரினைப் பொழிய
களிப்புடன் நனைந்திருந்தன
கிராமத்துக் குளத்தின்
களிமண் தரை…

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

தி கோட் - குறும்படம்



அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்தப் பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை – நம் துன்பங்களும் அப்படியே தான் – சார்லி சாப்ளின்.

இந்த ஞாயிறில் மீண்டும் ஒரு ஹிந்தி மொழி குறும்படம் பற்றிய தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  ஒரு அனாதை இல்லம்.  அங்கே வசிக்கும் குழந்தைகளில் இரு சிறுவர்கள் –  ராஜு மற்றும் ஜும்ரூ தான் பிரதான கதாபாத்திரங்கள். இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது யாரேனும் வந்து கொடுக்கும் துணிகளை, அளவு பார்த்து பிரித்துக் கொடுக்கிறார்கள்.  இல்லத்தின் அருகே இருக்கும் பள்ளிக்கு  வரும் குழந்தைகள் அனைவருமே போட்டுக் கொண்டு வரும் Coat மீது ராஜூவிற்கு அளவு கடந்த ஆசை – தனக்கு யாரேனும் ஒரு கோட் கொடுக்க மாட்டார்களா என. ஒவ்வொரு முறை துணி மூட்டை வரும்போதும் கோட் இருக்கிறதா எனப் பார்த்து ஏமாற்றத்துடன் இல்லத்தின் வாயில்கதவிற்கு அருகே நின்று கோட் அணிந்து பள்ளி செல்லும் சிறுவர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதே அவனுக்கு வேலையாக இருக்கிறது.  அந்த சமயத்தில் கோட் அணிந்த ஒருவர் இல்லத்திற்கு வருகிறார்.  அவர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளில் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ள வந்திருப்பவர். 

பார்த்த மாத்திரத்திலேயே அவருக்கு ராஜூவை பிடித்து விடுகிறது.  தத்து எடுத்துக் கொள்ள வேண்டிய சம்பிரதாயங்களை ஆரம்பிக்கிறார்கள்.  இல்லத்திலிருந்து புறப்படும் முன்னர் ராஜூவை இல்லத்தில் இருக்கும் பூங்காவில் சந்திக்கிறார் அந்த மனிதர்.  விரைவில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார் ராஜூவிடம்.  வீட்டுக்கு வந்தா வேலை செய்யணுமா? எனக் கேட்கும் சிறுவன் ராஜூ மனதைத் தொடுகிறார். பல இடங்களில் இப்படித்தான் நடக்கிறதே. ஆமாம் – ”நீ படிக்கணும், ஹோம் ஒர்க் பண்ணனும், சாயங்கால வேளைகளில்  என்னுடன் விளையாடணும்” இது தான் உனக்கு வேலை என்று சொல்கிறார். சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட, ராஜூ அந்த மனிதரை அணைத்துக் கொண்டு விடுகிறார்.  அங்கிருந்து விலகிச் செல்கிறார். அந்த மனிதரும் அங்கே இருந்து செல்கிறார்.  செல்லும் முன்னர் பூங்காவில் கழற்றி வைத்த கோட்-ஐ மறந்து விடுகிறார்.  பூங்காவிலேயே கிடக்கிறது அந்தக் கோட்.  அதன் பின்னர் அந்த மனிதர் வந்தாரா? ராஜூவிற்கு ஒரு வீடு கிடைத்ததா? அவன் ஆசைப்பட்ட படி கோட் கிடைத்ததா? என்பதையெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் இந்தக் குறும்படத்தில்.

சுமார் 15 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம்.  மனதைத் தொட்ட குறும்படம்.  உங்களுக்கும் இந்தக் குறும்படம் பிடிக்கலாம்! பார்த்து விட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.



காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


நண்பர்களே, இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

சனி, 25 ஏப்ரல், 2020

காஃபி வித் கிட்டு – புதுமைப் பித்தன் – டேட் – குப்பை – கவிதை – தேரடி வீதியில்


காஃபி வித் கிட்டு – பகுதி 64


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நடந்து முடிந்த எதையும் நான் ஒரு போதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன் – புத்தர்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஷகீத் த்வீப் – டேங்கோ பீச் ரிசார்ட்…


தங்குமிடத்தின் பின்னே
கடற்கரையில்...

அந்தமானின் அழகு – பகுதி 24


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வாழ்க்கையில் வந்துட்டு போற ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத ஏதோ ஒரு நினைவுகளை பொக்கிஷமாக தந்துவிட்டு தான் செல்கிறார்கள்.

வியாழன், 23 ஏப்ரல், 2020

கதம்பம் – நளதமயந்தி – க்ராஃப்ட் – ஃப்ரைட் இட்லி – துளசி பாட்டி


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்… நீண்ட தூரம் வராது சிபாரிசு… எல்லா பொழுதும் கிட்டாது உதவி… எப்போதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை!

புதன், 22 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – அடுத்த தீவு நோக்கி…


ஸ்வராஜ் த்வீப் தீவு - துறைமுகம் அருகே...


அந்தமானின் அழகு – பகுதி 23


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஷிம்லா ஸ்பெஷல் – மின்புத்தக வெளியீடு


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

எல்லா குழந்தைகளுக்குமான தேவை ஒரு சிறிய உதவி மட்டுமே, ஒரு சிறிய நம்பிக்கை மற்றும் அவர்கள் மேல் நம்பிக்கை கொள்ளும் சிலர் – மேஜிக் ஜான்சன்.

திங்கள், 20 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – எலிஃபன்ட் கடற்கரை - காலை உணவு…


அந்தமானின் அழகு – பகுதி 22



அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பதிவர் இரா. பூபாலன் எழுதிய, விகடனில் வெளிவந்த, நல்லதொரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

முதல் காதல் - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மனதுக்குள் பிடித்தவர்களை பார்க்காமல், பேசாமல் கூட இருந்து விடலாம். ஆனால்… நினைக்காமல் ஒருபோதும்  இருக்க முடியாது.

சனி, 18 ஏப்ரல், 2020

காஃபி வித் கிட்டு – சிரிப்பு – பல்பு – சம்பாவின் இசை – மகிழ்ச்சி – பதிலடி - சொர்க்கம்


காஃபி வித் கிட்டு – பகுதி 63

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

கஷ்டப்படுகிறவன் கிட்ட சிரிப்பு இருக்காது… சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது… ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – நகர் வலமும் இரவு உணவும்…

அந்தமானின் அழகு – பகுதி 21



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

கதம்பம் – ஊரடங்கு – ஆலு டிக்கி – நேந்திரங்காய் உப்பேரி


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒரு மனிதனின் அழகானது, அவனது நிறமோ, பணமோ அல்ல; அவனது அன்பான குணமும், சாந்தமான மனதும் தான் அழகு – அப்துல் கலாம்.

புதன், 15 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – ராதா நகர் கடற்கரை – மதிய உணவு…




அந்தமானின் அழகு – பகுதி 20



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

We live in a wonderful world that is full of beauty, charm and adventure. There is no end to the adventures we can have if only we seek them with our eyes open. – Jawaharlal Nehru.