கேசரிக்கும்
எனக்கும் ஏகப் பொருத்தம்! கேசரி பிடிக்கும் என்றாலும் ஒவ்வொரு முறை கேசரி
கிடைக்கும்போதும், வைராக்கியம் கொள்வேன் – ”இனிமே சத்தியமா கேசரி சாப்பிடக் கூடாது” என்ற வைராக்கியம் தான். ஆனாலும் ஏனோ என்னை
இந்த கேசரி விடுவதே இல்லை! ஏற்கனவே
திருவரங்கம் வந்திருந்த ஒரு முறை, பக்கத்து வீட்டிலிருந்து பிறந்த நாள் ஸ்பெஷலாகக்
கிடைத்த பச்சை கேசரி பற்றி வலைப்பூவில்
எழுதி இருக்கிறேன். இந்த பயணத்திலும் கேசரி என்னை விடுவதாக இல்லை!
வெள்ளி, 5 மே, 2017
கேசரி, I am waiting.... – கொழுக்கட்டையான புட்டு
Labels:
அனுபவம்,
திருவரங்கம்,
பொது
வியாழன், 4 மே, 2017
காதல் எக்ஸ்பிரஸ் – சத்திரம் - பெட்டவாய்த்தலை வழி முக்கொம்பு!
படம்: இணையத்திலிருந்து....
முக்கொம்பு – திருச்சியில் இருக்கும் மூன்று சுற்றுலாத்
தலங்களில் [கோவில்கள் அல்லாத!] முதலாவது கல்லணை, இரண்டாவது முக்கொம்பு, இப்போது
மூன்றாவதாக வண்ணத்துப் பூச்சி பூங்கா! இந்த இரண்டாவது இடத்திற்கு சில முறை
சென்றதுண்டு. கல்லூரி சமயத்தில் நெய்வேலியிலிருந்து ஒரு நாள் சுற்றுலாவாக திருச்சி
வந்தபோதும் இங்கே சென்றிருக்கிறேன் – கல்லூரி தோழர்கள்/தோழிகளோடு! அதன் பிறகு பல
முறை குடும்பத்தினரோடு. ஒவ்வொரு முறை செல்லும்போதும், இனிமேல் இங்கே வரக்கூடாது
என்று பேசியபடியே தான் திரும்புவோம்! சரியான பராமரிப்பு இல்லை, குரங்குகள் தொல்லை
மற்றும் காதலர்கள் தொல்லை!
புதன், 3 மே, 2017
பயணங்கள் முடிவதில்லை – ஒரு கருத்துக் கணிப்பு
அதிகரித்திருக்கும் பணிச்சுமை காரணமாக தொடர்ந்து
எழுதுவது இயலாத ஒரு விஷயமாக இருக்கிறது. பதிவுகள் எழுதுவதற்காக நேரமும் செலவிட
வேண்டியிருக்கிறது. Blogger மூலம் நான் தொடரும் அனைத்து பதிவர்களின்
பதிவுகளையும் பெரும்பாலும் வாசித்து விடுகிறேன் – அவர்கள் எனது பதிவுகளை
வாசிக்கிறார்களோ இல்லையோ, கருத்து சொல்கிறார்களோ இல்லையோ, அனைவரது பதிவுகளையும்
வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். Controversial பதிவுகள்
தவிர மற்ற பதிவுகள் அனைத்திலும் நான் படித்ததன் அடையாளமாக தமிழ்மண வாக்கு அளிக்கிறேனோ
இல்லையே, கருத்துரை எழுதாமல் வருவதில்லை. வலையுலகில் எப்போதுமே ஒரு Give and take policy இருப்பது கண்கூடு! நீங்க படிச்சா, நானும் படிப்பேன்!
இருந்தாலும் பரவாயில்லை! நான் அப்படி இல்லை!



