ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி முப்பத்தி ஆறு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

அம்மாவின் மறைவு




அதிவேகமாக எல்லாம் நடந்து முடிந்து விட்டது! இதோ இப்போது தான் அப்பா(மாமனார்) மறைந்து விட்டதைப் போல இருக்கிறது! அதற்குள் அம்மா(மாமியார்)வின் மறைவும் நடந்தே விட்டது! அப்பா டிசம்பர் 7ல் மறைந்தார் என்றால் மார்ச் 7 அம்மா படுக்கையில் விழுந்தார்! அதனைத் தொடர்ந்து வரிசையாக மருத்துவமனை வாசம், மருந்து மாத்திரைகள் என்று ஆறு மாதங்கள் கடந்து விட்டன! அப்பாவின் வருஷாப்தீகத்திற்குள் தானும் அப்பாவிடம் சென்று விடுவதாக சொன்ன சபதத்தை சாதித்து விட்டார் அம்மா!


இப்போ நீயும் நானும் ஒரே நிலைமைல தான் இருக்கோம் இல்ல! என்று மனவருத்தத்துடன் சொன்ன என்னவரிடம் என்ன சொல்வது!! நான் 20+ ல் இந்த நிலைமைக்கு வந்தேன்! எனக்கு எல்லாமே அவசர கதியில் முடிஞ்சு போச்சு! நீங்க 50+ல் இந்த நிலைக்கு வந்திருக்கீங்க! அந்த பாக்யம் கிடைச்சிருக்கு இல்லையா! ஏத்துப்போம்! என்றேன்!


இத்தனை வருடங்கள் அம்மாவுடனான பிணைப்பு என்பது என்னவருக்கு மட்டுமல்ல எனக்கும் கூட நெருக்கமானது தான்! எத்தனையோ கதைகளை அம்மாவும் நானும் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்! ஒரு உதாரண மனுஷியாக தான் வாழ்ந்திருக்கிறார்! உழைப்பும், சுறுசுறுப்பும், பாட்டும், வேலைகளுமாகத் தான் தன் வாழ்நாட்களை கடந்து வந்திருக்கிறார்! 


சிறுவயதிலேயே வாழ்வின் பல கடினமான தருணங்களை கடந்து வந்துவிட்ட எனக்கும் கூட அம்மாவின் மறைவு என்பது இந்த கற்பாறையாகிப் போன மனம் கொண்டவளிடம் கூட கண்ணீரை வரவழைத்து விட்டது! அம்மா! அம்மா! என்று தான் அரற்றிக் கொண்டிருந்தேன்! செய்யும் ஒவ்வொரு செயலிலும், பேசும் வார்த்தைகளிலும் அம்மாவின் நினைவே வருகிறது! 


நிச்சயமாக வயோதிக காலத்தில் படுக்கையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை வாங்கிக் கொள்வது என்பது பெரும்பேறு தான்! ஆனால் அதை உடனிருக்கும் எல்லோரும் ஏற்றுக் கொள்வது தான் வலி மிகுந்தது! அம்மாவின் சத்கதிக்கு பிரார்த்தித்துக் கொள்வது ஒன்றே இனி எங்கள் பணி!


காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லணும்! 


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

18/9/25

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி முப்பத்தி ஐந்து - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

வியாழன், 11 செப்டம்பர், 2025

பாரதி யார்? - விஜி வெங்கடேஷ்

 *பாரதி யார்?*



(B) பாட்டிலைத் திறந்தால் கவிதை வரும் சிலருக்கு;


பாட்டின் திறத்தால் போதை ஊட்டினாய் இவையகத்துக்கு; 


வறுமை வாட்டியபோதும் வாடி நீ நிற்கவில்லை;


கருமை வண்ணணைப் பாடினாய், அவனருளையே நாடினாய்.


கண்ணம்மா என்று கவிதையில் நீ உருகியது உலகுக்கே தெரியும்..


உன் செல்லம்மா தான் அது என்று எத்தனை பேருக்குத் தெரியும்?


முண்டாசுக்கவி என உனை

பெயரிட்டு அழைத்தனர்..


கண்டவரும் உன் கவியரங்கம் நடத்தியே பிழைத்தனர்.


நீ இருக்கும்வரை உன் திறமையைக் கண்கள் காணவில்லை..


இப்போதோ ஊரெங்கும் உன் சிலைகளைக் காணக் கண் போதவில்லை!


புரச்சிகரமான கருத்துக்களை தைரியமாய் முன் வைத்தாய்.


வெறுத்து ஊரார் உனைத் தள்ளி வைத்தார்.


உன் கவியால் மனங்களில் தேசப் பற்றைப்

பற்றவைத்தாய்;


அந்நிய ஆட்சியெனும் காட்டை அதன்மூலம் எரிய வைத்தாய்.

 

தொலைக்காட்சி நேரலையை அன்றே சிந்தித்தாய்.


அதை உன் பாட்டிலும் சிறப்பாய் வடித்து வைத்தாய்.


காளி நீ கண் முன் கண்ட தெய்வம்; அவளையே வணங்கிய 

நீயும் காளிதாசனே!


ஆசுகவி உனக்கு 

கவித்திறனை அள்ளி அள்ளிக் கொடுத்தாள்.


காசுபணத்தை ஏனோ கிள்ளிக் கிள்ளியே கொடுத்தாள்..


செல்வம் வந்தால் நீ தன்னை(self), ஏன் தன்னையும்(herself) மறப்பாய் என நினைந்தாளோ..


செல்வத்தை நீ கேட்டிருந்தால் அதைப் பொழிந்திருப்பாள்.


நீ கேட்டதோ பகைவனுக்கு அருளும் நெஞ்சும், மோகத்தைக் கொல்லும் வைராக்கியமும்!


செல்லம்மாளின் தியாகங்கள் உனை மஹாகவியாய் உயர்த்தின.


இரு பெண் குழந்தைகள் உன் பாசத்தில் நனைந்தன.


கோவில் யானை நீ குடுத்த பழத்தை தன் வாய்க்குள் தள்ளியது ..


பழம் கொடுத்த மஹாகவியை தன் துதிக்கையால் தள்ளியது.


ஓரிரு மாதங்களில் மண்ணுலகை நீ நீத்தாய்.


39 வயதிற்குள் யாரும் சாதிக்காததை சாதித்தாய்.


இன்று நீ இருந்தால்..


பதவியில் இருப்போரை பாராட்டிக் கவி எழுதியிருப்பாய். 


செல்வத்தில் புரண்டிருப்பாய்..செருக்கில் மிதந்திருப்பாய்..


நல்லவேளை நீ பிறக்கவில்லை,


உன் பாக்கள் சுயமிழந்து இறக்கவில்லை..


பசியில் வாடிய போதும் குருவிக்கு

அரிசி ஈந்தாய்!


அக்கருணையை என்னவென்பது!


ரௌத்திரம் பழகு என்று வீரம் புகட்டினாய்!


உன்னை எப்படி வியப்பது!


காசுக்காக பாக்களை அடமானம் வைக்காத தன்மானம் உனது!


உனை என்ன சொல்லிப் போற்றுவது!


தமிழ் மொழி இருக்கும்வரை நீ இருப்பாய்.


எம் மனச் சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்திருப்பாய்..


வாழ்க பாரதி! வாழிய நின் புகழ்!

🙏🏻🙏🏻🙏🏻


விஜி வெங்கடேஷ்.

11.9.25.

புதன், 10 செப்டம்பர், 2025

எங்கே போகிறது எனது வாழ்க்கை?


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******