அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சற்றே இடைவெளிக்குப் பிறகு… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
கடைத்தெரு மனிதர்கள் - 7 மார்ச் 2025:
மாதம் பிறந்துவிட்டால் மளிகைக்கு லிஸ்ட் போட்டு வாங்குவது, மருந்துகள் இன்ன பிற பொருட்கள் வாங்குவது என்று ஆரம்பித்து விடும்! நேற்று தான் நானும் இந்த வேலைகளைச் செய்ய கடைத்தெருவுக்குச் சென்றிருந்தேன்! அங்கே நான் பார்த்த சில விஷயங்கள் என்னை சிந்திக்க வைத்தது என்று சொல்லலாம்!
******
அறியாமை - 7 மார்ச் 2025:
சாலையோர பழ வியாபாரி ஒருவரிடம் ஆரஞ்சும், திராட்சையுமாக கொஞ்சம் வாங்கிய பின் அதற்கு பணம் கொடுத்ததும் - ‘அக்கா! இந்த நோட்டு வேணாம்! வேற குடுங்களேன்! என்றார்!
10 ரூ, 20 ரூ நோட்டு எல்லாமே இப்படித்தானே வருது! இங்க கடைத்தெருவுல தான் தந்தாங்கப்பா! என்றேன்! பிறகு வேறு நோட்டொன்றை கொடுத்ததும்…
அக்கா! இந்த மாதிரி நோட்டெல்லாம் 1000 ரூ பக்கம் வீட்டுலயே கெடக்குது! என்ன பண்றதுன்னே தெரியல!
பேங்குல போய் குடுத்து மாத்திக்கோங்கப்பா! என்றேன் அந்த பெண்மணியிடம்!
பேங்குக்கெல்லாம் யாருக்கா போறாங்க! அப்படியே வீட்டுல வெச்சிருக்கேன்! என்றதும் ஆச்சர்யப்பட்டேன்!!
முதல்ல பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?? என்று கேட்டேன்!
இருக்குக்கா! ஆனா எல்லாரும் Gpay பண்ணிடறாங்க! இல்லன்னா காசு குடுத்துடுவாங்க! அப்புறம் எதுக்கு பேங்குக்கு எல்லாம் போயிட்டு!!?? என்று சொல்கிறார் அருகில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த பெண்மணியின் கணவர்!
உங்க கிட்ட இருக்கிற டேமேஜான நோட்டெல்லாம் பேங்குல போய் குடுத்து மாத்திக்கோங்க! 1000 ரூபான்னா சும்மாவா! என்றதும் புன்னகையுடன் தேங்க்ஸ் சொன்னார்கள் அந்த தம்பதிகள்!
******
அநீதி - 7 மார்ச் 2025:
கடை ஒன்றில் நான் நின்று கொண்டிருந்த போது அந்தக் கடை முன்பு திடீரென்று கூச்சல்! என்னவென்று பார்த்ததில் எதிர்ப்புறம் ஒரு வயதான பெண்மணியின் கையில் இருக்கும் பையை பிடுங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான் ஒரு இளைஞன்!
அந்த அம்மா கத்திக் கூச்சல் போடும் சத்தம் தான் அது! அந்த இளைஞன் குடிபோதையில் நடுத்தெருவில் அந்த அம்மாவின் மீதே விழுந்து அந்தப் பையை பிடுங்க முயற்சித்துக் கொண்டும், தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இருந்தான்!
பதறிப் போய் நான் பார்த்துக் கொண்டிருக்கையில், நான் நின்று கொண்டிருந்த கடையின் உரிமையாளர் ‘இவங்க அம்மாவும் பிள்ளையும் தான்! இது வழக்கமாகவும் நடக்கிறது தாம்மா! என்று வெகு இயல்பாக சொல்கிறார்!
நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்! ஒருபுறம் நாளைய தினத்தை பெண்களுக்கான சிறப்பான தினமாக கொண்டாடப்படும் வேளையில், இங்கே நடுத்தெருவில் ஒரு பெண்ணுக்கு அநீதி நிகழ்ந்து கொண்டிருக்கிறது! தன் அம்மாவின் உழைப்பை தன் சுயநலத்துக்காக உறிஞ்ச நினைக்கும் பிள்ளை!
அந்தப் பிள்ளையிடம் நாலு வார்த்தை நறுக்கென கேட்கத் தான் துடிக்கிறது! மனம் நொந்து நான் அங்கிருந்து நடக்கத் துவங்கியதும் சிறிது தொலைவில் சாலையோரத்தில் ஒரு தள்ளுவண்டியில் பாசிமணி, வளையல் என விற்றுக் கொண்டிருக்கும் ஒரு பெண் கண்ணீர் ததும்ப ‘எங்கிட்ட காசெல்லாம் இல்ல மச்சான்! எவ்வளவு தான் உனக்கு குடுக்கிறது! வயித்து பொழப்புக்காகத் தான் நானும் சம்பாதிக்கிறேன்! என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்!
இந்தக் காட்சிகளை எல்லாம் சாலையில் வேண்டுமானால் நாம் கடந்து வந்துவிடலாம்! ஆனால் மனதளவில் எளிதாக கடந்து விட முடியவில்லை என்பது தான் மறுக்க இயலாத கசப்பான உண்மை! இந்த நிலை மாறும் நாள் என்று???
******
மகளின் கைவண்ணம் - 17 மார்ச் 2025:
மகளின் கைவண்ணத்தில் மண்டலா ஆர்ட் - உங்கள் பார்வைக்கு…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
21 ஜூன் 2025
பாட்டியின் படமும் வார்த்தைகளும் சூப்பர். எனக்கு என் பால்ய நினைவை எழுப்பியது. என் பாட்டி தாத்தா!!
பதிலளிநீக்குரோஷ்ணியின் கைவண்ணம் பிரமாதம். அசத்துகிறது மனதைக் கவர்கிறது. பாராட்டுகள்!
கீதா
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
நீக்குஆமாம் ரூ 10, 20 எல்லாம் ரொம்ப மோசமாகத்தான் வருகின்றன. அதுவும் கூடவே அதில் ஏதோ சாயம் ஏத்தினாப்ல ஒரு பெரிய க்டையில் மீதி சில்லறைக்குக் கொடுத்தார்கள். நான் வேறு நோட்டு கொடுங்க சகோதரா என்றதும் இதுதான் இருக்குன். நீங்க அடுத்த வாட்டி வரப்ப இதையே இங்க கொடுங்க....வாங்கிக்கறேன் என்றார்!!!!!!!
பதிலளிநீக்குயாருக்கு நினைவு இருக்கும் எந்த 20, 10 எந்தக் கடைன்னு!
நாங்க அதைத் தனியாக வைச்சு பேங்கில் அவ்வப்போது மாற்றிக் கொண்டுவிடுகிறோம்.
இப்ப 20 ரூ பாய்க்கு காயின் வந்திருக்கு. ஆனால் பாருங்க 10 ரூபாய் காயினை விடச் சிறிதாக இருக்கு. டக்குன்னு 20 என்பது தெரிவதில்லை. 20 என்பதும் சிறிதாக இருக்கு. நல்ல காலம் இப்ப 10 ரூபாய் காயின் வாங்கிக் கொள்கிறார்கள்.
ஜிபே, கூகுள் பே எல்லாம் நல்லதுதான் என்றாலும், எனக்கு இவை இல்லாததால் பல சமயங்களில் இப்படியான பிரச்சனைகள்!
கீதா
உண்மை தான். சில்லறையாக தரப்படும் நோட்டுகள் அனைத்தும் நைந்து போய் தான் கிடைக்கின்றன! 20 ரூ காயின் என்னிடம் இருந்தும் அதை நான் உபயோகப்படுத்துவதே இல்லை! காரணம் 5 ரூ காயின் சைசில் அது இருக்கிறது!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்! //
பதிலளிநீக்குஆதி! எனக்குத் தெரிந்தவரையில், அதாவது பல கட்டுரைகள், கதைகள் எழுதப்பட்ட வருடங்களைப் பார்க்கும் போது, அவை காலத்தின் பிரதிபலிப்பு எனலாம். அப்போதுக்கும் இப்போதைய காலத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
கீதா
ஆமாம். தாங்கள் சொல்வது உண்மையே! மனிதர்கள் எப்போதும் மாறுவதில்லை..:(
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
செவ்வானம் படம் சூப்பர்!
பதிலளிநீக்குகீதா
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
நீக்குரூ.05, ரூ.10,ரூ20, இவையெல்லாம் புதிதாக வருவதேயில்லை. வங்கிகளிலும் கிடைப்பதில்லை. நிர்மலாஜி கவனிப்பாரா?
பதிலளிநீக்குஇரண்டாவது செய்தி மனதை மிகவும் பாதித்தது. பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு, அதை அவர்களின் கணவன் மூலமோ, மகன் மூலமோ சாராயக்கடை வழியாகா பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள்.
ரோஷிணியின் ஓவியமும், செக்க சிவந்த வானமும் சிறப்பு!
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குசெவ்வானம் படம், ரோஷ்ணியின் மண்டலா ஆர்ட் அழகு.
கடைத்தெரு மனிதர்கள் பகிர்வில் பெண்களின் நிலை கவலை அளிக்கிறது.
தம்பி மனைவி வங்கியிலிருந்து புதிதாக 100 நோட்டு வாங்கி தந்தாள் அதை கடைத்தெருவில் காய்கறி வியாபாரம் செய்த பெண்ணிடம் கொடுத்தேன், அவர் அருகில் இருந்த சிறுவன் அம்மா இந்த புது நோட்டு எனக்கு இதை செல்வு செய்ய கூடாது என்றான்.
ஏன் என்றால் இப்போது பழைய ரூபாய் நோட்டுக்கள்தான் கிடைக்கிறது.
பாட்டியின் படமும் கருத்தும் அருமை மகளின் படம் அழகு
பதிலளிநீக்குபாட்டியின் வார்த்தைகள் அனுபவ வார்த்தைகள். அருமை. யார் இபப்டி எல்லாம் அடுத்தவர் மனம் பற்றி யோசித்து பேசுகிறார்கள்!
பதிலளிநீக்குநிறைய படித்தவர்களே கூட இப்படி கிழிந்த, வீணான ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரியாமல் இருக்கிறார்கள். என்னிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளை நானும் சென்று வங்கியில் மாற்றியதில்லை. அதற்கு பதிலாக எங்களுக்கு முப்பது ஆண்டுக்குகளுக்கும் மேலாக மளிகை போடும் கடைக்கார பயனிடம் கொடுத்து விடுவேன். அவர்கள் தங்கள் நோட்டை மாற்றும்போது இதையும் மாற்றி விடுவார்கள். எனக்கு முன்னரேயோ, பெரிய நோட்டாயிருந்தால் பின்னரோ பதில் பணம் கொடுத்து விடுவார்கள்!
பதிலளிநீக்குநாட்டில் சோம்பேறிகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் அதிகரித்து விட்டார்கள். என் ஆஸ்தான ஆட்டோக்காரர் கூட பக்கா சோம்பேறியாகி ஆட்டோவையே டியூ காட்டாமல் கொண்டு சென்று விட்டார்கள். நன்றாகக் படிக்கும் அவர் பெண் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
பதிலளிநீக்குசெவ்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்! Super shot. ஆதி உன் observation ம் comments ம் நன்றாக இருக்கின்றன.நாம் தினமும்.சந்திக்கும் பலரை கவனித்தாலே கதைக் களன் கிடைத்துவிடும். ரோஷினியின் கைவண்ணம் மிக அழகு.keep it up Roshni!
பதிலளிநீக்குவிஜி.