சுதா த்வாரகநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுதா த்வாரகநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 மே, 2019

தங்கமே தங்கம் – சுதா த்வாரகநாதன்



அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இப்பதிவின் மூலம் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தில்லியில் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவம் பற்றி பார்க்கலாம்.

வியாழன், 9 மே, 2019

முட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்




சில வாரங்களுக்கு முன்னர் என் மகன், மருத்துவப் படிப்பு படிக்கும்போது மண்டையோடு மற்றும் எலும்புகளை வீட்டிற்குக் கொண்டு வந்தது பற்றி எழுதி இருந்தேன். இன்றைக்கு அதே சமயத்தில் என் மகன் என்னை முட்டிக்கு முட்டி தட்டிய கதையைப் பற்றி பார்க்கலாம்!

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சாப்பிட வாங்க – விதம் விதமாய் பப்பு ரொட்டை – சுதா த்வாரகநாதன்


மூன்று வித பப்பு ரொட்டை...

என் மாமியார் சொல்லிக் கொடுத்த தெல்லத் தொக்கு பற்றி இரண்டு வாரங்கள் முன்னர் பார்த்தோம். இந்த வாரமும் மாமியார் சொல்லிக் கொடுத்த ஒரு குறிப்பு பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது பப்பு ரொட்டை என்று அழைக்கப்படும் ஒரு உணவு வகை.

திங்கள், 4 மார்ச், 2019

திங்கள், 25 பிப்ரவரி, 2019

மேஜையில் உதித்த மண்டையோடு – சுதா த்வாரகநாதன்




ஒரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  ஒரு பதிவில் மகள் பற்றி எழுதி இருந்தேன்.  இன்றைக்கு மகன் பற்றி எழுதப் போகிறேன்.

திங்கள், 11 பிப்ரவரி, 2019

மினிசோ – சின்னச் சின்னதாய் – சுதா த்வாரகநாதன்



சமீபத்தில் தான் எனது மகள் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க ஒடிசா கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது. LKG முதல் கல்லூரி பட்டப் படிப்பு வரை அனைத்துமே தலைநகர் தில்லியில் தான் படித்தாள். பள்ளிப்படிப்பு முழுவதும், வீட்டிற்கு எதிரே இருந்த பள்ளியில் தான். கல்லூரியும் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தான். இதுவரை வீட்டில் எங்களுடன் தங்கி படிப்பினை முடித்து விட்டாள். இப்போது, எங்களை விட்டு தனியாக, ஒடிசாவில் தங்கிப் படிக்க வேண்டும். சின்னச் சின்னதாய் அவளுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சேகரித்து வைக்க ஆரம்பித்தோம். தில்லி கல்லூரியில் வாங்க வேண்டிய சான்றிதழ்கள் அனைத்தையும் அவளே வாங்கிக் கொண்டு வந்தாள். ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப, முகத்தில் அதீத மலர்ச்சியுடன் கதவைத் திறந்தாள்.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

பாவம் யார் கணக்கில் சேரும் – சுதா த்வாரகநாதன்






சமீபத்தில் தான் எங்களுடைய சதாபிஷேகம் திருக்கடையூரில் நடைபெற்றது. நிகழ்வு முடிந்த பிறகு உறவினர்கள் உடன் சேலம் நோக்கி வண்டியில் திரும்பினோம். வண்டியில் போகும்போது, பொழுது போக வேண்டுமே, எனக்கு மருமகள் முறையாகும் தீபா எனும் பெண் ஒரு கதையைச் சுவைபடச் சொல்லிக் கொண்டு வந்தாள். அந்தக் கதை.....

வியாழன், 31 ஜனவரி, 2019

மொழிக் குழப்பம் – சுதா த்வாரகநாதன்




எங்களுக்குத் தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். எனவே தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. பேசுவதும் தமிழ் கலந்த தெலுங்கில் தான் பேசுவோம். எங்கள் குழந்தைகள் இருவருமே தில்லியிலேயே வளர்ந்தவர்கள். பள்ளியில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக எடுத்துப் படித்தார்கள்.  மேலும், தமிழ் பேசும் நண்பர்களும் நிறையவே இருந்தார்கள். தலைநகரில் வளர்ந்த மற்ற தமிழ்க் குழந்தைகளைப் போல, பெரும்பாலும் ஹிந்தியில் தான் பேசுவார்கள். ஓரளவிற்குத் தமிழ் பேச வரும். ஆனால் எங்கள் மொழியான தெலுங்கில் பேசும் போது, தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகள் கலந்து அடித்து விடுவார்கள்.

வியாழன், 17 ஜனவரி, 2019

ஹாஸ்டல் பேய் – சுதா த்வாரகநாதன்




தில்லி நகருக்கு பணி நிமித்தமாக வந்தது 1987 டிசம்பர் மாதம். எனக்கு வேலை கிடைத்தவுடன், எனக்கு முன்னரே தில்லியில் பணி புரிந்து கொண்டிருந்த தோழிகள் தங்கியிருந்த ஹாஸ்டலில் நானும் வசிக்க ஆரம்பித்தேன். 11 மாதங்கள் வரை அந்த ஹாஸ்டல் வாசம் தான். என் அலுவலகத்தில் பணிபுரிந்த ஏழு பேர் அதே ஹாஸ்டலில் தங்கி இருந்தோம். ஒன்றாகச் சேர்ந்து அலுவலகம் செல்வோம். அதைப் போலவே ஒன்றாகவே புறப்பட்டு ஹாஸ்டல் திரும்புவோம்.