அன்பின்
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். சென்ற வாரம் ஜார்க்கண்ட் உலாவில், ஜோஹ்னா அருவி
அருகே கடை வைத்திருக்கும் இரண்டு உழைப்பாளிகள் பற்றிப் பார்த்தோம்.
இந்த வாரமும் சில உழைப்பாளிகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம் – ஆனால் இது வேறு
வித உழைப்பு. அதற்கு முன்னர் நல்லதொரு பொன்மொழியுடன் இன்றைய பதிவை ஆரம்பிக்கலாமா!
”வெற்றி என்பது ஒரு பயணம் – அதற்கு எல்லைகளே இல்லை” –
Ben
Sweetland
அடுப்பு தயாரா இருக்கு... என்ன வேணும்னு சொன்னா சமைச்சுடலாம்!
அன்பின்
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இன்றைக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜோஹ்னா
அருவி அருகே சந்தித்த இரண்டு சகோதரர்கள் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதற்கு
முன்னர் உழைப்பு பற்றிய ஒரு பொன்மொழியுடன் இன்றைய பதிவை ஆரம்பிக்கலாமா!
”கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்குச் சமம்” – லால் பகதூர் சாஸ்த்ரி
ஜார்க்கண்ட்
உலா என்ற பெயரில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில இடங்களுக்கு உங்களை பதிவுகள் மூலம்
அழைத்துச் சென்றது நினைவிருக்கலாம்! அப்படி கடைசியாக உங்களை அழைத்துச் சென்றது
பத்ராது எனும் இடத்திற்கு! அழைத்துச் சென்றது கீழே உள்ள பதிவின் மூலம்!
பத்ராது –
பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? மும்தாஜ் அவர்களிடம் ஜார்க்கண்ட் மாநிலத்தில்
என்னென்ன பார்க்கலாம் என்று கேட்ட போது Gகாட்டி ரோட் பார்க்கலாமா எனக் கேட்டார்.
அது என்ன Gகாட்டி ரோட் – வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையைத் தான் Gகாட்டி
ரோட் என அழைக்கிறார்கள். கூடவே அங்கே ஒரு நதியும் அனல் மின் நிலையமும் இருக்கிறது.
அழகான இடம். ராஞ்சி நகரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடம்.
சரி போகலாம் என புறப்பட்டு விட்டோம்.
ரஜ்ரப்பா –
இந்தப் பெயரை இது வரை நீங்கள் கேட்டதுண்டா? இந்தப் பெயரில் ஜார்க்கண்ட்
மாநிலத்தில் ஒரு அழகிய இடம் இருக்கிறது. இன்றைய பதிவின் மூலம் நாம் இந்த அழகான
இடத்திற்குத் தான் செல்லப் போகிறோம். ரஜ்ரப்பா – இந்த இடம் இரண்டு ஆறுகள்
சங்கமிக்கும் ஒரு இடம் – கூடவே ஒரு மிகச் சிறப்பான கோவிலும் இங்கே
அமைந்திருக்கிறது. வாருங்கள் இந்த ரஜ்ரப்பா பற்றி பார்க்கலாம்!
ஜார்க்கண்ட்
மாநிலத்தில் மலைப்பகுதிகள் அதிகம் என்பதால் அருவிகளும் அங்கே நிறைய உண்டு.
அருவிகள் நிறைய என்பதால் ராஞ்சி நகரை அருவிகள் நகரம் என்றும் அழைப்பதுண்டு. சில அருவிகள்
ராஞ்சி நகருக்கு சில கிலோமீட்டர் தொலைவிலும், சில அருவிகள் சற்றே தொலைவிலும்
இருக்கின்றன. எங்கள் பயணத்தின் போது நாங்களும் சில அருவிகளுக்குச் சென்று பார்த்து
ரசித்து வந்தோம். நாங்கள் சென்ற சமயத்தில் தண்ணீர் வரத்து அத்தனை அதிகம் இல்லை
என்றாலும் சுமாராக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகம் இருந்தால் இன்னும் அதிகமாக
ரசிக்க முடியும். ஆனால் அந்த அருவிக்குச் சென்று பார்ப்பதே ஒரு உற்சாக அனுபவம் –
படிகளில் கீழே இறங்கிச் சென்று பார்த்து வர வேண்டும்!
சில
நாட்களுக்கு முன்னர் எழுதிய தோசா ப்ளாசா பதிவில் எங்களுக்கு அமைந்த ஓட்டுனர்
குல்தீப் எனும் இளைஞர் பற்றி எழுதி இருந்தேன். ரொம்பவே விளையாட்டுப் பிள்ளை – ஓடி ஓடி
செல்ஃபி எடுப்பதும், வண்டியை விட்டு எங்களுடன் எல்லா இடங்களுக்கும் வருவதும் என
எங்களை விட அப்பயணத்தினை அதிகமாகவே ரசித்தார். அடுத்த நாள் காலையில் ஏழரை மணிக்கு
வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றார் – சரி வண்டி ஏற்பாடு செய்த நண்பரிடம் காலை பேசிக்
கொள்ளலாம் என இருந்தோம்.
ராஞ்சி
நகருக்கு நாங்கள் சென்று சேர்ந்த போது மதியம் ஆகிவிட்டது. இரயிலில் ஒன்றுமே
சாப்பிடாமல் ராஞ்சி நகரில் தோசா பாயிண்ட் சென்று சாப்பிட்ட பிறகு தான் எங்களுக்கான
தங்குமிடத்திற்குச் சென்றோம். தங்குமிடம் பற்றிய விவரங்களை இங்கே விரிவாக சொல்ல
முடியாது!
கயாவிலிருந்து
ராஞ்சி வந்த இரயிலில் அவதிப் பட்ட பிறகு ராஞ்சி நகர் வந்த உடன் தங்குமிடம்
செல்லாமல் நேரடியே ஏதாவது உணவகத்திற்குச் சென்று மதிய உணவை சாப்பிட்ட பிறகு தான்
தங்குமிடம் செல்வது என்ற முடிவுடன் இருந்தது. காலையிலிருந்து முறையாக சாப்பிடாமல்
இருந்தது கொஞ்சம் படுத்தியது! இரயில் நிலையத்தில் பெரிதாக உணவக வசதிகள் இருக்காது
என்ற எண்ணத்துடன் எங்களுக்கான வாகனம் வந்த பிறகு ஏதாவது உணவகத்தில் சாப்பிடலாம் என
முடிவு செய்தோம்.