பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 மார்ச், 2026

காஃபி வித் கிட்டு - 232 - கிளியே தத்தக் கிளியே - மூன்றாம் பால் - மாலையில் மதிய உணவு - Talking Drum - சொக்ரமுடி - சஞ்சீவன ஆஞ்சனேயர் - சந்திப்பு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

திங்கள், 16 பிப்ரவரி, 2026

கதம்பம் - மகளின் கைவண்ணம் - AI Caricature - Biotin cookies - பதிவர் சந்திப்பு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

சனி, 31 ஜனவரி, 2026

காஃபி வித் கிட்டு - 224 - மௌனத்தின் சுமை - Khusugtun - [G]கூமர் நடனம் - இன்பமும் துன்பமும் - சுப்புத் தாத்தா - குடியரசு தினம் - தேவை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

கதம்பம் - குமார வயலூர் - Herbal Oil - குருதிக்கொடை - அன்பு சூழ் உலகு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட Kharigar Gaathaa - பகுதி நான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

சனி, 2 ஏப்ரல், 2022

காஃபி வித் கிட்டு - 147 - ஜென் கதை - சிந்த்பூர்ணி - பதிவர் சந்திப்பு - பூக்கள் - அடுத்த பயணம்

 


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

லாபமும், நஷ்டமும் நீ எடுத்த முடிவினால் வந்தது என்பதை நீ ஒப்புக்கொள்ள ஆரம்பித்தால் வெற்றி அடைவாய் - வாரன் பஃபெட்.

வியாழன், 4 மார்ச், 2021

பதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தில்லி உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Everything becomes beautiful if you start loving it… even loneliness!


தனிமையும் இனிமையே - நீங்கள் அதனை விரும்பிவிட்டால்! என்று சொல்லும் இந்தக் கூற்று உண்மை தான் - நானே உணர்ந்திருக்கிறேன்! :)


******


வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

பதிவுலகம் - நேற்றைய சந்திப்பு!



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தொடரும் எண்ணமும் எழுத்தும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும். அது  போல, நட்பு இருந்தால் தான் வாழ்க்கைஇனிக்கும். 


கடந்த கால நட்புகள் சிலரை இழந்திருந்தாலும், இன்றும் தொடரும் சில நட்புகள் மகிழ்ச்சியைத்  தருபவை தான். 


******


சனி, 7 மார்ச், 2020

காஃபி வித் கிட்டு – கனிமொழி – பை நிறைய பட்டாணி – ப்ரேமம் - ஹோலி - சந்திப்பு



காஃபி வித் கிட்டு – பகுதி 57

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

முடிவுகளைத் தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால் முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

செவ்வாய், 31 டிசம்பர், 2019

கதம்பம் – பதிவர் சந்திப்பு – பக்தி வெள்ளம் – கோலம் – ஜெஜெ - ஹீரோ



நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

படைப்பாற்றல் என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்வது ஸ்காட் ஆடம்ஸ். (Dilbert Cartoons உங்களுக்குத் தெரிந்தால் இவரைத் தெரிந்திருக்கும் – ஆம் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆன ஸ்காட் ஆடம்ஸ் சொன்னது தான் இன்றைய வாசகம்!]

திங்கள், 10 ஜூன், 2019

தில்லி டைரி - ராஜ் கச்சோடி - சரக்கொன்றை - பிரம்மோற்சவம் - சந்திப்பு - பை பை தில்லி



அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தில்லியில் இருந்த நாட்களில் முகநூலில் எழுதிய சில விஷயங்களை தொகுத்து இங்கே வழங்கியதில் சற்றே இடைவெளி வந்து விட்டது! இரண்டு வாரங்களாக பதிவுகளே வெளிவரவில்லையே! திருவரங்கம் வந்து விட்டாலும் இந்த நாளில் சில தில்லி விஷயங்கள், தில்லி டைரி பதிவாக…

வெள்ளி, 30 நவம்பர், 2018

பதிவர் அறிமுகம் – உலகம் சுற்றும் வாலிபன் - தில்லி பதிவர் திரு இராமசாமி



சில சந்திப்புகள் நமக்குத் தெரியாமலேயே நடந்து விடுகின்றன. யாரை எங்கே சந்திக்கப் போகிறோம் என்பது நமக்குத் தெரியாமலேயே முடிவு செய்யப் படுகிறது எனத் தோன்றுகிறது. பாருங்களேன் - ஒரு பதிவரை – அதுவும் தில்லி வாழ் தமிழர் – என் அலுவலகக் கட்டிடடத்தின் தொட்டடுத்த கட்டிடத்தில் பணி புரிபவர் – இருந்தாலும், இத்தனை வருட தில்லி வாழ்க்கையில் – எனக்கும் முன்னதாகவே தில்லி வந்திருப்பவர் அவர் – தில்லியில் இது வரை எங்கள் சந்திப்பு நிகழவே இல்லை! சந்திப்பு ஏதோ ஒரு விதத்தில் – அதுவும் முன்னறிவிப்பு இல்லாமல் நிகழ வேண்டும் என்று இருக்கும்போது தில்லியில் சந்திக்க முடியுமா? எங்கள் சந்திப்பு வேறிடத்தில் நடந்தது.

புதன், 14 நவம்பர், 2018

கதம்பம் – நார்த்தங்காய் – பதிவர் சந்திப்பு – தொடரும் நட்பு – க்வில்லிங் – கேரட் பராட்டா


சாப்பிட வாங்க – நார்த்தங்காய் - 8 நவம்பர் 2018:



தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு, கிடாரங்காய் உப்பில் போட்டது, எலுமிச்சங்காய் உப்பில் போட்டது, வட இந்திய ஊறுகாயான chundaa எல்லாம் இருக்கு. சரியென்று இதையும் அந்த ஜோதியில் ஐக்கியம் செய்து விட்டேன்.

சனி, 13 அக்டோபர், 2018

காஃபி வித் கிட்டு – ஸ்வச்ச் பாரத் – பதிவர் ஆச்சி ஆச்சி – மீண்டும் இணைந்த கேஜேஒய்-எஸ்பிபி – ஹே மா


காஃபி வித் கிட்டு – பகுதி – 10

சாப்பிட வாங்க – ஷிம்லா மிர்ச் சட்னி:



சமீபத்தில் தோசைக்கு தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடி, தக்காளி சட்னி போன்றவை போரடிக்க, ஷிம்லா மிர்ச் என இங்கே அழைக்கப்படும் குடை மிளகாயில் சட்னி செய்தேன்! உங்களுக்கும் செய்முறை தெரிந்திருக்கலாம். தெரியவில்லை என்றால் பின்னூட்டத்தில் கேளுங்கள் சொல்கிறேன்! :)

ஸ்வச்ச் பாரத் – ஸ்வச்தா ஹி சேவா:

தலைநகர் தில்லியில் என் வீட்டிற்குக் கீழே இருக்கும் பெண்மணி – ஒரு நாள் மாலை நேரத்தில் வீட்டுக் கதவைத் தட்டினார். அலுவலகத்திலிருந்து வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் – பொதுவாக எங்கள் கட்டிடத்தில் இருக்கும் ஒருவரிடமும் நானும் பேசுவதில்லை. அவர்களும் என்னிடமும் பேசுவதில்லை! பிறகு எதற்கு இப்போது வருகிறார் – குழப்பத்துடன் கதவைத் திறந்தால் – ”படிக்கட்டு கீழே நீங்க குப்பையை போட்டீங்களா? யாரோ போட்டுட்டு போயிடறாங்க. நம்ம பில்டிங்க நாம தான் சுத்தமா வைச்சுக்கணும்!” அப்படின்னு சொல்ல, “அட ஏம்மா நீ வேற, நான் எதுக்கு குப்பையை அப்படி போடப்போறேன்! ஏதாவது சொல்லிட போறேன், புள்ளைகுட்டிய படிக்க வைக்கிற வழியைப்பாருன்னு மனதுக்குள் சொல்லிக்கொண்டு, வெளியில் நான் ஏன் போடறேன்னு சொல்லி உள்ளே வந்தேன். அடுத்த நாள் பேருந்தில் அதே பெண்மணி – தலையை வாரி முடியை வெளியே வீசினார், பிறகு சாத்துக்குடி தோல், வரிசையாக வீதியில் எதையோ போட்டபடியே வந்தார் – அடுத்தவங்களுக்கு தான் உபதேசம்!

பதிவர் சந்திப்பு – 02 அக்டோபர் 2018:

காந்தி ஜெயந்தி என்பதால் அலுவலகத்திற்கு விடுமுறை! வெளியே எங்கும் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்த போது முகநூல் மெஸ்ஸெஞ்சர் வழியே ஒரு தகவல் – உங்க வீட்டுக்குக் கிட்ட இருக்கற பாலாஜி கோவிலுக்கு வந்துருக்கோம். அங்கேயிருந்து காளி கோவில் போகிறோம் என – அனுப்பியவர் ஒரு காலத்தில் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்த ”ஆச்சி ஆச்சி” – அது ஆச்சி இரண்டரை வருடம் – அவங்க வலைப்பூவில் எழுதி! இப்பல்லாம் முகநூல்ல மட்டும் தான் எழுதறாங்க. தலைநகரிலேயே இருந்தாலும், ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். காளி கோவில் வளாகத்தில் நவராத்ரிக்காக கடைகள் போட்டிருக்கிறார்கள். அங்கே சற்று சுற்றிவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு அவர்கள் வழி அவர்கள் செல்ல, நான் வீடு திரும்பினேன். முகநூலில் சந்திப்பு பற்றி அவர்களும் எழுதி இருக்கிறார்கள்.

இந்த வாரத்தின் ரசித்த பாடல் - மலையாளம்:

சமீபத்தில் கேட்டு ரசித்த ஒரு பாடல் – கே.ஜே. யேசுதாஸ் அவர்களும், எஸ்.பி.பி. அவர்களும் மிகச் சமீபத்தில் இணைந்து பாடிய ஒரு பாடல் – நீண்ட இடைவெளிக்குப் பிறகு – 27 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை எம். ஜெயச்சந்திரன். மலையாளப் படமான கிணர் படத்தில்.  பாடல் நன்றாகவே இருக்கிறது – நீங்களும் கேட்டுப் பாருங்களேன்…



இந்த வாரத்தின் நிழற்படம்:



சமீபத்தில் ஒரு விழா – நான் குடியிருந்த பழைய தில்லி பகுதியில். ஒரு சமுதாயக் கூடத்தில் தான் அந்த விழா. தில்லி நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூடம். அங்கே பார்த்த காட்சி தான் மேலே படமாக! இப்படி ஒரு மின்விசிறியை நீங்கள் சத்தியமாக வேறெங்கும் பார்த்திருக்க முடியாது! இப்படி இருக்க ஒரு காரணம் உண்டு. அது என்ன என பிறகு சொல்கிறேன் – ஏன் இப்படி வளைத்திருக்கிறார்கள் என உங்களால் யூகிக்க முடிகிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

இந்த வாரத்தின் குறும்படம்:

யாரைப்பற்றியும் ஒரு முடிவுக்கு வந்து விடும் முன்னர் சற்றே யோசியுங்கள் என்று சொல்லும் ஒரு அழகான குறும்படம். பாருங்களேன்….



இதே நாளில் – திரும்பிப் பார்க்கிறேன்:

இதே நாளில் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக இருந்திருக்கிறேன்! அப்போது பகிர்ந்து கொண்ட ஒரு பகிர்வு “ஹே மா!” தலைநகரில் சந்தித்த ஒரு மனிதர் பற்றிய பகிர்வு. 13 அக்டோபர் 2011 பகிர்ந்து கொண்ட பதிவினை படிக்காதவர்கள் வசதிக்காக… இங்கே மீண்டும் அதன் சுட்டி!


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து...

ஞாயிறு, 29 ஜூலை, 2018

காவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி



அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...

இன்று இரண்டு மூன்று வேலையை மனதில் வைத்துக் கிளம்பினேன். முதலில் சூப்பர் மார்க்கெட். வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். ஃப்ரெஷ் க்ரீம் எனக் கேட்டால் அங்கிருந்த பெண் "மூஞ்சிக்குப் போடற க்ரீமா அக்கா" என்றாள். நானே பார்த்துக்கறேன் விட்டுடுப்பா என்றேன்.

அடுத்து காஸ்மெட்டிக்ஸ் பக்கம் போனால், மேடம் தப்பா எடுத்துக்காதீங்க! கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கு! Aloevera gel வாங்கிப் போடுங்க என்றாள்.


கரை புரண்டு ஓடும் காவிரித்தாய்...
அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...



மலைக்கோட்டை....
அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து... 



அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...


அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...


அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...

அங்கிருந்து கிளம்பி அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தோம். நிறைந்து ஓடும் காவிரியைப் பார்க்க வேண்டாமா! மூன்று நான்கு வருடங்களாகவே ஆடிப்பெருக்கு அன்று கூட குழாய் மூலம் வந்த தண்ணீரில் தான் குளித்து வந்தனர். இந்த வருடம் நெஞ்சை நிறைத்தாள் காவிரித்தாய். புதுத்தண்ணீரில் காலை நனைத்து மகிழ்ந்தோம். சில படங்களை எடுத்துக் கொண்டு கீதா மாமிக்கு ஃபோன் செய்தேன்.

அவரும் வீட்டில் தான் இருக்கிறேன் எனச் சொல்லவும் அவர் வீட்டுக்குச் சென்று மாமாவையும் மாமியையும் பார்த்து சிறிது நேரம் பேசி விட்டு வந்தேன். மறக்காமல் மாமியிடம் தவலை வடை அருமையாக இருந்ததாகச் சொன்னேன்.


அன்னாசிப் பழம்...

வீட்டுக்கு வரும் வழியில் அன்னாசி பழங்களை கொட்டி வைத்து வியாபாரம். ஒரு பழம் 20 ரூபாய். அவர்களே தோலை வெட்டி சுத்தம் செய்து தருகின்றனர். கொல்லி மலைப் பழமாம். இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டேன்.

போகும் போது ஓலாவில் 38 ரூபாய். வரும் போது 58 ரூ! என்ன கணக்கோ!!! சாயங்காலம் மாமனார் மாமியாரைப் பார்க்கப் போனபோது, கொள்ளிடமும் போய் பார்த்தாச்சு…






கொள்ளிடம் காட்சிகள்.....

எச்சரிக்கை பதாகை அங்கே வைத்திருந்தும் யாரும் அதை கண்டுகொள்வதாயில்லை. ஆட்டோவிலும், பைக்கிலும், காரிலும் வந்து நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே குளிக்கின்றனர்.

சிறுவர்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தின் மேலேயிருந்து டைவ் அடிக்கின்றனர். சோப்பு துணிமணிகளுக்கும், தங்களுக்கும் போட்டு பரபரக்க தேய்த்து மும்முரமாய் இருந்தனர். கிடைத்த சிறிய இடத்தில் காலை வைத்து ஒரு படி இறங்கி கால் நனைத்து வந்தோம்.

வரும் வழியில் ஒரு சிறுவன் கோணியில் எலுமிச்சம்பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். பெரிய பழங்களாக ஆறு பழம் பத்து ரூபாய் சொன்னான். வாங்கிக் கொண்டேன்.

இப்படியாக, நிறைந்திருக்கும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் காட்சிகளை பார்த்து வந்தோம். மனதில் அப்படி ஒரு திருப்தி – இன்றைய பொழுது பார்த்த, சந்தித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. 

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

ஆதி வெங்கட்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பதிவு எண் 1400 – பதிவுலகம் – காணாமல் போன பதிவர்கள்…




என் ப்ளாக்கர் கணக்கு நான் 352 பதிவர்களின் பதிவுகளைத் தொடர்வதாகக் கணக்குச் சொல்கிறது. இதைத்தவிர மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் வருமாறு பதிவு செய்திருக்கும் பதிவர்களின் எண்ணிக்கை இருபதிற்கும் மேல் இருக்கலாம்! அனைவரும் ஒவ்வொரு நாளும் பதிவுகள் எழுதினால் அனைத்தையும், அதே நாளில் என்னால் படிக்க இயலுமா என்று கேட்டால், அனைத்தையும், பதிவிட்ட நாளிலேயே படித்து முடிப்பது சந்தேகம் தான். இத்தனை பதிவர்களைத் தொடர்ந்தாலும், இவர்களில் இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்கள் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை கொஞ்சம் கவலை தரும் அளவிற்குத் தான் இருக்கிறது. பதிவுலகில் அப்படி ஒரு சுணக்கம்.

திங்கள், 3 ஜூலை, 2017

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! – பதிவர் சந்திப்பு – அடுத்த பயணத்தொடர்…

வந்துட்டேன்னு சொல்லு….  திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!



சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிவுலகம் பக்கம் வருகிறேன். வருடத்தின் ஆரம்பத்திலும், மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் தினம் தினம் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். மே மாதம் ஏழே ஏழு பதிவுகள், ஜூன் மாதத்தில் மூன்று பதிவுகள் என கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை! நடுவில் ஒரு மாதம் குடும்பத்தினருடன் முழுக்க முழுக்க நேரம் செலவு செய்ய வேண்டும் என ஒதுங்கி இருக்க, தலைநகர் வந்த பிறகு அலுவலகப் பணி எழுத விடாது தடுத்தது! பிறகு இணையத்தொடர்பில் சில சிக்கல்கள் – அது பற்றி தனியாக பதிவே எழுதலாம்! பதிவுகள் எழுதுகிறேனோ இல்லையோ, மற்றவர்களின் பதிவுகளைக் கூட படிக்க இயலாத நிலை! இதோ இப்போது மீண்டும் வந்தாயிற்று!

திங்கள், 26 டிசம்பர், 2016

திரிபுரா – எல்லைக் காட்சிகளும் இரவு உணவும்….



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 84

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


எல்லைக்கு அப்பால் வங்க தேசம்....

இந்திய எல்லையில் அமைக்கப்பட்ட முள்கம்பி வேலிக்கருகே சென்று சிறிது தூரம் நடந்தபடியே இந்திய வீரர்களிடம் பேசினோம். ஹரியானாவினைச் சேர்ந்த ஒருவர் தில்லியிலிருந்து நான் அங்கே வந்திருப்பது தெரிந்து என்னிடம் வந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அது என்னவோ, அவருக்கு தானே தில்லி வந்த உணர்வு. தலைநகர் வந்தால் உங்களைச் சந்திக்க வருவேன் என்று சொல்லி தொடர்புக்கு தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டார். நானும் அவரது எண்களை வாங்கிக் கொண்டேன்.

வங்க தேச வீரர்களும் எங்களுடன் முகமன்களை பரிமாறிக்கொண்டு சில விஷயங்களைப் பேசினார்கள்.  இந்திய எல்லை அகர்தலாவில் இருக்க, வங்க எல்லைப் பகுதியில் சில கிலோமீட்டர் தூரம் வரை கிராமங்கள் எதுவும் இல்லை. பொருட்களை எடுத்து வரும் லாரிகள் தான் அங்கிருந்து வருகின்றன.  எதாவது வாங்க வேண்டுமென்றால் சில கிலோமீட்டர் தொலைவு சென்று தான் வாங்க வேண்டியிருக்கிறதாம் அந்த வங்க தேச வீரர்களுக்கு!

வங்க தேச எல்லையில் வரவேற்பு அறை....

கொடியிறக்க விழா நடந்த பிறகும் அங்கே இருந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு தான் நாங்கள் புறப்பட்டோம்.  பல வருடங்கள் கழித்து பார்த்துக் கொண்ட நண்பர்களுக்கு பிரிய மனதில்லை.  எல்லைப் பகுதியில் பார்த்த நண்பர், எங்களுடன் வந்த நண்பர் சசியை சில மாதங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் வந்து பார்த்திருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்!  தொடர்ந்து நட்பில் இருக்கும் அவர்களுக்கு வாழ்த்துகள்… நட்பு தொடர்வது தானே அனைவருக்கும் மகிழ்ச்சி.

அங்கிருந்து ஓட்டுனர் ஷாந்தனு வண்டியுடன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து அங்கிருந்து புறப்பட்டோம்.  மதியமே ஒழுங்காக சாப்பிட முடியாததால் அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு சாப்பிட வேண்டும் என முடிவு எடுத்தேன்.  ஷாந்தனுவிடமும், தங்கிய இடத்தின் நிர்வாகியிடமும் இரவு உணவு பற்றிக் கேட்க, சைவ உணவுக்கென்று தனி உணவகங்கள் இங்கே கிடைப்பது கடினம் என்று சொன்னார்கள்.  சரி சப்பாத்தி கிடைக்குமா என கேட்க, பக்கத்திலேயே Foodies என ஒரு உணவகம் இருப்பதைச் சொல்லி அங்கே சாப்பிடச் சொன்னார்.  வட இந்திய உணவு நன்றாக இருக்கும் என்பதையும் சொல்ல, அங்கே தான் இரவு உணவு!


அகர்தலா மார்க்கெட் பகுதியில்.....

தவா ரொட்டி, ஆலு ஜீரா, வெஜ் ராய்த்தா என எனக்கு நான் உணவினைச் சொல்ல, நண்பர்கள் சப்பாத்தியுடன் அசைவ உணவு வாங்கிக் கொண்டார்கள்.  தங்குமிட நிர்வாகி சொன்ன மாதிரியே உணவு நன்றாகவே இருந்தது. மதியம் ஒழுங்காகச் சாப்பிடாததால் இரண்டு ரொட்டி அதிகம் உள்ளே போயிற்று! வயிறும் கொஞ்சம் வாழ்த்தியது! என்னதான் Adjust செய்து கொள்ளலாம் என்றாலும் சில நாட்களில் முடிவதில்லை!

நாங்கள் தங்கிய இடமும், சாப்பிட்ட உணவகமும் இருந்த சாலையின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது – Motor Stand Road! எதற்காக அந்தப் பெயர் வந்தது என்று பார்த்தால், அந்தப் பகுதியில் தான் பேருந்து நிலையம் – முன் நாட்களில் சிற்றுந்ந்துகள் நிற்குமிடம் இருந்திருக்கிறது. அகர்தலாவின் Motor Stand Road ரொம்பவே பிரபலமாம்!

இரவு உணவு சாப்பிட்ட பிறகு அகர்தலா நகரின் சாலைகளில் சில நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தோம்.  கடைத் தெருக்கள், உணவகங்கள் என பார்த்துக்கொண்டு ஆங்காங்கே கிடைக்கும் காட்சிகளை பார்த்தபடியே சென்று திரும்பினோம். அன்றைய தினம் பார்த்த இடங்களைப் பற்றி பேசியபடியே தங்குமிடம் திரும்பினோம்.  அடுத்த நாள் அகர்தலாவின் மற்ற இடங்களைப் பார்க்க வேண்டும் – அதனால் கொஞ்சம் சீக்கிரமாகவே உறங்கி சீக்கிரமாகவே எழுந்திருக்க எண்ணம்.  கொஞ்சம் தூங்கிவிட்டு வருகிறோம். அது வரை காத்திருங்கள்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

செவ்வாய், 19 ஜூலை, 2016

ஜெய்க்குட்டிக்காக......



கைகளால் கடக்கிறேன்....

எதுவும் கூறவில்லை நான்,
ஜெய்குட்டி
கிழித்துக் கொண்டிருப்பது
எடுத்தெறிந்துவிட முடியாமல்
இதுவரை நான்
பத்திரப்படுத்தி வைத்திருந்தவொரு
பழைய டைரியைத்தான்
என் கண் முன்னே
ஒவ்வொரு தாளாய்
கிழித்துக் கொண்டிருக்கிறான்
மகன் கைகளால் இப்போது
கடந்து கொண்டிருக்கிறேன்
இதுவரை என்னால்
கடக்க முடியாதிருந்தவொரு
கடந்த காலத்தை.....

கதவெண் உதிராத வீடு...

நீண்ட நேரமாய் நிற்கிறேன்
அந்தப்
பூட்டிய வீட்டின்முன்,

என்னை நகரவிட மறுக்கிறது
அக் கதவெண்

ஒரு காகிதத்தை
நான்காய் மடித்து
கடிதமென நீட்டிய ஜெய்குட்டி
அதன் மேல் எழுதியிருந்தது
இந்த எண்ணைத்தான்

பூட்டியே கிடக்கும்
இப்பாழடைந்த வீட்டில்
யாருக்காக எழுதியிருப்பான்
அக்கடிதத்தை

யோசித்தபடியே
நின்று கொண்டிருக்குமென்னைக்
கடந்து பறக்கிறதொரு
சிட்டுக்குருவி
அதன் உடைந்த ஜன்னல்வழி.

கோரிக்கையற்றவனாய்

கோரிக்கை எதுவும் வைக்காமல்
வெளியேறுகிறான்
கோவிலை விட்டு
ஒன்று அவனிடம்
பிரார்த்தனைகள் ஏதும்
இல்லாதிருக்க வேண்டும்
இல்லை
பிரார்த்திக்கும் தேவை ஏதும்
இல்லாதிருக்க வேண்டும்
இல்லையென்றால்
சக தோழனை அவன்
தொந்தரவு செய்யாமல்
சந்திக்க மட்டுமே வந்திருக்க வேண்டும்
அதோ
திரும்பியொரு புன்னகைத்து விட்டு
மீண்டும் நடக்கத் தொடங்குகிறான் ஜெய்குட்டி....


இந்த மூன்று கவிதைகளுமே “ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்கப்படுகிறான்எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து இங்கே பகிர்ந்திருக்கிறேன்.  அத் தொகுப்பில் எனக்குப் பிடித்த கவிதைகளில் மூன்று இவை.  மற்ற கவிதைகளும் பிடித்தவை தான்... அனைத்து கவிதைகளுமே தனது மகன் ஜெய்குட்டியை மையமாக வைத்து எழுதியவை.  கவிதைத் தொகுப்பு எனக்குக் கிடைத்தது – 24 ஜனவரி 2016. அன்றைக்குத் தான் முதன் முதலாக இத்தொகுப்பின் ஆசிரியர் திரு வைகறை அவர்களை முதல் முறையாகச் சந்திக்கிறேன். அவரது கவிதைகளாலும், வீதி இலக்கியக் கூட்டத்தினை நடத்திய பாங்கிலும் மகிழ்ந்து அமர்ந்திருந்தேன்.  



புத்தகமும் கவிதைகளும் மட்டும் இருக்க, கவிஞர் வைகறை சொல்லாமல் கொள்ளாமல், “கதவெண் உதிராத வீடுகவிதையில் உள்ள குருவியைப் போல நம்மை எல்லாம் விட்டு 21 ஏப்ரல் 2016 அன்று எங்கோ பறந்து போய்விட்டார்.

அவரது மகன் ஜெய்குட்டிக்கு கடவுளிடம் பிரார்த்திக்க ஏதுமில்லை என்றாலும் எனக்கு ஒரு பிரார்த்தனை இருக்கிறது – கடவுளிடம் அல்ல!  உங்களிடம்....... 

துணைவியையும், அவரது அன்பு மகன் ஜெய்க்குட்டியையும் விட்டு இளம் வயதிலேயே மறைந்து விட்டார் கவிஞர் வைகறை. அவர்களுக்கு உதவி செய்யும் வகையாக புதுக்கோட்டை வலைப்பதிவர் நண்பர்கள் கணிசமான ஒரு தொகையைச் சேகரித்துத் தரும் முயற்சியில் இருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் குறைந்தது ஐந்து லட்சம் ரூபாய் ஆவது கிடைத்தால் திரு வைகறை அவர்களின் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். முடிந்தவர்கள் உதவியைச் செய்ய வேண்டுகிறேன்.  உதவித் தொகை செலுத்த வேண்டிய வங்கி எண் மற்றும் விவரங்கள் கீழே: -

First Name : MUTHU BASKARAN

Last Name : N

Display Name : MUTHU BASKARAN N and.PON.KARUPPAIAH

Bank : STATE BANK OF INDIA

Branch : PUDUKOTTAI TOWN BRANCH

Account Number : 35154810782

Branch Code : 16320

IFSC Code : SBIN0016320

CIF No. : 80731458645

நிதி அளிப்பவர்கள் vaigaraifamilyfund@gmail.com எனும் மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தால் நல்லது. நிதி அளிப்பவர்களின் பட்டியல் தொடர்ந்து http://veethimeet.blogspot.com என்ற வலைத்தளத்தில் இணைக்கப்படும்.

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.