யாரிவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாரிவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 டிசம்பர், 2022

யாரிவள் தொடரின் பயணங்கள் - பகுதி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

THERE IS NO ENEMY OUTSIDE OUR SOUL; THE REAL ENEMIES LIVES INSIDE US - ANGER, PRIDE, GREED AND HATE; AVOID THEM ALL AND ENJOY A PEACEFUL LIFE.

 

******

சனி, 10 டிசம்பர், 2022

யாரிவள் தொடரின் பயணங்கள் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NO ONE IS TOO BUSY IN THIS WORLD; WE ALL HAVE THE SAME 24 HOURS AND IT'S ALL ABOUT PRIORITIES.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

யாரிவள் தொடரின் பயணங்கள் - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஒவ்வொரு சூர்யோதயமும் நமக்கு ஒரு விஷயத்தினை தெளிவாக்குகிறது - எத்தனை தான் கும்மிருட்டாக இருந்தாலும், சில வினாடிகளில் வெளிச்சம் வந்தே தீரும் - அதே போல நம் வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கான தீர்வும், தெளிவும் வந்தே தீரும்.

 

******

வியாழன், 8 டிசம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 105 – நிறைவுப் பகுதி - அவளின் கடமைகள்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

BEAUTIFUL RELATIONS ARE THOSE, WHO CARE WITHOUT HESITATION, WHO SIMPLY REMEMBER WITHOUT LIMITATION, AND WHO REMAIN THE SAME, EVEN WITHOUT COMMUNICATION!

புதன், 7 டிசம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 104 – ஒட்டிப் பிறந்தது!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

விட்டுக்கொடுப்பதும் மன்னிப்பதும் தான் வாழ்க்கை; ஆனால் வாழ்க்கையின் போராட்டமே, யார் மன்னிப்பது, யார் விட்டுக்கொடுப்பது என்பது தான்.

செவ்வாய், 6 டிசம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 103 – சுயசார்பு வாழ்க்கை!!

 


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட பசுமை காப்போம் - சிறுகதை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எல்லா புயல்களும் உங்கள் வாழ்க்கையை சீர்குலைக்க வருவதில்லை; சில சில உங்கள் பாதையைத் தெளிவுபடுத்த வருகின்றன.

 

******

திங்கள், 7 நவம்பர், 2022

யாரிவள் - 102 - அம்மாவாக…! - ஆதி வெங்கட்

 










உயரிய பதவியும், பொறுப்பும் கொண்டதால் எந்நேரமும் குடும்பத்தைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் மட்டுமே சிந்தனைகள் அவளுக்கு இருக்கும்! இந்தப் பதவி அவளுக்கு கிடைத்த பிறகு அந்தப் பதவியே அவளுக்கு உலகம் என்றாகி விடும்! அவளுக்கென்று தனிப்பட்ட நேரங்கள் என்பதே இல்லாமல் போய்விடும்! அவள் அதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை! அவளே நம் அம்மா!!!


வருடங்கள் கடந்து செல்ல இவளின் மகளும் வளர்ந்து இப்போது பதின்ம பருவத்துக்கு வந்திருந்தாள்! ஒவ்வொரு பருவத்திலும் அவளுக்குத் தேவையான சிந்தனைகளை சொல்லி வளர்ப்பதும், இந்த சமுதாயத்தில் அவள் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகளையும் நல்லது கெட்டது என்று எல்லாவற்றையும் சொல்லித் தந்தாள்!


அம்மாவாக அவளை எப்போதும் பாதுகாக்கவே நினைத்தாள்! மகள் பள்ளியிலிருந்து வர சற்றே தாமதமானாலும் மனது படபடக்கத் துவங்கி விடும் இவளுக்கு! கடிகாரத்தைப் பார்ப்பதும், வாசலையே பார்த்துக் கொண்டிருப்பதும், பள்ளிக்கு அழைத்து விசாரிப்பதும், இல்லையென்றால் இவளே பள்ளிக்குச் சென்று பார்க்க இறங்குவதுமாக இருப்பாள்!


அப்போது இவளுக்கு வேறு எந்த வேலையிலுமே கவனம் செல்லாது! மனதில் குழப்பங்களும், கவலையும் சூழ்ந்து கொள்ள சொல்ல இயலாத வண்ணம் இருப்பாள்! அன்றாடம் ஏதேதோ செய்திகளை பார்க்கிறோமே! கேட்கிறோமே! கடவுளே இந்தக் குழந்தைக்கு எந்தக் கெடுதலும் வந்துவிடக்கூடாதே! என்று பரிதவிப்பாள்!


இவளின் சிறுபிராயத்தில் இவளது அம்மாவும் இப்படித்தானே பரிதவித்திருப்பாள்! திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை! என்று சொல்வது போல் அம்மா எப்போதுமே தன் துயரங்களை தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம் தான் முறையிடுவாள்! சண்டையிடுவாள்! புலம்புவாள்!


எல்லாவற்றுக்கும் காணிக்கை எடுத்து வைத்து பிரார்த்தித்துக் கொள்வாள்! இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இவள், 'எதற்கெல்லாம் தான் பாவம் அந்தப் பிள்ளையார் ஹெல்ப் பண்ணுவார்' 'வடாம் போட்டிருக்கிறதால இன்னைக்கு மழை வேண்டாம்னு பிரார்த்தனை பண்ற! இது உனக்கே ஓவரா இல்லயாம்மா! என்பாள்!


அப்பா வர லேட்டானா கரண்டிய தண்ணில போடற! என்னம்மா இதெல்லாம்! நீ ரொம்ப பயப்படற! வெளில போனா வர வேண்டாமா! முன்ன பின்ன தான் ஆகும்னு தெரியாதா! என்றெல்லாம் அப்போது இவள் அம்மாவை கேலி செய்ததுண்டு! அப்போதெல்லாம் அம்மா சொல்வாள், 'என்ன மாதிரி நீயும் ஒருநாள் அம்மாவா ஆனா தான் தெரியும்டீ! என்று!


இதோ அம்மாவின் நிலை தான் இவளுக்கு இப்போது ஏற்படுகிறது! அம்மாவின் நிலையை, அவளின் பரிதவிப்பை இப்போது உணர முடிந்தது! ஆமாம்மா! இது ரொம்பவே கஷ்டமா இருக்கு! அப்போ நீ எப்படி ஃபீல் பண்ணிருப்பன்னு இப்போ நான் புரிஞ்சுண்டேன்! என்று அம்மாவிடம் மானசீகமாய் பேசிக் கொண்டாள்! ஆனால் இவளைப் போல் அம்மா கேலி செய்ய மாட்டாள்!


நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

ஞாயிறு, 6 நவம்பர், 2022

யாரிவள் - 101 - திகிலும்! தெய்வீகமும்! - ஆதி வெங்கட்









புதிய சூழலில் புதிதான அறிமுகங்களுடன் நாட்கள் மெல்ல நகரத் தொடங்கியது! மாலையில் மொட்டைமாடியில் எட்டு நடை போடத் துவங்கினாள்! இப்படியே இருந்தால் எப்படி!! ஆரோக்கியத்தின் மீதும் சற்று கவனமாக இருக்கணும் என்று நினைக்கத் துவங்கினாள்!
நடையை முடித்து விட்டு அங்கேயே இருக்கையில் அமர்ந்து தோழியுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருப்பாள்!


அப்போதெல்லாம் இதமான காற்றில் நாசியை துளைத்த நாகலிங்கப் பூவின் மணமும், கண்ணுக்கு குளிர்ச்சியாக எதிரே உள்ள தென்னந்தோப்புகளும், ஆதவனின் அஸ்தமனக் காட்சியும் என ஒவ்வொரு நாளும் மனதிற்கு இதத்தை தந்தது! நேர்மறை எண்ணங்களை தோற்றுவித்தது! நடப்பதெல்லாம் நன்மைக்கே!


மாலை 6:30 மணி ஆகிவிட்டால் போதும் அன்றாடம் அருகில் உள்ள தோப்பிலிருந்து பெரும் படை ஒன்று பறக்கத் துவங்கி விடும்! என்ன அது! தினமும் இதே நேரத்தில் பறக்கின்றதே??? ஆமாம்! அன்றொரு நாள் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு ஆட்டோவில் வந்த போது இந்த இடத்திற்கான அடையாளமாக அந்த ஓட்டுனர் கூட இந்த இடத்தைப் பற்றி சொல்லியிருந்தது இவளுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது!


ஒருநாள் பகல் நேரத்தில் போய் பார்க்கச் சொன்னாரே!!! சக்தி வாய்ந்த இடம் என்றும் சொன்னார்! இதைப் பற்றி தோழியிடம் சொன்ன போது அவருக்கும் இதில் ஆர்வமிருக்கவே இருவரும் ஒருநாள் காலைநேரத்தில் கிளம்பி விட்டார்கள். அன்று தை வெள்ளிக்கிழமை! கையில் அருகில் உள்ள கோவிலுக்கு எடுத்துச் செல்ல பாலும், பூஜைக்கான பொருட்களும் இருந்தது!


முதலில் இங்கே என்ன தான் இருக்கிறது! என்று பார்த்து விடுவோம் என்று அந்தத் தோப்பை நோக்கிச் சென்றார்கள்! புதிதாக குடியிருப்புகள் உருவாகத் தொடங்கியிருந்த இடம் என்பதால் ஜன சந்தடியும் இல்லை! காற்றும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது! கொஞ்சம் திக் திக் என்று தான் இருந்தது இவளுக்கு!!


அந்த இடத்தில் மண்ணில் புதைந்திருந்த இந்த இடத்தின் காவல் தெய்வமான அம்பாளும், பெரும் மரம் ஒன்றின் ஒவ்வொரு இலையிலும் தொங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பழம் தின்னி வெளவால்களும், அருகிலேயே பாம்பு புற்று ஒன்றும் தான் அமைந்திருந்தது!


இவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே பூசாரியும், பகுதி மக்கள் சிலரும் கூட வந்து சேர்ந்து விட, மனதிற்கு சற்று தெம்பு கிடைத்த உணர்வு அவளுக்கு! பூஜைக்கான பொருட்களை பூசாரியிடம் கொடுக்க அவர் அம்பாளுக்கும் அருகில் இருந்த பப்பாளி மரத்திற்கும் தீபாராதனை காண்பித்தார்! கொண்டு வந்த பாலை பாம்பு புற்றுக்கு விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்!


இங்கு இந்த வெளவால்களை யாரும் துன்புறுத்துவதில்லை! தெய்வாம்சமாக நினைக்கிறார்கள். மாலைநேரத்தில் இரை தேடிச் செல்லும் வெளவால்கள் எப்போது திரும்புகிறது என்று தெரியவில்லை! இது அன்றாடம் நடக்கும் நிகழ்வு! மாலை நேரங்களில் பெரும் படை ஒன்று வானில் தெரிந்தால் மணி சரியாக 6:30 என்று சொல்லி விடலாம்!


இந்த மண்ணில் ஆச்சர்யங்களுக்கும், அதிசயங்களுக்கும் பஞ்சமே இல்லை! அவற்றை போற்றி பாதுகாப்போம்!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

சனி, 5 நவம்பர், 2022

யாரிவள் - 100


100 ரூபாய் குடித்தனம்!




மனதிற்கு கட்டுப்பாடு என்பது இல்லாமல் போனால் அது எப்படி வேண்டுமானாலும் யோசித்துக் கொண்டேயிருக்கும்! எத்தனை வேலைகளை நாம் செய்து கொண்டிருந்தாலும் மனம் ஒருபுறம் ஆழ்ந்த யோசனைக்கு சென்று அதன் பணியை செய்து கொண்டிருக்கும்! மனதை அடக்குவது என்பது தவயோகிகளுக்கே உரித்தானது! 


சிறுவயதிலிருந்தே அவளுக்கு ஒரு புதுவிதமான மனோபாவம் உண்டு! அந்த மாதிரி இருப்பது என்பது அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்! அவ்வப்போது இந்த மாதிரி எண்ணங்கள் அவளுக்குள் தோன்றிக் கொண்டே தான் இருக்கும்! யாராவது இப்படியிருக்க நினைப்பார்களா என்பதே சந்தேகம் தான்! என்ன அது???


அதாவது கையிருப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது! இதை வைத்து தான் மீதியுள்ள நாட்களை கடத்த வேண்டும்! இவ்வளவு மளிகைப் பொருட்கள் தான் உள்ளது! இதை வைத்து தான் சமைக்க வேண்டும்! இந்த பைசாவில் தான் சந்தையில் காய்கறிகள் வாங்கி வர வேண்டும்! என்பது போன்ற நியதிகள் இருக்குமானால் அப்போது எப்படி உணர்வீர்கள்???


பொதுவாகப் பார்த்தால் இவை எரிச்சலையும், சங்கடத்தையும் தான் தரும்! இல்லையா! ஆனால் அவளுக்கு இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகள் ஒருவித ஆர்வத்தையும், உற்சாகத்தையும்  ஏற்படுத்தும் என்று சொன்னால் மிகுந்த ஆச்சரியமாகத் தான் இருக்கும்! ஆம்! அவள் அப்படித்தான்!!


சில நாட்களாக அவளின் மனதில் தோன்றிக் கொண்டிருந்த ஒரு எண்ணம் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது! அதாவது ஒருவருக்கு தினமும் 100ரூ தான் வருவாய் கிடைக்குமானால் அதை வைத்து குடித்தனம் செய்ய இயலுமா?? என்று சிந்திக்கத் துவங்கினாள்! ஏன் இந்த எண்ணம் அவளுக்குத் தோன்றியது என்று தெரியவில்லை!!! 


இன்றைய காலகட்டத்தில் 100 ரூபாய் என்பது சாதாரண விஷயம்! அப்படியிருக்க அன்றைய பொழுதில் கிடைக்கும் வருவாய்க்கு தகுந்தாற் போல் வேண்டியவற்றை வாங்கி உண்டு சுகமாக வாழ முடியுமா? வாழ்க்கைத் தரத்தை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முடியுமா?? முடியும் என்று தான் அவளுக்குத் தோன்றியது! 


இதுபோன்ற சிந்தனைகள் அவளிடம் இருக்கும் தன்னம்பிக்கையால் ஏற்படுகிறதா? சிறுவயதிலிருந்து  வாழ்வில் அவள் கடந்து வந்த நிகழ்வுகளால் இப்படி தோன்றுகிறதா? என்பது தெரியவில்லை! வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது போல் மனதிற்கும் அடுத்த கட்டம் என்பது உண்டா??


வயது ஏறிக் கொண்டே வருவதில் அவளின் மனதில் தோன்றும் எண்ண அலைகளுக்கு பஞ்சமே இல்லை! அவள் ஒன்றும் இப்போது குட்டிப்பெண் அல்லவே! குடும்பத் தலைவி! மனைவியாகவும், அம்மாவாகவும் அவளுக்கென்று செய்ய வேண்டிய கடமைகள் இருந்தாலும் பற்றுகள் அற்று இருக்கவே விரும்பினாள்! மனமும் அதை நோக்கித் தான் பயணிக்கிறது!


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.


பின் குறிப்பு - யாரிவள் தொடரின் 100வது பகுதி இன்று! இதுவரை இந்தத் தொடரை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 


#யாரிவள்

வெள்ளி, 4 நவம்பர், 2022

யாரிவள் - 99



 

பண்டிகைகளும் பாரம்பரியமும்!





நம் மனதில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் உண்டாக்கும் பண்டிகை கொண்டாட்டங்களில் மெனக்கெடுதல் என்பது மிகவும் முக்கியமானது! உழைப்பும், நிதானமும், கவனமும் எனச் செய்யும் வேலையில் முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டால் தான் திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும்!

அவளும் திருமணமாகி தனக்கென்று ஒரு வாழ்வும், பிடிமானமும் உருவாகியது முதலாக ஒவ்வொரு பண்டிகையின் போதும், தனக்கு தெரிந்த விதத்திலும் பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டும் பாரம்பரியம் குறையாத வண்ணம் செய்து கொண்டு வந்தாள்! பாரம்பரியமாக கடைபிடிக்கும் விஷயங்களை முழுவதுமாக செய்ய இயலாமல் போகும் போது கவலையும் கொள்வாள்!

அப்போதெல்லாம் அம்மா, அப்பாவோடு கொண்டாடிய பண்டிகைகளை நினைத்து பார்த்துக் கொள்வாள்! பணத் தட்டுப்பாடு இருந்தாலும் அம்மா பண்டிகைகளில் என்றுமே குறை வைத்ததே இல்லை! தீபாவளிக்கு குறைந்தபட்சம் மூன்று விதமான இனிப்புகளாவது செய்வாள். அதனுடன் தேன்குழல், மிக்சர் என்று வீடே அமர்களப்படும்! இதுபோக முதல் நாள் இரவு குலாப்ஜாமூன் வேறு செய்து ஜீராவில் மிதக்க விடுவாள்!

அம்மாவுக்கு எப்போதுமே சிறிதளவு செய்தெல்லாம் பழக்கமே இல்லை! பத்து பதினைந்து நாட்களாவது குழந்தைகள் சாப்பிடட்டுமே என்று நினைத்து நிறைய தான் செய்வாள்! அதோடு உறவுகளுக்கும், நட்புகளுக்கும் கொடுத்து விடுவாள்! அம்மாவின் கைப்பக்குவத்தில் அத்தனையும் ஜோராக இருக்கும்!

பள்ளியிலிருந்து வந்ததும் அம்மா இன்னிக்கு என்னென்ன சாப்பிடத் தருவாள்? என்ற ஆவலுடன் தான் காத்திருப்பாள் இவள்! ஏனென்றால் வீட்டில் தான் நிறைய பட்சணங்கள் இருக்கிறதே என்பதற்காக எல்லாவற்றையும் சாப்பிட முடியாது! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இனிப்புடன் கொஞ்சமாக காரமும் சேர்த்து அம்மா தருவது தான்! 'எனக்கு இன்னும் ஒண்ணு வேணும்' என்று கேட்டாலும் கிடைக்காது!



மலரும் நினைவுகளை அசை போட்ட படியே இப்போதுள்ள புதிய சூழலிலும் ஒவ்வொரு பண்டிகையிலும் அம்மா பின்பற்றிய வழக்கத்தை நினைத்துக் கொண்டு செய்வாள்! அம்மாவைப் போல் இல்லையென்றாலும் அவளது மகளாக நான் பாதியாவது செய்ய வேண்டாமா!! இதோ அடுத்து என் மகளும் இருக்கிறாளே! அவளுக்கு நம் பாரம்பரியம் புரிய வேண்டாமா!

அம்மா பண்ணும் போதெல்லாம் குட்டிப்பெண்ணாக கூட இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன்! அவளுக்கு சிறு சிறு உதவிகளும் செய்து தருவேன்! இப்படித் தான் எனக்கு ஆர்வம் உண்டானது! அப்படி மகளுக்கும் ஆர்வம் ஏற்படணும்! என்று பலவாறு சிந்திப்பாள்! மகளாக இருந்த காலங்கள் மறைந்து விட அம்மாவாக மகளை நல்லவிதமாக வளர்க்கும் பொறுப்பு அவளுக்கு இருந்தது!

வாழ்வின் ஓட்டத்தில் இவளுக்கு கிடைத்த பலவித அனுபவங்களால் பக்குவம் ஏற்பட்டதைப் போல் அவளுக்கும் பொறுப்பும், பக்குவமும் ஏற்படணும்! சமுதாயத்தில் நல்லதொரு பெண்மணியாக திகழணும்! இனி! இவளின் வாழ்க்கையில் மகளே பெரும்பங்கு வகிக்கப் போகிறாள்!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

புதன், 2 நவம்பர், 2022

யாரிவள் - 98 சுகந்தமான சூழல்!





 

மனதில் மகிழ்ச்சி கொள்ள பெரிதாக ஏதேனும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! சின்னச் சின்ன விஷயங்களும் கூட மனதில் மாற்றத்தை உருவாக்கும்! திடீரென ஒரு உற்சாகமும், சந்தோஷமும் ஏற்பட்டு விடும்! அது மற்றவர்களுக்கு மிகவும் சாதாரணமாகக் கூடத் தோன்றலாம்!

 

அவளுக்கும் அப்படித்தான் இருந்தது. புதிய ஒரு சூழலில் முன் அறிமுகமே இல்லாமல் புதிதாக சந்திக்கும் மனிதர்கள், அவர்களிடம் ஏற்படும் நட்பு, புத்தம் புதிதான வீட்டை அழுக்கு ஏற்படாமல் பராமரிக்கும் வேலை என்று தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டாள். அதனால் அவளின் மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் உண்டாயிற்று!

 

வீட்டை விட்டு இறங்கி கீழே வந்தால் அப்படியொரு சுகந்தமான மணம்! வீசும் காற்றில் அந்தச் சூழலையே சுகந்தமாக்கியது. காரணம் அருகில் பெரிய நாகலிங்க மரம் அமைந்திருந்தது! பல சிறப்புகள் பெற்றது இந்த மரம்! இதன் பூ லிங்கத்திற்கு நாகர் குடைபிடித்தது போன்ற அமைப்புக் கொண்டது! சிவ வழிபாட்டிற்கு உகந்தது!

 

சுற்றுப்புறத்தில் உள்ள மாசுக்களை சுத்தம் செய்யும் வல்லமை பெற்றது இந்த மரம்! இந்த மரத்தின் இலை, பட்டை இவை கூட சித்த வைத்தியத்திற்கு பயன்படுகிறது! இந்த மரத்தில் உள்ள பூக்களும் எட்டிப் பறிக்கும் உயரத்திலேயே இருந்ததால் அவ்வப்போது தோழியுடன் சேர்ந்து சென்று பறித்து வந்து வீட்டு பூஜைக்கும், கோவிலுக்கும் எடுத்துச் சென்று தரும் வழக்கத்தை வைத்திருந்தாள்!

 

இந்தப் பூவை பார்க்கும் போது கோவையில் பள்ளிநாட்களில் பள்ளி விட்டு வீடு திரும்பும் வழியில் குறிப்பிட்ட சாலையில் விழுந்து கிடக்கும் பூக்களை அம்மாவிடம் கொண்டு கொடுத்த ஞாபகம் ஏற்பட்டது. வியாழனன்று பள்ளிக்கு கிளம்பும் போது ஒரு கவர் எடுத்துச் சென்று வீடு திரும்பும் போது அரளி மொட்டுகளும், செம்பருத்தி மொட்டுகளும் எடுத்து வந்து அம்மாவிடம் தருவாள்!

 

அம்மா அதைத் தண்ணீரில் போட்டு வைத்து மறுநாள் மலர்ந்த பிறகு பூஜைக்கு பயன்படுத்திக் கொள்வாள். இந்த சுகந்தமான மணமும், அழகிய பூவும் அம்மாவுடனான நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்து விட்டது! அம்மா எனும் அருமையான மனுஷியால் எத்தனை விதமான அழகிய உணர்வுகளையும், அனுபவங்களையும் பெற்றோம் என்று நினைத்தாள்!!

 

அதிவேகமாக குடியிருப்புகள் புதிது புதிதாக தோன்றிக் கொண்டிருக்கும் இந்த நாளில் இந்த மரம் இன்னும் எத்தனை நாட்கள் நம்மருகில் இருக்குமோ! சுகந்தத்தை பரப்புமோ! என் அம்மாவைப் போன்று நீயும் என்னை விட்டு சென்று விடுவாயா!! போன்ற எண்ணங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தது அவளுக்கு!

 

இந்த உயர்ந்த மரமும் சிறிது காலத்துக்குப் பின் பட்டுப் போய் மீண்டும் ஒரு மழையில் துளிர்த்தது! அருகில் புதிதாக ஒரு மரமும் வந்தது! ஆனால் ஏனோ முன்பு போல் அந்த சுகந்தத்தை இப்போது உணர முடியவில்லை! காரணம் பெருகி விட்ட வீடுகளும், மனிதர்களும் என புரிந்து கொள்ள முடிந்தது!

 

இதுவும் கடந்து போகும்!

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

 

#யாரிவள்