தியு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து கிர் வனம் நோக்கி



இரு மாநில பயணம் – பகுதி – 33

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஒரு கடி கடிச்சுக்கலாம்!
தியு - கிர் சாலை வழி உணவகத்தில்.....

தியு நகரிலிருக்கும் சில இடங்களையும், தியு நகரிலுள்ள போர்த்துகீசியர்கள் கட்டிய கோட்டையையும் பார்த்த பிறகு நாங்கள் தியுவிலிருந்து புறப்பட்டோம். இன்னும் சில இடங்கள் – குறிப்பாக கடற்கரைகள் இருந்தாலும், அடுத்த நாள் காலை நாங்கள் குஜராத்தின் Gகிர் வனப் பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்ததால் மதியமே புறப்பட்டோம். முதல் நாள் இரவு கிடைத்த அனுபவத்தினால் மதிய உணவினை வழியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். தியு நகரிலிருந்து குஜராத் - Gகிர் வனம் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவு தான் என்றாலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. வழியில் குஜராத் எல்லையில் தியுவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களுமே நிறுத்தப்படுகிறது.

திங்கள், 30 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – கோட்டையும் சிறைச் சாலையும்



இரு மாநில பயணம் – பகுதி – 32

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பார்வை போகும் தூரம் வரை கடல்.....
தியு கோட்டையிலிருந்து....

தேவாலயத்தினையும் மேரி மாதாவினையும் தரிசித்த பிறகு நாங்கள் சென்ற அடுத்த இடம் தியுவின் கோட்டை. கடலை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை மிகவும் அழகிய கோட்டை. கடலை கோட்டை மேலிருந்து பார்ப்பது ஒரு அற்புதக் காட்சிதானே…. அங்கே தான் இப்போது நாம் போகப் போகிறோம். தியு கோட்டை போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை மற்ற அரசாங்கங்களால் எடுக்கப்படும் படையெடுப்புகளை – தடுக்க, தங்களை தற்காத்துக் கொள்ள கட்டப்பட்ட கோட்டை. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை எனத் தெரிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து சில வருடங்களுக்குப் பிறகு வரை கூட போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறது இந்தப் பகுதி.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – புனித பால் தேவாலயம், தியு


இரு மாநில பயணம் – பகுதி – 31

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



நாய்தா குகைகளைப் பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் சென்று சேர்ந்த இடம் St. Paul’s Church, Diu! கிட்டத்தட்ட 408 வருடங்கள் பழமையான தேவாலயம். போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இன்றைக்கும் வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. அவர்கள் காலத்தில் தியுவில் கட்டப்பட்ட பல கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் சிதிலமடைந்துவிட்டாலும் இன்றைக்கும் நிலைத்து நின்று கொண்டிருக்கும் இந்த St. Paul’s Church ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 1601-ஆம் வருடம் கட்ட ஆரம்பித்து 1610-ஆம் ஆண்டு கட்டி முடித்திருக்கிறார்கள்.  இதே சமயத்தில் தான் போர்த்துகீசியர்கள் ஆண்ட மற்றொரு இந்திய மாநிலமான கோவாவிலும் இதே போன்று ஒரு வழிபாட்டுத் தலத்தினை [Bom Jesus Basilica, Goa] கட்டி இருப்பதாகத் தெரிகிறது.

புதன், 25 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – நாய்தா குகைகள் - இயற்கையா செயற்கையா



இரு மாநில பயணம் – பகுதி – 30

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நாய்தா குகைகள், தியு


குகை வாசலில் நான்....

நாய்தா குகைகள், தியு

கடற்கரையில் இருந்த கங்கேஷ்வர் கோவிலும், அங்கே அலைகள் அலுப்பில்லாமல், சிவபெருமானுக்குச் செய்து கொண்டிருக்கும் அபிஷேகத்தினையும் பார்த்த பிறகு தன்னம்பிக்கைப் பெரியவர் Bபவன் அவர்களையும் பார்த்து பேசிக் கொண்டிருந்து அங்கிருந்து புறப்பட்டோம். குகைக் கோவிலுக்கு அடுத்ததாக இருந்த எங்கள் இலக்கும் குகைகளாகத் தான் இருந்தது. தியு நகரில் இருக்கும் புகழ்பெற்ற குகைகளான நாய்தா குகைகளைக் காண்பது என்பது தான் எங்கள் அடுத்த திட்டம். கோவிலிலிருந்து சிறிது தொலைவிலேயே இருக்கும் இந்த நாய்தா குகைகள் இயற்கையிலேயே உருவானது என்றும், இல்லை இல்லை கோட்டை கட்டும்போது பாறைகளை வெட்டியதால் உருவானது என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு – எதுவாக இருந்தாலும் இப்போது சுற்றுலாத் தலமாக இருக்கிறது!

திங்கள், 23 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – கங்கேஷ்வர் – அலைகள் செய்யும் அபிஷேகம்



இரு மாநில பயணம் – பகுதி – 29

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கங்கேஷ்வர் - அலைகள் செய்யும் அபிஷேகம்....


கங்கேஷ்வர் - கோவிலும் கடற்கரையும்....


கங்கேஷ்வர் - அலைகள் செய்யும் அபிஷேகம்.... 

நாகாவ் கடற்கரையிலிருந்து மனதே இல்லாமல் புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடமும் ஒரு கடற்கரை தான் – அங்கே ஒரு கோவில்! கோவில் என்றால் நம்ம ஊர் கோவில்கள் மாதிரி கோபுரங்களுடன், மிகப் பெரிய அளவில் கட்டப்பட்ட கோவில் என நினைத்து விட வேண்டாம். மிகவும் சிறியதாக ஒரு குகை – அது தான் கோவில்! அந்தக் கோவில் பற்றிய காணொளி ஒன்றை இணையத்தில் பார்த்தபிறகு தான் இந்தப் பயணம் போக வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது என்பதையும் சொல்ல வேண்டும். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த இடம் – அந்த இடத்தில் நான் எடுத்த காணொளியில் நீங்களே பாருங்களேன்!

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு



இரு மாநில பயணம் – பகுதி – 28

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நாகாவ் கடற்கரை....

முதல் நாள் இரவு உணவுக்குப் பிறகு அறை திரும்பும்போதே இரவின் இரண்டாம் பாதி துவங்கி இருந்தது. அறைக்கு வந்து அந்த நாளின் கணக்கு வழக்குகளைப் பார்த்தபிறகு உறக்கம் தான்! அதிகாலையில் எழுந்திருந்து அறையைக் காலி செய்து விட்டு தியு நகரத்தினைச் சுற்றிவருவது தான் திட்டம். அதிகாலையில் எழுந்து தங்குமிடத்தில் தேநீர் கிடைக்குமா எனப் பார்த்தால் எட்டு மணிக்குத் தான் கிடைக்கும் என்கிறார் சிப்பந்தி! இது சரி வராது, வெளியே சென்று தேநீர் அருந்தலாம் என புறப்பட்டபோது இரண்டு நண்பர்கள் சேர்ந்து கொண்டார்கள். பொடிநடையாக காலைக் காற்றைச் சுவாசித்த படி மார்க்கெட் பகுதிக்கு வந்தோம்.

புதன், 18 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – அய்யா குடி அம்மா குடி – இரவு உணவு



இரு மாநில பயணம் – பகுதி – 27

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



தங்குமிடம் சென்று உடைமைகளை வைத்து குளித்த பிறகு இரவு உணவிற்காக விசாரித்த போது, ”முதலிலேயே சொன்னால் தான் கிடைக்கும் – நீங்கள் வந்ததே நேரம் கழித்து என்பதால் வெளியே சாப்பிடுங்கள், நிறைய உணவகங்கள் உண்டு” என்று சொல்லி விட்டார் தங்குமிடச் சிப்பந்தி. சரி வெளியே சென்று சாப்பிடலாம் என தங்குமிடத்திலிருந்து முக்கிய வியாபார வீதிக்கு வந்தோம். வீதியே களை கட்டியிருந்தது. சுற்றுலா வந்தவர்களும், அண்டை மாநிலமான குஜராத்திலிருந்து வாரா வாரம் இங்கே வருபவர்களும் என கடை வீதியே களை கட்டியிருந்தது. குஜராத்திற்கும் தியுவிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு – அது மதுவிற்கான தடை.

திங்கள், 16 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – வண்டியில் ஏற்பட்ட கோளாறு



இரு மாநில பயணம் – பகுதி – 26

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சோம்நாத்திலிருந்து தியு....
வரைபடம் - இணையத்திலிருந்து....

சென்ற பகுதியினை முடிக்கும் போது இப்படி முடித்திருந்தேன்.  அன்றைய இரவு சோம்நாத் நகரில் தங்குவதாக எங்கள் திட்டத்தில் இல்லை. அங்கிருந்து சுமார் 85 கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு இடத்திற்குச் சென்று அங்கே தங்குவதாகத் திட்டம். சோம்நாத் நகரிலிருந்து 06.45 மணிக்குப் புறப்பட்டோம். சரியாகச் சென்றிருந்தால் 08.00 மணிக்குள் எங்கள் இலக்கை அடைந்திருகலாம். ஆனால் திட்டமிட்டபடி செல்ல முடிந்ததா? பயணித்தபோது சந்தித்தது என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

குஜராத் மாடல் – அப்படி என்னதான் இருக்கு?


சில வருடங்களாகவே “குஜராத் மாடல்” ரொம்பவே பிரசித்தி பெற்ற இரு வார்த்தைகள்! யாரைக் கேட்டாலும் குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று தான் பேசுகிறார்கள் – சிலர் உயர்த்தியும் சிலர் தாழ்த்தியும்! அப்படி என்னதாங்க இருக்கு இந்த ‘குஜராத் மாடல்’ல! இந்தப் பதிவுல கொஞ்சம் குஜராத் மாடல் பத்தி பார்க்கலாம்!

ஞாயிறு, 26 மார்ச், 2017

நாகாவ் பீச்சாங்கரை ஓரம் – புகைப்படங்கள்


கடற்கரை என்றாலே நம் எல்லோருக்குமே பிடித்தமான விஷயம் தானே. எத்தனை முறை கரைக்கு வந்து திரும்பும் இந்த அலைகள்…. அலுக்கவே அலுக்காதோ இந்த அலைகளுக்கு?  அலுக்காமல் வந்து திரும்பும் அலைகளை அலுக்காமல் பார்க்க எனக்கும் பிடிக்கும்… ரொம்ப நேரம் உப்புக் காற்றில் நிற்கக் கூடாது என்று சொல்வார்களே என்று அங்கிருந்து அகல மனதில்லாமல் தான் நகர்வேன்….