தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 நவம்பர், 2024

Quarantine from Reality - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பதினெட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

சனி, 24 ஆகஸ்ட், 2024

காஃபி வித் கிட்டு - 199 - சண்டீலா கே லட்டு - பரவாயில்லை - [CH]சகடா - அனுஷ்கா - சட்னி சாம்பார் - கெட்டிக்காரத்தனம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மகாகவி பாரதியார் இல்லம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

ஞாயிறு, 16 ஜூலை, 2023

கதம்பம் - வேர்க்கடலை - மல்லிகை மகள் - ஸ்வீட் காரம் காப்பி - ஓவியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

திங்கள், 7 பிப்ரவரி, 2022

குடும்ப மரம் - கர்மா எனும் தொடர் - ஆதி வெங்கட்

  

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. நாம் தான் நடந்து நடந்து பாதை போட வேண்டும் - டிஸ்ரேலி.

 

******

வியாழன், 25 நவம்பர், 2021

கதம்பம் - சீரியல் - கனவு - முதியோர் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட திருக்கடையூர் அபிராமி  பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


செயலால் கொன்றுவிட்டு பின் மன்னிப்பு கேட்டு என்ன பயன்? வலிகள் குறையாது… செய்த செயல் மனதை விட்டு அழியப் போவதும் கிடையாது. அதனால் சிந்தித்து செலாற்றுவதே சிறப்பு.


******

திங்கள், 4 மார்ச், 2013

விசிலோசை



சாதாரணமா ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து விசிலடித்தால் பிரச்சனை தான். அதே மாதிரி ஒரு பெண் ஆணைப் பார்த்து விசிலடித்தாலும் பிரச்சனை தான்!

கல்லூரி நாட்களில் கோவை-கேரளா சுற்றுலா சென்றபோது எங்கள் கல்லூரி பெண் ஒருவர் எங்கள் பேருந்தினை ஒரு லாரி கடக்க முயன்றபோது விசிலடிக்க, கிட்டத்தட்ட பாலக்காடு முதல் கோவை வரை, எங்கள் பேருந்திற்கும் அந்த லாரிக்கும் ஒரு ஹாட் ரேஸே நடந்தது! ஒவ்வொரு முறையும் அந்த லாரி முன்னேற, அந்த தோழி விசிலடிக்க, லாரி பின்னே செல்லும்!

விசில் என்றாலே தவறான கண்ணோட்டத்தோடு பார்வையிடும்போது அந்த விசிலோசை வைத்து கர்நாடக பாடல்கள், சினிமா பாடல்கள் என்று வாசித்தால்!

பொதிகை தொலைக்காட்சியில் தினமும் வரும் காலைத்தென்றல்நிகழ்ச்சியின் ஒரு பகுதி ‘நம் விருந்தினர்’.  சென்ற வாரத்தில் ஒரு நாள் அந்த நிகழ்ச்சியில் விசிலோசை மூலம் கர்நாடக பாடல்களை இசைக்கும் “விசிலோசைதிரு ஆர். பத்மநாபன் என்பவரை நேர்காணல் கண்டார்கள். ஒரு வாய்ப்பாட்டுக்காரரான இவர் பலருக்கு இசை பயிற்றுவிக்கிறார்.  கோவை வாசியான இவர் சிறு வயது முதலே விசிலோசையை பழகி வருகிறார்.

சிறு வயதில் அவரது அம்மா ‘விசிலடிக்காதேஎன்று கண்டித்தாலும், விசில் மூலம் கீர்த்தனை, ராகம் போன்றவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வாசிக்கிறார்.  விசில் வாசிப்பதில் – காற்றினை உள்வாங்குவது, வெளியே அனுப்புவது என சில வகைகள் இருக்கின்றன என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் சாதகம் செய்து வரும் இவர், நேர்காணலின் போது புல்லாங்குழலுக்கும் விசிலோசைக்கும் இருக்கும் வித்தியாசத்தினையும் சொன்னார்.

புல்லாங்குழலில் மூச்சுக்காற்றினை செலுத்தி புல்லாங்குழலில் உள்ள துளைகளில் விரல்கள் கொண்டு அடைத்தும், திறந்தும், ராகத்தினை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் விசிலோசை என்பது முழுக்க முழுக்க மூச்சு மட்டுமே.  அதாவது மூச்சினை மட்டுமே இசையாக மாற்றுவது. இதற்கு கடுமையான மூச்சுப் பயிற்சி அவசியம். விசிலோசை மூலம் கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாது சினிமா பாடல்களும் பாடிக் கண்பித்தார்.  நிகழ்ச்சியின் போது பாரதியாரின் எண்ணிய முடிதல் வேண்டும்பாட்டினை வாய்ப்பாட்டாகவும், விசிலோசையாகவும் வாசித்துக் காண்பித்தார். நாட்டை ராகத்தில் ஸ்ருதியோடு வாசித்தது ரசிக்கும்படி இருந்தது.

கச்சேரிகளில் வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், கடம் என்று இருக்கும்போது கூடவே விசிலோசை மூலமும் கச்சேரிகள் நடத்தி இருப்பதாகச் சொன்னார் திரு பத்மநாபன். தொடர்ந்து மூன்று மணி நேரம் விசிலோசை மூலம் கச்சேரிகள் நடத்தி இருப்பது ஆச்சரியம் தான்.  

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அவர் பாடிய இரண்டு சினிமா பாடல்கள் – அக்னி நக்ஷத்திரம் படத்திலிருந்து “தூங்காத விழிகள் இரண்டுமற்றும் பச்சை விளக்கு படத்திலிருந்து “கேள்வி பிறந்தது அன்று.  நிகழ்சியின் போது இன்னுமொரு தகவலையும் சொன்னார். வாய்ப்பாடல் சொல்லித்தரும் இவர் விசிலோசையையும் பயிற்றுவிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் கற்றுக்கொள்ள ஆர்வமும், கொஞ்சமாவது விசிலடிக்கும் திறமையும் இருந்தால் நீங்களும் கற்றுக் கொள்ளலாம்!

விசிலோசை வாசிக்கும் இவர்கள் Indian Whislters Association என்ற ஒரு அமைப்பினையும் வைத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்த அமைப்பில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பில் தமிழகத்திலிருந்து மட்டுமே 100 பேர் உறுப்பினர்களாம் – திரு பத்மநாபன் மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோரும் இதில் Elite Members. இந்த அமைப்பிற்கு ஒரு இணைய தளம் கூட இருக்கிறது.

சென்ற வருடம் சென்னையில் விசிலோசை மூலமாகவே எஸ்.பி. பாலசுப்ரமணியன் அவர்களது பாடல்களை தொடர்ந்து வாசித்து இருக்கிறார்களாம். 19 ஃபிப்ரவரி 2012 அன்று நடந்த WHISTLING TRIBUTE TO DR. S.P. BALASUBRAMANIAM என்ற நிகழ்ச்சியில் 19 விசிலோசை வாசிப்பவர்கள் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சியில் விசிலோசை வாசித்ததில் திரு பத்மநாபன் அவர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி!

இந்த அமைப்பு 48 நபர்களைக் கொண்டு வாசித்து LIMCA BOOK OF RECORDS-ல் இடம் பெற்றுள்ளார்கள் – விசிலோசை மூலம் வாசித்த பாடல் என்ன தெரியுமா – ‘சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா இதன் காணொளி கீழே! 



என்ன நண்பர்களே இனிமே யாராவது விசிலடிச்சா, தப்பா நினைக்காதீங்க! விசிலோசைக்கு பயிற்சி செய்யறதா நினைச்சுக்கோங்க!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 4 மார்ச், 2010

டீலா - நோ டீலா?



சனி மற்றும் ஞாயிறு இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பாகும் டீலா - நோ டீலா? நிகழ்ச்சி பற்றி சன் டீவி நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார்கள் - "Deala No Deala, the biggest game show in South Indian Television history and one of the most successful shows ever in television history globally.” இது உண்மையா அல்லது பொய்யா என்று அலசுவதற்காக எழுதப்பட்டது அல்ல இந்த பதிவு.

ரிஷி அவர்களால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியினால் ஒரு நண்பரின் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகளைப் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

ஒரு சனிக்கிழமை நண்பரின் வீட்டுக்குச் சென்றபோது தொலைக்காட்சி பெட்டியில் ”டீலா நோ டீலா” ஓடிக்கொண்டு இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். நண்பரின் வீட்டில் நான்கு பேர் – நண்பர், அவரது இல்லத்தரசி, இரண்டு குழந்தைகள். ஒவ்வொரு பெட்டி திறந்ததும் ஒரே இரைச்சல் வீட்டில். நடப்பது எதுவும் எனக்குப் புரியவில்லை. நண்பரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன பதில் வித்தியாசமாக இருந்தது. மொத்தம் இருபத்தி ஆறு பெட்டிகள் நிகழ்ச்சியில் திறந்து அதில் உள்ள மதிப்பு காட்டப்படுகிறது. நண்பரின் வீட்டில் உள்ள நால்வருடைய பிறந்த தேதி உள்ள பெட்டிகளை அவர்களது பெட்டியாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்த எண் உடைய பெட்டியில் உள்ள பணத்தின் மதிப்பை அவர்களுடையதாக எண்ணிக்கொள்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில் அந்த நாலு பெட்டியில் உள்ள மதிப்புகளில் எவருடைய பெட்டியில் அதிக மதிப்பு உள்ளது அந்த பெட்டி எண் – அந்த தேதியில் பிறந்தவர் ஜெயித்துவிட்டதாக அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

இத்தோடு முடிந்துவிட்டால் பரவாயில்லை – எல்லா சூதாட்டங்களைப் போலவே இவர்களது ஆட்டமும் தகராறிலேயே முடிந்தது. தோற்றவர் ஜெயித்தவர்களிடம் தான் தோற்றதற்காக சண்டை போடுகிறார். இதில் இன்னுமொரு வருந்தத்தக்க விஷயம் இந்த சண்டை எல்லா வாரமும் நடைபெறும் நிகழ்ச்சியாம்.

சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக வீட்டில் இத்தனை சண்டையும் சச்சரவும் தேவையா என்றே எனக்குத்தோன்றியது. நல்ல வேளை இவர்கள் நால்வரில் எவருடைய பிறந்த தேதியும் 27-31 தேதிகளில் இல்லை. அப்படி இருந்திருந்தால் சன் தொலைக்காட்சியிடம் சண்டைக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.