அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பதிவுகள் எழுத முடியாத சூழலில் இருந்ததால் நண்பர் வெங்கட் அவர்களின் தளத்தில் எதுவும் எழுதவில்லை. இதோ இப்போது ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்து விட்டேன். தொடர்ந்து எழுதவே ஆசை - பார்க்கலாம்!
நேற்றைய யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
கல்விக்கு முடிவே இல்லை. ஒரு புத்தகத்தைப் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்று, முடிப்பதல்ல கல்வி. நீங்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை, முழு வாழ்க்கையும், ஒரு கற்றல் செயல்முறையே. --ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
******