வியாழன், 31 மார்ச், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பத்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உதிக்கும்போதும் மறையும்போதும் ரசிக்கும் உலகம் உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல! மனிதனின் வளர்ச்சியையும் கூட!

புதன், 30 மார்ச், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஒன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உதிக்கும்போதும் மறையும்போதும் ரசிக்கும் உலகம் உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல! மனிதனின் வளர்ச்சியையும் கூட!

செவ்வாய், 29 மார்ச், 2022

ஷில்பி - கதை மாந்தர்களின் கதை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீங்கள் யாரை நம்புகிறீர்கள் என்று கேட்டால், உடனே யார் யாரையோ யோசிப்போம் ஆனால் நம்மைப் பற்றி யோசிக்கவே மாட்டோம் அது தான் நம் முதல் தோல்வி!

திங்கள், 28 மார்ச், 2022

வாசிப்பனுபவம் - மௌனம் - ப. பிடல் ஹாஸ்ட்ரோ


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கேதார் தால் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

சிக்கல் என்றாலும் சரி, சிக்னல் என்றாலும் சரி, சிறிது நேரம் காத்திருந்தால், வழி தானாக பிறக்கும். 

ஞாயிறு, 27 மார்ச், 2022

கேதார் தால், உத்திராகண்ட் - நிழற்பட உலா - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

 

வெற்றி பெறும் நேரத்தினை விட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

சனி, 26 மார்ச், 2022

பிறந்த நாள் - அம்மாவுக்கு மகளின் வாழ்த்து

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை ரசித்த சில வரிகளுடன் தொடங்கலாம் வாருங்கள்.

 

எவ்வளவோ முயற்சி செய்து விட்டோம், இனி உங்கள் மனைவியை காப்பாற்ற முடியாது என்றனர் மருத்துவர்கள் நான் பசியில் இருக்கிறேன் என்று கூறுங்கள், என் அம்மா எழுந்து விடுவார் என்றான் ஏழு வயது மகன்.

 

******

காஃபி வித் கிட்டு - 146 - சம்பள நாள் சந்தை - சந்திப்புகள் - செல்லம் - தலைச் சாயம் - சென்னை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உடலில் காயம் என்றால் மருந்திடுங்கள். மனதில் காயம் என்றால் மறந்திடுங்கள். 

வெள்ளி, 25 மார்ச், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கடந்து வந்த பின் தான் புரிகிறது இன்னும் அழகாய், வந்த பாதையை கடந்திருக்கலாமோ என்று மீண்டும் நடக்க நினைக்கையில் பயணம் முடிவடைந்து விடுகிறது நடக்கும்போது அழகாய் கடந்திடுவோம் நமக்கான பாதைகளில்

வியாழன், 24 மார்ச், 2022

கதம்பம் - குட்டி தேவதை - கஸ்டர்ட் ஹல்வா - கேக் - மகளிர் தினம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எந்த நிலையிலும் மனதை அமைதியாக வைத்திருக்கப் பழகுவோம். அமைதியை விட நல்லதொரு ஆயுதமும் இல்லை; ஆயுதமும் இல்லை!

புதன், 23 மார்ச், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எந்த உறவிலும் நம்பிக்கை என்பது ஒட்டுதலல்ல பிணைதல். எனவே நம்மை நேசிக்கும் நபர் நம் கைகளை பற்றிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நாம் அவர்கள் கைகளை பற்றிக் கொள்வோம். 

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

யாரிவள்! பகுதி ஏழு


 

குழந்தைகள் எப்போதும் தான் பார்க்கும் காட்சிகளை வைத்தும், மனிதர்களை படித்தும் தான் வளர்கிறார்கள். தான் எப்படி இருக்க வேண்டும்! யாரைப் போல் இருக்க வேண்டும்! போன்ற திட்டமிடல்கள் அப்போதே துவங்கி விடும். ஒரு சில விஷயங்கள் எத்தனை வருடங்களானாலும் பாசிப்பிடித்ததைப் போல் மனதின் ஆழத்தில் படிந்து போயிருக்கும்! அதனால் அவர்கள் வளரும் சூழல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது!

 

சுட்டிப்பெண் கோவையில் அரசுக் குடியிருப்பில் அந்தக் குட்டி வீட்டில் அப்பா, அம்மா மற்றும் தம்பியோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வளர்ந்து வந்தாள். வசதிகள் எதுவும் அவளுக்குத் தேவைப்படவில்லை! கிடைக்கும் இடத்தில் சுருண்டு கொண்டு தூங்கியதும், இருப்பதை வைத்து அம்மா செய்து தந்த சுவையான உணவும் கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த உணர்வுக்கு ஈடாகாது! 

 

அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் எந்தவித வேறுபாடும் இன்றி ஒற்றுமையோடும் அதேசமயம்  உரிமையோடும் பழகி வந்தார்கள். ஒருவருக்கொருவர் உறவு முறை சொல்லி அழைத்துக் கொள்வதும் உணவுகளை பகிர்ந்து கொள்வதும், சேர்ந்து சினிமாவுக்கு, பொருட்காட்சிக்கு, கோவிலுக்கு எனச் செல்வதும், பக்கத்து வீட்டு குழந்தையைக் கூட கண்டிக்கும் உரிமையோடு இருந்த சூழலில் தான் அவளும், அவள் தம்பியும் வளர்ந்தார்கள்.

 

குட்டிப்பொண்ணுக்கு தான் வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்த விஷயமாக சொல்லியிருந்தேனே! எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக  அவள் உண்டு அவள் வேலையுண்டு என்று மனிதர்களைப் படித்துக் கொண்டிருப்பாள்! நல்லவற்றை மனதில் சேகரித்துக் கொள்வாள்! 

 

எதிர்வீட்டு அத்தை எப்போதும் தான் செய்யும் எந்தவொரு வேலையிலும் சுத்தம், சுகாதாரம் மற்றும் நேர்த்தியை கடைபிடிப்பார்! அந்த விஷயம் இவளைக் கவர்ந்தது!  அவரிடமிருந்து நிறைய விஷயங்களை இவளும் தெரிந்து கொண்டாள்! பொறுமையாக சொல்லியும் தருவார்!

 

அந்த அத்தை சிறிது பெரிதென  வயர்கூடைகள் நிறைய  பின்னுவார்! வாசல் தோரணம் செய்வார்! நடுவில் சோப்பு வைத்து பூக்கூடை பின்னுவார். தொலைக்காட்சியில் காண்பிக்கும் தலை அலங்காரங்களை இவளுக்கு செய்து விட்டு அழகு பார்ப்பார். சில நேரங்களில் அவர்கள் வீட்டு கட்டிலுக்கு அடியில் தான் இவள் இருப்பாள்...🙂

 

இப்படியிருக்க ஒருநாள் காலை நேரம் பள்ளிக்குத் தயாராகும் வேளையில் எதிர்வீட்டு அத்தை தலை பின்னி விட்டால் தான் ஸ்கூலுக்கு போவேன் என்று இவள் அடம்பிடிக்க ஆரம்பித்தாள்...🙂 அம்மா பின்னி விட்டாலும் அந்த அத்தை பின்னி விட்டால் தான் ஆச்சு என்று சொல்லி அழவே அம்மாவிடம் முதுகில் ரெண்டு அடியும் வாங்கிக் கொண்டாள்! 

 

ஒருவழியாக அந்த வீட்டு அக்கா, அண்ணாவை பள்ளிக்கு அனுப்பி விட்ட பின் இவளுக்கு அத்தை இறுக்கமாகவும், பிசிறு இல்லாதவாறும் பின்னி விட்டார்! மனதுக்கு திருப்தி ஏற்படவே அதன் பின்பே பள்ளிக்குக் கிளம்பினாள்..🙂 இப்படியும் சில நாட்கள்..🙂

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாளோ இந்தப் பெண்..🙂 அடுத்த பகுதியில் சொல்கிறேனே!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்