நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 மார்ச், 2024

காஃபி வித் கிட்டு - 187 - Spot the Mistake - சிறு வியாபாரிகள் - மனைவிக்கு கடிதம் - கேள்விகள் - பதிவர் சந்திப்பு - நேரம் - பயணத் திட்டங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட வந்தே பாரத் பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

புதன், 16 செப்டம்பர், 2020

சீந்தில் கொடி கஷாயம் - கலகலப்பான கலப்பு!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

சிங்கத்தின் இரைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கு வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்க மாட்டான்… அது போலதான் பிரச்சனைகளை கொடுக்கும் இறைவன் சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான் – துணிந்து செல்வோம்! 

***** 

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கிருஷ்ணா கிருஷ்ணா - பத்மநாபன்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

இனிமேலாவது மாறிவிட வேண்டும், இனிமேலாவது மாற்றிக் கொள்ள வேண்டும், இனிமேலாவது மாற்றம் வேண்டும் என்பதாக மாறிக் கொண்டேயிருக்கிறது நாட்கள் மட்டும். 

***** 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சினிமாவுக்கு போன சீதாராமன்


முன் குறிப்பு: இந்தப் பதிவினை தட்டச்சு செய்து அனுப்பியதை நான் பார்த்த போது இரவு 11 மணிக்கு மேல்...  அப்படி ஒரு சிரிப்பு சிரித்தபடியே படித்தேன். அக்கம் பக்கத்து வீடுகளில் கேட்டிருந்தால், என்ன ஆச்சுப்பா இந்த ஆளுக்கு, நல்லாத்தானே இருந்தாரு என்று யோசித்திருக்கக் கூடும்! படித்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் – வெங்கட்.

வியாழன், 31 ஜனவரி, 2019

மொழிக் குழப்பம் – சுதா த்வாரகநாதன்




எங்களுக்குத் தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். எனவே தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. பேசுவதும் தமிழ் கலந்த தெலுங்கில் தான் பேசுவோம். எங்கள் குழந்தைகள் இருவருமே தில்லியிலேயே வளர்ந்தவர்கள். பள்ளியில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக எடுத்துப் படித்தார்கள்.  மேலும், தமிழ் பேசும் நண்பர்களும் நிறையவே இருந்தார்கள். தலைநகரில் வளர்ந்த மற்ற தமிழ்க் குழந்தைகளைப் போல, பெரும்பாலும் ஹிந்தியில் தான் பேசுவார்கள். ஓரளவிற்குத் தமிழ் பேச வரும். ஆனால் எங்கள் மொழியான தெலுங்கில் பேசும் போது, தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகள் கலந்து அடித்து விடுவார்கள்.

புதன், 14 அக்டோபர், 2015

சிரிக்கலாம் வாங்க!



நண்பர் ஒருவர் இரண்டு மூன்று நாட்களாகவே அவருடைய முகப்புத்தகத்தில் சில காணொளிகளை பகிர்ந்த வண்ணம் இருக்கிறார். அத்தனையும் பார்க்கும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத விஷயம் இந்த காணொளிகள். வயது வித்தியாசம் இல்லாது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை Tom and Jerry பார்த்து ரசிக்க முடிகிறதே! அதே போலத் தான் இன்று நாம் பார்க்கப் போகும் காணொளிகளும்!

என்ன காணொளி என்று கேட்பதற்கு முன்னரே சொல்லி விடுகிறேன். Charlie Chaplin நடித்த சில படங்களின் காட்சிகள் தான். நான் கடந்த இரண்டு நாட்களில் பார்த்து ரசித்த சில காணொளிகள் இன்றைய பதிவில்!

The Great Dictator – Charlie Chaplin the Barber

ஆஹா, அவர் ஒவ்வொரு முறை கத்தியை உபயோகிக்கும்போதும் ஒரு பரபரப்பு நம் கழுத்தில் கத்தி இருப்பது போல!




The Lion’s Cage

தைரியமாக இருப்பதாக காதலியிடம் காண்பிக்கும் போது அப்படி ஒரு சிரிப்பு!




Eating Machine

இப்படியெல்லாம் அக்காலத்திலேயே யோசித்திருப்பதைப் பாருங்கள்!




The Adventurer – Opening Chase

என்னவொரு Chase!




என்ன நண்பர்களே, காணொளிகளை கண்டு சிரித்தீர்களா? இன்றைய நாள் இனிதாய் அமைந்திடட்டும்!

நாளை மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்




செவ்வாய், 28 ஜூலை, 2015

நான் கர்ப்பமாயிருக்கேன்......



படம்: இணையத்திலிருந்து.....

அவ்வப்போது குறும்படங்கள் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் பதிவுலக நண்பர்களின் நடிப்பில்/பங்களிப்பில் உருவான குறும்படமான Poet the Great படம் பார்த்து ரசித்தேன்.  நான் பார்த்தது குறும்படம் வெளியிட்டு ஒரு மாதத்திற்கு பிறகு தான். அதற்குள் படம் பற்றி பலரும் எழுதி விட்டதால் எனது பக்கத்தில் அது பற்றி எழுதவில்லை.  நல்லதோர் குறும்படம் எடுத்திருந்த நண்பர் துளசிதரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இன்றைக்கு நாம் இங்கே பார்க்கப்போவது நேற்று நான் பார்த்த வேறு குறும்படம் பற்றி தான்.  குறும்படங்களைத் தேடிக் கொண்டிருந்தபோது தலைப்பே வித்தியாசமாக இருக்க, அந்தப் படத்தினைப் பார்க்க முடிவு செய்தேன்.  மொத்தம் 12 நிமிடம் 18 விநாடிகள் தான் இக்குறும்படம் பார்க்க உங்களுக்குத் தேவையான நேரம். 

படத்தின் நாயகன் கனவு காண்கிறார். எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷமாச்சு, அப்பான்னு கூப்பிட ஒரு குழந்தை இல்லையே எனக்கு என தான் வணங்கும் பரவச முனிகளிடம் புலம்புகிறார். அதற்கு அவர் “குடிச்சு குடிச்சு உன் உடம்பிலுள்ள முக்கிய நரம்பு கெட்டுப்போச்சு.  உனக்கு குழந்தை பிறப்பது கடினம். ஆனால் நான் உனக்கு ஒரு வரம் தரேன். உன்னையே கர்ப்பமாக்கி விடுகிறேன்!” 

கனவில் கலவரமாகி எழுந்தால், அவரது மருத்துவ நண்பர் அலைபேசியில் அழைத்துச் சொல்கிறார் – “குடிச்சு குடிச்சே உன் உடம்பை கெடுத்துக்கிட்டேயே.....  இனிமேலாவது குடிக்காதே....  நான் வெளிநாட்டுக்கு ஆராய்ச்சி விஷயமா போறேன். அது வரைக்கும் குடிக்காம இருந்தா, நீ பிழைக்க வழி இருக்கு....  என்று சொல்கிறார். 

அதன் பிறகு கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் அனைத்து கஷ்டங்களும் இவருக்கு வருகிறது – குமட்டல், வாந்தி என அனைத்தும்..... கடைசியில் என்ன நடந்தது..... அவருக்கு குழந்தை பிறந்ததா? வேறு எதுவும் ட்விஸ்ட் உண்டா?  கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள் என்றாலும்......  முடிவில் சொல்லும் விஷயம் .....  ?

என்னதான் ஆகுது?  பாருங்களேன்!




என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா? குறும்படத்தினை எடுத்த குழுவினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....

நட்புடன்



புதன், 28 ஜனவரி, 2015

ஓட வைத்த கேசரி…..


இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஒருவர் வீட்டில் சிறுமிக்கு பிறந்த நாள். மகளின் பிறந்த நாளுக்காக அம்மா கேசரி செய்து தந்தாராம்அதை எங்களுக்கும் கொடுத்தார்சிறிய பாத்திரத்தில் ஒரு மூடி போட்டு கேசரி என்று சொல்லிக் கொடுத்தார்பாத்திரத்தின் மூடியை விலக்கிப் பார்த்தேன்கேசரி இப்படித்தான் இருந்தது!



அடடாஇது என்ன பச்சை நிறத்தில் இருக்கிறதே? என்று யோசித்தேன்கேசரி என்று சொன்னார்களே, ஒரு வேளை பிஸ்தா பருப்புகளை அரைத்துச் சேர்த்து செய்திருப்பார்களோ, அதான் பச்சை வண்ணமோ என்று நினைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன்இல்லை கீரை ஏதாவது சேர்த்திருப்பார்களோ?

ஏற்கனவே இந்த மாதிரி கேசரி உண்டு பழக்கப்பட்ட எனது மனைவி, சாப்பிட்டு பாருங்கநல்லாவேஇருக்கும், என அந்த நல்லாவை கொஞ்சம் அழுத்தியே சொன்னார். சரி என்று கொஞ்சம் பச்சை கேசரியை எடுத்து வாயில் போட்டேன்பச்சைக் கலரில் ரவா உப்புமா சாப்பிட்ட ஒரு உணர்வுஎன்ன இது? என்று குழப்பத்துடன் மனைவியைப் பார்க்க அவர் சொன்னார் – “ரொம்ப நல்லா இருக்குல்ல?” என்று சிரித்தபடியே கேட்டு, ஒரு கதையும் சொன்னார்.

அச்சிறுமியின் தாய்க்கு நெய் அறவே பிடிக்காதாம். அதனால் நெய் வீட்டில் வாங்கவே மாட்டாராம். அவருக்குப் பிடிக்காது என்பதால், வீட்டில் உள்ளவர் எவருக்கும் பிடிக்கக் கூடாது என்று ஒரு உத்தரவு இட்டு விட்டார் போல! அதனால் கேசரி கூட நெய் சேர்க்காது ரிஃபைண்ட் எண்ணை தான் உபயோகிப்பாராம்முந்திரியை வறுக்கவும் எண்ணை தான்

போலவே கேசரிக்கு சாதாரணமாக பயன்படுத்தும் கேசரி பவுடர் தாய்க்குப் பிடிக்காது. அதனால் அவருக்கு மிகவும் பிடித்த பச்சை வண்ணத்தில் Food color சேர்த்து தான் கேசரி செய்வாராம். இப்படி கேசரியின் எந்த குணங்களும் இல்லாது இருக்கும் பச்சை கேசரியைத் தான் செய்வாராம்தனக்குப் பிடிக்காது என்று இப்படி ஒரு கேசரி செய்து, அது தான் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்றும் சொல்கிறார்முந்திரி போடாமல், சிறிது கடுகு தாளித்து, கருவேப்பிலை சேர்த்திருந்தால் நிச்சயம் உப்புமாவாகத் தான் இருந்திருக்கும்.

இப்படி ஒரு கேசரி சாப்பிட்டு ஓடாத குறையாக மீதி இருந்த பச்சை கேசரியிடமிருந்து தப்பினேன்இல்லையெனில் நான் தான் சாப்பிட்டு தீர்க்க வேண்டுமாம்! எதற்கு இந்த வீண் வம்பு!

இப்படி இந்த பெண்மணியிடம் நிறைய சரக்கு இருக்கிறது! தேங்காய் பர்ஃபி, நெய் விடாது தேங்காய் எண்ணை விட்டு செய்வார்களாம்சேமியா பாயசம் செய்யும் போது சேமியாவினை நெய்யில் வறுக்காது, சேமியாவை அப்படியே தண்ணீரில் போட்டு வேக வைத்து, சர்க்கரை, பால் சேர்த்தால் பாயசம். மைசூர் பாகு நெய் விடாது செய்ய முடியுமா என்று இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்டால்டாவும் பிடிக்காது

தனால் செய்யும் சில இனிப்புகளும் எண்ணை விட்டு தான்  செய்வார்கள். இது போலவே ஒரு சில காய்கறிகள் தனக்குப் பிடிக்காது என்பதால் அந்த காய்கறிகளை வாங்குவதும் இல்லை, சமைப்பதும் இல்லை!  

பச்சை கேசரி கொடுத்து விட்டு இப்படி ஒரு யோசனையும் சொல்வார்களாம்அந்த யோசனை – “வேணும்னா நீங்க மேலே கொஞ்சம் நெய் விட்டு சாப்பிடுங்க!” அடடா என்னவொரு யோசனை!

அது சரி, கேசரி சுவையாகச் செய்வது எப்படி என எனக்குத் தெரியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் விதமாய் இங்கே குறிப்பு தருகிறேன்!

கேசரி செய்வதற்கு முக்கியமான தேவை ரவை, சர்க்கரை, கேசரி கலர், ஏலப்பொடி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை  மற்றும் நெய்சரி தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டாயிற்றுஅப்படியே எடுத்து வைத்துவிட்டால் கேசரி தானாக வந்து விடுமா? கொஞ்சம் உழைக்கத் தான் வேண்டும்!

ஒரு சின்ன வாணலியில் [இப்போது ஹிந்தி தெரியாத மறத்தமிழர்கள் கூட கடாய் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!] 2 தேக்கரண்டி நெய் விட்டு, உலர் திராட்சை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை பொன் [அதாங்க தங்கம்!] நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதைத் தனியாக எடுத்து கைக்கு எட்டாத தூரத்தில்கொஞ்சம் தள்ளி வைத்த பின் [இல்லை என்றால் நம் கை சும்மா இருக்காது! கேசரில போட்டு தான் சாப்பிட வேண்டும் என எதுவும் ஆணை இருக்கா என்ன? சும்மாவே சாப்பிட்டு விடுவோமே!], வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு கப் ரவையைப் போட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும்.

பிறகு அதில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்ரவை நன்கு வெந்ததும் ஒண்ணே முக்கால் கப் சர்க்கரை, சிறிதளவு கேசரி கலர் ஆகியவற்றை சேர்த்துக் கிளற வேண்டும். ஒட்டாமல் சேர்ந்து வரும் வரை இடையிடையே சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலியோடு இருக்கும் கேசரியை கொஞ்சம் நெய் சேர்த்து, ஏலப்பொடி தூவி இறக்கி வைத்து வறுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை, முந்திரியைக் கலந்தால் கமகமக்கும் சுவையான கேசரி ரெடி!

ரவையைச் பொன்னிறமாக வறுப்பதிலும் நீரை ஊற்றும் போது கெட்டிப் பிடிக்காமல் கிளறுவதிலும் தான் சூட்சமம் உள்ளது. போலவே, மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும் கேசரி நிறமூட்டியை சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும்.

என்ன நண்பர்களே இன்றைக்கு உங்கள் வீட்டில் கேசரி உண்டா? இல்லை நீங்களும் பச்சை கேசரி செய்து பார்க்கப் போகிறீர்களா

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து……