இரண்டாம் தலைநகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டாம் தலைநகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2017

டல்ஹவுசியிலிருந்து தரம்ஷாலா – ஓட்டுனரின் வருத்தம் - பயணத்தின் முடிவு



இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 22

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


தரம்ஷாலா - எங்கெங்கும் வீடுகள்...

Bபலேய் மாதா மந்திரில் குடிகொண்டிருக்கும் Bபத்ரகாளியை தரிசனம் செய்த பிறகு புறப்பட்டோம். மீண்டும் CHசமேரா அணைக்கட்டு வழியாகவே பயணித்து டல்ஹவுஸி வரை வந்தோம். தரம்ஷாலவிலிருந்து வாகனத்தினை அமர்த்திக் கொண்ட போது, எங்களை டல்ஹவுஸியில் விட்டுவிட்டு வாகனத்தினை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று தான் வாகன ஓட்டுனரிடமும்/வாகனம் தந்த நிறுவனத்திடமும் சொல்லி இருந்தோம். டல்ஹவுஸியிலிருந்தே தலைநகர் தில்லி திரும்புவதாக எங்கள் திட்டம் இருந்தது. ஆனால் தலைநகர் திரும்புவதற்கான பேருந்திற்கு முன்பதிவு செய்திருக்கவில்லை. கஜ்ஜியாரிலிருந்த போது இணையம் வழியாக முன்பதிவு செய்யலாம் என பார்த்தபோது பேருந்துகள் அத்தனை வசதியாக இல்லை – அங்கிருந்து புறப்படும் பேருந்துகள் குறைவு என்பதால் திட்டத்தினை மாற்ற வேண்டியிருந்தது.

செவ்வாய், 19 டிசம்பர், 2017

கனவில் வந்த காளி - பலேய் மாதா மந்திர் – வெள்ளை சரக்கொன்றை


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 21

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


CHசமேரா ஏரி.....


பலேய் மாதா மந்திர் - வெளிப்புறத் தோற்றம்..... 

CHசமேரா ஏரியிலிருந்து புறப்பட்டு அதே மலைப்பாதையில் நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு கோவில் – Bபலேய் மாதா மந்திர். சமேரா ஏரி இருக்கும் பகுதியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3800 அடி உயரத்தில் இருக்கும் இந்தக் கோவிலின் கீழே இருக்கும் வாகன நிறுத்தத்தில் எங்கள் ஓட்டுனர் இறக்கி விட மலை மீது இருக்கும் கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும் – சுமார் 100 படிகள் ஏறிச் சென்றால் பலேய் மாதா மந்திர்.  இந்தக் கோவிலில் குடி கொண்டிருப்பது எந்த தேவி, இக்கோவிலின் வரலாறு என்ன, கோவில் பற்றிய கதை என்ன என்பதையெல்லாம் பார்க்கலாம் வாருங்கள். 100 படிகள் ஏறிச் செல்லும் போதே உங்களுக்குக் கதையும் சொல்லி விடுகிறேன்.

திங்கள், 18 டிசம்பர், 2017

சமேரா லேக் – மலைப்பாதைகளில் ஒரு பயணம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 20

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


CHசமேரா ஏரி... என்ன அழகு எத்தனை அழகு....  

வெள்ளி, 15 டிசம்பர், 2017

கஜ்ஜியாரிலிருந்து டல்ஹவுஸி – காலாடாப்பில் என்ன இருக்கிறது?


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 19

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காலை நேரத்தில் கஜ்ஜியார்....

நடைப்பயணத்தினை முடித்துக் கொண்டு தங்குமிடம் திரும்பிய பின் சிறிது ஓய்வு. ஓய்வுக்குப் பிறகு தங்குமிட சிப்பந்தி இரவு உணவு தயார் என்ற அழைப்போடு வர, தரைத் தளத்திற்குச் சென்றோம். சிறிது நேரம் காத்திருந்த பிறகு நாங்கள் சொல்லி இருந்த உணவு வந்து சேர்ந்தது. சப்பாத்தி, சப்ஜி, தால், சலாட் என சொல்லி இருந்த அனைத்துமே நன்றாக இருக்கவே ரசித்து ருசித்து சாப்பிட ஒரு மணி நேரம் ஆனது – கூடவே அரட்டையும் இருந்தது. பயணத்தில் இதுவரை பார்த்த இடங்கள் பற்றிய அரட்டையும், நாளை பார்க்கப் போகும் இடங்கள் பற்றிய திட்டமிடலும் ஸ்வாரஸ்யமாகச் செல்ல, நேரம் போனதே தெரியவில்லை. இரவு உணவுக்குப் பிறகு வெளியே நடக்கலாம் என்றால், மேலே இருந்து சாலையைப் பார்க்க, சாலையில் ஈ, காக்கா இல்லை! இப்படி இருக்கையில் நடப்பது சரியாக இருக்காது என்பதால், தங்குமிடத்திலேயே கொஞ்சம் நடந்தோம். சிப்பந்திகள் விறகுகளை எரித்து குளிர்காய்ந்து கொண்டிருக்க, அங்கே நாங்களும் சங்கமித்தோம்.   


பயணத்தில் கண்ட காட்சி....

திங்கள், 11 டிசம்பர், 2017

கஜ்ஜியாரிலிருந்து காலா டாப் – நடையும் உழைப்பாளிகளும்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 18

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நடக்கலாம் வாங்க.....
படம்: நண்பர் பிரமோத்..

நண்பர்கள் ஓய்வு எடுக்கப் போவதாகச் சொல்லி விட, நான் மட்டும் மாலை நேரத்தில் கொஞ்சம் நடந்து வரலாம் என நினைத்தேன். அறையிலிருந்து வெளியே வர, தங்குமிடச் சிப்பந்தி, இரவு உணவுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டார். ஐந்து பேருக்கும் தேவையானது Simple Tawa roti, dhal, Sabji மட்டும் என்பதைச் சொல்ல, சரி 08.00 மணிக்குள் தயார் செய்து விடுகிறேன் என்று சொல்லி, இன்னுமொரு சிப்பந்தியை அழைத்து, Fresh-ஆக காய்கறிகள் வாங்கி வரச் சொன்னார். இந்த மாதிரி இடங்களில் தேவைக்கேற்ப, அவ்வப்போது காய்கறி வாங்கிக்கொள்ளலாம். வந்திருக்கும் விருந்தினர்களிடம் கேட்டு பிறகு சமையல் செய்து தருவார்கள் என்பதால் சுடச்சுடவும், புதியதாகவும் சாப்பிடக் கிடைக்கும். நகரங்களில் பெரும்பாலான இடங்களில் Deep Freezer-ல் சமைத்து வைத்திருந்தவற்றை சூடு செய்து கொடுத்து விடுவார்கள்!

வெள்ளி, 8 டிசம்பர், 2017

கஜ்ஜியார் – இந்தியாவின் மினி ஸ்விஸ்….


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 17

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கஜ்ஜியார் - இந்தியாவின் மினி ஸ்விஸ்....


கஜ்ஜியார் - இந்தியாவின் மினி ஸ்விஸ்....
நண்பர் எடுத்த படங்களில் ஒன்று....

புதன், 6 டிசம்பர், 2017

சுக் எனும் ஊறுகாய் – வித்தியாசமாக ஒரு பீன்ஸ் - அருங்காட்சியகம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 16

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


வித்தியாசமான ஒரு பீன்ஸ்!
இதன் பெயர் லுங்டூ.... வித்தியாசமா இருக்குல்ல!


மாயமானை ராமன் துரத்திச் சென்ற காட்சி!
சம்பா ஓவியமாக....

லக்ஷ்மி நாராயண் மந்திரில் இருந்து புறப்பட்டு chசம்பா நகரின் பிரதான வீதி வழியே நடந்து கொண்டிருந்த போது, ஒரு கடையின் பதாகை நிற்க வைத்தது.  CHசம்பா நகர் பற்றி சொல்லும் போது மூன்று விஷயங்களைச் சொல்வது இவர்களது வழக்கம்.  சுக் என அழைக்கப்படும் மிளகாய் ஊறுகாய், சம்பா ஓவியங்கள் மற்றும் சம்பாவின் செருப்பு – நாங்கள் பார்த்த கடையின் பதாகையில் சுக் விற்பனை பற்றி எழுதி இருக்க நின்று விட்டோம். இந்த chசுக் எப்படிச் செய்வது என்பது பற்றி எனது பக்கத்தில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் வசதிக்காக இங்கே அதன் இணைப்பு மீண்டும் தந்திருக்கிறேன்.

திங்கள், 4 டிசம்பர், 2017

லக்ஷ்மி நாராயண் மந்திர் – பத்தாம் நூற்றாண்டு – இராஜாவின் இழப்பு


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 15

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....

ஜோத் என்ற மலைச்சிகரத்திலிருந்து புறப்பட மனதே இல்லாமல் புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் chசம்பாவிற்கு. இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் சில உண்டு என்பதால் அங்கே தான் பயணம் செய்தோம். முதலாக நாங்கள் சென்ற இடம் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு அற்புதமான கோவில். கோவிலின் பெயர் லக்ஷ்மி நாராயண் மந்திர். கோவில் அருகே வாகனம் செல்லாது என்பதால் சற்றே தள்ளி வாகனத்தினை நிறுத்தி எங்களை இறக்கி விட்டார் ஓட்டுனர். கோவில் பார்த்ததும் அலைபேசியில் அழைத்தால், அதே இடத்திற்கு வாகனத்தினை கொண்டு வருவதாகச் சொல்லி அவர் புறப்பட்டார்.

வியாழன், 30 நவம்பர், 2017

ஜோத் என்றொரு மலைச்சிகரம் – அற்புத அனுபவம்



இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 14

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பனிபடர்ந்த மலைச்சிகரங்களும் இயற்கை எழிலும்...

புதன், 29 நவம்பர், 2017

இரண்டாம் நாள் – மலைச்சிகரம் நோக்கி – மாமா மருமான் உணவகம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 13

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


தங்குமிட ஜன்னல் வழியே தௌலாதார் மலைச்சிகரங்கள்....


வழியில் பார்த்த ஒரு ஆறு....
முதல் நாள் ஆட்டங்களில் கலந்து கொள்ளாத நானும் நண்பர் பிரமோத்-உம் காலையில் எழுந்து எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு தயாரானோம். மற்ற அறையில் இருந்த மூன்று நண்பர்களும் ஒரு வழியாகத் தயாரானார்கள். முதல் நாள் எங்களுக்கு வாகனம் அளித்த சர்தார்ஜியிடம் பேசியதில் CHசம்பா மாவட்டத்தில் உள்ள இரண்டு மூன்று இடங்களைப் பற்றிச் சொல்லி அங்கே சென்று வாருங்கள் – மிக அழகிய இடம் என்று சொல்ல, அந்த இடங்களை நோக்கித் தான் எங்கள் இரண்டாம் நாள் பயணம் இருந்தது. மற்றவர்கள் தயாராகும் வரை அறையின் ஜன்னல் வழியே தெரியும் தரம்ஷாலா நகரின் பனிபடர்ந்த தௌலாதார் மலைகளையும், மலைகள் முழுவதும் கட்டியிருந்த வீடுகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். மலையே தெரியாத அளவிற்கு வீடுகள் கட்டி இருக்கிறார்கள்!

வெள்ளி, 24 நவம்பர், 2017

இரவினில் ஆட்டம் - தங்கும்விடுதி - தரம்ஷாலா


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 12

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


டான்ஸ் பார்ட்டி!

அருங்காட்சியகத்தினைப் பார்த்த பிறகு வாகன ஓட்டிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தினைக் கொடுத்து அடுத்த நாள் எங்கே செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து சொல்கிறோம் என அனுப்பி வைத்தோம். தரம்ஷாலாவின் பிரதான சாலைகளில் அப்படியே நடக்க, ஒரு மால் - அந்த ஊருக்கு அது பெரிய மால்! – தில்லியில் இருந்தால் ஒரு சிறு காம்ப்ளெக்ஸ் தென்பட்டது.  அங்கே நுழைந்து கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் – கொஞ்சம் கொறிக்க, சுவைக்க! இப்படியாக நடந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் கடை! டீக் கடை! கொஞ்சம் தேநீர் அருந்தினோம். சுவையான தேநீர் – மிதமான குளிருக்கு இதமாய் இருந்தது. வேடிக்கை பார்த்தபடியே நடக்க இன்னுமொரு கடை – அது நண்பர்களுக்குத் தேவையான கடை!

இம்முறை வந்திருந்தவர்களில் ஒருவர் மட்டும் எனக்குப் பழக்கமில்லாதவர். மற்ற இருவரும் பழக்கமானவர்கள் – என்னுடன் சில பயணங்கள் மேற்கொண்டவர்கள். அவர்களுக்கும் மதுப் பழக்கம் உண்டு என்றாலும் கொஞ்சம் நிதானமாகவே இருப்பவர்கள். புதியவர் கடையைப் பார்த்ததும் உடனே உள்ளே புகுந்து விட்டார். மூன்று பேருக்குத் தேவையான சரக்கை வாங்கிக் கொண்டு தங்குமிடம் நோக்கி நடந்தோம். பொதுவாக புதிய இடங்களில் இருக்கும்போது இப்படி சரக்கு அடிப்பதில் சில சிக்கல்கள் உண்டு. அங்கே அனுமதி உண்டா இல்லையா? அப்படி அனுமதி இல்லை எனில் எங்கே சரக்கடிக்க? என்ற கவலை ஏதுமில்லாமல் கைகளில் சரக்கோடு உள்ளே நுழைய அங்கே பார்த்த காட்சி – தங்கும்விடுதியின் உள்ளே தங்கி இருக்கும் பெரும்பாலானோர் ஏற்கனவே கச்சேரியை ஆரம்பித்திருந்தார்கள்! சில அறைவாசிகள் கச்சேரி முடிந்து வாசலில் பாட்டில்களும் எலும்புத்துண்டுகள் நிறைந்த தட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.    

இரண்டு அறைகள் எடுத்திருந்தோம் என்பதால் நானும் நண்பரும் [என்னைப் போல சரக்கடிக்காதவர்!] ஒரு அறைக்குச் செல்ல, மற்ற மூவரும் அவர்களது அறைக்குச் சென்றார்கள். நாங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்து, அரை மணி நேரம் கழித்து மற்றவர்கள் அறைக்குச் சென்றால் “வெள்ளம் அடி!” துவங்கி இருந்தது – ஏற்கனவே இரண்டு ரவுண்டு உள்ளே போயாச்சாம்! சைட் டிஷ்-உம் சரக்கும் மாற்றி மாற்றி உள்ளே போய்க்கொண்டிருந்தது. சரி இரவு உணவு சாப்பிட உணவகத்திற்குப் போகலாம் என புறப்பட்டோம். பக்கத்திலேயே பிரதான சாலையிலிருந்த ஒரு உணவகத்தில் சைவம்-அசைவம் என இரண்டும் இருக்க அங்கே சென்றோம். சப்பாத்தி, சப்ஜி, ராய்த்தா, சலாட் என நான் சொல்ல, அவர்கள் சிக்கன், மட்டன் என சொல்லிக் கொண்டு, கால்களை – அதாங்க கோழியின் கால்களை கடித்து இழுத்தார்கள்.

இரவு உணவிற்குப் பிறகு நானும் என் அறை நண்பரும் கொஞ்சம் நடக்க, மற்ற மூவரும் இன்னும் கொஞ்சம் சரக்கு வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள்! நாங்கள் தங்குமிடம் திரும்பியபோது மூவரில் ஒருவருக்கு பயங்கர போதை! கைலியை மடக்கிக் கட்டி – ஸ்வெட்டர் கழற்றி இருந்தார் – உள்ளே போன சரக்கு குளிரை மறக்கடிக்கவிட்டது போலும்! முதல் முறை குளிர் பிரதேசத்தில் வந்திருந்த அவருக்கு இது நல்லதல்ல எனச் சொல்ல, “ஹா… இதெல்லாம் பெரிய குளிரா?” என்று சத்தமாக பேசிக்கொண்டும், மற்றவர்களை வம்புக்கிழுத்தும் கொண்டிருந்தார். தள்ளாடியபடியே, மொட்டைமாடிக்குச் சென்று சிறிது நேரம் இருக்கலாம் என மூவரும் செல்ல நானும் என் நண்பரும் எங்கள் அறைக்குத் திரும்பினோம் – நண்பர் அவர்களிடம் சீக்கிரமா தூங்குங்க, நாளைக்கு காலையில் சுற்ற வேண்டும் என்று சொன்ன பிறகு.

தூங்கலாம் என நாங்கள் நினைத்தாலும் தூங்க இயலவில்லை. மேலே சென்றவர்கள் ஒரே ஆட்டம். இருவர் தன் நிலையில் இருக்க, பயங்கர போதையில் இருந்தவர் ஆடிக்கொண்டும், சத்தமிட்டபடியும் இருக்க, வேறு வழியில்லாமல் நண்பர் கதவைத் திறந்து கொண்டு மாடிக்குச் சென்று அனைவரையும் திட்டி, வெளியூர் வந்திருக்கும் சமயத்தில் பிரச்சனையை இழுத்து விட்டுக் கொள்ளாதீர்கள் என அறைக்குள் அடைத்தார். போதையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாத அளவிற்கு போதை! அவருக்கு வீட்டில் சரக்கு அடிக்க அத்தனை வாய்பில்லை என்பதால் இப்படி வெளியே வரும்போது நிறைய சரக்கு அடிப்பவராம்! என்னதான் வாய்ப்பு கிடைக்கிறது என்றாலும் தன் நிலை மறக்கும் அளவிற்கு சரக்கடிப்பது என்ன பழக்கமோ? அறைக்கு வந்த பிறகும் நீண்ட நேரம் பேச்சுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. தங்கும் விடுதியில் இருந்த பல அறைகளில், இரண்டு அல்லது மூன்று அறைகளிலிருந்து இப்படி சத்தம்!

காலையில் நாங்கள் எழுந்து தயாராக, அவர்கள் அறையில் நிசப்தம்! இரவு ஒன்றரை மணி வரை போதையில் பேச்சு தொடர்ந்திருக்கிறது – மற்ற இருவரும் அமைதியாக இருக்க, இவர் மட்டும் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். அனைவரையும் தயாராகச் சொல்லிவிட்டு கீழே செல்ல, தங்கும் விடுதியின் உரிமையாளர் எங்களைப் பார்த்து புன்னகைத்து – “ராத்திரி கொஞ்சம் ஓவரோ?” எனக்கேட்க, ”நேரம்டா டேய்!” என நினைத்து, ”எங்களுக்கல்ல, மற்ற நண்பர் ஒருவருக்கு” எனச் சொல்லி சிரித்தோம். ”இரண்டு மணி வரை புலம்பிக் கொண்டே இருந்தாரே” என்று சொல்லி, ‘இன்னிக்கு காலி பண்ணிடுவீங்கதானே?” என்று கேட்டார்! முதல் நாள் வண்டி அனுப்பிய சர்தார்ஜியிடம் பேசினோம். அன்றைக்கு எங்கே செல்ல வேண்டும் என முடிவு செய்து வண்டி அனுப்பச் சொல்லி தேநீர் அருந்திய பிறகு அறைக்குத் திரும்பி தயாரானோம்.

இரவு முழுவதும் ஆடிய நண்பர், குளித்து முடித்து தயாராக இருந்தார். பார்க்கும்போதே தெரிந்தது அவருக்கு போதை தெளியவில்லை என.  எதற்காக இப்படி குடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, கேரளாவில் சரக்கு விலை அதிகம், இங்கே குறைவாக இருக்கிறதே, ”காசுக்குக் காசு மிச்சம், ஜாலிக்கு ஜாலி” என்பதால் அடிக்கிறார்களாம்! நல்ல சாக்கு தான்! இரவு அடித்த சரக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று தோன்றியது! நான் நினைத்தது சரியாகவே இருந்தது – அன்றைக்கு முழுவதும் அவர் Off! எல்லோரும் அவரை கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அவர் கேட்ட கேள்வி அப்படி – ”ராத்திரி ஏதும் ரொம்பவே பேசினேனோ?”

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

புதன், 22 நவம்பர், 2017

காங்க்ரா கலை அருங்காட்சியகம் - தரம்ஷாலா


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 11

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காங்க்ரா கலை அருங்காட்சியகம் - வெளிப்பு/றத் தோற்றம்

திங்கள், 20 நவம்பர், 2017

எழில் கொஞ்சும் கிரிக்கெட் ஸ்டேடியம் - தரம்ஷாலா


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 10

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5 6 7 8  9


பின்புலத்தில் பனிச்சிகரங்களும் அழகிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கும்...

நெய்வேலியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி கிடையாது. ரேடியோ – அதுவும் வால்வு ரேடியோ மட்டும் தான். அதில் தான் பாடல்கள், நாடகங்கள், திரைப்படங்களின் வசனங்களை ஒலி பரப்புவார்கள். கிரிக்கெட் போட்டிகள் என்றால் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் Running Commentary கேட்பதுண்டு. சென்னையில் போட்டிகள் நடக்கும் போது மட்டும் தமிழில் ஒலிபரப்புவார்கள். அப்படி தெரிந்து கொண்டது தான் கிரிக்கெட் விளையாட்டு. வெளியே சென்று விளையாடியது கிடையாது. பள்ளியில் Hand Cricket என வகுப்புக்குள்ளேயே விளையாடி இருக்கிறோம்.

வெள்ளி, 17 நவம்பர், 2017

ஜெய் மாதா குணால் பத்ரி – வற்றாத பாறை - தரம்ஷாலா


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 9

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5 6 7 8


மாதா குணால் [P]பத்ரி கோவில் - வெளிப்புறத் தோற்றம்

தேயிலைத் தோட்டங்கள், இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்த பிறகு கொஞ்சம் தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அந்தப் பகுதியில் தேநீர் குடிக்க எந்த வசதியும் இல்லை! எங்கே சுற்றிப் பார்த்தாலும் தேயிலை, ஆனால் தேநீர் குடிக்க வசதி இல்லை! ”Water, water everywhere! But not a drop to drink!!” கதை தான். சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அடுத்த இலக்கை நோக்கி பயணித்தோம். தேயிலைத் தோட்டங்களுக்கு வெகு அருகிலேயே ஒரு சக்தி ஸ்தலம் இருக்கிறது அதற்குப் போகலாம் என்று சொன்னார் எங்கள் வாகன ஓட்டி.

புதன், 15 நவம்பர், 2017

விதம் விதமாய் தேநீர் – ஹிமாச்சல் தேநீர்



இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 8

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5 6 7


தரம்ஷாலா - தேயிலைத் தோட்டங்கள்....


தரம்ஷாலா - தேயிலைத் தோட்டம் ஒன்றில் நான்....
படம்: நண்பர் பிரமோத்!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூர், காங்க்ரா பகுதிகள் தேயிலைத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றவை. பல வருடங்களாகவே இங்கே தேநீர் பயிரிடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்திலேயே இங்கே தேநீர் பயிரிட ஏதுவாக இருக்கும் என்று உணர்ந்து 1800-களில் தேநீர் பயிரிட ஆரம்பித்தார்களாம். Black Tea, Green Tea என இரண்டுமே பயிரிடுகிறார்கள் என்றாலும் முதல் வகை தான் அதிகம் பயிரிடப் படுகிறது. எனது நண்பருக்கு பாலம்பூர் சென்று, அங்கே உள்ள தேயிலைத் தோட்டங்களைப் பார்த்து வர வேண்டும் என்பது ஆசை. அதற்கு பாலம்பூர் வரை ஏன் செல்ல வேண்டும், தரம்ஷாலா, மெக்லாட்கஞ்ச் பகுதியிலேயே மிகப் பெரிய தேயிலைத் தோட்டங்கள் உண்டு – மிகவும் பழமையான தேயிலை நிறுவனமான ஹிமாச்சல் தேநீர் நிறுவனம் இங்கே தான் இருக்கிறது என்று சொன்னார் எங்கள் ஓட்டுனர்.

திங்கள், 13 நவம்பர், 2017

தலாய்லாமா – புத்தர் கோவில் – மெக்லாட்கஞ்ச்

இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 7

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5 6


புத்தர் பிரான்.....

St. John’s Church in the wilderness, Bபாக்சுநாக் ஆலயம் தொடர்ந்து நாங்கள் அடுத்ததாய் சென்றது ஒரு புத்தர் கோவில் – ஆம் தலாய் லாமா அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து தப்பித்து வந்து அமைத்த முக்கியமான வழிபாட்டுத் தலம் – The Dalai Lama Temple Complex – Tsuglhakhang Complex என அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம். மிகவும் பெரிய இடம். அந்த இடத்தில் பல புத்த பிக்குகள் வசிக்கிறார்கள்.  திபெத்தியர்கள் பெரும்பாலானோர் இங்கே தான் தங்கி தங்களது புத்த மதக் கோட்பாடுகளை கற்றுக் கொள்கிறார்கள்.

வெள்ளி, 10 நவம்பர், 2017

தண்ணீருக்கு சண்டை – பாக்சுநாக் - தரம்ஷாலா!


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 6

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5


Bபாக்சுநாக் கோவில் அருகே இருக்கும் குளம்

St. John’s Church in the Wilderness என அழைக்கப்படும் தேவாலயத்திற்குச் சென்று அங்கே இருந்த அமைதியை ரசித்தபிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்ததாக நாங்கள் சென்றதும் ஒரு வழிபாட்டுத் தலம் என முந்தைய பகுதியை முடிக்கும் போது சொல்லி இருந்தேன். நாங்கள் அப்படிச் சென்ற வழிபாட்டுத் தலம் “பாக்சுநாக் கோவில்”! இங்கே என்ன கோவில் இருக்கிறது, எப்படி வந்தது, யார் கட்டினார்கள் என்ற விவரங்களையெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்! முதலில் கதை!

புதன், 8 நவம்பர், 2017

தேவதாரு காட்டுக்குள்ளே தேவாலயம் - தரம்ஷாலா!


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 5

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4


St. John's Church in the wilderness!
தரம்ஷாலா....


தேவாலயம் செல்லும் பாதையில்...

நட்டி என்கிற அழகிய கிராமத்திலிருந்து, பனிபடர்ந்த தௌலாதார் மலைச்சிகரங்களை ரசித்து, காலை உணவை முடித்துக் கொண்ட பிறகு நாங்கள் சென்ற இடம் ஒரு தேவாலயம். மிகவும் பழமையான ஒரு தேவாலயம் இருக்கும் இடத்திற்குத் தான் எங்கள் அடுத்த பயணம். Church of St. John in the Wilderness என அழைக்கப்படும் இந்த தேவாலயம் அடர்ந்த தேவதாரு மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருக்கின்றது. சாலையில் வாகனத்தினை நிறுத்தி விட்டு, கற்கள் பதித்த பாதையில் உள்ளே செல்லும் வேளையில் உங்களுக்கு இந்த இடம் பற்றிய சில தகவல்களையும் சொல்லிக்கொண்டே செல்கிறேன். 1852-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தேவாலயம் வட இந்தியாவில் இருக்கும் பழமையான தேவாலயங்களில் முதன்மையானது.

திங்கள், 6 நவம்பர், 2017

நட்டி என்றொரு ரம்யமான கிராமம் - தரம்ஷாலா!


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 4

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 பகுதி-2 பகுதி-3


மலைப்பாதையும், மலைத்தொடரும்...


பனிபடர்ந்த தௌலாதார் மலைத்தொடர்.....

தங்குமிடம் கிடைத்ததும், ஒவ்வொருவராகத் தயாராவதற்குள் தங்குமிட உரிமையாளரிடம் பேசி அன்றைய தினத்தின் பயணத்திற்காக வண்டி தேவை என்றோம். அவர் தனது நண்பர் ஒருவரின் நிறுவனத்திற்கு அலைபேசியில் அழைத்தார். என்னதான் ஹிமாச்சலப் பிரதேசம் என்றாலும், இங்கேயும் நிறைய சர்தார்ஜிகள் உண்டு. ஹிமாச்சல பிரதேசத்தில் பேசும் மொழிகளில் பஞ்சாபியும் உண்டு! பகாடி என அழைக்கப்படும் மலைப்பகுதி மொழியும் உண்டு. அன்றைய தினம் வேண்டிய வாகனத்தினை அந்த நண்பர் அனுப்பி வைப்பதாகச் சொல்லி விட்டார். வாடகையும் சரியாகவே தோன்ற வண்டியை காலை ஒன்பது மணிக்குள் அனுப்பி வைக்கச் சொன்னோம். அதற்குள் அனைவரும் குளித்து தயாராகி விட எங்கள் சுற்றிப் பார்க்கும் படலம் ஆரம்பித்தது! நீங்களும் சுற்றிப் பார்க்க ரெடி தானே?