சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 மார்ச், 2026

விரும்பிச் சொன்ன பொய்கள் - சுஜாதா - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

வாசிப்பனுபவம் - கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - சுஜாதா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட Verdant சத்சங்கம் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

செவ்வாய், 28 ஜனவரி, 2025

வாசிப்பனுபவம் - திசை கண்டேன்! வான் கண்டேன்! - சுஜாதா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

செவ்வாய், 13 ஜூலை, 2021

சுஜாதா எழுதிய பயணக் கட்டுரை

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால், பாதை கடினமானாலும் பயணிக்கத் தான் வேண்டும்.


*****


திங்கள், 31 டிசம்பர், 2012

மேகத்தினைத் துரத்தியவன் – சுஜாதா





இந்த நாவல் 1979-ஆம் ஆண்டு மாலைமதி மாத இதழுக்காக தலைவர் சுஜாதாவால் எழுதப்பட்டது. இந்த விறுவிறுப்பான நாவலை சமீபத்தில் படித்தேன். விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட இந்தப் புத்தகத்தினை எடுத்துப் படிக்க ஆரம்பித்த பிறகு படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. கதை என்ன என்று பார்ப்போம்....

அன்பழகன் – நண்பர்களுக்குச் சுருக்கமாய் கன்”. வயது கட்டிளம் காளை ஆகிய 18! வேலை என்று ஒன்றும் கிடையாது. அம்மா அப்பா, கூடப் பிறந்தவர்கள் என யாரும் இல்லை. தற்போது இருப்பது தூரத்து ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில். வேலை என்று ஒன்றும் இல்லாததால், சித்தப்பா வீட்டில் சமையலுக்கு காய்கறி வாங்கி வருவது, சுத்தம் செய்து நறுக்கிக் கொடுப்பது, சுற்று வேலைகள் செய்வது, கடைகண்ணிகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது எல்லாமே அன்பான அன்பு தான். மொத்தத்தில் சம்பளமில்லா வேலைக்காரன்.

சித்தப்பா விநாயகம் பணி புரிவது ஒரு கூட்டுறவு வங்கியில், சித்தி தனம் அரசாங்க அலுவலகத்தில். தன்னுடைய சொந்த செலவுகளுக்கு – அதான் சிகரெட் பிடிப்பது போன்றவற்றிற்கு பொருட்கள் வாங்கும்போது கமிஷன் அடிப்பது தான் வழி. ஒவ்வொரு மாதமும் 100-150 ரூபாய் சம்பாதிக்க பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.  அப்படி இருக்கும் சமயத்தில் சுலபமாய் பணம் சம்பாதிக்க வழி சொல்லித்தருவதாய் புதிய கேரக்டர் அறிமுகம். அது – மாணிக்கம். சொல்லித் தரும் வழி சித்தப்பா பணி புரியும் வங்கியில் கொள்ளை அடிப்பது.

மாணிக்கம் அன்பழகனிற்கு போதையை அறிமுகம் செய்து வைத்து, கூடவே கொஞ்சம் பணமும் கொடுத்து வங்கியில் இருக்கும் பாதுகாப்பு வசதிகளைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்து கொள்கிறார். பாதுகாப்பு வசதிகள் பற்றித் தெரிந்த பிறகு அதை மீறி எப்படி கொள்ளை அடிப்பது என திட்டம் தீட்டுகிறார்கள். நடுவே புதியதாய் சித்தியின் தங்கை ரத்னா என்றொரு கேரக்டரும் விறுவிறுப்பாக உள்ளே நுழைகிறார்.

விநாயகம் வைத்திருக்கும் சாவிக்கொத்திலிருந்து சாவிகளை சோப்பில் அச்சு எடுப்பது, வங்கியில் இருக்கும் அபாய சங்கினை ஒலிக்காமல் தடுப்பது எப்படி என்று தெரிந்து தகவல் சொல்வது என எல்லா திட்டங்களிலும் அன்பழகனின் பங்கு முக்கியமாக இருக்கிறது. பிறகு ஒரு நன்னாளில் திட்டமிட்டபடியே, மாணிக்கமும், அன்பழகனும் வங்கியைக் கொள்ளை அடிக்கிறார்கள். அதன் பிறகு தான் திருப்பமே. 


கொள்ளை அடித்துக் கொண்டு வெளியேறும்போது அங்கே ஒரு ஜீப் வருவது தெரிய, அங்கிருந்து பணப்பெட்டியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிக்கிறார்கள். ஆனாலும் துரத்திச்சென்று அவர்களைப் பிடித்து விசாரிக்க, பணப்பெட்டியை ஆற்றில் வீசி விடுகிறான் மாணிக்கம். விசாரணைக்காக ஜீப்பில் வந்த போலீஸ்காரர்களோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள். வங்கியில் கொள்ளையடித்தது இவர்கள் தான் என கைது செய்யப்படுகிறார்கள்.

வங்கிக் கொள்ளை வழக்கு நீதிமன்றத்திற்கு வர, அதில் மாணிக்கம் மேல் எந்த தவறும் இல்லை என்று சாமர்த்தியமாக வாதாடி அதே சமயம் எல்லா குற்றமும் புரிந்தது அன்பழகன் மட்டுமே என்று நிரூபிக்கப்படுகிறது.  வழக்கறிஞர் யாரென்று கேட்டால், நம்ம வசந்த் தான்!  இப்போது தான் திருப்பமே. இப்படி செய்த தவறை சாமார்த்தியமாக வழக்காடி ஒருவர் மீது மட்டுமே சுமத்தியது சரியில்லை என்று ரத்னா வசந்த்-இடம் முறையிட ரத்னாவுக்காக இந்த வழக்கினை மேல் முறையீடு செய்ய முடிவு செய்கிறார் –வசந்த்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் தலைவர் சுஜாதா. ஆரம்பத்திலிருந்தே இந்த திருட்டில் மாணிக்கம்-அன்பழகன் தவிர வேறு ஒருவரும் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் முன்னேறுகிறது.  அந்த மூன்றாவது நபர் யார், அவருக்கு அன்பழகன் மேல் என்ன வெறுப்பு என்பதெல்லாம் தான் கதையின் போக்கில் மாற்றத்தினையே கொண்டு வருகிறது.

அந்த நபர் யார், எதனால் வெறுப்பு என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது இது தான் – மேகத்தினைத் துரத்தியவன்ஐ நீங்களும் துரத்துங்கள் – அட படியுங்கள் எனச் சொல்ல வந்தேன். 

மாலைமதியில் வெளி வந்த இந்த நாவலை சில பதிப்பகங்கள் வெளியிட்டு இருக்கின்றன.  நான் படித்தது விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு – இரண்டாம் பதிப்பு – விலை 35/-. 

மீண்டும் வேறு “படித்ததில் பிடித்ததுபதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 3 டிசம்பர், 2012

நகரம் – சுஜாதா




பட உதவி: நன்றி பால் ஹனுமான் ஜி!



பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ராஎன்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுராஎன்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோராஎன்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!

சுவர்களில் ஓரடி உயர எழுத்துகளில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை – ஆ.கே. கட்பாடிகள் – எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள் – ஹாஜி மூசா ஜவுளிக்கடை [கடல்] – 30.9.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.

மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல ‘பைப்அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன்கள் ‘டெட்டானஸ்கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீஸல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விரைப்பான கால் சராய் சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்கார்ர்கள் ‘இங்கிட்டும் அங்கிட்டும்செல்லும் வாகன – மானிட போக்குவரத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரௌனியன் இயக்கம் போல் இருந்த்து. [பௌதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்] கடர் சட்டை அணிந்த, மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம் ஒன்று, சாலையில் இடது புறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காகத் திட்டிக் கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள், மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகைப் பாலம்.... மதுரை!

இப்படித்தான் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது தலைவரின் நகரம் சிறுகதை. இச்சிறுகதை இன்றைக்கு முப்பத்தி எட்டு - நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. ஊர் பற்றிய ஒரு கண்ணோட்டத்தினை முதல் மூன்று நான்கு பத்திகளிலேயே தரும் இந்த வித்தை வாத்தியாரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். 
 
இச் சிறுகதையை சமீபத்தில் படித்தேன். தில்லி தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திலிருந்து எடுத்த புத்தகங்களுள் “நகரம் – சுஜாதாஎன்ற தலைப்பிட்ட புத்தகமும் அடக்கம். இத் தொகுப்பில் மொத்தம் 14 கதைகள். முன்னுரையில் இந்த பதினான்கு கதைகளும் சென்ற இரு வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை என்று சுஜாதாவே 04.03.74 அன்று சொல்லி இருக்கிறார்!


இத்தொகுப்பில் இருக்கும் பதினான்கு கதைகள் – [1] நகரம் [2] பார்வை [3] சென்றவாரம் [4] கள்ளுண்ணாமை [5] தலைப்பு என்ன? [6] மகன் தந்தைக்கு [7] உறுமீன் [8] இளநீர் [9] காணிக்கை [10] முரண் [11] காரணம் [12] அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடன் அல்ல [13] ஒரே ஒரு வரம் [14] வாட்டர் கார் விவகாரம்.

அனைத்து கதைகளுமே எனக்குப் பிடித்தது. இதில் சென்றவாரம் கதை – தினமணி நாளிதழில் 28.12.73 அன்று வெளிவந்த ஒரு விபத்துச் செய்தியை வைத்து ஒரு கதையை அழகாய் பின்னியிருப்பார். 

ஒரே ஒரு வரம் – ஆசாமியிடம் வித்தியாசமாக என்னவோ இருந்தது. என்ன என்று சுலபமாகச் சொல்ல முடியவில்லை. சட்டை பட்டன் ஒன்றை மாற்றிப் போட்டிருந்தாரே, அதுவா? இந்த 1973-ல் காதில் கடுக்கன் போல் போட்டுக் கொண்டிருந்தாரே, அதுவா? அல்லது வலது கை சுட்டு விரலில் மோதிரம்? குடுமியா, கிராப்பா என்று சொல்ல முடியாத சிகை, நிச்சயம் அவர் சென்னைக்குப் புதிது... சீனிவாசலு நாயுடு தெரு, இரண்டாம் சந்து.....

கதவு எண்களைப் பார்த்துக்கொண்டே ஒரு வீட்டு வாசலில் நின்றார். அதன் முகப்பில் தெரிந்த மாடிப் படிகளில் ஏறி ஒரு தண்ணீர் டிரம்மைத் தாண்டி ஓர் அறையின் வாசற் கதவை லேசாகத் தட்டினார். பதிலில்லை. சுற்று முற்றும் பார்த்தார். ஒருவருமில்லை. உடனே அவர் ஒரு அமானுஷ்யமான காரியம் செய்தார். மூடி இருந்த அந்த அறைக் கதவின் ஊடே, புகை போல் ஊடுருவி உள்ளே சென்றார்.

உள்ளே சென்று பார்த்தால் ஒரு பெண், தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அவளைத் தடுத்து அவளுக்கு ஒரே ஒரு வரம் அளிக்கிறார். அந்த வரம் அளித்த பிறகு தனது வேலையை ராஜினாமா செய்ய நினைக்கிறார் - காரணத்தை மிக அழகாய்ச் சொல்லி இருக்கிறார் “ஒரே ஒரு வரம்என்ற இக்கதையில்.

அனைத்து கதைகளுமே அருமை.  நான் படித்த புத்தகம் குமரி பதிப்பகம் 1974-ல் வெளியிட்டது. வெளி வந்த கதைகளில் சிலவற்றை இணையத்தில் படிக்கலாம். நகரம் கதை சுஜாதாவின் தீவிர ரசிகர் திரு. பால் ஹனுமானின் தளத்தில் இருக்கிறது.

மீண்டும் வேறொரு படித்ததில் பிடித்ததுபகிர்வில் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


 

திங்கள், 5 நவம்பர், 2012

மாயா – சுஜாதா




கருங்கல் சுவர் ஆள் உயரம் இருந்தது. வாசலில் காவற்காரன் என் காரை நிறுத்தினான்.  என் பெயர் கேட்டான். கணேஷ்’ என்றேன். உடனே கதவைத் திறந்து என்னை அனுமதித்தான். காத்திருக்கிறார்கள் எனக்காக. திறந்த கதவின் கம்பிகளுக்கு நடுவில் ஆங்கில கே. எம். எழுத்துக்கள் சமீபத்திய ப்ராஸ்ஸோவில் பளபளத்தன. கிருஷ்ணா மிஷன் உலக அமைதி’ என்று அதன் கீழ் எழுதியிருந்த்து. உள்ளே அந்தக் கட்டடத்தை அடையும் பாதை கவிதையுடன் நெளிந்தது. இருபுறமும் வரிசையாக குல்மோஹர், டாலியா, ஸெஸ்பானியா பூக்கள், கொடிகள், வர்ணங்கள், பச்சைப் புல் சதுர கஜங்கள்.

வெண்மையான கட்டடம். தந்தம் போல் மெலிதான, மஞ்சள் கலந்த, பளபளக்கும் வெண்மை. வெள்ளையடித்தவனை விசாரிக்க வேண்டும். கில்லாடி வேலை வாத்யாரே!’.

போர்ட்டிகோவில் என் கறுப்பு கார் உறுத்தி இருக்கும். எனக்காக அந்த மாது காத்திருந்தாள். நீங்கள் பத்து நிமிடம் லேட்’ என்றாள். நான் கதவைத் திறந்து என் தாமதத்தைப் புன்னகையில் மறைத்தேன். பின் குறிப்பாக, ‘ஸாரி’ என்றேன். அம்மாள் வெண்மை சாகரமாக இருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்து எட்டு இருக்கலாம். லேசாக மீசை இருந்தது. கண்களில் கண்ணாடி வட்டங்கள்தலையில் நரை என்பதே இல்லை. விஸ்தாரமாக இருந்தாள்.

இப்படித்தான் விறுவிறுப்பாக ஆரம்பித்தது வாத்யாரின்’ மாயா என்ற சிறுகதை. நாகப்பட்டினம் குமரிப் பதிப்பகம்’ வெளியிட்ட மாயா’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஐந்தாம் பதிப்பு [1994] அப்போதைய விலை ரூபாய் 19! [பத்தொன்பது ரூபாய் மட்டுமே!]. மாயா கதைச் சுருக்கத்தினைப் பார்ப்போமா?

கிருஷ்ணா மிஷன் என்பது சுவாமி கிருஷ்ணானந்த சன்மார்க்க பதா என்கிற சிக்கலான பெயரால், ‘சுவாமி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மகானின் தலைமையில் நடத்தப்படும், பணம் படைத்த ஒரு இயக்கம்.  அவர்கள் நடத்தும் கல்லூரிகள், ஆராய்ச்சிக் கழகங்கள், அனாதை இல்லங்கள், புனர் வாழ்வு இல்லங்கள் ஆகியவை கணக்கிலடங்கா.

சுவாமி மீதும், அந்த மிஷன் மீதும் மாயா எனும் பெண் தந்த புகார் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? இதையே தான் கணேஷும் கேட்டார். 

சென்ற செப்டம்பர் மாதம் பதினெட்டாம் தேதி என்னை மிஷனில் நடக்கும் ஹேலஜ்ர பூஜையில் கன்னிகைப் பெண்ணாக அழைத்தார்கள்.  நான் அங்கே சென்ற போது என்னை சுவாமி பலாத்காரம் செய்து விட்டார். [இங்கே தந்திருப்பது சுருக்கம் மட்டுமே! முழுப் புகார் படிக்க மாயா புத்தகத்தினைப் படிக்கலாமே!]

கணேஷ் இந்தப் புகாரினைப் படித்து சில விசாரணைகள் செய்து புகார் கொடுத்த மாயாவினையும், அவளது அண்ணனையும் சந்திக்கிறார்.  அங்கேயும் சில விவரங்கள் சேகரித்துக் கொண்டு அலுவலகத்திற்குத் திரும்பி வசந்திடம் இந்த கேஸ் பற்றிய விவரங்களைச் சொல்கிறார். 

வாத்தியாரின் கணேஷ் வசந்த் வந்துவிட்டால் கதையில் விறுவிறுப்புக்கா பஞ்சம். காட்சிகள் விறுவிறுப்பாக மாறுகின்றன.  விசாரணை, மாயா, மிஷன், கோர்ட் என்று படிப்படியாக மாறும் காட்சியில் கணேஷ்-ன் திறமையான வாதத்தினால் சுவாமி மீது சுமத்தப்பட்ட பழி பொய் என்று நிரூபிக்கப்படுகிறது.  இதோடு நிறுத்தி இருந்தால் அது சாதாரணமான கதை.  இதற்குப் பின் ஒரு ட்விஸ்ட் வைத்தால் தானே அது வாத்யாரின் கதையாக முடியும்.

வெற்றிக்குப் பிறகு மிஷன் சென்று சுவாமி தன் கையை ஒரு சுற்றுச் சுற்றிக் கொடுத்த ஒரு சிறிய தங்க கிருஷ்ணன் விக்ரஹத்தினை வாங்கிக் கொண்டு காரில் திரும்பும்போது கணேஷ் தன்னுடைய கைப்பெட்டியை மிஷன் அறையிலேயே விட்டு வந்தது தெரிகிறது. மீண்டும் மிஷனிற்குச் சென்று அதை எடுக்கும் போது... 

என்ன நடந்தது என்பதை கதையை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்! :) ஐம்பது பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த கதையில் வாத்தியாரின் முத்திரைகள் ஏராளம்.

சுவாரசியமான இந்த சிறுகதைத் தொகுப்பில் இன்னும் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. அவை அஸ்திவாரம், குணம், மந்திரவாதி மற்றும் பொய்கள்.  உங்களுக்கு மாயா கதையின் முடிவு என்னவென்று தெரிந்து கொள்ள எத்தனை ஆவலோ அதே அளவு ஆவல் எனக்கும் பொய்கள்’ கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ள ஆனால் பைண்ட் செய்து வைக்கப்பட்ட அந்த சிறுகதைத் தொகுப்பின் கடைசி பக்கங்களை யாரோ ஸ்வாஹா செய்து விட்டார்கள்!

மீண்டும் வேறொரு பகிர்வுடன் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

பின் குறிப்பு:  பதிவிற்கான படம் நண்பர் திரு பாலஹனுமான் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.  அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.