”என்னங்க! வாசல்ல கையிலே
வீடியோ காமிரா, மைக் எல்லாம் வச்சுக்கிட்டு ஒரு பெரிய கும்பல், உங்க பேரைச் சொல்லி
கேட்கறாங்க! நீங்க என்னடான்னா இன்னும்
தூங்கிக்கிட்டிருக்கீங்க, சீக்கிரம் எழுந்து வாங்க" என்ற குரல் கேட்டு ”ஞாயிற்றுக்கிழமை தானே இன்னிக்கு!
காலையிலேயே எழுப்பறியே!” என்று கேட்டபடியே எழுந்தேன்.
”அட காமிரா, மைக் எல்லாம் எடுத்துட்டு ஒரு கும்பல் நம்மளத்
தேடியா? தப்பா எதுவும் பண்ணலையே” என்று எண்ணியபடியே வெளியே வந்தேன். மத்திய
அரசில் அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி வெளியே வரும்போது தள்ளுமுள்ளு பண்ணி ஒரே சமயத்தில்
பல நிருபர்கள் மைக்கை நீட்டி கேள்வி கேட்பது போல, என்னிடம் கேள்வி கேட்க முட்டி மோதினார்கள்
நிருபர்கள். என்ன விஷயம் என்றே புரியாமல் முழித்தேன்.
நான் பேய் முழி முழிப்பதைப் பார்த்த ஒரு நிருபர், “என்ன சார்
அடுத்தடுத்த நாள்ல இரண்டு பெரிய விருது வாங்கிட்டு, இப்படி அடக்கமா ஒண்ணும் தெரியாத
மாதிரி முழிக்கிறீங்களே! நாங்க ஒண்ணும் பார்ட்டி வையுங்க என்றெல்லாம் கேட்க மாட்டோம்! தைரியமா வெளியே வாங்க! ”என்றார். விருதா? எனக்கா? என்ன விருது என்று இன்னமும் புரியாமல்
கேட்டேன்.
”அட என்னங்க எங்க கிட்ட போய் விளையாடிகிட்டு”
– என்றபடி “உங்களுக்கு மதுரகவி வலைப்பூ
வைத்திருக்கும் ரமா ரவி “The Versatile Blogger Award” கொடுத்து இருக்காங்க. அது மட்டுமா
அதே விருதினை திரும்பவும் கற்றலும் கேட்டலும் ராஜி-யும் கொடுத்திருக்காங்க! இப்படி
இரண்டு தடவை ஒரே விருது வாங்கியும் இவ்வளவு அவை அடக்கமா! அதான் உங்க
கிட்ட பேட்டி வாங்க வந்துட்டோம் காலையிலே" என்றார்கள்.
"இந்த
செய்தியை சொன்ன உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி… நமக்குக்
கொஞ்சம் கூச்ச சுபாவம்! திடீர்னு நம்ம மேலே ஃபோகஸ் லைட் எல்லாம் பட்டா வெக்கத்திலேயே ‘அளுதுருவேன்!’. அதுனால
பேட்டின்னுல்லாம் வேண்டாம்! காலையிலேயே வந்து இருக்கீங்க, அம்மணி
நல்ல டிகிரி காப்பி தருவாங்க! வாங்கி குடிச்சுட்டு கிளம்புங்க!” என்று ஒரு
வழியாக சமாளித்து அனுப்பி வைத்தேன்.
அவர்களை அனுப்பிய பிறகு, “அது என்ன, ’The Versatile
Blogger Award’? Versatile-ன்னா என்ன”ன்னு…Google Translate பண்ணிப் பார்த்தேன். ”பல துறைகளிலும் திறமையுடைய” என்று சொல்லுது கூகுள். அட எனக்குள்ள
பல துறை வேற இருக்கா? என்னமோ வெறும் எலும்பும், நரம்பும் தான் இருக்குன்னு இல்ல
நினைச்சேன்!” சரி சரி நம்ம திறமையை அடுத்தவங்க எடுத்துச் சொன்னாத்தானே
புரியுது! இந்த திறமையை உலகுக்கு எடுத்துச் சொன்ன சகோதரி ரமா ரவி அவர்களுக்கும்
சகோதரி ராஜி அவர்களுக்கும் மிக்க நன்றி.
இந்த விருது பெற்றால் செய்யவேண்டியது என்ன என்று Fine
Print-ல் சொல்லிட்டாங்க! அதாவது விருது பெற்றவர்களுக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச்
சொல்லி வேறு ஐந்து வலைப்பதிவாளர்களுக்கு வழங்க வேண்டுமாம்! அதனால்
முதல்ல எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லிடறேன்.
- புத்தகங்கள் படிப்பது [இப்போது வலைப்பூக்கள் இந்த இடத்தினை
மெதுவாகத் திருடிக்கொண்டு விட்டது!]
- திரை இசைப் பாடல்கள் சேகரிப்பது [முன்பு ஒலிநாடாக்களில் இப்போது
குறுந்தகடுகளில்!] மற்றும் கேட்பது.
- சில வருடங்களாக புகைப்படம் எடுப்பது [வளைத்து வளைத்து எடுக்கிறேன்
– அதான் பிடிக்கலைன்னா ஈசியா அழிச்சிடலாமே – டிஜிட்டலில்]
- இரவு நேரப் பயணம் [பெரும்பாலும் பேருந்தில் செல்லும் போது
இரவு நேரப் பயணத்தினையே விரும்புவேன் – நான் தூங்காது இரவின் நிசப்தத்தில் கடந்து செல்லும்
அமைதியான ஊர்களைப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம்!]
- எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் உணவினை ரசிப்பதும் ருசிப்பதும்
[இருப்பதை விட்டு இல்லாததைத் தேடுவானேன்!]
- அட ஐந்து தான் ஆயிற்றா? இன்னும்
ரெண்டு எழுதிடுவோம்.. :) நண்பர்களோடு நெடும்பயணம் செய்யப் பிடிக்கும்.
- நடப்பது மிகவும் பிடிக்கும் – அதற்காகவே இரு சக்கர – நான்கு
சக்கர வாகனம் வாங்கவில்லையெனில் பாருங்களேன்.
சரி இப்போது விருது வழங்கும் நேரம் வந்து விட்டது. நான் ரசித்த,
ரசிக்கும், சில வலைப்பூ எழுதுபவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன்.
சோமாயணம் எனும் வலைப்பூவில் எழுதி வரும் கலாநேசன்;
விருது பெற்ற நண்பர்கள் அனைவரும் இந்த விருதினைப் பெற்றுக்
கொண்டதற்கு அடையாளமாய் ஒரு பதிவு எழுதி விருந்தினை மேலே Fine Print-ல் சொன்னது போல
செய்து விட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன்...
மீண்டும் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.