Andhra Pradesh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Andhra Pradesh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மலையிலிருந்து கடல் காட்சி - கைலாசகிரி


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 20

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


கைலாசகிரி மலையுச்சியிலிருந்து கடல்....

ஒற்றைக் கை அம்மன் கோவிலிருந்து புறப்பட்டு உணவகம் – வேறெங்கு – தஸபல்லா தான்! – மதிய உணவு சாப்பிட்ட பிறகு எங்கள் அடுத்த இலக்கு நோக்கி பயணித்தோம் – அந்த இடம் – விசாகப்பட்டினம் கடலருகே அமைந்திருக்கும் கைலாச கிரி!  360 அடி மலை உச்சியிலிருந்து கடற்கரை, விசாகப்பட்டினம் நகரம் ஆகிய இரண்டையும் கழுகுப் பார்வையில் பார்க்க ஒரு சிறப்பான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க இந்த கைலாச கிரி மலைக்குச் செல்லலாம். விசாகப்பட்டினம் வரும் அனைத்து சுற்றுலா பயணிகள் தவிர, பெரும்பாலான விசாகப்பட்டின நகரவாசிகளும் தங்களது மாலைப் பொழுதுகளை இனிமையாகக் கழிக்க தேர்ந்தெடுக்கும் இடம் இந்த கைலாச கிரி. அழகிய பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு வசதிகள், பாரா கிளைடிங், மலையைச் சுற்றிவர ஒரு சிறு இரயில் வண்டி, என பல விஷயங்கள் இங்கே மக்களை மகிழ்ச்சிப்படுத்த அமைத்திருக்கிறார்கள். குதிரை சவாரி செய்யவும் இங்கே வசதிகள் உண்டு.  

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கனக மஹாலக்ஷ்மி – ஒற்றைக்கை அம்மன்

அரக்கு பள்ளத்தாக்குபகுதி 19

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!



அன்னவரத்திலிருந்து திரும்பிய நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் விசாகப்பட்டினம் நகரின் புருஜுபேடா எனும் இடத்தில் இருக்கும் ஒரு கோவில். வரும் வழியில் தான் விசாகப்பட்டினம் நகரத்தின் பிரதான தொழிற்சாலையான SAIL. அதன் வழியே பயணிக்கும்போது மீண்டும் விசாகப்பட்டினம் பதிவர் மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் நினைவுக்கு வந்தார். அவருக்கு இருந்த பணிச்சுமைகளுக்கு நடுவே, எங்களால் அவரைச் சந்திக்க இயலவில்லை! ஆனாலும் இரண்டு மூன்று முறை அவருடன் அங்கிருந்தபோது பேசினேன். அன்னவரத்தில் சத்யநாராயண ஸ்வாமியை தரிசனம் செய்து கொண்ட நாங்கள் அடுத்ததாய் தரிசனம் செய்தது கனக மஹாலக்ஷ்மி அம்மவாரியை!

சனி, 12 ஆகஸ்ட், 2017

ஹரியும் சிவனும் ஒண்ணு – கலெக்‌ஷனில் இரண்டாம் இடம் - அன்னவரம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 18

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


அன்னவரம் - கோவில் வளாகம்

பயணத்தின் மூன்றாம் நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து தயாரானோம். அன்று தான் விசாகப்பட்டினத்தில் கடைசி நாள். அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்களாக சிலவற்றை நினைத்திருந்தோம். காலையிலேயே வண்டி ஏற்பாடு செய்திருந்தோம். முதல் நாள் வந்த அதே வண்டி – ஓட்டுனர் மட்டும் வேறு. தங்குமிடம் அருகே இருந்த ஒரு உணவகத்தில் காபி மட்டும் குடித்து நேரே தசபல்லா! காலை உணவை முடித்துக்கொண்டு அன்றைய பயணத்தினைத் துவக்கினோம்.  அன்று முதலாவதாகச் செல்ல நினைத்தது விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் கொல்கத்தா விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அன்னவரம். அட விஜயவாடா வந்துருமோ, அப்படியே பயணித்து, சென்னை சென்று திருச்சி சென்றுவிடலாமா என்று தோன்றியது!

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

சுவையான விருந்து – ஹோட்டல் தஸபல்லா, விசாகப்பட்டினம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 17

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


சுவையான விருந்து....
படம்: இணையத்திலிருந்து....

அரக்கு பள்ளத்தாக்கு சென்று வந்த பிறகு, பேருந்து எங்களை தங்குமிடம் அருகே இறக்கிவிட, அங்கே சென்று கொஞ்சம் Fresh ஆன பிறகு, இரவு உணவு எங்கே என்ற கேள்வி வந்தது? பயணத்தில் கிடைத்த நண்பர்கள் வீட்டிற்கு அழைத்தாலும், வேண்டாம் என்று சொல்லி தங்குமிடம் வந்தோம். அப்போது தான், நண்பர், முன்பு ஒரு முறை விசாகப்பட்டினம் வந்தபோது சாப்பிட்ட உணவகம் பற்றிச் சொல்லி, அங்கே போய் சாப்பிடலாம், உணவு ரொம்பவே நன்றாக இருக்கும் என்று சொல்ல, அங்கே எப்படிச் செல்வது என்பதை யோசித்தோம். முதலாம் நாள் எங்களுடன் இருந்த வண்டி, இரண்டாம் நாளன்று இல்லை. ஆட்டோவில் பயணிக்கலாம் என முடிவானது!

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சுடச்சுட தேநீரும் போண்டாவும் – நன்றி நவிலல் - அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 16

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


போரா குகை - நுழைவாயில்...
போரா குகைகள் - இன்னும் சில படங்கள்...

போரா குகைகள் பார்த்த பிறகு வெளியே வந்த நாங்கள் அங்கே இருந்த கடைகளில் தண்ணீர் வாங்கிக் குடித்து, தேநீருக்கு ஏங்கிய போது தான் எங்களுடன் வந்த வழிகாட்டி அடுத்ததாய் நாம் போகப்போகும் இடம் டைடாவில் உள்ள ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையின் ஒரு தங்குமிடம்/உணவகம் என்று சொல்ல மனதுக்குள் நிம்மதி. பொதுவாகவே வெளியே செல்லும்பொழுது, Aerated Drinks எதுவும் நான் குடிப்பதில்லை. காபியோ, தேநீரோ, இளநீர் அல்லது தண்ணீரோ தான். எந்தவித Aerated Drinks குடிப்பதையும் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். எனக்குப் பிடிக்காது என்பது மட்டுமல்ல, கண்ட கண்ட Chemicals கலந்து குளிர்பானம் என்ற பெயரில் விற்பதை வாங்கிக் குடித்து எதற்கு வயிற்றைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான்.

சனி, 5 ஆகஸ்ட், 2017

போரா குஹாலு – போரா குகைகள் – அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 15

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


Bபோரா குஹாலு....


நுழைவாயில்....
Bபோரா குஹாலு....

கலிகொண்டா வியூ பாயிண்ட்-ல் நின்று இயற்கைக் காட்சிகளை ரசித்து சில பல புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிறகு அங்கே இருந்து மனமே இல்லாமல் நகர்ந்தோம். இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு, அலுவலகம், பதிவுலகம், முகநூல், தொலைக்காட்சி என அனைத்தையும் விடுத்து, இது போன்ற ஏதாவது ஒரு மலைப்பிரதேச கிராமத்தில், குடிசை வீட்டில் தங்கிக் கொண்டு, நதியிலோ, மலையருவியிலோ குளித்து, கிடைக்கும் காய்கனிகளை உண்டு, காலாற நடக்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும் போன்ற ஆசைகள் உண்டு. ஆனால் அப்படி நடக்க வேண்டும் என்றால் இன்னும் உழைக்க வேண்டும். இன்னும் சேமிக்க வேண்டும்! வேறு வழியில்லை!  

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கண் எதிரே அரக்கு பள்ளத்தாக்கு – கலிகொண்டா வியூ பாயிண்ட்…


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 14

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!




வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மேகக் கூந்தலோ!
அரக்கு பள்ளத்தாக்கு....

மதிய உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கும் மேலாக பழங்குடி மக்களின் திம்சா நடனம் கண்டு களித்து, நடனத்தில் மூழ்கி இருந்த எங்களை மீண்டும் நிகழ்வுக்குக் கொண்டு வந்தார் எங்கள் வழிகாட்டி. இன்னும் இரண்டு மூன்று இடங்கள் பார்ப்பதற்கு உண்டு, என்பதால் விரைவில் இங்கிருந்து புறப்பட வேண்டும் – அப்போது தான் நமக்கு அடுத்த இடங்களிலும் போதிய அளவு நேரம் கிடைக்கும் என்பது அவர் வாதம். ஒரு நாள் பயணம் என்பதால், மீதி இடங்களை அடுத்த நாள் பார்க்கலாம் என்று ஒத்தி வைக்க முடியாது! புறப்பட்டுத்தான் ஆக வேண்டும்! நாங்களும் புறப்பட்டோம். அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றிக்கொண்டு பேருந்து மீண்டும் புறப்பட்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் எங்கள் பேருந்து செல்ல, நாங்களும் சாலை வழி பயணத்தினை மகிழ்வுடன் கடந்து கொண்டிருந்தோம்.

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மதிய உணவு - திம்சா நடனம் – அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 13

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!




பழங்குடி மக்களின் அருங்காட்சியகத்தினைப் பார்த்த பிறகு பேருந்து எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது! அது அடுத்ததாய் நின்ற இடம் ஆந்திரப் பிரதேசம் சுற்றுலாத் துறை நடத்தும் ஒரு தங்குமிடம்/உணவகம் – புன்னாமி ரிசார்ட்/மயூரி ஹோட்டல்.  அங்கே எங்களுக்காக மதிய உணவு தயாராக இருந்தது.  ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையின் மூலமாக இப்பயணத்தினை ஏற்பாடு செய்யும்போது இரயில்/சாலை பயணங்கள், உணவு, என பலவும் அந்த செலவிலேயே முடிந்து விடுகிறது. காலையில் புறப்படும்போதே காலை உணவு இரயிலில் கொடுத்தது பற்றி எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம்.  மதிய உணவு – சைவ உணவு – ஆந்திரா காரத்துடன் தென்னிந்திய உணவு! Buffet தான் – யாருக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிச் சாப்பிடலாம்.

சனி, 29 ஜூலை, 2017

பழங்குடிமக்கள் அருங்காட்சியகம் – அரக்கு பள்ளத்தாக்கு


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 12

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


அருங்காட்சியகத்தின் நுழைவாயில்...
அரக்கு பள்ளத்தாக்கு.


கள் எடுப்போம்... கள் குடிப்போம்...
அரக்கு பள்ளத்தாக்கு.

பத்மாபுரம் தோட்டத்தைப் பார்த்த பிறகு நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் பழங்குடிமக்கள் அருங்காட்சியகம். அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பல பழங்குடி இனத்தவர்கள் இருந்தாலும், கௌடு இனத்தவர்கள் தான் இங்கே அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உடை, உணவு, நடனங்கள், பழக்க வழக்கம் என பலவற்றையும் காட்சிப்படுத்த ஒரு இடம் தேவை என்பதை உணர்ந்து இந்தப் பகுதியில் ஒரு அருங்காட்சியகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது ஆந்திர அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை. அமைக்கப்பட்ட வருடம் 1996. பல விஷயங்கள் இங்கே பார்க்க உண்டு என்பதால் அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் போது தவிர்க்கக் கூடாத ஒரு இடம் இந்த அருங்காட்சியகம். வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

வியாழன், 27 ஜூலை, 2017

மூங்கில் சிக்கன் - சாலைத் தடைகள் – அரக்கு பள்ளத்தாக்கு


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 11

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


தயாராகிறது Bamboo Chicken!
அரக்கு பள்ளத்தாக்கில்....

பத்மாபுரம் தோட்டத்தின் வாயிலுக்கு வந்தால் ஏதோ எரிகிற வாசம்… சாலையோரக் கடைகளில் ஒன்றரை அடி மூங்கில் குழாய்களை நெருப்பில் வைத்து எரித்துக் கொண்டிருந்தார்கள். அவற்றில் எதை வைத்து எரிக்கிறார்கள்…. என்ற சந்தேகம் எனக்குள். மூங்கில் குழாயின் ஒரு முனையில் சில இலைகள் வேறு திணிக்கப்பட்டிருக்கிறது? என்னவாக இருக்கும் என்ற நினைவு எனக்குள். என் சந்தேகத்தினைத் தீர்த்து வைப்பதற்காகவே ஒரு பெண்மணி எங்கள் பேருந்திற்குள் வந்தார். அரக்கு பள்ளத்தாக்கில் வசிக்கும் பழங்குடிப் பெண்மணி அவர். எங்கள் வழிகாட்டி அவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்! 

செவ்வாய், 25 ஜூலை, 2017

அரக்கு உங்களை வரவேற்கிறது – பத்மாபுரம் தோட்டம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 10

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூமழை பொழிந்தது...
அரக்கு பள்ளத்தாக்கில்....


அரக்கு இரயில் நிலையம் - அறிவிப்புப்பலகை
அரக்கு பள்ளத்தாக்கில்....

நான்கு மணி நேர இரயில் பயணம் முடிந்து நாங்கள் அரக்கு இரயில் நிலையத்தினை அடைந்தபோது காலை மணி 11.00. அரக்கு நிலையம் எங்கள் அனைவரையும் வரவேற்றது – சில்லென்ற காற்றுடன்! இரயில் நிலையத்தின் வெளியே மரங்கள் அடர்ந்திருக்க அவற்றில் இருந்த சிகப்புப் பூக்கள் எங்கள் மீது மழைபோல் பொழிந்தன! ஆஹா என்ன வரவேற்பு என்று மேலே பார்க்க, குரங்கார் உட்கார்ந்து கொண்டு மரக் கிளைகளை ஆட்டிக் கொண்டிருந்தார்! பூமாரி பொழிந்த குரங்காருக்கு நன்றி சொல்லி எங்கள் வழிகாட்டி என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கக் காத்திருந்தோம். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கூட்டமாய் நிற்க, இரயிலில் எங்களுடன் வந்த ஆந்திரப் பிரதேச சுற்றுலா நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரும் இருந்தார்கள்.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

ஸ்ரீமுகலிங்கம் – சிற்பங்கள் – புகைப்படத் தொகுப்பு


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரில் பார்த்த ஸ்ரீமுகலிங்கம் பதிவு உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் தவிர வேறு படங்களும் இந்த ஞாயிறில்…..

அங்கே இருந்த சிற்பங்கள் – எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள்! பார்க்கப் பார்க்க திகட்டாதவை. அப்பதிவிலேயே நிறைய படங்கள் பகிர்ந்திருந்தாலும், விடுபட்ட சில படங்கள் இப்பதிவில் உங்கள் ரசனைக்காக!


சனி, 22 ஜூலை, 2017

இரயில் ஸ்னேகம் – அரக்கு பள்ளத்தாக்கு – இரயில் காதலன்…


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 9

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...


சரக்கு இரயிலும், பாசஞ்சரும்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

காலை ஏழு மணிக்கு விசாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் K K Line – பாசாஞ்சர், இடையில் இருக்கும் எல்லா இரயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டும், இறக்கி விட்டும் தான் தொடர்ந்தது. பாசஞ்சர் இரயிலில் பயணிப்பது கொஞ்சம் அலாதியான விஷயம். பல விதமான மனிதர்கள், காட்சிகள், இரயிலை நம்பியே இருக்கும் விற்பனையாளர்கள், இரயிலில் போகும் நபர்களைப் பார்த்து ஏங்கி கை அசைக்கும் கிராமத்து சிறுவர்கள் என ஒவ்வொன்றும் இரசிக்க வேண்டிய விஷயம். ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்கிறதே, எவ்வளவு நேரமா இப்படியே போகும், வேகமா போனா என்ன என்று யோசிப்பவர்களுக்கு இந்த  பாசஞ்சர் பயணங்கள் சரி வராது! ஆனால் இப்படி நின்று நின்று பயணிப்பதும் ஒரு சுகம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு ஜாலி தான்!

வியாழன், 20 ஜூலை, 2017

சிக்கு புக்கு ரயிலே – அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி ஒரு பயணம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 8

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு.....
அரக்கு நோக்கிய பயணம்

இப்பயணத்தின் இரண்டாம் நாள் – இப்பயணத்திற்கான முக்கிய காரணமும் இந்த இரண்டாம் நாளில் போகப்போகும் இடம் தான் – அந்த இடம் – அரக்கு பள்ளத்தாக்கு! விசாகபட்டினம் நகரிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் மலைத்தொடரில் இருக்கிறது அரக்குப் பள்ளத்தாக்கு! இங்கே சாலை வழியாகவும், இரயில் பாதையிலும் செல்ல முடியும். சில தனியார் சுற்றுலா நிறுவனங்களும் இங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்றாலும் நாங்கள் தேர்ந்தெடுத்தது ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை மூலமாகத் தான் அரக்கு நோக்கிய பயணத்தினை மேற்கொள்ள தேர்ந்தெடுத்திருந்தோம்.

செவ்வாய், 18 ஜூலை, 2017

இரவு உணவு, சங்கம் சரத் திரையரங்கம், விசாகப்பட்டினம் தமிழ் பதிவர்



அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 7

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!

இந்தப் பயணத்தின் முதல் நாள், சிம்ஹாசலம், ஸ்ரீகூர்மம், ஸ்ரீமுகலிங்கம், ஸ்ரீஇராஜராஜேஸ்வரி கோவில் என பல இடங்களுக்கும் சென்று நாங்கள் விசாகப்பட்டினம் திரும்பிய போது இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. மதிய உணவினை ஸ்ரீகாகுளம் பகுதியில் சாப்பிட்டோம் என்றால் இரவு உணவு விசாகப்பட்டினம் நகரில்.  நாங்கள் தங்கியிருந்தது கோனார்க் லாட்ஜ் எனும் இடத்தில்.  இரயில் நிலையத்திற்கு சற்றே அருகில் அமைந்திருக்கும் சங்கம் சரத் திரையரங்கத்திற்கு பின் புறம் தான் இந்த கோனார்க் லாட்ஜ் இருந்தது. சுற்றிலும் நிறைய கடைகளும், பெரிய மால்களும் இருந்தன என்றாலும் உணவகம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.  சில உணவகங்களில் மக்கள் அதிக அளவில் இருக்க, ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள்.

திங்கள், 17 ஜூலை, 2017

சுன்னுண்டலு! – உளுந்து உருண்டை – ஆதி வெங்கட்





உளுந்து உருண்டை....

ஒவ்வொரு திங்களன்றும் “எங்கள் பிளாக்” பக்கத்தில் ”திங்க”க் கிழமை என்று தலைப்பிட்டு ஏதாவது ஒரு உணவு பற்றிய செய்முறைக் குறிப்புகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.  ‘திங்க’க் கிழமை பதிவுகளுக்கு போட்டியா இந்த ‘திங்க’க் கிழமை நீங்களும் ஒரு சமையல் குறிப்போட வந்திருக்கீங்களா என்று என்னிடம் யாரும் கேட்க வேண்டாம். It’s just a coincidence! கோவை2தில்லி வலைப்பூவில் எழுதி வந்த என்னவள் இப்போதெல்லாம் எழுதுவது குறைந்துவிட்டது. அப்படியே எழுதினாலும் அது முகநூலில் மட்டுமே! சரி அவங்க வலைப்பூவில் எழுதவில்லை என்றாலும், முகநூலில் எழுதுவதை என்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்திருக்கிறேன்.  அப்படி ஒரு பகிர்வு இந்த ‘திங்க’க் கிழமையில்!

ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஸ்ரீகூர்மம் – ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் - படத்தொகுப்பு


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் ஒரு பகுதியாக ஸ்ரீகூர்மம் கோவில் பற்றிய பதிவில் அங்கே எடுத்த புகைப்படங்களில் பகிர்ந்து கொள்ளாதவற்றை தனிப்பதிவாக வெளியிடுகிறேன் என்று எழுதி இருந்தேன். இதோ இந்த ஞாயிறில் முந்தைய பதிவில் வெளிவராத, ஸ்ரீகூர்மம் கோவிலில் நான் எடுத்த மற்ற புகைப்படங்கள் பதிவாக….



ஸ்ரீகூர்மம் கோவில் – கருட வாகனம்....

சனி, 15 ஜூலை, 2017

ஆயிரத்து ஒன்று ஸ்ரீசக்ர மேரு – ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 6

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன்.....

ஸ்ரீமுகலிங்கம் எனும் அருமையான, புராதனமான கோவிலுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரீகாகுளம் அலுவலக ந[ண்]பர், அங்கிருந்து புறப்படும்போது ஸ்ரீகாககுளத்தில் இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து விசாகப்பட்டினம் செல்லலாம் என்று சொல்ல அதற்கும் சரி என்றே சொன்னோம். எப்படியும் அந்த அலுவலக ந[ண்]பரை ஸ்ரீகாகுளத்தில் இறக்கி விட வேண்டும் [அவரது பைக் நாங்கள் மதியம் சாப்பிட்ட உணவகத்தில் நிறுத்தி இருக்கிறதே!] அதனால் நாங்கள் அவர் சொன்ன இடத்திற்கும் சென்று பிறகு விசாகப்பட்டினம் நோக்கிய பயணத்தினைத் தொடரலாம் என்று சொல்ல, எங்கள் வாகனம் அவர் வழிகாட்டலில் ஸ்ரீகாகுளத்திலுள்ள ஒரு இடத்திற்குச் சென்றது.  அந்த இடம்…..

வியாழன், 13 ஜூலை, 2017

ஸ்ரீமுகலிங்கம் – பாழடைந்த கோவிலும் அழகிய சிற்பங்களும்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 5

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - ஆதவன் மறையும் சமையத்தில்....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - செல்லும் பாதையில் கண்ட காட்சி ஒன்று.....