இரயில் பயணங்களில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரயில் பயணங்களில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஜூலை, 2026

சோலோ ட்ரிப் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட Sugar Cut - மலையாள குறும்படம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******

வெள்ளி, 3 ஜூலை, 2026

கதம்பம் - பயணம் - Gen Z - கோவை - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட ஸ்ரீ சீதா தேவி சமேத ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ஊற்றத்தூர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



********

வியாழன், 31 அக்டோபர், 2024

தில்லி 2 திருச்சி - இரயில் பயண அனுபவங்கள் - இரயில் பயணங்களில் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட இரயில் பயணங்களில் - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

புதன், 30 அக்டோபர், 2024

தில்லி 2 திருச்சி - இரயில் பயண அனுபவங்கள் - இரயில் பயணங்களில் - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட திருச்சி புத்தகத் திருவிழா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

செவ்வாய், 18 ஜூன், 2024

முக நூல் இற்றை - இரயில் பயணங்களில் - What a combination Sir ji! - உப்புமாவும் கெட்ச் அப்பும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் (சமீபத்தில் முகநூலில் வெளியிட்ட இற்றை - இங்கேயும் ஒரு சேமிப்பாக!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம் - கடை வைத்த தமிழர்கள் - ஹிந்தி அவஸ்தை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை சமீபத்தில் ரசித்த ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எண்ணம் போல் வாழ்க்கை - பழமொழி;

எண்ணினால் மட்டும் தான் வாழ்க்கை - பணமொழி!


*******

சனி, 15 ஜூன், 2024

காஃபி வித் கிட்டு - 189 - இடைவெளி - மாமா - வைத்யநாதன் - நடைமேடையில்… - தாத்தா - Break Free - விழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

வியாழன், 3 பிப்ரவரி, 2022

தமிழகப் பயணம் - இரயில் பயண ஸ்வாரஸ்யங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட சிந்தனையை சிறகடிப்போம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வெற்றி என்பது முடிவும் அல்ல; தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல... இரண்டுமே அடுத்தகட்ட வளர்ச்சிக்கானது.

 

******

 

புதன், 6 அக்டோபர், 2021

சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில் - தமிழகப் பயணம் - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DON’T GO WHERE YOU ARE TOLERATED; INSTEAD, GO WHERE YOU ARE CELEBRATED!


******

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

காணாமல் போன பெட்டி - இரயில் பயணங்களில் - பகுதி 1 - நிர்மலா ரங்கராஜன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பிரச்சனைகளைச் சொல்லி வாழ்வது வாழ்க்கையல்ல; இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு, என்று சொல்லிக் கொண்டு முன்னேறிச் செல்வது தான் வாழ்க்கை.


******

திங்கள், 22 ஏப்ரல், 2019

இரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…



”யாராவது டாக்டர் இந்தப் பெட்டியில இருக்கீங்களா?” என்ற பதட்டமான குரலில் கேட்டுக் கொண்டே ஒரு இளைஞர் வருகிறார். ஏழு மணிக்கு புறப்பட வேண்டிய இரயில் பத்து மணிக்குப் புறப்பட்டதால், இரயிலில் ஏறிய உடனேயே படுக்கைகளை விரித்து தூங்க ஆரம்பித்துக் கொண்டிருந்தனர் பெரும்பாலான பயணிகள். இந்த மருத்துவருக்கான அபயக் குரலை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

திங்கள், 15 ஏப்ரல், 2019

இரயில் பயணங்களில்… – இப்ப நிறுத்தப் போறியா இல்லையா…


படம்: இணையத்திலிருந்து...

”இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?” என்ற கோபமான பெண் குரல் அரைகுறை தூக்கத்தில் இருந்த என்னை விழிக்க வைத்தது. யாரை சொல்றாங்க? எதை நிறுத்தச் சொல்றாங்க என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தேன்.

திங்கள், 8 ஏப்ரல், 2019

இரயில் பயணங்களில்… – எனக்கு ஜன்னல் சீட் வேணும்




பயணங்கள் எப்போதுமே பிடித்தமானது – அது சாலை வழிப் பயணமாக இருந்தாலும் சரி, இரயில் பயணமாக இருந்தாலும் சரி இல்லை ஆகாய மார்க்கமாக இருந்தாலும் சரி எல்லாமே பிடித்தது – ஏனெனில் பயணம் செய்வது மட்டுமே முக்கியம்! பயணிக்கும்போது கிடைக்கும் நல்ல மற்றும் கெட்ட அனுபவங்களை நமக்கு ஒரு பாடமாக மாற்றிக் கொள்ள முடியும்!

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஆட்டோ அப்க்ரேட் – லோகநாயகியின் கதை




ஒவ்வொரு முறை திருச்சியிலிருந்து தில்லி வரும்போதும், சென்னை வரை பேருந்து பயணம் தான். கடைசி நேரத்தில் முடிவு செய்து புறப்படுவேன் - இரயிலில் இடம் இருக்காது என்பதால் பேருந்து பயணம். இம்முறை மலைக்கோட்டை விரைவு வண்டியில் பார்க்க, தத்காலில் இடம் கிடைத்தது. திருவரங்கம் இரயில் நிலையத்திலேயே ஏறிக்கொள்ளலாம் என்பது ஒரு வசதி. ஜங்ஷன் வரை செல்ல வேண்டாம். இணையம் வழி முன்பதிவு செய்யும் போது எப்போதுமே “ஆட்டோ அப்க்ரேட்” என்ற இடத்தில் டிக் செய்து வைப்பேன். நீங்கள் முன்பதிவு செய்வது எந்த வகுப்பிலிருந்தாலும், அதற்கு மேலே உள்ள வகுப்பில் இடம் இருந்தால் இப்படி “டிக்” செய்து வைத்திருப்பவர்களுக்கு அதிக கட்டணம் ஏதும் வாங்காமல் அப்கிரேட் செய்துவிடுவார்கள். இப்படி நிறைய முறை எனக்குக் கிடைத்திருக்கிறது.

வியாழன், 27 ஏப்ரல், 2017

சோலே பனீர் – கோவில்பட்டி வீரலக்ஷ்மி – 40 மணி நேரத் தூக்கம்






சில முறையாகவே தமிழகம் வரும்போது விமானத்திலேயே வந்து போவது வழக்கமாகி இருந்தது. ரயிலில் வருவதென்றால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் [போவதற்கும் வருவதற்கும்] ரயிலிலேயே போய் விடுகிறது. வீட்டில் அதிக நாட்கள் இருக்க முடிவதில்லை என்பதால் இப்படி விமானத்திலேயே பயணிப்பது வழக்கமாகிவிட்டது. விமானத்தில் சென்னை வரை வந்து பிறகு பேருந்திலோ, ரயிலிலோ திருச்சி வரை வந்தால் காலையில் புறப்பட்டால் மாலையில் வீடு வந்து சேர முடிகிறது. இந்த முறை விடுமுறையில் வருவது நிச்சயமில்லாத நிலையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய இயலவில்லை. கடைசி நேரத்தில் விமானத்திற்கான கட்டணத்தினைப் பார்த்தால் மலையளவு – 10000 ரூபாய்க்கு மேல் – ஒரு பக்கத்திற்கே! ரயிலில் பயணிக்க முடிவு செய்தேன்.

புதன், 1 ஜூன், 2016

இடம்பிடி! தடம் பதி! - படமும் கவிதையும்

[படம்-3 கவிதை-1]

படமும் கவிதை வரிசையில் இந்த வாரம் மூன்றாம் வாரம்.  இந்த புதன் கிழமையில் நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு நண்பர் சேஷாத்ரி அவர்கள் எழுதிய கவிதையோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நண்பர் சேஷாத்ரி, காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.  நடுநடுவே பணிச்சுமைகள் காரணமாக வலைப்பூவிலிருந்து விலகி விடுகிறார்!  நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கான கவிதையோடு இதோ மீண்டும் வலையுலகில்.....

புகைப்படம்-3:



எடுக்கப்பட்ட இடம்:  சமீபத்தில் விசாகபட்டிணம் அருகே இருக்கும் அராக்கு வேலி எனும் இடத்திற்கு பாசஞ்சர் ரயில் மூலம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பாசஞ்சர் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் சுற்றுலா பயணிகள். அதில் பல இடங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள்.  அங்கே வந்திருந்த ஒரு சுற்றுலா பயணிக்கு இரண்டு பெண் குழந்தைகள். சுட்டியாக அங்கேயும் இங்கேயும் சென்றும், சிரித்தும் சக பயணிகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.  அதில் மூத்த பெண் தான் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர். பாசஞ்சர் ரயிலின் மேல் சாமான்கள் வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு கம்பிகள் வழியே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.  அவரை என் காமிராவில் சிறை பிடித்தேன். 

சில நாட்கள் முன்னர் இந்த புகைப்படத்தினை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது நண்பர் ரிஷபன் அவர்கள் எழுதிய இரட்டை வரிக் கவிதை.....

உன் பார்வைச் சதுரங்கள்
என்னை வட்டமிடுகின்றனவே...

புகைப்படத்திற்கு நண்பர் சேஷாத்ரி எழுதி அனுப்பிய கவிதை இதோ.....

கவிதை-1:

இடம்பிடி! தடம் பதி!

பயணத் தடமெங்கும்
பார்த்து மகிழ்ந்திட
இடம்பிடித்தாயோ?
அரும்பிடும் புன்னகையில்
ஆர்வம் வெளிப்படுதே!

பயணங்கள் அனைத்துமே
பயனுள்ளவைதான்!
படிப்பினை தருவனதான்!

வாழ்க்கைப் பயணத்தில்- நல்
வழிகளைத் தெரிவுசெய்!
தக்க தருணங்களைத்
தவறவிடாதே!

தன்னம்பிக்கையும்
தளரா உழைப்பும் -நீ
தடம்பதிக்கத்
துணைநிற்கும்!

திறமையின் துணையுடன்
தடம் பதிப்பாய்!
உலகோர் உளத்தில்
உனக்கென ஓர் இடம்பிடிப்பாய்!

     சேஷாத்ரி.....

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் மூன்றாம் படமும் நண்பர் சேஷாத்ரி அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

புதன், 21 ஜனவரி, 2015

சொன்னபடி கேளு….

இரயில் பயணங்களில் – 6



சென்ற வாரத்தில்படுத்துக் கொண்டே சாப்பிடுவது எப்படி?என்ற பதிவில் தில்லியிலிருந்து சென்னை வரும்போது கிடைத்த ஒரு அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்அதே பயணத்தில் கிடைத்த வேறொரு அனுபவம் இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

பொதுவாகவே கணவன்மனைவி இருவரும் வீட்டிற்குள் எப்படி இருக்கிறார்களோ அதே போலவே பயணத்திலும் அதிலும் Public Transport என்று சொல்லப்படும் ரயில், பேருந்து பயணங்களில் கொஞ்சமாவது தங்களை மாற்றிக் கொள்வது தான் நாகரீகம் இல்லையாஎன்ன தான் வீட்டில் பூரிக்கட்டை பறந்தாலும் வெளியே வரும்போதுமா இப்படிபூரிக்கட்டை மட்டும் தான் பறக்கவில்லை. மற்றபடி உருட்டல்களும், மிரட்டல்களும் அதிகமாகவே இருந்தது.

இரயில் புறப்பட்ட நேரத்திலிருந்தே கணவன் தான் மனைவிக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டியிருந்தது. அப்படிச் செய்தும் அவ்வப்போது திட்டும் முறைப்பும் பரிசாக அவருக்குக் கிடைத்தது. காலையில் ஒரு ஸ்பூன் ரவா உப்புமாவும், இரண்டு ஸ்பூன் கேசரியும், இரண்டு ப்ரெட் துண்டுகள், தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் [பாக்கெட்டில்], வெண்ணை என வர, ஒவ்வொன்றாய் பிரித்துக் கொடுத்து, சாப்பிட வைத்தும், “வெண்ணை [ஒரு வேளை கணவனைத் திட்டினாரோ :)!] சரியா தடவல என்று ஒரு புகாருடன் உண்டார்.

இப்படியே தொடர்ந்து திட்டு வாங்கினாலும், அவரது கடமையை செய்துகொண்டே தான் இருந்தார். ஒரு வேளை வீட்டுக்குப் போனதும் மண்டகப்படி அதிகமாயிடும் என்ற கவலையோ என்னமோ? இப்படியாக பயணம் முழுவதும்சொன்னபடிஎல்லாம் ஆடிக் கொண்டிருந்தார் அவர்!  

என்னதான் கணவன் மனைவி என்றாலும், பொது இடங்களில் வரும்போது, கணவன் மனைவியையோ, அல்லது மனைவி தனது கணவனையோ இப்படி நடத்த எண்ணுவதே இழுக்கல்லவா? எண்ணுவதே இழுக்கு எனும் போது நடத்துவது இன்னமும் கொடுமை.

சமீபத்தில் முகப்புத்தகத்தில் ஒரு வாசகம் படித்தேன்ஆண்களைப் படைத்த ஆண்டவன், ”இந்த பூமியின் எல்லா மூலைகளிலும் நல்ல, அடக்கமான பெண்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் மனைவியாகப் பெற முடியும்என்று அவர்களுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தாராம்! அதன் பின்னர் பூமியை வட்ட வடிவில் படைத்த அவர் இன்னமும் சிரித்துக் கொண்டே இருக்கிறார்எனும் வாசகம் தான். ஆங்கிலத்தில் இருந்த அவ்வாசகம் கீழே.

And God promised men that good and obedient wives would be found in all corners of the world. Then he made the earth round…. and laughed and laughed and laughed. 

சமீபத்தில் ஆரம்பித்த Swachh Bharat காரணமாகவோ என்னமோ ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் சுத்தம் செய்ய ஒரு ஆளை நியமித்திருந்தார்கள். அவரும் கர்ம ஸ்ரத்தையாக சுத்தம் செய்தபடியே இருந்தார்சமீபத்தில் இப்படி சுத்தமாக இரயில் பெட்டிகளைப் பார்த்ததில்லை. ஆனாலும் எலிகள் சில சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தனஒருவேளை சுத்தம் அவற்றுக்கும் பிடித்து விட்டதோ என்னமோ?

ஒரு வழியாக இரண்டு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தது ராஜ்தானி விரைவு வண்டி! நான் திருச்சி செல்ல முன்பதிவு செய்திருந்த மலைக்கோட்டை விரைவு வண்டி எழும்பூரிலிருந்து செல்வதுஅது புறப்பட ஏழு நிமிடங்களே இருந்த நிலையில் என்ன தான் நடைமேடையிலிருந்து ஓட்டமாக ஓடி, மெட்ரோ ரயில்காரர்கள் தோண்டிப் புதைத்து வைத்திருக்கும் தடைகளைத் தாண்டி ஆட்டோ பிடித்தாலும் மலைக்கோட்டைப் பிடிக்க கனவுக் கோட்டை மட்டுமே கட்ட முடிந்தது.

நான் எனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வர எனக்கு முன்னால் அந்தப் பெண்மணி தனது தோள்பையினை மாட்டிக் கொண்டு முன்னால் செல்ல, பவ்யமாக ஒரு பெரிய சூட்கேஸ், பிரம்மாண்டமான ஒரு பேக், அதைத் தவிர ஒரு முதுகை மூட்டை [Back-pack!] ஆகியவற்றைத் தூக்க முடியாது தூக்கியபடி அவர் பின்னர் நடந்து வந்தார் அவரது கணவர்அதே சமயத்தில் எங்கிருந்தோ ஒரு பாடல் கேட்டது – “சொன்னபடி கேளு! மக்கர் பண்ணாத!”  ஒரு வேளை எனக்குத் தான் பாடல் கேட்ட பிரமையோ!

மலைக்கோட்டை ரயிலைப் பிடிக்க முடியாததால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து திருவரங்கம் செல்ல வேண்டிய நிலைஅங்கு சென்ற போது கிடைத்ததும் கசப்பான அனுபவம் தான்! அது சொல்ல ஆரம்பித்தால் இப்பதிவு இன்னும் நீண்டு விடும் அபாயம் இருப்பதால் பிறிதொரு சமயத்தில் அது பற்றி எழுதுகிறேன்.  

என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து….

செவ்வாய், 13 ஜனவரி, 2015

படுத்துக் கொண்டே சாப்பிடுவது எப்படி?

இரயில் பயணங்களில் – 5

படம்: இணையத்திலிருந்து....  
ரோம் நகரில் இப்படி படுத்தபடியே உணவு உண்ணும் வழக்கம் உண்டாம்!

மீண்டும் தமிழகம் நோக்கி ஒரு பயணம்இம்முறையும் அதே ராஜ்தானி விரைவு வண்டிவிரைவு என்பது பல சமயங்களில் இந்திய ரயில்களில் இருப்பதே இல்லை என்பது வேறு விஷயம். கடந்த வெள்ளி அன்று தில்லியிலிருந்து புறப்பட்டு ஞாயிறு காலை திருவரங்கம் வந்து சேர்ந்தேன்ஒவ்வொரு இரயில் பயணத்திலும் பல சுவையான அனுபவங்கள் கிடைக்கின்றனஇம்முறை கிடைத்த சில அனுபவங்கள் இந்தப் பதிவில் பார்க்கலாமா! மே! என்று நீங்கள் சொல்வது கேட்கிறதுஅதாங்க பார்க்கலா மே! என்று சொல்வது தான்!

இம்முறை இருந்த ஆறு பேரில் ஐவர் தெலுங்கர்கள்நான் மட்டுமே மறத்தமிழன்! கணவன்மனைவி என இருவரும், கணவன்மனைவி மற்றும் ஒரு வயதான பெண்மணி [அந்தப் பெண்ணின் அம்மாவாக இருக்க வேண்டும், மாமியாராக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லும்படி இருந்தது நடவடிக்கைகள்] என இரு குடும்பங்கள்இதில் மூவர் குடும்பத்தினை முதலில் பார்க்கலாம்! தொந்தரவு அவர்களிடத்தில் தானே ஆரம்பித்தது!

சரியாக மூன்று ஐம்பத்து ஐந்திற்கு இரயில் புறப்பட்டது. சற்று நேரத்தில் ஒரு பாட்டில் தண்ணீரும், பிறகு தேநீர், சமோசா, மற்றும் சாண்ட்விச், ஒரு இனிப்பு எனக் கொண்டு வந்து தந்தார் சிப்பந்திஅதை எல்லாம் உண்டு முடித்து பயணச் சீட்டு பரிசோதனை முடிந்த பிறகு மாலை ஐந்து மணிஅதற்குள்ளாகவே பயணம் அவர்களுக்கு அலுக்க ஆரம்பித்து விட்டது. குடும்பத்தில் இளையவர், படுக்க வேண்டும் என உட்கார்ந்திருந்தவர்களை எழுப்ப ஆரம்பித்தார். அதற்குள்ளா இரவிற்கு இன்னமும் அதிக நேரம் இருக்கிறதே என்று யோசிக்க, முணுமுணுவென தெலுங்கில் அனைவரையும் திட்ட ஆரம்பித்தார்

இதுக்குத் தான் ஃப்ளைட்- போகலாம்னு சொன்னேன்என்று அவரது கணவருக்கும் திட்டு கிடைத்தது! கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஆரம்பித்தது அவரது கணைகள்ஒரு வழியாக ஆறு மணிக்கெல்லாம் படுக்கைகளை விரித்து கீழ் படுக்கையில் படுத்துக் கொள்ள வேறு வழியில்லாது எனது படுக்கையான மேல் Berth-க்கு செல்ல வேண்டியதாயிற்றுஎதிர்த்த மேல் Berth-ல் கால் வைத்து சற்றே சரிந்தபடி அமர்ந்து கொண்டேன்என் உயரத்திற்கு மேல் Berth-ல் நேராக அமர்வது ரொம்பவே கடினம்

தொடர்ந்து இப்படியே அமர்ந்து, கொண்டு வந்திருந்த புத்தகத்தில் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்சிறிது நேரத்தில் வழக்கம் போல கடினமான எலும்புத் துண்டு போன்ற உருவத்துடன் Soup Sticks, வெண்ணை மற்றும் மிளகுத் தூள் கொண்டு வந்து கொடுத்தார். சில நிமிடங்களில் ஒரு சிறிய கப்பில் சுடச் சுட Soup-ம் வந்தது. கீழே இறங்கி நேராக உட்கார்ந்து அதைக் குடிக்கலாம் என்று நினைத்தால், பெண்மணி இப்போதும் அனந்தசயனத்தில்!

சரி வேறு வழியில்லை என மேலேயே அமர்ந்து கொண்டு Soup- ஒரு வழியாக குடித்து முடித்தேன். உணவு உண்ணும் போது கண்டிப்பாக கீழே இறங்கி விட வேண்டியது தான் என்ற எண்ணத்துடன் அமர்ந்திருந்தேன்ஏழரை மணிக்கு உணவு வர, கீழே வரலாம் என்று பார்த்தால் கம்பளி போர்த்தியபடி அனந்த சயனத்தில் அந்தப் பெண்அவரது கணவன் எழுந்திரு, சாப்பிடலாம் என்று சொல்ல, நீங்க வேணா சாப்பிடுங்க, எனக்கு வேண்டாம் எனச் சொல்லி தொடர்ந்து கிடைநிலையிலேயே இருந்தார்.

மத்தவங்க எல்லாம் சாப்பிடணும் எழுந்திருஎன்று சொல்ல, கண்களில் அப்படி ஒரு கோபக் கனல்சிவபெருமான் மூன்றாவது கண்களைத் திறந்து எரித்து விடுவது போல பார்த்தார்.  ”எழுந்திருக்க முடியாது, மத்தவங்களைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?” என்று ஒரு மிரட்டல்ஒரு வேளை இது நடந்தது வீடாக இருந்திருந்தால் பூரிக்கட்டை பறந்திருக்கும் என்று தோன்றியதுஎங்கே பஸ்மமாகி விடுவோமோ என்று அவரும் பம்மினார்கண்களாலேயே என்னை நோக்கிவேற வழியில்லை! நீங்க அங்கேயே சாப்பிட வேண்டியது தான்!” என்று சொல்வது போல இருந்தது.

என்னடா இந்த வெங்கட்டுக்கு வந்த சோதனைஎன்ற நினைவுடன், சாப்பாடு தட்டினைப் பார்த்தேன்வழக்கம்போல பனீர் சாம்பார் [அதாங்க சப்ஜி!], தண்ணீர் அதிகமுள்ள ஒரு தால், ஓரங்களில் வேகாத சப்பாத்தி, ஊசி போன்ற கூர்மையான வேகாத பாஸ்மதி சாதம், தயிர், ஊறுகாய் பாக்கெட்டில்சாப்பிட்ட படியே அந்த ஊறுகாய் பாக்கெட் பிரிப்பதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும்! எத்தனை காசு வாங்கினாலும் இப்படித் தான் இருக்கிறது இவர்கள் தரும் உணவுஅதைச் சமைப்பவர்களுக்கு ஒரு மாதம் முழுவதும் இது மட்டுமே சாப்பாடு, வேறு ஒன்றுமே தரமாட்டோம் என்ற தண்டனை தரவேண்டும்இல்லையெனில் அன்னியன் படத்தில் வருவது போல கும்பிபாகம், கிருமி போஜனம் போன்ற ஏதாவது ஒரு தண்டனை தரவேண்டும்!

இப்படி இருந்த உணவினை சரிந்த நிலையிலேயே ஒரு மாதிரி சாப்பிட வேண்டியதாயிற்று. இப்படி படுத்துக் கொண்டு சாப்பிடுவது ஏதோ சர்க்கஸ் செய்வது போல இருந்தது எனக்குமேல் Berth-ல் இருந்து கொண்டு இப்படி சாப்பிடும்போது Watery உணவுகளை கீழே இருப்பவர்கள் மீது கொட்டாமல் சாப்பிட வேண்டுமே என்ற பயம் எனக்குஆனாலும் இப்படி படுத்தும் அந்த பெண்மணியின் மேல் கொட்டியிருந்தாலும் நல்லது தான் என்று தோன்றுகிறதுசாப்பிட்டு முடித்த பிறகு தட்டினை சிப்பந்தியிடம் கொடுத்து விட்டு நாளை காலை எப்படியும் கீழே அமர்ந்து கொண்டு தான் சாப்பிட வேண்டும் என்ற முடிவோடு உறங்கினேன்.

மறுநாள் காலை கீழே வந்து அமர்ந்த பிறகு மேலே செல்லவே இல்லைகொஞ்சம் நகர்ந்தாலும் உடனே படுக்கைகளை போட்டு படுத்துக் கொண்டு விடுகிறார்மதிய உணவு வரும்போதும் இப்படி படுத்து இருக்க, அவரைப் பார்த்து கண்டுகொள்ளாது இருந்தார்நேற்று நாகரீகம் கருதி பேசாது இருந்தேன்இன்று மீண்டும் படுத்துக் கொண்டே சாப்பிடும் எண்ணம் எனக்கில்லை என்பதால் நானே அவரிடம் சொல்லி விட்டேன் – “எழுந்து உட்காரும்மே! நான் சாப்பிடணும்!” எல்லாம் சாப்பிட்ட பிறகு படுத்துக்கிட்டே வந்துக்கோ!” என்று சொல்ல முணுமுணுத்தபடியே இருந்தார்அவரது கணவர் என்னிடம் ஒன்றும் சொல்லாததால் கணவருக்கும் திட்டு கிடைத்தது! நிச்சயம் வீடு சென்றதும் அவருக்கு மண்டகப்படி உண்டு!

இப்படி இரயிலில் பயணம் செய்யும் சிலருக்கு ஒரு எண்ணம் – Berth வசதியுடன் முன்பதிவு செய்துவிட்டால், படுத்துக் கொண்டே தான் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதான் காசு கொடுத்திருகோம்ல! படுத்துக்கிட்டே தான் வருவோம், அடுத்தவங்க பத்தி எனக்கு என்ன கவலை என்ற எண்ணம்என்ன மனிதர்களோசென்னை வரை பயணச் சீட்டு வாங்கி இருந்தாலும் ஏனோ விஜயவாடாவிலேயே இறங்கினார்கள்விட்டது ஒரு தொல்லை என்ற எண்ணத்துடன் மீதிப் பயணத்தினைத் தொடர்ந்தேன்ஒரு தொல்லை இவர்கள் தந்ததுமற்ற தொல்லைஅது பற்றி பிரிதொரு பதிவில்! :)

என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து….