Photo of the Day Series லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Photo of the Day Series லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 29 ஜூலை, 2018
ஞாயிறு, 22 ஜூலை, 2018
ஞாயிறு, 15 ஜூலை, 2018
கருப்பென்ன சிவப்பென்ன – படங்களின் உலா
Photo
of the day Series – Part 5
கடந்த வாரத்தில் #Photo_of_the_day
என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ
உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…
படம்-1: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
திருவரங்கத்து வீதிகளில்
தேரோட்டத்தின் போது எடுத்த படம். கைகளில் சங்கு, தோளில் தொங்கும் பரங்கிக்காயால்
ஆன பழங்காலத்து ஹேண்ட் பேக்…. பொதுவாக சுரைக்காயால் ஆன குடுக்கை வைத்துக் கொள்வது
தானே வழக்கம்!
படம்-2: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் நல்லெண்ணங்களும் தீய எண்ணங்களும் இருக்கின்றன. எவை அதிகமாக இருக்கிறதோ அதைப் பொறுத்தே அவன்
நடந்து கொள்கிறான். இந்தக் குழந்தைகள்
சாத்தானின் கொம்புகளை மாட்டிக் கொண்டிருந்தாலும், நல்ல எண்ணங்களுடன், சிரித்த
முகத்துடனும் இருக்கிறார்கள்! இந்தப் பருவத்தில் இப்படி விளையாடுவது தானே இயல்பு…
கொம்பை வாங்கி மாட்டிப் பார்க்க ஆசை இருந்தது! வெட்கம் தடுத்தது! முன்பெல்லாம்
தில்லியில் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது தமிழகத்திலும் கிடைக்கிறது இந்த
சாத்தான் கொம்புகள் – இதில் விளக்கு வேறு எரியும்!
படம்-3: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
முதுமை ஒரு வரம். “வயதாகிறதே என்று வருத்தப் படாதீர்கள். அந்த
வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!”
படம்-4: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
என்னடா நடக்குது இங்கே…..
ஒண்ணுமே புரியலையே! யாராவது
சொல்லுங்கப்பா…
கண்களில் தெரியும் கேள்விகள்
….
பதில் சொல்வார் யாரோ?
படம்-5: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத்
தேர் திருவிழா.
வாழ்க்கை என்பது ஐஸ்க்ரீம்
மாதிரி….
டேஸ்ட் பண்ணினாலும் கரையும்….
வேஸ்ட் பண்ணினாலும் கரையும்….
அதனால வேஸ்ட் பண்ணாம,
டேஸ்ட் பண்ணுவோம்!
மகிழ்ச்சி என்பது உங்கள்
கையில்…. மகிழ்ச்சியாக இருப்போம்!
படம்-6: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
நிறங்களில் கருப்பென்ன,
சிவப்பென்ன, மனத்தில் கள்ளம் கபடம் இல்லாவிட்டால் போதும். நல்ல எண்ணங்கள் நம்மை வழிநடத்தட்டும்.
“அண்ணே, என்னை ஒரு ஃபோட்டோ
புடிக்கறீங்களா?” என்று அவராகவே கேட்க, நான் எடுத்த புகைப்படம். வெள்ளந்தியாகவே இருந்து
விட்டால் சுகம் தான். அவர் கேட்காவிடினும் எடுத்திருப்பேன் என்பது வேறு விஷயம்.
படித்ததில் பிடித்த கவிதை
ஒன்று….
வெள்ளையான
நிறமா அழகு?
இல்லையடி
என் செல்லமே…
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு...
நவீன் ப்ரகாஷ்.
பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப்
பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்
எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால்
கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….
இதுவரை Photo of the Day Series-ல்
வெளியிட்ட படங்கள் அனைத்தையும் பார்க்க…..
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
Labels:
அனுபவம்,
புகைப்படங்கள்,
பொது,
Photo of the Day Series
ஞாயிறு, 8 ஜூலை, 2018
ஞாயிறு, 1 ஜூலை, 2018
புகைப்பட உலா – புகைப்படமா, ஒளிப்படமா?
Photo of the Day Series - 3
நான் வலைப்பூவில் தினம் தினம்
எழுதி வந்தது நின்றிருக்கிறது. அதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை!
என்றாலும் இந்த ஞாயிறில் ஒரு பதிவு வெளியிட இதோ வந்தாயிற்று! முகநூலில் சில
நாட்களாக வெளியிட்டு வந்த #Photo_of_the_day புகைப்படங்களின் தொகுப்பும் சில
நாட்களாக வெளியிட முடியவில்லை. இன்று தான் ஒரு படம் வெளியிட்டு இருக்கிறேன் – அது இங்கேயும்!
சென்ற வாரத்தில் வெளியிட்ட சில படங்களின் தொகுப்பு இங்கே புகைப்பட உலாவாக!
Labels:
படமும் கவிதையும்,
புகைப்படங்கள்,
பொது,
Photo of the Day Series
ஞாயிறு, 17 ஜூன், 2018
ஞாயிறு, 10 ஜூன், 2018
ஒரு நாள் ஒரு புகைப்படம் – புகைப்பட உலா – கவிதை தாருங்கள்!
Photo of the Day Series-1
புகைப்படங்கள் எடுப்பது எனக்குப்
பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம். பயணக்கட்டுரைகளிலும்
மற்ற பதிவுகளிலும் பெரும்பாலும் நான் எடுத்த புகைப்படங்களையே பகிர்ந்து கொள்வதை
வழக்கமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சமயமும் எடுக்கும் படங்கள் அனைத்தையுமே
வலைப்பூவில் பகிர்ந்து கொள்வது முடியாததாக இருக்கிறது. புகைப்படங்களை Flickr
அல்லது Google Photos-ல் சேமித்து வைக்கலாம் என்றாலும் அதனைப் பார்க்க ஒருவரும்
வருவதில்லை. இந்த வலைப்பூவிலேயே தினம் தினம் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டால்
இப்போது வருகின்ற சிலர் கூட வருவதை நிறுத்தி விடலாம்! தனியாக
புகைப்படங்களுக்கென்று வலைப்பூ தொடங்கும் எண்ணம் வந்தாலும் செயல்படுத்த விருப்பம்
இல்லை!
Labels:
அனுபவம்,
கவிதை,
படமும் கவிதையும்,
புகைப்படங்கள்,
பொது,
Photo of the Day Series