அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பனிச் சிகரங்கள் - பயண முடிவு - பாம்பின் சிகரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
தலைநகர் தில்லியில் ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்வு - ”காரிகர் காதா (Kharigar Gaathaa) - ஷில்ப் கி விராசத்” எனும் நிகழ்வு. அந்த நிகழ்வில் எடுத்த சில படங்களை உங்களுடன் இந்தத் தொடரின் முதல் மூன்று பகுதிகளில் பகிர்ந்து கொண்டது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம். இது வரை வெளியிட்ட பதிவுகளை பார்த்திருக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி சென்று பார்க்கலாம்.
நிகழ்வுக்குச் சென்ற போது எடுத்த மேலும் சில படங்கள் இன்றைய பதிவாக உங்கள் பார்வைக்கு.
பாரம்பரியமான வீட்டின் வெளியே வண்டி ஒன்று…
வீட்டுக் கதவின் மேல் பகுதியில் வைக்கப்படும் மரச் சிற்பங்கள்…
மரத்தில் அற்புதமான வேலைப்பாடுகள்…
இராஜஸ்தானின் பாரம்பரிய உடைகள்…
நூல் கொண்டு நெய்யப்பட்ட சரஸ்வதியின் வடிவம் - ஒடிசாவிலிருந்து…
வடகிழக்கு இந்தியாவிலிருந்து காலணிகள்…
மணிப்பூரிலிருந்து துணியானால் ஆன ஷால் (சால்வை)...
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கோனியா சக்ர கலம்காரி கைவேலைகள்…
வாரணாசியின் பாரம்பரியமான ஜரி வேலைப்பாடுகள்…
வடகிழக்கு இந்தியாவிலிருந்து மற்றுமோரு வேலைப்பாடு…
Soul of a Woman என்ற தலைப்பில் சில நூல் உடைகள்…
இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் படங்கள் வரும் பகுதிகளில் தருகிறேன். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
27 ஃபிப்ரவரி 2025
பாரம்பர்ய வீடு, வண்டி அருமை. ஒடிசா சரஸ்வதி கொஞ்சம் பாவமாக இருக்கிறார்!
பதிலளிநீக்குஷால் முதலான துணிவகைகளும், நூல் பொம்மைகளும் அருமை.