வெள்ளி, 20 ஜூன், 2025

சற்றே இடைவெளிக்குப் பிறகு…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். சற்றே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் 9 மார்ச் 2025 அன்று வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 





******




குடும்பத்தில் இருந்த சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த வலைப்பூவில் எதுவும் எழுதவோ, மற்ற நண்பர்களின் பதிவுகளை படிக்கவோ முடியவில்லை. அவ்வப்போது முகநூலில் சில இற்றைகள் எழுதினாலும், இங்கே எதையும் பகிரவும் இயலவில்லை.  இன்று காலை தான் தலைநகர் தில்லி திரும்பி, அலுவலகத்திலும் பணியில் சேர்ந்து   விட்டேன். முன்பு போல, தினம் தினம் பதிவுகள் எழுத முடியாவிட்டாலும், முடிந்த போதெல்லாம் எழுதவே எண்ணம்.  பார்க்கலாம். சூழல்கள் நம்மை பல சமயங்களில் நாம் நினைப்பதை செய்யமுடியாமல் செய்து விடுகிறது.  சூழல்களுக்கு முன்னர் நாம் எல்லாம் பொம்மைகள் போலத்தான்.  ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதாரே கண்ணா…. என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.  


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் பயணத்தொடர் பாதியில் நிற்கிறது.  அதற்கடுத்து ஒரு குறும்பயணமும் குடும்பத்தினருடன் சென்று வந்திருக்கிறேன்.   அது குறித்து இல்லத்தரசி முகநூலில் எழுதி வருகிறார்.  நானும் அதில் கொஞ்சம் சேர்த்து இரண்டு பார்வைகளில் எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  பார்க்கலாம்.  எவ்வளவு தூரம் இந்த சிந்தனைகளை செயல்களாக மாற்ற முடியும் என்பதை பொறுத்து இங்கே பதிவுகள் தொடரும்.  தொடர்ந்து சிந்திப்போம் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

20 ஜூன் 2025

2 கருத்துகள்:

  1. வாங்க வெங்கட் சார், சூழல் அமையும் பொழுது எல்லாம் எழுதுவோம்...

    ஏனென்றால் இப்பொழுது என்னாலும் சரியாக பதிவுகளும் இட முடியவில்லை, மற்ற பதிவுகளுக்கு செல்லவும் முடியவில்லை ... இனி கண்டிப்பாக தொடர வேண்டும் என நினைத்து பதிவிடும் பொழுது தங்களின் பதிவு ... தொடரட்டும் பதிவுகள்

    பதிலளிநீக்கு
  2. இன்று வாசகம் அருமை. உங்களால் முடியும் நேரம் கிடைக்கும் போது பதிவு போடலாம்.
    சூழ்நிலைகள் சில நேரம் இப்படித்தான் ஆகும். முகநூலில் படித்து வருகிறேன் உங்கள் இருவர் பதிவையும்.

    //சூழல்களுக்கு முன்னர் நாம் எல்லாம் பொம்மைகள் போலத்தான். ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதாரே கண்ணா…. என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.//

    நல்ல பாடல்.இறைவன் கையில் ஆடும் பொம்மைகள் நாம். அவன் ஆட்டுவித்தபடி ஆடுகிறோம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....