அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்! இந்த தலைப்பை பார்த்ததும் உங்களுக்கு ஒரு திரைப்பாடல் நினைவுக்கு வரலாம்! பசுமையாய் சுற்றித் திரிந்த பள்ளிப்பருவம்! அதுபோல் பட்டாம்பூச்சிகளாக சுற்றித் திரிந்த கல்லூரிப்பருவம்! அதையும் யாராலும் எளிதில் மறக்க முடியாது! கலாட்டாக்களும், புன்னகையுடன் வலம் வரும் நண்பர்கள் கூட்டமும் என ஆனந்தமாக காட்சி தந்த பொன்னான நாட்கள்!
கல்லூரிக் காலங்கள் கடந்து பல வருடங்களாகி விட்டதே! அதனால் என்ன! மீண்டும் அந்த கல்லூரி நண்பர்களை சந்திக்கலாம்! நினைவுகளை மீட்டெடுக்கலாம் என்று எங்கள் நண்பர்கள் குழாம் ஒன்றிணைந்து அதை பெரும் விழாவாக ஏற்பாடு செய்திருந்தார்கள்! அந்த விழாவில் சென்று பங்கேற்க எனக்கொரு வாய்ப்பும் அமைந்தது! அப்படி பங்கேற்ற அந்த பெரும் விழாவைப் பற்றியும், எங்கள் கல்லூரியைப் பற்றியும் தான் இந்த நூலில் தந்திருக்கிறேன்!
இந்த நூலை வாசிப்பதன் மூலம் நீங்களும் உங்கள் கடந்து வந்த பாதையினையும், நினைவுகளையும் மீட்டுக் கொண்டு வரலாம் என்பது நிச்சயம்! விரைவில் உங்கள் கல்லூரி நட்புகளைச் சந்திக்கவும் ஒரு வாய்ப்பை அமைத்துக் கொள்ளலாம்!
மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே…
மீண்டுக் கல்லூரிக்குப் போகலாம்
ஒரு தொடராக முகநூலில் எழுதி இருந்தாலும், வலைப்பூவில் இதுவரை வெளியிடாத தகவல்கள் இந்த நூலில் உண்டு. அமேசான் கிண்டில் தளத்தில் வெளிவந்திருக்கிறது. அமேசான் தளத்தில் படிக்கலாமே!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
24 ஜூன் 2025
வாழ்த்துகள், ஆதி.
பதிலளிநீக்குகீதா