செவ்வாய், 16 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – ஒற்றைக் குழலும் இரண்டு குச்சிகளும்

விதம் விதமாய் நடனம் - பகுதி 5

பர்யாடன் பர்வ் – 2018 – தலைநகர் தில்லியில் கடந்த மாதம் 16-27 தேதிகளில் நடந்த ஒரு நிகழ்ச்சி. இந்திய அரசின் சுற்றுலாத் துறையினர் நடத்திய நிகழ்ச்சி. தலைநகர் தில்லியின் ராஜபாட்டையில் [ராஜ்பத்] நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றாக ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் பல மாநிலங்களிலிருந்து நடனங்கள் நடந்தன.  அப்படி நடந்த நடனங்களை நான் எடுத்த நிழற்படங்களை சில பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இதோ ஐந்தாம் பகுதியாக வடகிழக்கு மாநிலத்திலிருந்து ஒரு நிகழ்ச்சி. 


ஒரு குழலும் இரட்டைக் கம்பிகளும் வைத்துக் கொண்டு குழலை கீழே விடாமல் சமாளிக்கும் காணொளியும், பொய்க்கால் குதிரை நடனமும் இந்தப் பகுதியில் காணொளிகளாக…. நண்பர் பத்மநாபன் எடுத்த காணொளிகள் இப்பதிவில் இணைத்திருக்கிறேன். சற்றே தொலைவிலிருந்து எடுத்த காணொளி என்பதை நினைவில் கொள்க!










என்ன நண்பர்களே காணொளிகளை ரசித்தீர்களா? உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…

14 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட்.

    முதல் காணொளியில் அவர் ஏதோ செய்கிறார் என்கிற அளவில் தெரிகிறது. சிறப்பு என் கண்ணுக்குப் புலபபடவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே தொலைவில் இருந்து எடுத்ததால் இந்தக் குழப்பம். நேரில் பார்க்க ரொம்பவே நன்றாக இருந்தது. ஒரு வித Balancing Act இது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இரண்டாவது காணொளியையும் பார்த்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. காணொலிகளைக் கண்டு ரசித்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. வீடியோவில் பிழைன்னு வருதே! இது எனக்கு மட்டும்தானா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி வேலை செய்து பார்த்திருக்கிறார்களே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  5. காணொளி இரண்டும் நன்றாக இருக்கிறது மேடையை விட்டு ரசிகர்கள் மத்தியிலும் ஆடுகிறார்.
    அடுத்த பொய்க்கால் குதிரை நடனத்தை போகிற போக்கில் ரசித்து செல்கிறார்கள் நின்று ரசிக்கவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அத்தனை வரவேற்பு இந்த குதிரை நடனத்திற்கு இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  6. பொய்க்கால் குதிரை நடனம் கொஞ்சம் தெரிந்தது மற்றதுஎன்கண்களில்தான் கோளாறோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....