ஞாயிறு, 31 மார்ச், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி இரண்டு



வாரணாசி – பழமையான நகரம். என்னதான் பழமையின் பிடியில் இருந்தாலும் சமீப காலங்களில் முன்னேற்றத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்ற முறை சென்ற போது பார்த்த ஊருக்கும், இப்போது பார்த்த ஊருக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஊரின் இரயில் நிலையம் சிறப்பாக இருக்கிறது இப்போது. புதிய ஒரு இரயில் நிலையமும் எல்லா வித வசதிகளுடனும் திறந்திருக்கிறார்கள். பல இடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன என்றாலும், மக்களும் அரசுடன் சேர்ந்து சுத்தமாக வைத்திருக்க தங்கள் பங்காக உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னமும் இந்த விஷயத்தில் மக்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

சனி, 30 மார்ச், 2019

காஃபி வித் கிட்டு – தொக்கு – சேச்சா – ஹம்சஃபர் - ஸ்ரவாணி


காஃபி வித் கிட்டு – பகுதி – 26

சாப்பிட வாங்க – பச்சைக்கத்திரிக்காய் தொக்கு….

எங்கள் பிளாக் ”திங்க” கிழமை பதிவாக கீதாஜி எழுதியிருந்த வழுதநஞ்சா தொக்கு பார்த்த ஒன்றிரண்டு நாட்களில் எங்கள் பகுதி காய்கறி மார்க்கெட்டில் இந்த வகை நீண்ட பச்சை நிற கத்தரிக்காய் கிடைத்தது. 

வெள்ளி, 29 மார்ச், 2019

மூடப்படும் அரசுப் பள்ளிகள் – நினைவுகளைத் தேடி – மூன்று


சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய நினைவுகளைத் தேடி பதிவுகளின் சுட்டி கீழே.

நினைவுகளைத் தேடி – ஒன்று இரண்டு

வியாழன், 28 மார்ச், 2019

சாப்பிட வாங்க – அம்ரூத் கி சட்னி




தோசையும் தொட்டுக்கொள்ள அம்ரூத் கி சட்னியும்


’தம்பி டீ இன்னும் வரல! வடிவேலு அவர்களின் புகழ்பெற்ற வசனம்! பலமுறை நானும் பயன்படுத்தி இருக்கிறேன். இந்த மாதிரியே “சட்னி இன்னும் வரல!” என்று சொல்ல வேண்டி இருந்தது திருமதி சுஜாதா அவர்களிடம்! சமீபத்தில் தான் ஒரு புதிய சமையல் குறிப்பினை எங்கள் குழுவில் பகிர்ந்து கொண்டார் அவர். செய்முறையை எழுதி அனுப்பச் சொல்லி இருந்தேன். அவருக்கு இருக்கும் பணிச்சுமையில் எழுதி அனுப்பவே இல்லை. இணையத்தில் ஒரு செய்முறை கிடைக்க, அந்த முறையில் செய்து பார்த்தேன். நன்றாகவே இருந்தது. என்றாலும், அவர் சொல்லும் முறை என்ன என்பதைக் கேட்டு இங்கே வெளியிட நினைத்ததால், மீண்டும் அவரைக் கேட்க, செய்முறையை அனுப்பி வைத்தார். அந்த குறிப்பு தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போவது! 

புதன், 27 மார்ச், 2019

வில்லுடையான்பட்டு கோவில், நெய்வேலி – நினைவுகளைத் தேடி – இரண்டு


சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய பதிவின் சுட்டி கீழே.