வெள்ளி, 16 ஜனவரி, 2015

கோலங்கள் – திருவரங்கத்தில் பொங்கல்…..

நேற்றைய பதிவான வண்ண மயமாய் போகி கோலங்கள் பதிவில் திருவரங்கத்து வீதிகளில் போகி அன்று பார்த்த கோலங்களை பதிவாக்கித் தந்திருந்தேன்.  பார்க்காதவர்கள் பார்க்கலாமே! 

வலைப்பதிவர் சுப்பு தாத்தா தனது வலைப்பூவான  ”ரசித்தவை… நினைவில் நிற்பவை”யில் ஸ்ரீரங்கத் தெருக்களிலே சுந்தரக் கோலங்கள் என்ற தலைப்பில் இந்த கோலங்களிலிருந்து சிலவற்றை தொகுத்து இசையோடு வெளியிட்டு இருந்தார்.  அந்தக் காணொளி இங்கேயும் [நன்றி: சுப்பு தாத்தா].


இன்றைய பதிவில் பொங்கலன்று திருவரங்கத்துப் பெண்மணிகள் தங்களது வீடுகளில் வாசலில் போட்டிருந்த கண்ணைக் கவரும் கோலங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  எடுத்த மொத்த படங்கள் 67.  அதிலிருந்து தேர்ந்தெடுத்த கோலங்கள் 21 மட்டும் இப்பதிவில்…… 


கோலம்-1


கோலம்-2


கோலம்-3


கோலம்-4


கோலம்-5 


கோலம்-6


கோலம்-7


கோலம்-8


கோலம்-9


கோலம்-10


கோலம்-11


கோலம்-12



கோலம்-13


கோலம்-14


கோலம்-15


கோலம்-16


கோலம்-17


கோலம்-18


கோலம்-19


கோலம்-20


கோலம்-21

விடாது கருப்பு என்பது போல நாளையும் விடாது போல – மாட்டுப் பொங்கலான இன்றும் அழகழாய் கோலங்கள் வரைந்து வைத்திருக்கிறார்கள். அவற்றையும் சென்று புகைப்படம் பிடிக்க வேண்டும் என்று மகள் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவையும் முடிந்தால் இன்றே வெளியிடுகிறேன்.  வழக்கமாய் வெள்ளி அன்று வரும் பழக்கலவை இன்று தயாரிக்க முடியாததால் இன்று உங்களுக்குத் தர முடியாது.  அடுத்த வாரம் தருவேன்!

சரி கோலங்களைப் பார்க்கலாமா!

என்ன நண்பர்களே, கோலங்களை ரசித்தீர்களா? உங்களுக்கு எந்தெந்த கோலங்கள் பிடித்தன என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து…..

48 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    எந்த கோலத்தை சொல்ல முடியும் அழகி்ல்லை என்று எல்லாம் அழகுதான் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  2. கோலங்கள் அனைத்தும் அருமை. ஆனாலும் பொங்கலுக்கு பொருத்தமான 5 ஆவது கோலமே எனக்குப் பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா..

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  3. எல்லாமே - அழகு ஓவியங்கள்!..
    அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி அவர்களே..

      நீக்கு
  5. சூரி சாரின் கோலதொகுப்பு காணொளியும், நீங்கள் தொகுத்த கோலங்களும் மிக அழகு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. https://www.youtube.com/watch?v=zyBhHISsmKM


    பெருமாள் ஊர்வலம் வரார், தாயாரோட .

    அப்ப அந்த வீதிகளிலே வரைந்த கோலங்களைப் பார்க்கறார்.

    தாயார் கிட்டே கேட்கறார். இதெல்லாம் வரைஞ்சவாளுக்கு எல்லாம்
    இன்னிக்கு ஒரு படி அக்காரவடிசல், ஒரு படி புளியோதரை பிரசாதமா கொடு.

    வெங்கட்டுக்கும் ஆதிக்கும் ஒரு படி கூட கொடு.

    ஆஹா என்கிறார். தாயார்.

    வெங்கட் அதிருஷ்டக் காரர்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான காணொளியாக்கி பகிர்ந்தமைக்கு நன்றி. மிகவும் அழகான தொகுப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  7. 5,6,9,10,16, நான் மிகவும் ரசித்த கோலங்கள். காணொளி எனக்கு திறக்கவில்லை.

    அழகாய் கோலம் போட்டு இருக்கிறார்கள். அதை அழகாய் படம் பிடித்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ.

    தம.+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி அவரது தளத்திலும் உண்டு. அங்கேயோ அல்லது இந்த தளத்திலோ மீண்டும் முயற்சி செய்து பாருங்களேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

      நீக்கு
  8. அனைத்துக் கோலங்களும் அருமை அண்ணா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே!

    இன்றைய அத்தனை கோலங்களும் அதி அற்புதமாய் ஜொலிக்கின்றன.அனைத்துமே எனக்கு நன்றாகத்தான் உள்ளது.

    இக்கோலங்களை பலமணி நேரங்கள் செலவழித்து பிரமாதமாக பார்வையாக்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவை அத்தனையையும் எங்களுக்கு சுவையாக பரிமாறிய தங்களுக்கும் என் நன்றியுடன் ௬டிய நல்வாழ்த்துக்கள்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த உழவர், மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  10. அத்தனை கோலங்களுமே மிக அருமை. அப்படியே பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.இதில் பிடித்ததை மட்டும் எப்படி சொல்லுவது. என் கண்களுக்கு எல்லா கோலங்களுமே மிக அழகாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  11. கோலங்கள் கண்ணைக் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  13. கண்ணைக் கவரும் அழகிய கோலங்கள் கண்டு வியந்தேன் சகோதரா !
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய
    பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  14. அனைத்துக் கோலங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  15. 17,18,21 moondru kolangalum romba azhagu. Matrapadi yella kolangalume nandraga irundhana. Veliyittu magzhviththamaikku sandhozham.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  16. அழகான கோலங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  18. அனைத்தும் அருமை நண்பரே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  19. நாங்கள் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு
    அழகுக் கோலங்களை இரசிக்கத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பிடித்தது 5,12,1,20


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  20. Hi....tks a lot...I enjoyed......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனானி.

      நீக்கு
  21. கோலங்கள் வண்ணக்கலவை மிக்க அழகு. பொருமையாய் இட்ட கைகளும், படம் பிடித்த அழகும்
    மனம் நிறைந்து மகிழ்வை உண்டாக்குகிறது. யாவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா..

      நீக்கு
  22. பள்ளிப்பருவத்தில் கும்பகோணத்தில் இருந்தபோது இவ்வாறான கோலங்களை எங்களது தெருவில் அதிகமாகப் பார்த்துள்ளேன். இப்போது அந்த அளவு இல்லை. இருப்பினும் தங்களது பதிவு எங்களை அந்த நாள்களுக்கு அழைத்துச்சென்றுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  23. தமிழ்னாட்டுக்கே (தென்னிந்தியாவுக்கே) உள்ள கோலக் கலாச்சாரம். இன்னும் பல வருடங்கள் கழித்து இவையெல்லாம் 'அந்தக்காலத்தில்' கேடகரியில் சேர்ந்துவிடும். அடுக்குமாடிகளில் கோலங்களுக்கு ஏது இடம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....