செவ்வாய், 21 மார்ச், 2017

சின்னவள் – மீரா செல்வக்குமார் - கவிதைத் தொகுப்பு



அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு அலாதியானது.  எப்போதுமே அவர்களுக்கிடையேயான பாசத்தினை, அன்பினை எந்த அளவுகோல் கொண்டும் அளவிட முடிவதில்லை. என்னவள் எப்போதும் சொல்வதுண்டு, ”ரோஷ்ணி சமயங்களில் நான் சொல்வதைக் கேட்பதில்லை. கேட்டால் எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள், இன்னிக்கு இப்படிச் சொன்னாள், நேற்று இப்படிச் சொன்னாள்” என்று எதையாவது கோபத்துடன் சொல்லும்போது, மகள் சொன்ன பதிலில் சந்தோஷித்து சிரித்து விடுவேன் – என்னவளின் கோபம் பற்றிய கவலைக் கொள்ளாது! பல சமயங்களில் இப்படி நடந்து விடுகிறது.




அது என்னவோ, மகள் செய்யும் இது போன்ற சின்னச் சின்ன செயலும், விஷயங்களும் அப்பாக்களுக்குப் பிடித்து விடுகின்றன. மகளைப் பெற்ற எல்லா அப்பாக்களுக்கும் சந்தோஷித்து இருப்பது செல்ல மகள்களின் செயல்களில். வார்த்தைகளில் இந்த சந்தோஷத்தினை எல்லா அப்பாக்களாலும் வடித்து விடமுடிவதில்லை. ஒரு சிலர் மனதுக்குள்ளேயே இந்த சந்தோஷங்களையும், இன்பங்களையும் பூட்டி வைத்து, அவளைப் பார்க்கும்போதும், அவள் பற்றிப் பேசும்போதும் சிறு புன்னகையோடு நகர, வலைப்பூ நண்பர் புதுக்கோட்டை செல்வக்குமார் அழகாய் கவிதையாய் வடித்து விடுகிறார்.

இணையத்தின் வழியேயான நட்பு, இரண்டொரு முறை அவரைச் சந்தித்ததுண்டு. மீரா செல்வக்குமார், வலைப்பூவில் எழுதும் கவிதைகள் மிகவும் பிடித்தமானது. அதுவும், அவர் பெரிய மகளுக்கு எழுதும் கடிதங்கள், சின்னவளுக்காக எழுதும் கவிதைகள் மிகவும் பிடிக்கும். மகள்கள் மீது பாசம் வைத்திருக்கும் எல்லா அப்பாக்களுக்கும் பிடித்தமானவை இவரது சின்னவள் கவிதைகள்! இணையத்தில் வெளியிடும்போது படித்திருந்தாலும், இப்போது சின்னவள் கவிதைகள் ஒரு தொகுப்பாக படிக்கக் கிடைத்திருக்கிறது. 



புஸ்தகா தளத்தில் இவரது “சின்னவள்” கவிதைத் தொகுப்பு வெளியாகி இருப்பதைப் பார்த்ததும் வாசித்து விட்டேன்.  மொத்தம் 40 கவிதைகள்.  நாற்பதும் நல்முத்துகள். எப்போதுமே ஒரு கவிதைத் தொகுப்பில் சில கவிதைகள் நன்றாக இருப்பதில்லை. ஆனால் இத்தொகுப்பினை அப்படிச் சொல்ல முடியாது. அனைத்துமே சின்னவள் பற்றிய சிறப்பான கவிதைகள். எதைச் சொல்ல எதை விட? தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் சில மட்டும் இங்கே…..

அலமாரி முழுசும் அவளுக்கு

என் மகளுக்கு பிடித்த வண்ணம் – பிங்க்! எப்போது உடையெடுக்கச் சென்றாலும், பல ஆடைகளைப் பார்த்த பிறகு அவள் தேர்ந்தெடுப்பது என்னவோ, பிங்க் வண்ணத்திலேயே இருக்கும்! பலமுறை பிங்க் வண்ண ஆடையை முதலிலேயே தேர்ந்தெடுத்து காண்பிக்க, “பின்னாலிருந்து அவள் அம்மா சொல்லுவாள், “எப்பப் பார்த்தாலும், பிங்க் எடுக்காதீங்க!” அவளுக்கென வாங்கும் எல்லாமும் பிங்க் வண்ணத்தில் வாங்கிவிடுகிறேன்! இதோ செல்வக்குமாரின் கவிதை – சின்னவள் கவிதைத் தொகுப்பிலிருந்து!

அவள்
ஆடைகள்
விஷயத்தில்
அழுத்தக்காரி.
கருஞ்சிவப்பு
இளமஞ்சள்
அதிகமாய்
பிரில் வைத்த
வெள்ளை வண்ண
தேவதை உடை…
எப்போதும்
அடம்பிடித்து மறுத்த
கத்திரிப்பூ வண்ண
கவுன்.

கயிறுகள் பிரிந்தும்
கால்களுக்கு இடையில்
கிழிந்தும்
கழட்ட மறுத்த
காவலர் சீருடை
அவள் ஆடைகளடக்கிய
அலமாரி
நிரம்பியிருக்கிறது
பொக்கிசமென.
தொலைதூரம்
படிக்கப் போனவளின்
இன்றைய அழைப்பில்,
பண்டிகை உடையினை
நீயே எடு
என்கிறாள்.
தேர்ந்தெடுக்க வேண்டும்
என்னை
அப்பனாய்
தேர்ந்தெடுத்த
சின்னவளுக்கு!

சிவப்பில் கரையும்

மருதாணி வைத்துக் கொள்வது எல்லா பெண்களுக்குமே பிடித்தமானது – ஒரு சில ஆண்களுக்கும்! பெண்ணுக்கு இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துவிட்டால், அவர்களுக்கு எல்லா உதவிகளையும் அப்பாக்கள் செய்ய வேண்டியிருக்கிறது! தலைப்பின்னலிலிருந்து கழன்று முகத்தில் விழும், குறுகுறுக்க வைக்கும் ஒற்றை முடியை ஒதுக்கி விடுவதிலிருந்து, “அப்பா, மூக்குக்கிட்ட அரிக்குது, கொஞ்சம் சொறிந்து விடேன்!” என்று கேட்கும் பொழுது, ஏதோ சொரிந்தால் வலித்து விடுமோ, என தடவிக்கொடுப்பதிலிருந்து பலதும் செய்ய அப்பா வேண்டியிருக்கிறது மகளுக்கு! இதோ மருதாணி இட்டுக்கொண்ட சின்னவள் பற்றிய கவிதை….

மருதாணி
வைக்கும் நாட்களில்
மிரள வைத்து விடுகிறாள்
என்னை.

உதிர்வதை ஒட்ட வைத்து,
தண்ணீர்
தாங்கிக் கொடுத்து,
முகத்தேன்
எடுக்கவரும்
கொசுவை
ரத்தமின்றி
கொன்றென,

தூக்கம் தொலைத்த
இரவின் கோபம்

சின்னவள்
விரல்களின்
சிவப்பில்
கரைந்து போகிறது.

எதிர்வினை

எனக்கு என் காதுகளை அடுத்தவர் தொட்டால் பிடிப்பதில்லை. போலவே என் தலைமுடியைத் தொட்டாலும்! ஆனாலும் இது எதுவுமே மகளிடம் செல்லாது! எல்லா மகள்களுக்கும் அப்பாவினை அலங்கரிப்பது – தலை முடியில் ரப்பர் பேண்ட் போடுவது, முகத்தில் பவுடர் பூசி, பொட்டு வைத்து விடுவது என அவர்கள் எதைச் செய்தாலும், அப்பாக்கள் மறுப்பதில்லை! நானும்! இதோ செல்வக்குமாரின் ஒரு கவிதை….

சின்னவள்
திடீரென
எழுப்பினாள்
என்னை
அழகாக்குவேன்
என்றாள்.
எங்கிருந்தோ
நாலைந்து
டப்பாக்களை
எடுத்துவந்து
திறந்தாள்.

பலப்பல
வாசனைகளால்
நிறைந்து
போனது
முகமெனக்கு….

வெள்ளரி
இல்லை என
முள்ளங்கி
கொண்டு
விழிகளை மூடினாள்.

கடிகாரம் பார்த்து
என் முகம்
கழுவினாள்….

சிறு கண்ணாடி கொண்டு
பார் என்றாள்…..

அய்யோ…..
மிக அழகாய்
மாறிப்போய்
இருந்தது

அவள் முகம்…..

புஸ்தகா தளத்தில் வெளியாகி இருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பின் விலை ரூபாய் ஐம்பது மட்டுமே.  அவர்களது தளத்தில் இணைந்து, புத்தகங்களை வாடகைக்கும் எடுத்துப் படிக்கலாம் என்பது கூடுதல் வசதி. Rental Plans இருக்கிறது. ஒரு மாதத்திற்கு 99 ரூபாய் திட்டத்திலிருந்து ஆண்டுச் சந்தாவாக 600 ரூபாய் கட்டும் திட்டம் வரை நிறையவே இருக்கிறது. உங்களுக்குத் தகுந்த திட்டத்தினை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!

படித்ததில் பிடித்ததாக இந்த வாரத்தில் “சின்னவள்” கவிதைத் தொகுப்பு. அடுத்த வாரம் வேறொரு புத்தகம் பற்றி பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

55 கருத்துகள்:

  1. ஆஹா...என் அன்பும் ..நன்றியும் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னவள் கவிதைத் தொகுப்பு நன்றாக வந்திருக்கிரது செல்வா... வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வா..

      நீக்கு
  2. உண்மையில் அப்பாவுக்கும் மகளுக்கும் உண்டான உறவு இறைவனின் படைப்பில் அழகானது.ஒரு பெண்ணின் முதல் காதல் அப்பா முதல் நம்பிக்கை அப்பா முதல் தோழன் அப்பா முதல் முத்தம் அப்பா முதல் கோபம் அப்பா முதல் ஆசிரியர் அப்பா இப்படி பல்வேறு பரிமாணங்களில் பெண்களின் வாழ்க்கையில் ஒரு கடவுளாக வர்ணிக்கப்படும் உயிர் தான் அப்பா.

    செல்வா அப்பாவின் அன்பு கவிதைகளுக்கு நானும் இரசிகைதான்.

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு பிறந்தநாள் அன்று எனது அப்பாவின் எழுத்துகளை நூல் வடிவில் பெற்றிருக்கிறேன்.இது உண்மையிலேயே ஒரு மகளுக்கு உண்டான அன்பு கலந்த உரிமை.

    நல்ல பகிர்வு ஐயா நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்த நாள் வாழ்த்துகள் வைசாலி செல்வம்....

      இறைவன் படைப்பில் அழகான உறவு. உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. //பிறந்தநாள் அன்று எனது அப்பாவின் எழுத்துகளை//

      சகோதரி வைசாலி செல்வத்துக்கு இன்று பிறந்த நாளா? எங்கள் வாழ்த்துகளும்.

      நீக்கு
    3. அவரது பின்னூட்டம் கண்டபோது அப்படித் தான் தோன்றியது ஸ்ரீராம்.

      நீக்கு
    4. தங்களின் அன்புக்கு நன்றிகள் ஐயா.எனது பிறந்த நாளன்று பெற்ற பரிசு,இன்று அல்ல.

      நீக்கு
    5. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

      நீக்கு
  3. பாசத்தை
    நேசத்தை
    எழுத்தாக மாற்றும் கலை அறிந்த
    தந்தை இவர்தான்

    நண்பரின் எழுத்துக்களுக்கு எந்நாளும் நான் ரசிகன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. மகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். கவிஞர் மீராசெல்வக்குமாருக்கும்,பகிர்ந்த உங்களுக்கும்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கவிதை என்றாலே காத தூரம் ஒடும் என்னை படிக்க வைத்து நெகிழ வைப்பது செல்வாவின் கவிதைகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை என்றாலே காத தூரம் :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்!

      நீக்கு
  6. அப்பா மக்ள் உறவு மிகவும் அலாதியானது அந்த வகையில் நானும் அதிர்ஷ்டசாலிதான் அப்பா மகளாக இல்லாமல் நணபர்களை போலவே இருக்கிறோம் கவலைப்படும் சமயங்களில் ஆறுதல் தருவதும் மகளே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலைப் படும் சமயங்களில் ஆறுதல் தருவதும் மகளே... உண்மை தான் நண்பரே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. இனிய கவிதைகளால் நிறைகின்றது இதயம்..

    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. நல்ல தொகுப்பு
    நேர்த்தியான அறிமுகம்
    தம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  10. கவிஞருக்கும், அவர் மகள் வைசாலிக்கும் வாழ்த்துக்கள்.
    கவிதைகள் நன்றாக இருக்கிறது. அதை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை.
    உங்கள் படங்கள் அழகு. உங்களுக்கும் ரோஷிணிக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  11. அழகிய வடிவில் விவரித்தமை அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  12. எளிய அழகான அறிமுகம்...தேவதைக்கான கவிதைகளும் குட்டி குட்டி தேவதைகளாக மிளிர்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  13. Thiru.Meera.Selvakumar ayya avargalin thigattadha thithippu kavidhai thoguppu idhu. Meendum meendum vasithalum innum pudhiya karuthukkal thondra vaikum ivaradhu ezhuthukkal. kavidhaiyin thodangum idam mudhal, mudikkum varai varthaigal endha vidhamana kuzhapamum, pagattu saayamum indri miga azhagaga appadiye manadhil otti kollum iyalbu kondadhu. Sila nerathil kannoram eeram varuvadhum undu. Ivvalavu arumai thoguppuku azhagu serkum vidhamaga neengal ungal magalin inimaigalai solli kavidhaigalai adukki irupadhin sirappu thani dhan. Innum thodarungal. Ungalukkum, Selvakumar ayyavukkum Vazhthukkal ayya. Pin kurippu:(Gomathy ammavukaga...) Chinnavalin unmai peyar surya. Vasagi vaisali selvam avargal Kavignar avargal eendredukkadha nalla magal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நேசம் 2008 [உங்கள் முதல் வருகையோ?]

      நீக்கு
    2. Amam ayya. Ini thodarndhu varuven. Vazhthukkal nalla padhivirku.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நேசம் 2008.

      நீக்கு
  14. அப்பாவுக்கு மகள் ஸ்பெஷல் உறவுதான். பெரும்பாலான சமயத்தில் மனைவியைவிட. அவங்கதான் அடுத்த ஜெனெரேஷன் இடைவெளியை அப்பாவுக்கு புரிந்துகொள்ளத் துணை நிற்பவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. எதிர்வினைக் கவிதையின் இறுதியில்
    அய்யோ…..
    மிக அழகாய்
    மாறிப்போய்
    இருந்தது

    அவள் முகம்…..

    என்ற வரிகளைப் படித்ததும் என்னை அறியாமல் சிரித்துவிட்டேன். கவிஞர் மீரா செல்வக்குமார் அவர்களின் அருமையான கதைத்தொகுப்பை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! கவிஞருக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  16. ஆம் செல்வா அவர்களது சின்னவள் கவிதைகளை வாசித்திருக்கிறோம். முதலில் அவர் எங்களுக்கு அவரது எழுத்து மூலமாகத்தான் அறிமுகமானார். அவரது கவிதையும் போட்டிக்கு வந்து இருந்தது...அதில் அவரது கவிதையையும் டாப்பில் போட்டிருந்தோம்...அவருக்கு முதல் பரிசும் கிடைத்ததே!! புதுக்கோட்டை பதிவர் விழாவில். அப்படித்தான் அவர் எங்களுக்கு அறிமுகம்...அதன் பின் தானே அவர் வலைப்பூ தொடங்கியது....அதில் தொடர்ந்து வாசித்து வருகிறோம் நீங்கள் சொல்லியிருப்பது போல் பெரியவளுக்குக் கடிதங்களும், சின்னவள் கவிதைகளும் அருமை!!! (துளசி: ஆம் எனக்கும் என் பெண்ணுடனான அந்த அன்பு ஸ்பெஷல்தான்...!!)

    வாழ்த்துகள் செல்வா....இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி ஜி!

    கீதா: மேற்சொன்ன கருத்துடன்....அப்பா பெண் அன்பு என்பது எல்லோராலும் சிலாகித்துப் பேசப்படுவது போல், அத்தனை இல்லை எனினும் அம்மா பெண் நட்பு பாசம் என்றும் சிலரால் பேசப்படுவதுண்டு...அது போன்று அப்பா பையன் உறவும் ஒரு சில பேசுவதுண்டு நண்பனாக என்று....ஆனால் அம்மா பையன் உறவு அந்தப் பாசம் ஏன் பேசப்படுவதில்லையோ?!!!!!! ஹஹஹ்...வலைத்தளத்தில் கூட அப்பாக்கள் பலரும் தங்கள் பெண்களுடனான பாசத்தைப் பகிர்கிறார்கள் ஆனால் அம்மா பையன் பாசம் வாசித்த நினைவில்லை....ஜிஎம்பி சார் தன் பையன்கள் குறித்து எழுதுவதுண்டு...அவ்வப்போது..

    ஏன் என்று தெரியவில்லை!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  17. கவிஞருக்கு வாழ்த்துக்கள் பல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செய்ரோ செல்வா.....

      நீக்கு
  18. எனக்கு ள் இல்லை ,,இரண்டுமே ன் னாக போனதில் வருத்தமுண்டு ,மீரா வருத்தத்தை அதிகப் படுத்தி விட்டார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  19. நல்ல விமர்சனம்...அருமையான நூலுக்கு வாழ்த்துகள் சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  20. கவிதை வரிகள் அருமை ..அப்பாக்களுக்கு மகள்கள் என்றாலே தனிப்பிரியம் .எங்க வீட்லயும் ரோஷினி ஆதி கதைதான் :)
    மகள் அவள் அப்பாவுடன் தோள் மேல் கைபோட்டு நட்பு போல நடந்து செல்வாள் ..சிலநேரம் என்ன பேசுவார்களோ அப்படி ரகசியம் பேசுவார்கள் இருவரும் கொஞ்சூண்டு பொறாமை எட்டி பார்ப்பதை தவிர்க்க முடியாது ..

    அந்த முகப்பூச்சு மேக்கப்பலாம் எலலா அப்பாக்களுக்கும் நடக்கிறது போலிருக்கே ..
    பகிர்வுக்கு நன்றி சகோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

      நீக்கு
  21. இருவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  22. வாழ்த்தும்...நநன்றி யும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்வாதி ஜி!

      நீக்கு
  23. அருமை. நண்பர் மீரா செல்வக்குமார் அவர்களின் முயற்சி புதுமையானது. பாராட்டுதலுக்குரியது. தங்கள் நூல் விமர்சனம் மிக நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

      நீக்கு
  24. எனக்கும் பெண்குழந்தை இல்லாத ஏக்கம் இருந்தது ஆனால் என்ன அதையே என்பேரக் குழந்தைகள் போக்குகிறார்கள் என் பேரன்களைப் பற்றி அவ்வப்போது வலையில் எழுதி இருக்கிறேன் மீரா செல்வகுமார் பாக்கியசாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  25. மிக அழகான விமர்சனம் அண்ணா...
    தேவதையின் தந்தையாய் அனுபவிச்சி எழுதியிருக்கீங்க...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....