வியாழன், 18 ஜூன், 2020

தூணிலும் இருப்பான் – பா. ராகவன் – வாசிப்பனுபவம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்…


அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல் – கணித மேதை ராமானுஜன்.


பா. ராகவன் மற்றும் என். கணேசன் இவர்கள் இருவரின் மேல் எனக்கு ஒரு ஆச்சர்யமான பிரியம் உண்டு – எத்தனை புத்தகங்களை எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.  பா. ராகவன் அவர்களின் ஒரு சில நூல்களை வாசித்திருக்கிறேன்.  அப்படியே என். கணேசன் அவர்களின் சில நூல்களும்.  அமேசான் கிண்டிலில் பா. ராகவன் அவர்களுடைய சில நூல்களை வாசித்ததுண்டு.  இன்றைக்கு நண்பர் அரவிந்த் அவர்கள் சொல்லப் போகும் வாசிப்பனுபவம் கூட திரு பா. ராகவன் அவர்களுடைய “தூணிலும் இருப்பான்” புத்தகம் பற்றிய வாசிப்பனுபவம் தான்.  நானும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனப் பார்த்தபோது விலை ரூபாய் 99/- என்றது அமேசான் – கிண்டில் Unlimited வசதி இல்லை என்பது ஒரு குறையாகவே தோன்றியது எனக்கு.  Sample மட்டும் இலவசமாக தரவிறக்கம் செய்து படித்தபோது விறுவிறுப்பாகவே இருந்தது. சென்னை பர்மா பஜார் பகுதியில் நடக்கும் கதை. ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் பதினைந்து நூல்களை முடித்தபிறகு இந்தப் புத்தகத்தினையும் தரவிறக்கம் செய்தாலும் செய்வேன் – முடிவு தெரிந்து கொள்வதற்காக! சரி வாசிப்பனுபவம் எப்படி இருந்தது என்பதை நண்பர் அரவிந்த் வழி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.  ஓவர் டு அரவிந்த் – நட்புடன் – வெங்கட் நாகராஜ், புது தில்லி.


*****


தூணிலும் இருப்பான்: நிழல் உலகின் நிஜ தரிசனம்



சமீப காலங்களில் பெரும்பாலும் எழும் பேச்சு, ருப்புப் பணத்தை மீட்டெடுத்துவிட்டால் ஏழ்மை ஒழிந்து நாடு சுபிக்ஷம் அடைந்துவிடும் என்பது


குறிப்பாகத் தேர்தல் சமயங்களில் இக்கருத்துகள் பெரும் விவாதம் ஆகி ஏதோ ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப்பணம் பூட்டிவைக்கப்பட்டது போலும், அவற்றைத் திறந்துவிட்டால் உலகெங்கும் பாலாறும் தேனாறும் ஓடும் என்பது போன்றும் சொல்லப்படுவதைக் கேட்டு பலர் நம்பியும் இருப்பார்கள்


உண்மையில் கருப்புப் பணம் என்பது ஒர் இடத்தில் புதைந்து கிடப்பது அல்லஅதன் ஊற்றான கருப்புப் பொருளாதாரமே உலகப் பொருளாதாரத்தின் பெரும்பங்கு என்பதையும் பொருளியலையும் உலக அரசியலையும் ஆள்வதே கணக்கில் வராத இப்பொருளாதாரத்தின் செயல்பாடுகளே என்பதையும் மிகச் சிலரே உணர்ந்துள்ளனர்


"ஆண்டவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" என்பது போல உலகின் அனைத்து பகுதிகளிலும் வியாபித்திருக்கும் இப்பொருளாதாரத்தை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் படைக்கப்பட்ட எளிய விறுவிறு புதினமே, பிரபல எழுத்தாளரும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் வசனகர்த்தாவுமான திரு பா. ராகவன் அவர்களின்  "தூணிலும் இருப்பான்". 


உலகைப் பின்னியுள்ள வலையான தீவிரவாத அமைப்புகளைக் குறித்து எழுதப்பட்ட இவரின் "மாயவலை" வரலாற்றுத் தொடரில் காட்டப்பட்ட, பணம் ஈட்டும் மாபெரும் வலையின் ஒரு கண்ணியான சென்னையின் "பர்மாபஜார்" பகுதியே கதையின் களம்


ஆதியிலிருந்தே படிப்பும் சேர்க்கையும் சரியாக அமையாத கதையின் நாயகன் ஐயனார், வீட்டிலிருந்து வெளியேறி பர்மா பஜாரில் தேநீர் கொடுப்பதில் ஆரம்பித்து கள்ளக்கடத்தல் நுணுக்கங்களில் தேறி, நிழலுலக முதலாளிகளால் அரசியல் பதவி, புது தொழில் முதலிய பல ஆசைகளால் அலைக்கழிக்கப்பட்டு எந்த எல்லை வரை செல்கிறான் என்பதே கதையின் சுருக்கம்


கல்விக்கூடங்களில் முதல் வரிசையில் அமரும் நன்கு படிப்பவர்கள் மாத சம்பளக்காரர்களாகவும், இரண்டாம் வரிசையான சுமார் படிப்பாளிகள் அவர்களுக்குச் சம்பளம் தரும் முதலாளிகளாகவும், மூன்றாம் வரிசையின் சரியாகப் படிக்காதவர்கள் முதலாளிகளை ஆளும் அரசியல்வாதிகளாகவும் பின்வரிசையில் உள்ள படிப்பே வராதவர்கள் அனைவரையும் ஆட்டுவிக்கும் நிழலுலக தாதாக்களாகவும் வருவார்கள் என்ற நகைச்சுவையை குறுஞ்செய்திகளில் பெற்று ஃபார்வேர்டு செய்திருப்போம்


இதன் நிதர்சனத்தை உணர்த்துவது, தனக்கென்று வீடே இல்லாமல் மேன்ஷனில் தங்கி, கள்ளக்கடத்தலின் உலகளாவிய அமானுஷ்ய வலைப்பின்னலால் பயன்பெறும் அரசியல்வாதிகள், புட்சியாளர்கள், தொழிலதிபர்கள், கஸ்டம்ஸ் ஊழியர்கள், போலீஸ் என அனைவரையும் சரிக்கட்டி ஆளும் பஜாரின் கடவுளாக விளங்கும் முதலாளி மீனாட்சிசுந்தரம் என்ற ஆளுமை


இவ்வளவு பலம் பெற்றவர், ஐய்யனாரிடம் "நாம போர்ட்டர் ஜோலி பார்க்கறோம். நமக்குக் கிடைக்கிறது சுமைகூலி மட்டும் தான்!" என்பதும், அவருக்கு மேல் உள்ள ஏஜன்டுகள், சிறியசாமிகள், பெரியசாமிகள் என வலைப்பின்னலை விளக்குவதும் கள்ளக்கடத்தலின் விஸ்வரூபத்தை நாம் உணர்ந்து வாய்பிளக்கும் தருணங்கள்


இச்சந்தையில் வாழும் சூழ்நிலைக்கைதிகளின் அவலத்தைப் புரிந்து கொள்ள உதவுவது, ஐயனாரிடம் தனபால் கூறும், "நாத்தம் புடிச்ச வாழ்க்கையைப் பணத்தோட வாசனையாலதான் மறைக்கணும்" என்ற வைரவரி


இங்குள்ள அனைவரையும் ஏமாற்றுக்காரர்களாகவும் பேராசைக்காரர்களாகவும் எண்ணினால், "குடும்பத்துக்கு மூணு வேளை சோறு, பண்டிகைக்குப் புதுத்துணி, எந்திரிச்சா நிம்மதி, ஹஜ்ஜூக்கு போவணும்" என்ற எளிய ஆசைகளோடு வாழும் சஜாத்தின் வாப்பா போன்றோரும், அவரை மதித்து அவர் கடையை பதுக்கலுக்காக உபயோகிக்காத ஐயனாரின் பண்பும் நெகிழ்ச்சியின் கணங்கள்


நகரிக்குச் செல்லும் ஐயனாரை வீழ்த்தப்போவது அவனால் கைவிடப்பட்ட பழைய காதலி மீனாட்சியா? அவனின் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளான முதலாளியா? அவனுடன் கூட வரும் நண்ர்களா? பின்னால் வருவேன் என்று சொன்ன தனபாலா? என பரபரப்பாக நகரும் புதினத்தின் இறுதிப் பக்கங்கள் யாரும் எதிர்பார்க்காத முடிவைக் கொடுப்பது எழுத்தாளரின் தனிமுத்திரை


இவர்களை மீட்கவோ நெறிப்படுத்தவோ நம்மால் முடியாது என்ற போதிலும் இவர்களையும், உலகின் பெரும்பகுதியான இச்சந்தையையும் தெளிவாகப் புரிந்து கொள்ள ஆரம்பப்புள்ளியாக விளங்கக்கூடிய இப்புத்தகத்தைக் கீழ்க்காணும் சுட்டியில் வாங்கி படிக்கலாம்


தூணிலும் இருப்பான்


மேலும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்,


இரா. அரவிந்த்

28 கருத்துகள்:

  1. இன்று எங்கள் தளத்திலும் நண்பர் அரவிந்தின் ஒரு விமர்சனம் வெளியாகி உள்ளது.

    இதையும் ரசித்தேன். வாழ்த்துகள் அரவிந்த்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    இதுதான் இன்றைய உலகில் நடக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது இவைகளை மாற்ற முடியாது விமர்சனப் பார்வை சிறப்பு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  3. அட...// பின்னால் வருவேன் என்று // ரைட்டு... வாங்கிட வேண்டியது தான்...

    புத்தக அறிமுகத்திற்கு நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
  4. ஆவைத்தூண்டிய விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐய்யா. நூலை வாசியுங்கள். அடுத்த தரமான வாசிப்பு அணுபவத்துடன் சந்திக்கலாம்.

      நீக்கு
  5. டெல்லியில் ஒரு மசால் தோசை எவ்வளவு வெங்கட்? இங்கே 80 ரூபாய். சென்னையில் பில்டர் காபி ரூபாய் 45.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோதிஜி சார்... பெங்களூரில் 25-35 ரூபாய் மசால்தோசை. நல்ல காஃபி 10 ரூபாய்.

      நீக்கு
    2. Poulet à la Moambé என்று ஒரு உணவு உண்டு ஜோதிஜி. அது காங்கோ நாட்டின் பிரபல உணவு.... அது திருப்பூரில் கிடைக்கிறதா?

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. புத்தகவிமர்சனம் படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.
    அருமையாக சொல்லி இருக்கிறார் அரவிந்த் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமை... கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மேடம்.
      கதாசிரியரின் டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், மாயவலை உள்ளிட்ட பயனுள்ள உலக வறலாற்றுத் தொடர்களையும் நேரம் அமையும்போது வாசியுங்கள்.

      நீக்கு
  9. அரவிந்த் விமர்சனம் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அரவிந்த் விமர்சனம் அட்டகாசமாக இருந்தது. கதையும் அற்புதம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. புத்தக அறிமுகத்துக்கு நன்றி அரவிந்தன். மிக அழகாகச் சுருக்கமாகச் சொல்லி இருக்கிறீர்கள். படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. ஆனால் இதுவரை அமேசான், கிண்டில் எல்லாம் போனதில்லை. பார்க்கலாம். நேரம் வாய்த்தால் போய்ப் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  12. அட!!!!!!!!!!!!!!!!!!!! கமென்ட் மாடரேஷன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவுகளுக்கு கமெண்ட் மாடரேஷன் இருக்கிறது கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....