ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி முப்பத்தி ஐந்து - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

வியாழன், 11 செப்டம்பர், 2025

பாரதி யார்? - விஜி வெங்கடேஷ்

 *பாரதி யார்?*



(B) பாட்டிலைத் திறந்தால் கவிதை வரும் சிலருக்கு;


பாட்டின் திறத்தால் போதை ஊட்டினாய் இவையகத்துக்கு; 


வறுமை வாட்டியபோதும் வாடி நீ நிற்கவில்லை;


கருமை வண்ணணைப் பாடினாய், அவனருளையே நாடினாய்.


கண்ணம்மா என்று கவிதையில் நீ உருகியது உலகுக்கே தெரியும்..


உன் செல்லம்மா தான் அது என்று எத்தனை பேருக்குத் தெரியும்?


முண்டாசுக்கவி என உனை

பெயரிட்டு அழைத்தனர்..


கண்டவரும் உன் கவியரங்கம் நடத்தியே பிழைத்தனர்.


நீ இருக்கும்வரை உன் திறமையைக் கண்கள் காணவில்லை..


இப்போதோ ஊரெங்கும் உன் சிலைகளைக் காணக் கண் போதவில்லை!


புரச்சிகரமான கருத்துக்களை தைரியமாய் முன் வைத்தாய்.


வெறுத்து ஊரார் உனைத் தள்ளி வைத்தார்.


உன் கவியால் மனங்களில் தேசப் பற்றைப்

பற்றவைத்தாய்;


அந்நிய ஆட்சியெனும் காட்டை அதன்மூலம் எரிய வைத்தாய்.

 

தொலைக்காட்சி நேரலையை அன்றே சிந்தித்தாய்.


அதை உன் பாட்டிலும் சிறப்பாய் வடித்து வைத்தாய்.


காளி நீ கண் முன் கண்ட தெய்வம்; அவளையே வணங்கிய 

நீயும் காளிதாசனே!


ஆசுகவி உனக்கு 

கவித்திறனை அள்ளி அள்ளிக் கொடுத்தாள்.


காசுபணத்தை ஏனோ கிள்ளிக் கிள்ளியே கொடுத்தாள்..


செல்வம் வந்தால் நீ தன்னை(self), ஏன் தன்னையும்(herself) மறப்பாய் என நினைந்தாளோ..


செல்வத்தை நீ கேட்டிருந்தால் அதைப் பொழிந்திருப்பாள்.


நீ கேட்டதோ பகைவனுக்கு அருளும் நெஞ்சும், மோகத்தைக் கொல்லும் வைராக்கியமும்!


செல்லம்மாளின் தியாகங்கள் உனை மஹாகவியாய் உயர்த்தின.


இரு பெண் குழந்தைகள் உன் பாசத்தில் நனைந்தன.


கோவில் யானை நீ குடுத்த பழத்தை தன் வாய்க்குள் தள்ளியது ..


பழம் கொடுத்த மஹாகவியை தன் துதிக்கையால் தள்ளியது.


ஓரிரு மாதங்களில் மண்ணுலகை நீ நீத்தாய்.


39 வயதிற்குள் யாரும் சாதிக்காததை சாதித்தாய்.


இன்று நீ இருந்தால்..


பதவியில் இருப்போரை பாராட்டிக் கவி எழுதியிருப்பாய். 


செல்வத்தில் புரண்டிருப்பாய்..செருக்கில் மிதந்திருப்பாய்..


நல்லவேளை நீ பிறக்கவில்லை,


உன் பாக்கள் சுயமிழந்து இறக்கவில்லை..


பசியில் வாடிய போதும் குருவிக்கு

அரிசி ஈந்தாய்!


அக்கருணையை என்னவென்பது!


ரௌத்திரம் பழகு என்று வீரம் புகட்டினாய்!


உன்னை எப்படி வியப்பது!


காசுக்காக பாக்களை அடமானம் வைக்காத தன்மானம் உனது!


உனை என்ன சொல்லிப் போற்றுவது!


தமிழ் மொழி இருக்கும்வரை நீ இருப்பாய்.


எம் மனச் சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்திருப்பாய்..


வாழ்க பாரதி! வாழிய நின் புகழ்!

🙏🏻🙏🏻🙏🏻


விஜி வெங்கடேஷ்.

11.9.25.

புதன், 10 செப்டம்பர், 2025

எங்கே போகிறது எனது வாழ்க்கை?


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


செவ்வாய், 9 செப்டம்பர், 2025

கதம்பம் - ஆதி வெங்கட்

 



கறிவேப்பிலை வாசம்!


ஏம்மா! எந்தக் காலத்துல இருக்கீங்க? சும்மா கொஞ்சம் கறிவேப்பிலை குடுன்னா! நான் மட்டும் என்ன மார்க்கெட்ல சும்மாவா எடுக்கறேன்!


எங்க வீட்டுலேயே கறிவேப்பிலை மரம் இருக்கு! உங்க கிட்ட இருக்கிற கறிவேப்பிலை வாசமா இருக்கும் அதேன் கேட்டேன்!!


இந்தாம்மா வெச்சுக்க!! என்று சிறிது எடுத்து கொடுத்ததும் தான் அந்த பெண்மணி நகர்ந்தார்!


அண்ணே! பத்து ரூபாக்கு கறிவேப்பிலையும், பத்து ரூபாக்கு கொத்தமல்லியும் குடுத்துடுங்க! என்று நான் கேட்டதும் அதை எடுத்துக் கொண்டே, இங்க பாரும்மா! வாசமா இருக்குன்னு சொல்லி ஓசில கேட்குது அந்தம்மா! என்று புலம்பினார் அந்தக் காய்க்காரர்!


என்ன சொல்வது! எத்தனையோ வீணாக செலவுகளை செய்யும் நாம் இவரைப் போன்ற சிறு வியாபாரிகளிடம் தான் நம் சாமர்த்தியத்தையும், வீரத்தையும் காண்பிக்கிறோம்!


_____________


நகர் உலா!


மாதம் பிறந்ததும் மளிகைச் சாமான்கள் மருந்து மாத்திரைகள் என்று தேவையானவற்றை வாங்க வெளியே சென்றிருந்த போது ஒரு ATM வாசலில் இரு பெண்மணிகள் வலுத்த வாய்த் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்! அவர்களுக்கு அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை!


சற்று தூரத்தில் இரு ஆட்டோக்காரர்கள் இடையே வாய்த் தகராறு! சாலையின் முக்கிய பகுதியில் இந்த சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது! அதை வேடிக்கை பார்க்கும் மக்கள்!


என்னடா இது! எங்க போனாலும் சண்டை போட்டுட்டு இருக்காங்க! இந்த இரண்டு சம்பவங்களையும் பார்த்ததில் எனக்குள் ஒரு புரிதல்! ஒருவேளை எல்லா நேரத்திலும் அமைதியாகவே இருப்பதை விடுத்து பேச வேண்டிய இடத்தில் நம் தரப்பு நியாயத்தை பேசவும் வேண்டுமோ!! என்று தான் தோன்றியது!


_____________


கஸ்தூரி மேத்தி!!?


ம்மா! கசூரி மேத்தி உள்ள ரேக்ல எல்லாம் தேடினேன்! ஸ்டாக் இல்லையா??


இருக்குக்கா! எவ்வளவு வேணும் உங்களுக்கு! இதோ எடுத்துட்டு வரச் சொல்றேன்! 


இந்தாங்க! Everest கஸ்தூரி மேத்தி! என்று சொல்லிக் கொடுத்தார் அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணிபுரியும் ஒரு பெண்! வாய் வரை அது ‘கசூரி மேத்தி’ப்பா கஸ்தூரி இல்ல!! என்று சொல்லலாம் எனத் தோன்றியது!! சொல்லவில்லை..:)


வெந்தயக்கீரை கிடைக்கும் போது அதை காயவைத்து நாமே கூட கசூரி மேத்தி செய்து கொள்ளலாம்! ஆலு மேத்தியாக உருளைக்கிழங்கோடு வெந்தயக்கீரை சேர்த்து dry sabji ஆகவும் பண்ணலாம்! மேத்தி பராட்டா கூடப் பண்ணலாம்! நான் இப்போது செய்வதெல்லாம் சப்பாத்திக்கு எந்த சப்ஜி செய்தாலும் இறக்கியதும் கசூரி மேத்தியை சேர்த்து விடுவது ஒன்றே!


வீட்டிற்கு வந்ததும் எவரெஸ்ட் டப்பாவை எடுத்துப் பார்த்தால் எழுத்துப்பிழை தான் முதலில் கண்ணில் தெரிந்தது! अ க்கு மேலே கொம்பு வராதே! துணைக்கால் போட்டு கொம்பு வைத்தால்ओ (ஓ) என்றல்லவா மாறிவிடும்! அல்லது இரண்டு கொம்பு போட்டால்औ(ஒள) என்று தான் ஆகும்! இது ஏன் இப்படி போட்டுருக்கிறார்கள் என்று தெரியவில்லை!! உண்மையில் एवरेस्ट् என்று தான் வந்திருக்க வேண்டும்!


______________


கடமைப் பாதை!


மாலைநேர நடைப்பயிற்சியில்…


என்ன! ஆஃபீஸ்ல இருந்து கிளம்பியாச்சா??


இன்னும் இல்ல! கொஞ்சம் வேலை இருக்கு! இங்க ஒண்ணும் ஸ்பெஷலா இல்ல! அங்க என்ன??


இங்கேயும் ஸ்பெஷலா ஒண்ணும் இல்ல! கிளாஸ் அட்டெண்ட் பண்ணேன்! இன்னிக்கு grammar தான் எடுத்தாங்க! அதுல ‘நானா விதானி’ன்னு ஒரு வார்த்தை வந்ததும், சட்டுனு பூஜைல நாம சொல்லுவோமே, நாநா வித பரிமள பத்ர புஷ்பானி சமர்ப்பயாமி! அதுதான் ஞாபகம் வந்தது!


நீயெல்லாம் யாரு!! பெரிய ஆளாச்சே!


அப்படி இல்ல! நாநா விதானின்னா பலவிதமானன்னு அர்த்தம்! அப்புறம் இலைகளையும், மலர்களையும் சமர்ப்பிக்கிறேன்னு அர்த்தம்! முன்னாடி பொதுவா கேட்ட மந்திரங்கள் எல்லாம் இப்போ அர்த்தத்தோட புரியறது! அதோட grammarஉம்..! அவ்வளவு தான்!


அன்னிக்கு ராஜ்பத்னு இருந்த பேரை இப்போ kartavya pathன்னு மாத்தியிருக்கிறதா சொன்னீங்க இல்லையா?


ஆமா! பில்டிங் கூட kartavya bhavanன்னு இப்போ புதுசா கட்டியிருக்காங்க! 


ம்ம்ம்! Kartavyaன்னா கடமை! அங்கே அந்த ரோட்டுல கடமையைச் செய்யற அரசு அலுவலகங்கள் தான வரிசையா இருக்கு! அதுதான் ‘கடமைப் பாதை’! அப்புறம் bhavanam னா கட்டிடம்!


ம்ம்ம்…ம்ம்ம்… நடத்து…நடத்து…:)


______________


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

9/9/25

திங்கள், 8 செப்டம்பர், 2025

3BHK - திரை விமர்சனம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******