ஞாயிறு, 10 மார்ச், 2013

ஷங்குமுகம் கடற்கரை




திருவனந்தபுரத்தின் கடற்கரை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கோவளம் தான். ஆனால், கோவளம் தவிர இன்னும் சில கடற்கரைகள் இங்கே உண்டு. அதில் ஒன்று தான் திருவனந்தபுரம் விமானநிலையத்தின் அருகில் இருக்கும் ஷங்குமுகம் கடற்கரை.

நகரத்திலிருந்து சற்றே தொலைவில் அதிக அளவு மக்கள் நெரிசல்கள் இல்லாது அமைந்திருக்கும் இடம் தான் ஷங்குமுகம் கடற்கரை.  ராஜ குடும்பத்தினர்கள் உபயோகித்த கடற்கரை இது. இப்போதும் பத்மநாப ஸ்வாமி திருக்கோவில் உற்சவங்கள் சில இங்கே நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தியின் போது இங்கே தான் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்கிறார்கள். 

இந்த ஞாயிறு ஷங்குமுகம் கடற்கரையில் எடுத்த சில படங்களைப் பார்க்கலாம்!






என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா? அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 கருத்துகள்:

  1. அடுத்தமுறை செல்லும் போது இந்தக் கடற்கரைக்கு செல்ல வேண்டும்... நன்றி... படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு


  2. வணக்கம்!

    கடலலை போன்று கவியலை நல்ல
    சுடா்மிகு காட்சிகளைச் சூட்டு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன்.

      நீக்கு
  3. பல முறை சென்று ரசித்த இடம் ...

    அருமையான படங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  4. அடிக்கடி பார்த்து ரசித்த இடம் நண்பரே...
    ஆனாலும் உங்களின் புகைப்படங்கள்
    பார்க்கையில் புத்தம் புதிதாக....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு

  5. ஷங்குமுகம் கடற்கரை.சிறுவயதில் பார்த்தது.இப்போது உங்கள் பகிர்வின் மூலம் பார்த்து விட்டேன்.திருவனந்தபுரத்திற்கு மாமா அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
    அழகிய ஷங்குமுகம் படங்கள் பார்த்தவுடன் கடற்கரையும் அழைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      மீண்டும் சென்று வாருங்களேன்....

      நீக்கு
  6. புகைப் படங்களை எடிட் செய்து கொஞ்சம் BRIGHTNESS கொடுத்தபிறகு வெளியிட்டு இருக்கலாம். (மன்னிக்கவும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிப்பதெற்கு?

      சில சமயங்களில் நேரம் இல்லாத காரணத்தால் அப்படியே வெளியிடுவது வழக்கம். மேலும் இந்த புகைப்படங்கள் அந்தி சாயும் நேரத்தில் எடுத்தவை! அப்படியே இருக்கட்டும் என நினைத்தும் இதை மாற்றவில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  8. நான் இதுவரை பார்த்ததில்லை, படங்கள் அருமை...ஊருக்கு போனால் போயி பார்க்கவேண்டும் நண்பா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊருக்கு வரும்போது ஒரு முறை பார்த்துவிடுங்கள் மனோ.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.

      நீக்கு
  9. நேற்று ஒருமுறை தவறுதலாக வெளியாகி விட்டது என்று நினைக்கிறேன். தலைப்புப் பார்த்து வந்து ஏமாந்தேன்!

    புகைப்படங்களை ரசித்தேன். ஷங்குமுகம் பெயர்க்காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். படங்களை இணைப்பதற்கு முன்னரே வெளியாகிவிட்டது. அதனால் எடுத்து விட்டேன்.

      ஷங்குமுகம் - அரச பரம்பரையினர் சம்பந்தப்பட்டதால் அந்த பெயர் என நண்பர் சொன்னார். முழு காரணமும் கேட்டு சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. நண்பரே பதிவர் கூட்டத்தையும் ஏன் அலைத்துசெல்லக் கூடாது.அதற்காக தனிப் பயண ஏற்பாட்டினை செய்யுங்களேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைத்துச் சென்றுவிடலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

      நீக்கு
  11. படங்கள் மிகவும அருமையாக உள்ளன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  12. மிகவும் ரசித்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  14. கேரளாவே அழகுதான்!
    கடற்கரையும், அலையும் தெவிட்டாத அழகுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  15. புகைப்படங்கள் அனைத்தும் நேரில் சென்று பார்ப்பது போல காட்சியளிக்கிறது

    மிக அருமை நண்பரே வாழ்த்துக்கள் .....:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சிவா.

      நீக்கு
  16. ஷங்கு முகம் ஏனப் பெயர் வரக் காரணம் என்னவோ. கடலழகு மனத்ட்தை நிறைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷங்குமுகம் - அரச பரம்பரையினர் சம்பந்தப்பட்டதால் அந்த பெயர் என நண்பர் சொன்னார். முழு காரணமும் கேட்டு சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  19. மிகவும் அழகான படங்கள்.ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....