ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

கல்லணை - நேமம் - புகைப்பட உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும் - புத்தர்.  


******


சமீபத்திய தமிழகப் பயணத்தில் பெரியம்மா/பெரியப்பா அவர்களின் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வர வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் சில வேலைகள் எனக்காகவே காத்திருக்கும்! அப்படியான வேலைகளிலேயே அதிக நேரம் சென்று விடுகிறது.  இந்த முறையும் அப்படி நிறைய வேலைகள் - அதில் ஒன்று குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வர வேண்டிய வேலை.  அந்தப் பயணம் குறித்து பிறிதொரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஞாயிறில் சில நிழற்படங்கள் மட்டும் இங்கே ஒரு உலாவாக.  வாருங்கள் பார்க்கலாம், ரசிக்கலாம்!



கல்லணை - ஒரு தூரப் பார்வை...


எருக்கம்பூவின் மொட்டு....


மலர்ந்தும் மலராமல்....


வீதி உலா செல்ல தயாராக பிள்ளையார்....


ஆதி அலங்காரி அம்மன், நேமம்


சாலையோர மரம் ஒன்றின் அடிப்பாகம்... இரண்டு பேர் கைகளைக் கட்டிக் கொண்டு பிடித்தாலும் பிடிக்க முடியாத அளவு அடிப்பாகத்துடனான மரங்கள் இனி இருக்குமா?


ஆற்றை நோக்கி ஓடும் குதிரைகள்...


பேருந்தில் பயணித்தபடியே எடுத்த ஒரு படம்...


கல்லணை அருகே இராச ராச சோழன் சிலை...


கல்லணைக்கு முன் தளும்பி நிற்கும் நீர்....  சிலீரென்ற காற்றடிக்க அங்கே படித்துறையில் அமர்ந்து கொண்டு எடுத்த படம்....


கடையில் வாங்கிய வடை ருசித்தபடியே கிராமத்துப் பெரியவர் - மருந்துகள் எல்லாம் கொடுப்பவராம் - மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும்!


நண்பர்களே, பதிவின் வழி பகிர்ந்து கொண்ட படங்கள் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


22 கருத்துகள்:

  1. அனைத்துப் படங்களும் மிக அருமை.  குதிரைகளுக்கு நடையே பழக்கமில்லை போல!  கல்லணைக்குப் பக்கத்தில் கரிகாலன் சிலையை வைக்காமல் ராஜராஜன் சிலையை வைத்திருக்கிறார்கள்!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரிகாலன் சிலையும் ஒரு பக்கத்தில் இருக்கிறது ஸ்ரீராம். வேறு சிலைகளும் உண்டு. முன்பே ஒரு பதிவில் வெளியிட்ட நினைவு. பிறிதொரு சமயம் எல்லா படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அழகான படங்கள் விளக்கங்களும் நன்று ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமையானக் கல்லணைக்காட்சிகள்.
    ஓடும் குதிரைகள்.

    தெய்வ அலங்காரங்கள்.
    வெட்டாதே என்று கை குவிக்கும் மரம்,
    எல்லாமே நன்று அன்பு வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி வெளியிட்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அருமையான படங்கள். கல்லணை மிக அழகாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லணை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் அருமை. கல்லணை காட்சிகள் நன்றாக உள்ளது. எருக்கம்பூ மொட்டு அழகாக உள்ளது. பிள்ளையார் படமும், நேமம் அம்மன் படமும் தரிசித்துக் கொண்டேன். எருக்கம் மலர் பிள்ளையாருக்கு உகந்தது. ரசித்து வடை தின்னும் பெரியவர் நீங்கள் புகைப்படமெடுப்பதை உணரவில்லை போலும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவின் வழி வெளியிட்ட படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. படங்கள் அத்தனையும் அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி. ரசித்தேன். புத்தரின் வாசகம் உண்மையாக இல்லாமல் இருக்குமா! நல்ல வாசகம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. புத்தரின் வாசகம் ரொம்ப யதார்த்தம். நேற்று மகனோடு பேசிக் கொண்டிருந்த போது இதை ஒட்டிய பேச்சுதான் கொஞ்சம் ஓடியது. இன்று இங்கு வந்தால் புத்தரின் வாசகம்.

    கல்லணை புதுப்பிக்கப்பட்டு பளிச்சென்று இருக்கிறதே..ஆனால் என்னவோ பராமரிப்பு என்ற அடிப்படையில் இப்படிப் பெயின்ட் பூச்சுகள் ஏனோ மனதிற்கு இதமாக இல்லை.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      பராமரிப்பிற்காக பெயிண்ட் பூச்சுகள் - சரியில்லை தான். பராமரிப்பே இல்லாமல் இருக்கும் பல இடங்கள் நினைவுக்கு வ்ருகின்றன.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அழகான படங்கள்.
    நேமம் அன்னை படம் அழகு.
    முன்பு கல்லணையில் இராச ராச சோழன் சிலை கிடையாது, இப்போது புதிதாக வைத்து இருக்கிறார்கள் போலூம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      ஒரு பக்கம் கரிகாலன் சிலை இருந்தது. இராச ராச சோழன் சிலை புதியதா என்று தெரியவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....