ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை?



 
சமீபத்திய பயணத்தில் எடுத்த புகைப்படங்கள் சில இன்றைய ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவை அனைத்தும் ஒரு சாலையில் செல்லும் போது எடுக்கப்பட்டவை.

சாலையின் இருமருங்கிலும் எத்தனை எத்தனை மரங்கள், மலைகள், மலைகளினூடே தவழ்ந்து செல்லும் மேகங்கள் என ஒரு சுகானுபவம். அந்த சாலையிலேயே ஒரு மலையில் ஒரு சிறுவீடு அமைத்து தங்கிவிடலாமோ எனக் கூடத் தோன்றியது!

இதோ உங்கள் ரசனைக்கு…..


வாழ்க்கை வளைவுகள் நிறைந்தது என்று சொல்லாமல் சொல்கிறதோ இந்தப் பாதை…..


வளைவுகள் மட்டுமல்ல, பல சமயங்களில் நேர்க்கோடு போல சென்றுவிடவும் வாய்ப்புண்டு……


சாலையின் இருமருங்கிலும் மரங்களால் ஒரு மறைப்பு – என்னதான் காரில் ஏ.சி. இருந்தாலும் இந்த இயற்கையின் குளிர்ச்சிக்கு ஈடாகுமா?


மேகம் தழுவி இந்த மரங்களையும் மலையையும் கிச்சு கிச்சு மூட்டுகிறதோ?


மேகம் கருக்குது மழை வரப் பாக்குது வீசி அடிக்குது காத்து… காத்து… மழைக்காத்து!


இது போன்ற சாலையும் இந்த காரும் இருந்துவிட்டால், சென்று கொண்டே இருக்கலாம்!


மலைகளினூடே மேகக் குவியல்.


முக்கோணத்தின் வழியாக மலைகளும் மேகங்களும்.

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? இந்த இடத்திற்குச் சமீபத்தில் சென்று வந்தேன். சென்ற இடம் என்ன? அதைப் பற்றிய பயணக் கட்டுரைகள் உண்டா? என்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் – ஒரு பயணத் தொடர் பதிவுகளாக!

மீண்டும் உங்களனைவரையும் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 கருத்துகள்:

  1. அருமையான இயற்கைக் காட்சிகள். ரஸித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  2. அழகிய படங்களும் அதற்கேற்ப கருத்துக்களும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபலான்.

      நீக்கு
  3. மனதிற்கு இதமான காட்சிகள்...எந்த இடம் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  4. உங்களின் புகைப்பட திறமை அலாதியானது.அத்தனையும் அருமை .இந்த படங்கள் யாவும் கேரள வனப்பகுதியாக இருக்கும் என நினைக்கிறன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் இரா. குணசீலன்.

      நீக்கு
  6. பாதை எங்கே போனால் என்ன
    பாதை நூறு ஆனால் என்ன ...[எப்பூடி என் எதிர்ப்பாட்டு ?]
    படங்கள் எல்லாமே அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  7. வளையும் பாதையில் பயணிப்போருக்கு மரங்களும் வளைந்து நின்று நிழல் தருகின்றன. பாதைகள் வளைந்திருந்தாலும் பயணங்கள் இலக்கு மாறுவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  9. பாதை வளைந்தாலும் உன்
    பயணம் நேராகக் கொள்ளெனக்
    கீதைபோல் கூறும் பரந்த
    சாலைகள் சொல்லும் கதை!

    மேலே மரக்குடை விரித்து
    மென்தென்றல் தரும் குளிர்மை!
    மலையான் மணவாளனை
    மங்கைமஞ்சு கொஞ்சும் காட்சி!

    எத்தனை முறை நீங்கள்
    எப்படியெல்லாம் பார்க்கின்றீர்!
    வெட்கம் கொள்கிறதே அவை
    வந்திடுங்கள் விலகி விரைந்து!

    சகோ! உங்கள் அருமையான படங்களையும் காட்சிகளையும் பார்க்க
    எனக்குள் தோன்றிய சிறு மகிழ்ச்சிப் பிரதிபலிப்பு!

    படத்தின் சிறப்பை மழுங்கடித்துவிடுமென இதைக் கருதினால்
    வெளிவிடவேண்டாம். கவலையில்லை!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

    தொடர்ந்தும் இத்தகைய உங்கள் கைவண்ணங்களைக் காண ஆவலுடையேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தினைப் பார்த்து நீங்கள் எழுதியுள்ள கவிதை மிக நன்று. மிக்க மகிழ்ச்சி இளமதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. படங்கள் அழகு.கட்டுரைக்காகக் காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  11. எங்கே செல்லும் இந்தப் பாதை?

    சாலை அங்கேயேதான் இருக்கும் .. பயணம் செய்ய உதவியாக..

    அழகான பயணம்.. பாராட்டுக்கள்>>!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. அருமையான இயற்கைக் காட்சிகள்
    அற்புதமாக படமெடுத்து பதிவாக்கி
    அனைவரையும் அலைச்சலின்றி
    ரசிக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  14. என்ன நண்பரே இப்படி இடம் எது எனச் சொல்லாமல் சிறு இடைவேளையா?புகைப்படங்கள் அருமை! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  15. அதானே படங்களோட நிறுதிடுவீங்களோன்னு.. கட்டுரை சீக்கிரம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

      நீக்கு
  17. படங்கள் அருமை வெங்கட்..பயணக் கட்டுரைகளை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  19. பாதைகள் வளைந்தாலும் படங்கள் மிக அருமை. வாழ்த்துக்கள்.

    விஜய் டெல்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  20. அருமையான இயற்கைக் காட்சிகள்! எங்கே என அறிய ஆவல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  21. காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கிறது.

    சாலை இருபுறமும் மரங்களால் மறைப்பு நன்றாகவுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....