செவ்வாய், 24 மே, 2022

21ஆம் ஆண்டில் அடியெடுத்து…! - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பத்துப் பொருத்தங்களைப் பார்த்து 

ஒன்பது கோள்நிலைகளை அறிந்து

எட்டுத் திசையிலிருந்தும் உறவை அழைத்து

ஏழு அடி எடுத்து வைத்து

அறுசுவை உணவு படைத்து

பஞ்சபூதங்களும் சாடசியாக

நான்கு வேதங்கள் முழங்க,

மூன்று முடிச்சுகளால் 

இரு மனங்கள் ஒன்று சேரும்

ஓர் அற்புத பந்தத்தின் உறவு…. 

திருமணம்!

 

******




திருமண பந்தத்தால் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்களும், தாக்கங்களும் உணர்ந்து புரிந்து கொள்ளப்பட வேண்டியது. குடும்பம் என்னும் அமைப்பை விரிசலில்லாமல் பாதுகாக்க இருவரின் பங்கும் இதில் முக்கியமானது.


பாசமும்  நேசமும் மட்டுமல்ல சண்டை, சச்சரவு, கேலி, கிண்டல், விட்டுக் கொடுத்தல், அனுசரித்தல், மன்னிப்பு, பொறுமை காத்தல், உதவி செய்தல் என்று இவற்றையெல்லாம் கடந்து வந்தால் தான் திருமண உறவு மேம்படும்! அப்படிப்பட்ட 20 வருடங்களைக் கடந்து விட்டது எங்கள் இல்லறம்!


திருமணத்தைப் பற்றிய எந்த விதமான சிந்தனையோ, கனவுகளோ இல்லாமல் தான் திருமண வாழ்வில் இருவரும் இணைந்தோம். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்வை நகர்த்துகின்றோம்.


முதல் பத்து வருடங்கள் இருவரும் சேர்ந்தும், அடுத்த பத்து வருடங்கள் சந்தர்ப்ப சூழலால் ஆளுக்கொரு புறமாகவும் புரியாத புதிரான இந்த வாழ்க்கை நகர்கின்றது. வரும் வருடங்கள் நம்பிக்கை பாதையில்..!


காதலால் கசிந்துருகிய நாட்கள் மறைந்து, தற்சமயம் கடமைகளும் பொறுப்புகளும் தான் எங்களை  கொண்டு செல்கிறது! சராசரி மனைவியாக நான் அவரிடம் எதிர்பார்ப்பது குறைகள் காணாத வாழ்க்கையும், சிறு பாராட்டும், ஊக்குவிப்பும் தான்!


வருடங்கள் கடந்த பின்னும் கடமைகள் எல்லாம் முடிந்த பின்னும் இருவரின் தனிப்பட்ட நேரங்களும் கிடைக்கும் நாட்களும் வரும் என நம்பிக்கையில் நாட்களை கடத்துகிறோம். வாழ்வின் அடுத்த நிலைக்கு எங்களை தயார் செய்து கொள்கிறோம்.


இருபத்தியோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்களுக்கு உங்கள் வாழ்த்துகளும், ஆசிகளும் கிடைத்தால் மகிழ்வோம்.


நல்லதே நடக்கட்டும்! நல்லதே நடக்கும்!


*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

33 கருத்துகள்:

  1. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.  இந்நாளை ஒட்டித்தான் வெங்கட் திருவரங்கம் வந்திருக்கிறாரோ..   இருவரும் எப்போதும் இணைந்திருக்கும் காலம் சீக்கிரமே கனியவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி ஸ்ரீராம். நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  2. வாழ்த்துகள். எல்லாம் காரண காரியத்தோடுதான் நடக்கும். காலம் சீக்கிரம் கனியட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி நெல்லைத்தமிழன். நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  3. இருபத்தியோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தம்பதிகளுக்கு அன்பின் நல் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா. நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  4. // ஏழு ஆதி எடுத்து வைத்து.. // பிழை

    ஏழு அடி எடுத்து வைத்து.. - சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் இருந்த தவறை சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. பதிவில் பிழை திருத்தம் சொல்லி இருப்பதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாக எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது… தவறை சொன்னது சரி தான் துரை செல்வராஜூ ஐயா. மாற்றி விட்டேன்.

      நீக்கு
  6. இனிய திருமணநாள் வாழ்த்துகள் வெங்கட், ஆதி. இல்லறம் மேலும் மேலும் இனிமையாக உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேற டும். ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி ரஞ்சனிம்மா. நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  7. அன்பின் ஆதிக்கும், வெங்கட்ஜிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி காயத்ரி சந்திரசேகர் ஜி. நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  8. உங்கள் இருவருக்கும் எங்கள் இதயம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி இராமசாமி ஜி. நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி தனபாலன். நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  10. ஆதி, வெங்கட்ஜி இருவருக்கும் மனமார்ந்த இனிய திருமணநால் வாழ்த்துகள்! God Bless! வெங்கட்ஜி யும் இருக்கிறார்! எஞ்சாய் மாடி!!

    ஆதி அப்ப அடுத்த பதிவில் இன்றைய மெனு எல்லாம் வரும் என்று நினைக்கிறேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி. மெனு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. எப்போதும் போல் சமையல் - கூடுதலாக வடையும் பாயசமும். நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  11. உங்கள் எல்லோரது விருப்பமும் விரைவில் மெய்ப்பட வேண்டும்! வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. இதுபோல் இன்னும் பலப்பல திருமண ஆண்டு நிறைவுகளைக் கொண்டாடவேண்டுமென்று மனமார வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி இராய செல்லப்பா ஐயா. நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  13. இறைவன் அருளால் அனைத்தும் கைகூடும். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    உங்கள் இருவருக்கும் என் உள்ளங்கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துகள். இனி வரும் காலங்களிலும், இருவரும் சேர்ந்திருந்து இது போல் சிறப்பாக திருமணநாள் கொண்டாட இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி. நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  15. இனிய திருமணநாள் வாழ்த்துகள் . வாழ்க வளமுடன் நலமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி. நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் உளங்கனிந்த நன்றி அரவிந்த். நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....