அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ஸ்ரீரமண மகரிஷி - பாலகுமாரன் - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
மகளின் பிறந்த நாள் அன்று (04.04.2026) நான் முகநூலில் எழுதிய பகிர்வு - இங்கே ஒரு சேமிப்பாகவும், முகநூலை என்னைத் தொடராதவர்களின் வாசிப்பிற்காகவும்….
அன்பு மகள்…!!
அம்மா! இன்னிக்கு HOD மேம் என்னை ஜூனியர்ஸுக்கு எல்லாம் கிளாஸ் எடுக்கச் சொல்லிட்டாங்க! ரெண்டு பீரியட் நான் தான் அவங்களுக்கு கிளாஸ் எடுத்தேன் தெரியுமா!
சூப்பர் கண்ணா! கிளாஸ் எடுத்தப்போ உனக்கு எப்படியிருக்கு?? உன் ஜூனியர்ஸ் எல்லாம் என்ன சொன்னாங்க??
ம்ம்ம்! எனக்கும் கிளாஸ் எடுத்தது பிடிச்சிருந்தது! ஜூனியர்ஸும் அக்கா நீங்க சொன்னது எல்லாமே சூப்பரா புரிஞ்சதுன்னு சொன்னாங்க அம்மா!
வாவ்! உனக்குள்ள எவ்வளவு திறமை இருக்கு பாரு கண்ணா!
உனக்கு பிடிச்சிருந்தா நீ futureல லெக்சரராக கூட ஆகலாம்! அப்புறம் உன்னோட ஃபீல்டுல டிசைனராகலாம்! உன்னோட தமிழ் ஆர்வமும், உச்சரிப்பும் நல்லாருக்கு! அதனால நீ RJ ஆகவும் ட்ரை பண்ணலாம்!
சட்டென்று ஒருநாள் எல்லாமே மாறிவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது இவளைப் பார்க்கும் போது! காலம் அவ்வளவு வேகமாக ஓடுகிறதா என்ன?? நான் தான் அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறேனா! ஒவ்வொரு நிமிஷமும் பார்த்துப் பார்த்து வளர்த்த பெண்ணா இவள்!! இன்னும் இவளின் சுட்டித்தனத்தையும், மழலை மொழியையும் அல்லவா நான் பிதற்றிக் கொண்டிருக்கிறேன்!!
இப்போது தான் பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்த்து விட்டு வந்ததைப் போன்ற உணர்வு! ஆனால் காலச்சக்கரத்தின் சுழற்சியில் இதோ அவள் ஒரு இளங்கலை பட்டதாரியாக மாறப் போகிறாள்! அவளுக்கான வாய்ப்புகளும், வாழ்வும் காத்துக் கொண்டிருக்கிறது! ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும், அவளுக்காக மனமுருக பிரார்த்தித்துக் கொள்ளவும் பெற்றோராக நாங்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பு மகளுக்கு வாழ்வில் உள்ள எல்லா நலங்களும் வளங்களும் கிடைக்கப் பெற்று நலமோடு நூறாண்டு காலம் இனிய வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!
இன்றைய நாளில் எங்கள் வாழ்த்துகளோடு உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் மனமார்ந்த ஆசிகளும் அவளுக்கு கிடைத்தால் மகிழ்வோம்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா!
அம்மாவும் அப்பாவும் ❤️ ❤️
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
7 ஏப்ரல் 2026



ரோஷ்ணிக்கு மறுபடி பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வாழ்த்துகிறேன். எவ்வளவு வளர்ந்தாலும் பெற்றோர் கண்ணில் அவர்கள் குழந்தைகள்தான். "டெல்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்கு bidda தான்" (குழந்தை) என்பார்கள். ரோஷ்ணிக்கு ஒரு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉண்மை தான் சார். எந்த வயதிலும் பெற்றோருக்கு அவர்கள் குழந்தையே .
நீக்குஎங்கள் மகளுக்கு வாழ்த்து சொல்லி ஆசிகளை வழங்கியதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீராம் சார்.
மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் தம் எண்ணம் ஆசை போல எதிர்கால வாழ்வு சிறக்கட்டும்.
பதிலளிநீக்குஎங்கள் மகளுக்கு வாழ்த்து சொல்லி ஆசிகளை வழங்கியதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் நெல்லை சார்.
நீக்குபடங்கள் அழகு. முதல் படம் எதனால் அப்படி டிசைன் செய்தீர்கள்? மகளின் ப்ரொஃபஷன் போல இல்லையே என்ற சந்தேகம் வந்தது.
பதிலளிநீக்குஒவ்வொரு உயிரும் அதன் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது. மற்றவர்கள் எல்லோரும் அதற்கான felicitatorsதாம். அவர் எதிர்காலம் நன்றாக இருக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
ஆசிரியர் எனக் குறிப்பிட்டதற்கு செயற்கை நுண்ணறிவு தந்த படம். அழகாக இருந்ததால் அப்படியே பகிர்ந்து விட்டேன்.
நீக்குஎங்கள் மகளுக்கு வாழ்த்து சொல்லி ஆசிகளை வழங்கியதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் நெல்லை சார்.
ரோஷ்ணிக்கு மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகள், ஆதி!
பதிலளிநீக்குபடங்கள் சூப்பராக இருக்கு
ஒன்று நம் குழந்தைகள் எத்தனை வளர்ந்து பக்குவம் அடைந்தாலும் நமக்குக் குழந்தைகள்தான். எப்படி அவர்களின் சிறு வயதையும், இளம் பருவத்தையும் மறக்க முடியும் அதுவும் ஒரு தாயாக இல்லையா?
அவளின் எதிர்காலம் மிக நன்றாக அமையும். நிறைய திறமைகள் இருப்பதால். கூடவே வீட்டிலும் நல்ல அன்பும் ஆதரவும் இருப்பதால். அது மிக முக்கியம்! எனவே ரோஷ்ணியின் எதிர்காலம் நன்றாக அமையும். வாழ்த்துகள்!
கீதா
உண்மை தான். என்னால் அவளின் மழலை மொழியையும், சுட்டித்தனங்களையும் மறக்க முடிவதில்லை.
நீக்குஎங்கள் மகளுக்கு வாழ்த்து சொல்லி ஆசிகளை வழங்கியதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் கீதா சேச்சி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குரோஷ்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
ரோஷ்ணியின் எண்ணங்கள் யாவும் ஈடேற இறைவன் அருள்புரிவார்.
உங்கள் அன்பும், ஆதரவும் வாழ்த்துக்களும் வழி நடத்தும்.
முகநூலில் படித்து வாழ்த்தினேன்.
படங்கள் அழகு.
எங்கள் மகளுக்கு வாழ்த்து சொல்லி ஆசிகளை வழங்கியதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் கோமதிம்மா.
நீக்குரோஷ்ணிக்கு மீண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய பெற்றோர் தரும் ஊக்கத்துடன், இறைவனின் ஆசிகள் உடனிருக்கும்.
பதிலளிநீக்குஎங்கள் மகளுக்கு வாழ்த்து சொல்லி ஆசிகளை வழங்கியதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நீக்குரோஷ்ணி வாழ்வில் எல்லா கனவுகளும் நனவாகட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎங்கள் மகளுக்கு வாழ்த்து சொல்லி ஆசிகளை வழங்கியதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ.
நீக்கு