ஞாயிறு, 14 மார்ச், 2021

சுந்தர் நர்சரி - நிழற்பட உலா - மூன்று



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு காஃபி வித் கிட்டு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை ரசித்ததொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அப்பா என்பது ஒரு அதிசயமான புத்தகம் - அது கிடைக்கும் வயதில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை! புரிந்து கொள்ள நினைக்கும் போது கிடைப்பதில்லை!


*****




தில்லியில் உள்ள சுந்தர் நர்சரி சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களையும், அங்கே எடுத்த நிழற்படங்களையும் இது வரை இரண்டு பதிவுகளாக பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். சுந்தர் நர்சரி குறித்து இது வரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே!


தில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழகிய பூங்கா



சுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று



சுந்தர் நர்சரி - நிழற்பட உலா - இரண்டு


மேலே குறிப்பிட்ட பதிவுகளை இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால், கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து, பார்த்து ரசிக்கலாம்.  இதோ இந்த வார ஞாயிறில் சுந்தர் நர்சரி பகுதியில் எடுத்து இன்னும் இருபது படங்கள் நிழற்பட உலாவாக உங்கள் பார்வைக்கு! பார்த்து ரசிக்கலாம் வாருங்கள்.

























நண்பர்களே, இந்த வார நிழற்பட உலாவில் பகிர்ந்த நிழற்படங்களை ரசித்தீர்களா? சுந்தர் நர்சரி நிழற்பட உலா இந்த வாரத்துடன் நிறைவுற்றது. அடுத்த ஞாயிறில் வேறு ஒரு நிழற்பட உலா தொடரும்! இன்றைய பதிவு, படங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே!  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


20 கருத்துகள்:

  1. வாசகம் உண்மை சொல்கிறது.

     படங்கள் வழக்கம் போல தெளிவு, அருமை.  "பூக்களே வண்ண வண்ணக் கவிதைகள் படைக்கும்..   பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்..."   எஸ் பி  பி பாடல் ஆரம்ப வரிகள் நினைவுக்கு வருகிறது! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகம் கண்களில் நீரை வரவழைத்தது. எத்தனை உண்மையான வரிகள்.

    அத்தனைப் பூக்களும் ஒன்றையொன்று தோற்கடிக்கும் விதத்தில் அவ்வளவு அழகாக இருக்கின்றன.கடவுளின் படைப்பில் என்ன ஒரு விந்தையென்று ரசித்துப் பார்த்தேன். கற்கள் கொண்டு அமைத்த பூ,மற்றும் நாகம் மாதிரியான தயாரிப்புகளும் அழகாக உள்ளது. நாங்கள் ரசிக்கும் வண்ணம் அழகாக அத்தனை மலர்களையும் அருமையாக படம் எடுத்து எங்கள் பார்வைக்கு கொண்டு வந்து தந்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் வழி சொன்ன வாசகமும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படங்களைவிட எடுத்த கோணங்கள் அழகு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களின் கோணங்கள் - பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாசகம் மிக அருமை சார்.
    படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் படங்களும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
  6. வாசகம் அருமை! சத்தியமான உண்மையும்கூட!
    புகைப்ப‌டங்கள் மிக மிக அழகு. முதலாவதாய் இருக்கும் ரோஜா மலர் கொள்ளையழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாசகமும், பூக்களின் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்த வாசகமும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கண்களுக்கு விருந்து. அழகிய படங்கள். வாசகம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்த வாசகங்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. .சுந்தர் நர்சரியை நேரில் பார்த்த உணர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....