திங்கள், 27 ஜனவரி, 2014

ஓவியக் கவிதை – 18 – திரு சிவனேசன்



டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பதினெட்டாம் கவிதை – இதுவே கடைசி கவிதை!

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதையை எழுதி மின்னஞ்சல் மூலம் அனுப்பியது திரு சிவனேசன் என்பவர். இவர் தனிமரம் எனும் வலைத்தளத்தில் எழுதுகிறார். மின்னஞ்சலில் அனுப்பிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திரு சிவனேசன் எழுதி அனுப்பிய கவிதை....

அந்திப்பொழுதில் அன்பை ஆழ்கடல் போல
அள்ளித்தரும் அருமை நாயகன் என் அருகில்.
அவர் கரம் கொண்டு அணிந்து அழகு
பார்க்கத்துடிக்கும் அல்லிப்பூக்கள் ஆயிரம்
அன்று மலர்ந்தவை போல அவரிடம்
சொல்ல ஆசைகள் கோடி அருவியின்
அலைபோல ஆனாலும் அந்தக்கனப்பொழுதிலும்
அன்புக்கூடல் அதைத்தடுக்கின்றதே.
ஓட்டுக்கேட்கும் அலைவரிசை ஒலிப்பதிவு
அரசு போல அருகில் வளரும் தனிமரம்
அதை வேட்டையாடுங்கள் முதலில்
ஆம் ஆத்மி கட்சிபோல
அரசியின் கட்டளை இது அரசே!

என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பதினெட்டாம் கவிதை இது. கவிதை படைத்த திரு சிவனேசன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!

 பட உதவி:  கூகிள்......

டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே இங்கே பதிவு செய்தேன். இன்றைய பகிர்வும் சேர்த்து மொத்தம் 18 கவிதைகள்! இந்த கவிதைகளுக்கான அழைப்பிதழ் கொடுக்கும்போதே பொற்கிழி கொடுக்க ஆசை என்று சொல்லி இருந்தேன். உங்களுக்கு பொற்காசுகள் கொடுக்க ஆசை தான்! இப்போதைக்கு கீழே பொற்காசுகள் குவித்து வைத்துள்ளேன். 

 பட உதவி:  கூகிள்......

கவிதைகள் அனுப்பிய பதினெட்டு பேர்கள் மட்டுமல்லாது கருத்துகள் பகிர்ந்தவர்களும் எடுத்துக்கொள்ளலாம்! எடுக்க எடுக்க குறையாது இந்த பொற்காசுக் குவியல்!

கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:
















ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஜனவரி மலர்களே ஜனவரி மலர்களே....



பகவதி படத்தில் ஒரு பாடல் – ஜூலை மலர்களே, ஜூலை மலர்களேஎல்லாரும் கேட்டு இருப்பீங்க தானே.....  அந்த பாட்டு கேட்கறதுக்கு பிடிக்கும்.  அது என்ன ஜூலை மலர்கள் என ஆரம்பிக்கிறது, ஜூலையில் தான் பூக்கள் பூக்குமான்னு யோசிக்கக் கூடாது. அந்த படம் எடுத்த வெளிநாட்டில் ஜூலைல பூக்கள் பூக்குமா இருக்கும்!

இங்கே, அதாவது தில்லியில், ஜனவரி மாதத்தில், ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் வரும் மாதத்தில், விஜய் சௌக் பகுதிகளில் சாலையின் இரு மருங்கிலும் அழகிய பூக்கள் பூத்துக் குலுங்கும். டிசம்பர் மாதத்திலிருந்து இந்த செடிகளை கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள் இதனை பராமரிக்கும் பணியாளர்கள்.  சென்ற வாரம் இந்த இடங்களில் இருக்கும் பூக்களை படம் எடுப்பதற்காகவே மதிய நேரத்தில் சென்று வந்தேன் – மாலைகளில் விரைவில் இருட்டி விடுவதால்!

அப்படி எடுத்த பூக்கள் – பல வண்ணங்களில் ஒரே பூக்கள் – இன்றைய பதிவில் உங்கள் கண்களுக்கு விருந்தாய் இங்கே பகிர்கிறேன்.












என்ன நண்பர்களே, இந்த ஜனவரி மலர்களை ரசித்தீர்களா? மீண்டும் வேறு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

சனி, 25 ஜனவரி, 2014

ஓவியக் கவிதை – 17 – திரு பரதேசி @ நியூயார்க்



டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பதினேழாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய பரதேசி @ நியூயார்க் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

பரதேசி @ நியூயார்க் எனும் வலைப்பூவில் எழுதி வரும் நண்பர், தனது தளத்தில் அவர் செய்த பயணங்கள் குறித்து சிறந்த கட்டுரைகள் எழுதி வருகிறார். சில மாதங்களாகத்தான் அவரது பதிவுகளைப் படிக்கிறேன் – நண்பர் மதுரைத்தமிழன் அவர்கள் அவரது தளத்தில் அறிமுகம் செய்த பிறகு.  சமீபத்தில் அவர் எழுதிய போர்ட்டரிக்கோ பயணம் [மொத்தம் 11 பகுதிகள்] எனக்கு மிகவும் பிடித்தது. தற்போது காரைக்குடி பயணம் பற்றி எழுத ஆரம்பித்து இருக்கிறார். இதுவரை இவரது பதிவுகள் படிக்காத நண்பர்கள் படிக்கலாமே.

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு நண்பர் பரதேசி@நியூயார்க் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

தலைவன் -     பூவைச்சூடிய பூவையே
                        தொடாமல் மலர்ந்த பாவையே, நான்
                        தொட்டாலும் வெட்கம், தொடாமல்
                        விட்டாலும் துக்கம் !
                        என்னிடம் ஏனடி நாணம்?

தலைவி -        எங்கே போனீர் இத்தனை நாள்?
                        மறந்து போனீரோ எந்தனை நீர்,
                        பேரிகை சத்தம் கேட்டு சென்ற நீர், இந்தக்
                        காரிகை மறந்து போனதென்ன நியாயம்?

தலைவன் -     போருக்குப் போனது என் கடமை, ஆனால்
                        சொல்லாமல் போனது என் மடமை !
                        வெற்றி நோக்கி சென்றது என் உடல், உன்னையே
                        சுற்றி வந்தது எப்போதும் என் உள்ளம்!.
                       
                      நான்
                      வாளெடுத்து வீசும் போது , உன்
                        மீன்விழி பேசும் ஞாபகம் !
                        அம்பெடுத்து சுழற்றும் போது, உன்
                        புருவங்கள் மிரட்டும் ஞாபகம்!
                        கட்டாரி உருவும் போது, வளைந்த உன்
                        கட்டழகுப்பருவம்தான் என் ஞாபகம்
                        ஆக என்னோடுதான் நீ வந்தாய்.
                        வெற்றிக்கனியை நீயேதான் தந்தாய்.
                        போர்க்களத்தில் வெற்றி சூடிய எனக்கு உன்
                        மார்க்களத்தில் என்றும் தோல்விதான்.

தலைவி -        மன்னவனே
                     வார்த்தையில் கூட வேண்டாம் உனக்கு தோல்வி
                        வந்துவிட்டேன் நடத்தும் காதல் வேள்வி.

என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பதினேழாம் கவிதை இது. கவிதை படைத்த நண்பர் பரதேசி@நியூயார்க் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!

 பட உதவி: கூகிள்.

டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்: