வியாழன், 26 டிசம்பர், 2013

ஓவியக் கவிதை – 4 – திருமதி பி. தமிழ்முகில் நீலமேகம்

டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது நான்காம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திருமதி பி. தமிழ் முகில் நீலமேகம் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

முகிலின் பக்கங்கள் எனும் வலைப்பூவில் கவிதைகள் படைத்து வரும் திருமதி தமிழ் முகில் அவர்கள் பக்கத்தில் நிறைய கவிதைகள் இருக்கின்றன. வல்லமை இணைய இதழில் அவரது படைப்புகள் பல வெளி வந்திருக்கின்றன. தொடர்ந்து கவிதைகள் படைத்திட எனது வாழ்த்துகள்.

திருமதி தமிழ் முகில் அவர்கள் மேலே கொடுத்த ஓவியத்திற்கு எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

கார் முகிலென நங்கையவள்  குழல்
காற்றில் அலை பாய
கண்ணாளன் சூட்டிய மலர்ச் சரமோ
கானகமெங்கும் மணம்  பரப்ப
காளையவன் மனமும் கன்னியவள்
கவின்தனில்  மயங்கி பின் தாவ
காரிகையோ வெட்கத்தில் முகம் சிவக்க
கனியிதழ் வார்த்தைகள் எல்லாம்
கண்ணாமூச்சி காட்டி ஒளிந்து கொள்ள
கண்களின் சம்பாஷனைகள் அவ்விடம் அரங்கேற
காதல் பார்வையோடு மெளனமே மொழியாகிட
காசினியே கைகளில் தஞ்சம் அடைந்திட
காதல் மொழி  கிளிகள் இரண்டின்
கானமழை நனைத்திடுமே -
கானகத்தை காதல் மழையிலே !!!

-    திருமதி பி.தமிழ் முகில் நீலமேகம்

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான நான்காம் கவிதை இது. கவிதை படைத்த திருமதி பி. தமிழ் முகில் நீலமேகம் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!



வரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. அதாவது இந்த வருடத்தின் கடைசி நாள்! இன்னும் சில நாட்களே இருக்கிறது வருடம் முடிய! கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


60 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.
    சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் சகோதரரே !

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. சிறப்பாக இருக்கிறது கவிதை. நானும் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் சகோதரரே !

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன். ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அனுப்பி விடுங்கள்.....

      நீக்கு
  3. அருமை
    திருமதி பி.தமிழ் முகில் நீலமேகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் ஐயா ....

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  4. நல்லதோர் வாய்ப்பளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில்.....

      நீக்கு
  5. ஓவியத்திற்கிணையான அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் ஐயா......

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  7. கானகத்தே பொழியும் கான மழையில்...முதல் பாடலாக 'கண்களில் வார்த்தைப் புரியாதோ 'பாடல் இருக்குமோ ?
    +1




    +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  8. அருமை! இரசித்தேன்! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது இரசனைக்கு நன்றிகள் சகோதரரே !

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  9. தமிழ் முகில் அளித்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
    2. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நன்றிகள் தோழி.

      நீக்கு
  10. காதினிலே கானமழை! கார்மேகம் பொழிந்ததென
    கண்ணிமை குடைவிரித்துக் கவிமழையை சுவாசித்தேன்!
    கார்முகில் தந்ததுவோ? காளமேகம் தந்ததுவோ? இல்லை இது
    கவிதமிழ்முகில் நீலமேகம் தந்ததென்றார்! வாழ்க.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அண்ணாச்சி... கவிதையிலேயே பின்னூட்டம். ரசித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
    2. கவிதையின் மூலம் அழகிய வாழ்த்தொன்றை வழங்கிய சகோதரருக்கு நன்றிகள் பல.

      நீக்கு
  11. கவிதை நல்லா இருக்கு. எல்லோருக்கும் ஒரேப் பூங்கொத்தா!? பூங்கொத்தை மாத்துங்கப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றிடலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி....

      நீக்கு
    2. ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் கருத்துரைக்கு நன்றிகள் தோழி.

      நீக்கு
  12. அழகிய கவி வரிகள்!
    சிறப்பான கவிதை! மிக அருமை!
    தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    பகிர்வினுக்கு உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
    2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      நீக்கு
  13. ரசனையான கவிதை. வெட்கத்தில் முகம் சிவப்பதெல்லாம் கவிதையில் மட்டுமே இனி சாத்தியம்! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கவிதையில் மட்டுமே சாத்தியம் ! :))) - உண்மை.

      நீக்கு
    2. தங்களது ரசனைக்கு நன்றிகள் சகோதரரே !!!

      நீக்கு
  14. ஓவியமும் கவிதையும் அற்புதம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  15. //காதல் மொழி கிளிகள் இரண்டின்
    கானமழை நனைத்திடுமே -
    கானகத்தை காதல் மழையிலே !!!//

    அருமையான வரிகள். ;)))))

    திருமதி பி.தமிழ் முகில் நீலமேகம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
    2. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
    2. நல்ல கவிதையென சொல்லி ஊக்கமூட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
  17. அழகிய காதல் கவிதை. தமிழ் முகிலுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      நீக்கு
  18. கவிதை அருமை... வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் கவிதை ஆசிரியருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
    2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே!!

      நீக்கு
  19. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

    பதிலளிநீக்கு
  20. அருமையான ஒரு காதல் கவிதை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
    2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே!!

      நீக்கு
  21. கா வரிசையில் கவிதை படித்திருக்கும் திறன் பாராட்டுக்குரியது.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆவி.

      நீக்கு
    2. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....