ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

கேதார் தால், உத்திராகண்ட் - நிழற்பட உலா - பகுதி ஆறு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

 

பேசும்போது வார்த்தைகளை கவனமாக பேசுக ஏனெனில் பேசும் வார்த்தைகள் இதயத்தை புண்படுத்தவும் செய்யும்; இதயத்தை பழுது பார்க்கவும் செய்யும்.

 

******

 

கேதார் தால் பகுதியில் அலுவலக நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் எடுத்த நிழற்படங்களை சென்ற சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  அந்தப் பயணம் குறித்த பயணக் கட்டுரை தொடர்ந்து இங்கே வெளி வந்து கொண்டிருந்தது. நிழற்படங்களின் வரிசையில் இந்த வாரமும் கண்ணுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் சில படங்கள் இந்த ஞாயிறிலும் தொடர்கிறது.  கேதார் தால் - நிழற்பட உலா - முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! மூன்றாம் பகுதி இங்கே! நான்காம் பகுதி இங்கே!  ஐந்தாம் பகுதி இங்கே! வாருங்கள் இந்த வாரம் இன்னும் சில படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.






















 

நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே... விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

19 கருத்துகள்:

  1. "வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்...."
    குளுமை.


    படங்கள் யாவையும் ரசித்தேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வெள்ளிப்பனிமலை மீது உலாவலாம் வாருங்கள்.... :)

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. சற்றே வித்தியாசமாக இருந்தாலும் படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பனி படர்ந்த மலைகள் பார்க்கவே குளிர் எடுக்கிறது . அருமையான புகைப்படங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. இயற்கை அன்னையின் கொடை அனைத்தும் பிரமிப்பு தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. வாசகம் அருமை.
    இன்றைய படங்கள் எல்லாம் அற்புதம்.
    பனி இல்லா பாறை படமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  6. அனைத்துப் படங்களும் அருமை. நேரில் பார்க்க எவ்வளவு இரம்மியமாக இருந்திருக்கும் என உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் பார்க்க இன்னும் அதிக இரம்மியம் தான் ராமலக்ஷ்மி. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  7. மிகவும் அழகான படங்கள். நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. இப்படிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். மிக்க நன்று உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உங்களுக்கும் அமையட்டும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  8. வெங்கட்ஜி முதல் படமே அட்டகாசம். இப்போதுதான் பார்க்கிறேன் ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. பாறையில் அவர்கள் மூன்று பேரும் கை நீட்டி நின்று கொண்டிருக்கும் போடம் சூப்பர்.

    ஏரியில் ஒரு பகுதி பனி உறையாமல் தண்ணீர் தெரிவது போல இருக்கிறது. பனியும் தண்ணீரும் என்று மிக அழகாக இருக்கிறது.

    ஒவ்வொருபடமும் என்ன சொல்ல? வார்த்தைகள் இல்லை ஜி. நேரில் செல்லும் ஆசையைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது.

    அனைத்தும் மிக மிக ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மனம் மகிழ்ந்தது. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....