தமிழ்
வலைப்பதிவர்கள் சந்திப்பு முதல் இரண்டு வருடங்கள் சென்னையிலும் மூன்றாம் வருடம்
மதுரையிலும் நடந்திருக்க, நான்காம் வருடமான இவ்வருடம் புதுக்கோட்டையில் நடைபெறப்
போகிறது. விவரங்கள் கீழே:
நாள்: அக்டோபர் மாதம்
11-ஆம் நாள் [ஞாயிறு]
நேரம்: காலை 09-00 மணி
முதல் மாலை 05-00 மணி வரை.
இடம்: ஆரோக்கிய மாதா
மக்கள் மன்றம், Be Well மருத்துவமனை எதிரில்,
ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை.
தமிழகத்தில்
இருக்கும் பதிவர்களும், வெளியூர் பதிவர்களும் இப்பொழுதே புதுக்கோட்டை செல்ல
ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வசதியாக முன்னரே அறிவித்திருக்கிறார்கள். சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் தங்களது
வருகையை உறுதி செய்ய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் படிவம் வெளியிட்டு இருக்கிறார். கலந்து
கொள்ள விருப்பமுடையவர்கள் படிவத்தினை பூர்த்தி செய்யலாம்!
புத்தக
வெளியீடுகள், குறும்பட வெளியீடுகள், விருதுகள் வழங்குதல் என பல சிறப்பான
நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். விழாவிற்கு வருபவர்கள் அனைவருக்கும்
தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015 எனும் நூலை தர இருக்கிறார்கள். வர முடியாத வலைப்பதிவர்களுக்கு மின் புத்தகமாக
தரவிறக்கம் செய்து கொள்ள வசதியும் தந்தால் நல்லது! விழா பற்றிய தகவல்கள் தொடர்ந்து
புதுக்கோட்டை பதிவர்களின் தளங்களில் வெளியிடுவார்கள்.
சென்னையில்
நடந்த இரண்டாம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்பதிவில் நான் எடுத்த பதிவர்களின் புகைப்படங்கள் எனது தளத்தில் உண்டு! பார்க்க
விரும்புவர்களின் வசதிக்காக சுட்டிகள் கீழே:
பதிவர்கள் சந்திப்பு–தேவையா?–புகைப்படங்கள் தொகுப்பு - 7
பதிவர்சந்திப்பு - புத்தக வெளியீடும் நினைவுப் பரிசும் - புகைப்படங்கள் தொகுப்பு - 8
பதிவர்சந்திப்பு - புத்தக வெளியீடும் நினைவுப் பரிசும் - புகைப்படங்கள் தொகுப்பு - 8
கடந்த
முறை மதுரையில் நடந்த மூன்றாம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல்.
இம்முறையும் கலந்து கொள்வது கடினம். அலுவலகத்தில் தணிக்கை ஆரம்பிக்க இருக்கிறது.
ஆரம்பித்து விட்டால் விடுமுறை எடுப்பது கடினம். மேலும் இந்த மாதத்தின் இறுதியில் சில
சொந்த வேலைகளுக்காக ஒரு வார விடுப்பில் திருச்சி வர முன்பதிவு செய்திருக்கிறேன். ஒரு
மாதத்திற்குள் மீண்டும் விடுப்பு கிடைப்பது கடினம்! கடைசி நேரத்தில் வந்தாலும்
வரலாம்!
Five Star Blogger Award
முன்னணி
பதிவர்களில் ஒருவரான திரு மதுரைத் தமிழன் அவர்கள், தனது தளமான “அவர்கள் உண்மைகள்” எனும் தளத்தின் மூலம் Five Star Blogger என சில பதிவர்களை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிமுகம் செய்ய இருக்கிறார்.
அவர் தொடர்ந்து படிக்கும் பதிவர்களை அறிமுகம் செய்து “Five Star Blogger” என்று தனது
தளத்தில் அப்பதிவரின் வலைப்பூவிற்கான சுட்டியும் தரப் போவதாக அறிவித்து
இருக்கிறார்.
முதல் Five
Star Blogger-ஆக அவர்
தேர்ந்தெடுத்திருப்பது என்னையும் எனது வலைப்பூவினையும்! என்று இங்கே
சொல்லிவிடுகிறேன்! அவரது தளத்தில் இரண்டு வாரங்களுக்கு விருது பெறும் பதிவர்களின்
வலைப்பூவிற்கான சுட்டி இருக்கும். இந்த
இரண்டு வாரமாக எனது தளத்தின் சுட்டி இருக்கிறது. வரும் வாரத்தில் இந்த இடத்தில்
வேறொரு பதிவரின் தளத்திற்கான சுட்டி இருக்கும்.
எனது தளம் பற்றி புகழ்ந்து எழுதி இருப்பது பார்த்து
மனதில் நிறைந்த மகிழ்ச்சியும், ஒரு ஓரத்தில் கொஞ்சம் பயமும் வந்தது! தொடர்ந்து
நல்ல பதிவுகளை தர வேண்டுமே என்ற பயம் தான்! முடிந்த வரை படிப்பவர்களுக்கு பயனுள்ள
வகையில் தான் பதிவுகள் எழுதுகிறேன் என்றாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுமே
என்கிற பயம் தான்!
இது வரை 906 பதிவுகளும், கிட்டத்தட்ட 5 லட்சம் [4.83
லட்சம்] பக்கப் பார்வைகள் பெற்றிருந்தாலும் மேலும் மேலும் பதிவுகள் வெளியிடும்
எண்ணம் குறையவில்லை. அலுவலகத்தில் ஆணிகள்
அதிகமென்பதால் ஒவ்வொரு நாளும் பதிவுகள் எழுதுவது கடினமாக இருக்கிறது. முடிந்த போது பதிவுகள் வெளியிடுகிறேன்.
முதல் Five
Star Blogger ஆக என்னைத்
தேர்ந்தெடுத்த மதுரைத் தமிழன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. வரும் வாரத்தில்
அடுத்த Five Star Blogger-ஆக தேர்ந்தெடுக்கப் படும் நண்பருக்கு
வாழ்த்துகள்! அது யார் என்பது மதுரைத் தமிழனுக்கே வெளிச்சம்!
விடை பெறுமுன்னர் உங்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக புதுக்கோட்டை
பதிவர்கள் சந்திப்பிற்கு உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள திண்டுக்கல் தனபாலன்
தளத்தின் சுட்டியை மீண்டும் ஒரு முறை இங்கே தருகிறேன்!
சகோ
தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் தனது ஒவ்வொரு பதிவிலும் சொல்வதைச் சொல்லி
பதிவினை முடிக்கலாம்!
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!






















