வியாழன், 4 ஜூலை, 2024

கண்கவர் படங்களும் அதற்கேற்ற சில வரிகளும் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட துவாரகா-சோம்நாத் பயணத் தொடர் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சமீப நாட்களாக வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்தரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்று பார்த்தேன். அப்படி முயற்சித்த சில வரிகள் - அந்தந்த படங்களுடன் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது எனது முயற்சி என்று சொல்லுங்களேன்!



கிருஷ்ணா! உன் குழல் என் வசமே இருக்கட்டுமே!

ஏன் ராதா?


உன் குழலின் இசையில் இந்த உலக உயிர்கள் மதிமயங்கி கட்டுண்டு கிடப்பதைப் போல என் மூச்சுக் காற்றுடன் நீ பின்னிப் பிணைந்திருக்க வேண்டாமா கிருஷ்ணா?


ராதா! ராதா!... நீ என்னுள்ளே..!


******



அம்மா! வெண்ணெயும் பாலுமாக நானே  ருசித்துக் கொண்டிருந்தால் போதுமா! நீங்களும் சிறிது எடுத்துக் கொள்ளுங்கள்!


கண்ணா! உன் ஸ்பரிசத்தை விடவா இனித்திடப் போகிறது இந்த அமுது!


******



கண்ணா! நீ ரசித்து ருசிக்கும் வெண்ணையாக நான் இருக்கக் கூடாதா!!


இன்னும் எத்தனை காலம் நான் காத்திருக்கணும்! இந்த சுவை மிகுந்த அமுதை உனக்கு தருவதற்கு!!


******



உன் பட்டுக் கன்னங்களை ஸ்பரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு மட்டும் தான் நீ தருகிறாயென்று ஊரும் உலகமும் எனை வசை பாடுகிறார்களே! உன் செவியில் ஏதேனும் விழுந்ததா?? பொல்லாத பிள்ளையடா நீ! 


******



என்ன பாக்யம் செய்திருக்கிறேன்! இந்த மாதவனின் பிஞ்சு கரங்களில் அமர்ந்து கொள்ள! 


******



என் பட்டு அம்மால்ல! என் செல்ல அம்மால்ல! நான் வெண்ணெய் திருடி  சாப்ட்டேன்னு கோபம்லாம் படக்கூடாதும்மா! ப்ளீஸ்மா!!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


14 கருத்துகள்:

  1. ஆம்.  அழகிய படங்கள்.  இது போன்ற படங்களால் கவரப்பட்டு நானும் சில படங்களை சேமித்து வைத்துள்ளேன்.  நீங்கள் அதற்கு கொடுத்துள்ள வரிகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். அழகான படங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. படங்களும் அதுக்கான உங்க வரிகளும் ரசனையானவை!

    ரசித்தேன், ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. அழகான படங்கள். அருமையான கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  5. விஜி வெங்கடேஷ்4 ஜூலை, 2024 அன்று 1:08 PM

    பேரழகான படங்கள்.அருமையான வசனங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜி அக்கா.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    படங்களும் நீங்கள் அதற்கு கொடுத்த வசனங்களும் அருமை ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. அருமையான வரிகள். வாசிக்கும் ஒவ்வொருவரையும் 'கண்ணதாசர்களாக' ஆக்கிவிடும் சக்திவாய்ந்த வரிகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....