ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எழுபத்தி இரண்டு – வாழ்வின் சவால்கள்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை; முழுதாக படிக்கட்டுகள் அனைத்தையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை; முதல் படியில் ஏறு - மார்ட்டின் லூதர் கிங்.


******


யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே


பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே


பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!


பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!


பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!


பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!


பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 


பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!


பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!


பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 


பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!


பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 


பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 


பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!


பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 


பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!


பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 


பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!


பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!


பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!


பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!


பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!


பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 


பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 


பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 


பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 


பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 


பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!


பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!


பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!


பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!


பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!


பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 


யாரிவள்! பகுதி எழுபத்தி இரண்டு – வாழ்வின் சவால்கள்!




எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் இன்பம் அளப்பறியது! இறைவனின் செயல் ஒவ்வொன்றுக்கும் காரணமில்லாமல் இல்லை! பெண்ணெனப் பிறந்தவள் உவகை கொள்ளும் நேரம்! இவளுக்கும் அப்படியொரு நிலை ஏற்பட்டது! எதிர்பார்த்த நேரங்களில் ஏமாற்றம் தந்தது! இப்போது!!!


சட்டென்று ஒருமுறை  நாட்கள் தள்ளிப் போக சோதனை செய்து பார்த்ததில் இரண்டு கோடுகள் அதை ஊர்ஜிதப்படுத்தியது! இவளும் அம்மாவாக மாறி விட்டாள்! அம்மா இவ்வுலகை விட்டு மறைந்து இரண்டு மாதங்களாகிறது! அவளின் ஆசையும் எதிர்பார்ப்பும் இன்று நிறைவேறியுள்ளது! 


மருத்துவரிடம் சென்று உறுதி செய்து கொண்ட நாளில் இருந்து கணவனே தாயுமானவனாக மாறி இவளை கவனித்துக் கொள்ள மசக்கையை எளிதென கடக்க முடிந்தது! குமட்டலும், அசதியும், தூக்கமும் என அவள் சிரமப்பட்ட போதும், அம்மாவின் நினைவுகள் அவளை வாட்டி வதைத்த போதும் உருண்டு திரண்ட கண்ணீர்த் திவலைகளை கணவனின் மடியில் சாய்ந்து ஆறுதல் தேடிக் கொண்டாள்!


சீமந்தமும் நடைபெற்று வளையல்களை அடுக்கிக் கொண்டு புகுந்த வீட்டில் வளைய வந்தாள்! அம்மாவின் மறைவால் இங்கு தான் அவளுக்கு பிரசவமென முடிவெடுக்கப்பட்டது! நாட்கள் வேகமாக செல்ல ஒரு சின்னஞ்சிறு குழந்தையை ஈன்றெடுத்தாள்! அம்மா தன் இறுதி நாட்களில் சொல்லிக் கொண்டிருந்தது போலவே பெண்ணாகப் பிறந்திருக்கிறாள்! அம்மாவின் நட்சத்திரமும் கூட!


தாயாக அவளின் பொறுப்புகள் கூடிப் போனது! சுட்டிப்பெண்ணாக இருந்தவள் இன்று ஒரு சுட்டிக் குழந்தைக்கு தாயாக மாறி விட்டாள்! இந்தக் குழந்தையை நல்லபடியாக வளர்த்து அவளுக்கு நற்சிந்தனைகளை உருவாக்கி இந்த சமூகத்தில் நல்லதொரு பெண்மணியாக உருவாக்க வேண்டும்! அவளின் கனவுப்பாதைக்கு வழி உருவாக்கித் தரணும்!! என்று எண்ணங்கள் உருவானது!


சீமந்தத்திற்காக டெல்லியிலிருந்து கிளம்பியவள் இப்போது மூன்று மாதக் குழந்தையுடன்  டெல்லிக்குக் திரும்புகிறாள்! தனக்குள் நிறைய திட்டமிடல்களை உருவாக்கிக் கொண்டாள்! கணவனுக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்து அலுவலகத்துக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளை குழந்தை தூங்கும் நேரத்துக்கு ஏற்றாற் போல் திட்டமிட்டு செயல்படுத்தினாள். உதவிக்கென யாரையும் அமர்த்திக் கொள்ளவில்லை!


அம்மாவும் அப்பாவுமாக குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்தார்கள்! மழலையை ரசிப்பதும், அவளின் குறும்புகளின் அழகைக் கண்டு மகிழ்வதுமாக நாட்கள் கடந்து சென்றன! குழந்தையை சரியாகப் பிடித்துக் கொள்ளவே தெரியாமல் இருந்தவள் குழந்தையின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றவாறு தன்னை மேம்படுத்திக் கொண்டாள்.


குழந்தை வளர்ப்பில் இந்த சின்னஞ்சிறு குழந்தையிடமிருந்து அவள் நிறைய தெரிந்து கொண்டாள்! சிறுவயது முதல் அம்மா அவளுக்கு கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்களும், கிடைத்த அனுபவங்களும், அம்மாவின் தைரியமும் அவளை பக்குவப்பட்டவளாக உணர வைத்தது! குழந்தையை வளர்க்கவும் வாழ்வின் சவால்களை சமாளிக்கவும் உதவுகிறது!


*****


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


9 கருத்துகள்:

  1. நினைத்தபடியே நிகழ்வுகள் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. எது நடப்பதற்கும் ஒரு நேரத்தை வகுத்திருக்கிறான் கடவுள் என்பார்கள்..  அது போல அம்மாவை பார்த்துக் கொள்ள தடையில்லா நேரம் ஒதுக்கி விட்டு பிறகு குழந்தை வரம்.  அம்மாவின் நட்ச்சத்திரமே என்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வாழ்க்கை மாற்றங்களை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள இயலாதுதான். ஏனெனில் மாற்றுபவன் "அவனல்லவா"? தங்களுக்கு பெண் குழந்தை நல்லபடியாக பிறந்ததும், அவள் நட்சத்திரம் மறைந்த அம்மாவின் நட்சத்திரமாகவே அமைந்ததும் மகிழ்ச்சி. கண்டிப்பாக இது ஒரு தெய்வச் செயல்தான். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே சரியான நேரப்படி நடந்திருக்கு. முதலில் அம்மா. அப்புறம் குழந்தை. அதுவும் அம்மாவின் நட்சத்திரத்தில்!!!

    மகிழ்வான தருணங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பொன் மொழியும் பதிவும் அருமை.

    //அம்மாவின் தைரியமும் அவளை பக்குவப்பட்டவளாக உணர வைத்தது! குழந்தையை வளர்க்கவும் வாழ்வின் சவால்களை சமாளிக்கவும் உதவுகிறது!//

    அம்மாவின் நட்சத்திரத்தில் பிறந்த ரோஷ்ணி உங்களுக்கு தாயாக இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. அம்மாவின் ஆசைபோல பெண் குழந்தை மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....